Skip to main content

Full text of "Madurai District Inscriptions Vol I"

See other formats


மதுரை மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ : 
முதல்‌ தொகுதி ்‌ 


மதுரை மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ . 


முதல்‌ தொகுதி 


பதிப்பாசிரியர்‌ 


தி. ஸ்ரீ. ஸ்ரீதர்‌, இ.ஆ.ப. 


சிறப்பு ஆணையர்‌, தொல்லியல்‌ துறை 


உதவிப்‌ பதிப்பாசிரியர்கள்‌ 
பெர. இராசேந்திரன்‌ 
முனைவர்‌ வெ. வேதரசலம்‌ 


முனைவர்‌ செர. சரந்தலிங்கம்‌ ! 


அச ட்டோர்‌ 


தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 
எழும்பூர்‌, சென்னை-600 008 


முதற்பதிப்பு 2005 
வெளியீடு எண்‌ : 174 


அச்சிட்ட தாள்‌ : மேப்லித்தோ 
தாள்‌ அளவு : டபுள்‌ டெம்மி 116 


© தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 


மதுரை மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ ' 


" முதல்‌ தொகுதி 


பதிப்பாசிரியர்‌ 


தி. ஸ்ரீ. ஸ்ரீதர்‌, இ.ஆ.ப. 


சிறப்பு ஆணையர்‌, தொல்லியல்‌ துறை 


உதவிப்‌ பதிப்பாசிரியர்கள்‌ 
பொ. இராசேந்திரன்‌ 
முனைவர்‌ வெ. வேதாசலம்‌ 
முனைவர்‌ சொ. சாந்தலிங்கம்‌ 


விலை : ரூ. 


அச்சிட்டோர்‌ 

தமிழ்நாடு அரசு 

தொல்லியல்‌ துறை 

எழும்பூர்‌ சென்னை-600 008: - 


yt 1 1, 


woo ஐ ம 039 


ட ௨ இது ௨ இது ப இத ஷூ பம பட பட ய ட ம்‌ பம மம ம 
ROMS ooo oS 


உள்ளடக்கம்‌ 


பதிப்புரை 
முன்னுரை 
Introduction 
Summary 


திருவாதவூர்‌ 

கச்சிராயன்‌ பட்டி 

கள்ளங்காடு 

அருவிமலை 

தருக்காக்குடி 

கருங்காலக்குடி 55 
சொக்கலிங்கபுரம்‌ 
மருதூர்‌ 

ஆமூர்‌ 

கொட்டக்குடி 

பனங்காடி 

கூத்தப்பன் பட்டி 

கீழவளவு 

மேலவளவு 

அரிட்டாபட்டி 
பொய்கைக்கரைப்பட்டி 
திருமோகூர்‌ 

யானைமலை 

குன்னத்தூர்‌ மலை (வரிச்சியூர்‌) 
குன்னத்தூர்‌ மலை 
குன்னத்தூர்‌ 

செங்கோட்டை 

சக்குடி 

புளியங்குளம்‌ 


வடக்க அஸ்க கழை அடி தருக 


பதிப்புரை 


தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அடிப்படை 
ஆதாரமாக இருப்பவை கல்வெட்டுகளே. பண்டைய தமிழ்நாட்டின்‌ அரசியல்‌, 
சமூகம்‌, பண்பாடு ஆகியவற்றைப்‌ புரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுகளே 
துணைநிற்கின்றன. வரலாற்றில்‌ பல்வேறு காலகட்டங்களின்‌ நிலையைக்‌ 
காட்டும்‌ காலத்தின்‌ கண்ணாடியாக இவை திகழ்கின்றன. சி. மீனாட்சி, 
கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி. வை. சதாசிவப்‌ பண்டாரத்தார்‌, டி. வி. மகாலிங்கம்‌ 
போன்ற வரலாற்றுப்‌ பேராசிரியர்கள்‌ கல்வெட்டுக்களை அடிப்படை ஆதாரமாகக்‌ 
கொண்டே தமிழக வரலாற்றை எழுதியுள்ளனர்‌. 


கல்வெட்டுகளின்‌ அருமை கருதியே கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகக்‌ 
கல்வெட்டுகள்‌ படியெடுத்து வரப்பெறுகின்றன. ஆனால்‌ இவற்றை இன்னும்‌ 
முழுமையாகப்‌ படியெடுத்து வெளியிடும்‌ பணி முற்றுப்பெறவில்லை. இந்நிலையில்‌ 
தமிழக வரலாற்றை அறியவுதவும்‌ கல்வெட்டுகளைக்‌ காலந்தாழ்த்தாது 
படியெடுத்து வெளியிட வேண்டியது அவசியமாகிறது. 


கல்வெட்டுகளைப்‌ படியெடுப்பதைத்‌ தனது முதன்மை நோக்கங்களில்‌ 
ஒன்றாகக்‌ கொண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை கல்வெட்டுகளைப்‌ 
படியெடுக்கும்‌ பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அண்மையில்‌ தீவிரக்‌ 
கல்வெட்டு படியெடுக்கும்‌ முனைப்புத்‌ திட்டத்தினை உருவாக்கி அதனை வெற்றி 
கரமாக நடத்தியும்‌ வருகிறது. இதன்‌ பயனாய்‌ தமிழ்நாட்டில்‌ பல மாவட்டங்‌ 
களில்‌ கல்வெட்டுகள்‌ படியெடுக்கும்‌ பணி முன்‌ எப்போதும்‌ இல்லாத அளவிற்கு 
முடுக்கிவிடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில்‌ கல்வெட்டுகள்‌ படியெடுக்கும்‌ பணி 
நிறைவடைந்துள்ளது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல்‌, தஞ்சை, நாகை, 
திருவாரூர்‌, திருச்சி, பெரம்பலூர்‌, தர்மபுரி, ஈரோடு, கோவை, திருவள்ளூர்‌, 
கடலூர்‌, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்‌ இப்பணி கடந்தாண்டு 
நிறைவு பெற்றது திருப்தியளிக்கிறது. இன்னும்‌ சில மாவட்டங்களில்‌ இப்பணி 
முடிவடையும்‌ தருவாயில்‌ உள்ளது. தீவிர கல்வெட்டுப்‌ படியெடுக்கும்‌ முனைப்புத்‌ 
திட்டத்தினால்‌ கடந்த 2005-ஆம்‌ ஆண்டில்‌ பத்தாயிரத்திற்கும்‌ மேற்பட்ட 


கல்வெட்டுகள்‌ படியெடுக்கப்‌ பட்டுள்ளன. 


கல்வெட்டுகளைப்‌ படியெடுக்கும்‌ பணியோடு அவற்றைப்‌ படித்து நூலாக 
வெளியிடும்‌ பணியும்‌ தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்‌ இத்துறையிலிருந்து 
அண்மையில்‌ பல கல்வெட்டுத்‌ தொகுதிகள்‌ வெளிவரத்‌ தொடங்கியுள்ளன. 


இவ்வரிசையில்‌ ' மதுரை மாவட்டத்தில்‌ மொத்தம்‌. கண்டறியப்பட்ட 1067 
கல்வெட்டுகளில்‌ முதற்கட்டமாக 197 கல்வெட்டுகள்‌ இந்த முதல்‌ தொகுதியில்‌ 
இடம்பெறுகின்றன. ஏற்கனவே “பாபநாசம்‌ கல்வெட்டுகள்‌, “தஞ்சை வட்டக்‌ 
கல்வெட்டுகள்‌”, “தமிழகக்‌ கல்வெட்டுகள்‌ 2004” ஆகிய கல்வெட்டுத்‌ தொகுதிகளின்‌ 
வெளியீடுகள்‌ வந்த நிலையில்‌ இந்த “மதுரை மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌” தொகுதி 
வெளியிடப்படுகிறது. இது வரலாற்றிற்குத்‌ துணைநிற்கும்‌ அடிப்படைச்‌ 
சான்றுகளை ய்ய க வவட மூல நூலாக விளங்குகிறது. ஆ 


்‌ 


இந்நூலில்‌ இடம்‌ பெற்றுள்ள கல்வெட்டுகளைத்‌ தமிழகத்‌  தொல்னிம்ற்லுதறு 
கல்வெட்டாய்வாளர்கள்‌ திரு. பொ. இராசேந்திரன்‌, முனைவர்‌ வெ."வேதாசலம்‌, 
இள நிலைக்‌ கல்வெட்டாய்வாளர்‌ திரு. இர. செயராமன்‌ ஆகியோர்‌ வழிகாட்டுத 
லுடன்‌ இத்துறை கல்வெட்டுப்‌, படியெடுக்கும்‌ பணியாளர்கள்‌ திரு. ம. மதிவாணன்‌, 
திரு. பெ. முருகேசன்‌, .திரு.. கு. அன்பழகன்‌, திரு: சி. ஜோதி, , திரு. அ. முத்துச்‌ 
சாமி ஆகியோர்‌ படியெடுத்தனர்‌.. முனைவர்‌ சு. இராசகோபால்‌, முனைவர்‌ சொ. 
சாந்தலிங்கம்‌ ஆகியோர்‌ படித்த கல்வெட்டுகளை மீளாய்வு செய்து இந்நூலாக்‌ 
கத்தின்‌ பதிப்பினைச்‌ செழுமைப்படுத்தியவர்கள்‌ ஆவார்கள்‌. குறித்த காலத்தில்‌ 
இந்நூலினை அச்சிட உதவிய தொல்லியல்‌ துறை அச்சுப்பிரிவினர்‌ திரு. ம. கி, 
குப்புசாமி, திரு. சி. சத்தியவேலு, திரு, மா. ஆ. சங்கர்‌, திருமதி. கோ. செம்மலர்‌, 
திருமதி. கோ. கீதா, திரும்தி, தே. சத்தியவதி, திருமதி. ௪. சரஸ்வதி, திருமதி. பா, 
வசந்தா, திரு. தாமோதரன்‌ ஆகியோர்‌ பாரர்ட்டுக்கு உரியவர்கள்‌ ஆவார்கள்‌. 


இந்நூலினை வெளியிடுவதற்குரிய நிதியினை ஒதுக்கீடு செய்து உதவிய 
தமிழக : அரசுக்கு நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, அரும்‌ முயற்சியால்‌ 
வெளிவரும்‌ இவ்வரிய கல்வெட்டுத்‌ தொகுப்பு நூலினை வரலாற்று ஆர்வலர்களும்‌ 
அறிஞர்களும்‌ கல்வெட்டு அய்வமனர்களும்‌ பெரிதும்‌. வரவேற்பார்கள்‌ என 


நம்புகிறேன்‌. 


6-2-2006 . ( இ. மீ. ஸீதர்‌ ) த்‌ 


சென்னை - 8 தல்‌ ன ரம. சிறப்பு ஆணையர்‌ : 


முன்னுரை 


தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துக்‌ கல்வெட்டுக்களையும்‌ முனைப்புடன்‌ படியெடுத்து 
அவற்றை விரைவில்‌ வெளியிட வேண்டும்‌ என்ற நோக்கில்‌ தமிழ்நாடு அரசின்‌ தொல்லியல்துறை 
செயல்பட்டு வருகிறது. அண்மையில்‌ தமிழகமெங்கும்‌ தீவிரக்‌ கல்வெட்டுப்‌ படியெடுக்கும்‌ 
முனைப்புத்‌ திட்டம்‌ மேற்கொள்ளப்பட்டுத்‌ தமிழகக்‌ கல்வெட்டுகள்‌ படியெடுக்கப்பட்டு படியெடுக்கப்‌ 
பட்ட கல்வெட்டுகள்‌ உடனுக்குடன்‌ படிக்கப்பட்டு கல்வெட்டுத்‌ தொகுதிகளும்‌ தொடர்ந்து 
இத்துறையால்‌ வெளியிடப்பட்டு வரப்பெறுகின்றன. இவ்வரிசையில்‌ மதுரை மாவட்டத்தில்‌ 
படி.யெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின்‌ முதல்‌ தொகுதியாக இந்நூல்‌ வெளிவருகிறது. இதனில்‌ 
உள்ள தமிழ்‌-பிராமி, வட்டெழுத்து, கிரந்தம்‌, தமிழ்‌, ஆங்கிலம்‌ ஆகிய எழுத்துக்களாலான சுமார்‌ 
200 கல்வெட்டுகள்‌ கி.மு. 2-ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ கி.பி. 19-ஆம்‌ நூற்றாண்டு வரையிலான 
பல அரிய செய்திகளைக்‌ கொண்டுள்ளன. இத்தொகுதியில்‌ மேலூர்‌, மதுரை வடக்கு முதலிய 
வட்டங்களில்‌ படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்‌ பதிப்பிக்கப்பட்டுள்ளன, அவை மேலூர்‌ 
வட்டத்திலுள்ள திருவாதவூர்‌, கச்சிராயன்பட்டி, கள்ளங்காடு, அருவிமலை, தர்க்காகுடி, சொக்க 
லிங்கபுரம்‌, பனையூர்‌. மருதூர்‌, ஆமூர்‌, கொட்டக்குடி, பனங்காடி, கூத்தப்பன்பட்டி, கோட்டை 
நத்தம்பட்டி, கீழவளவு, மேலவளவு, அரிட்டாபட்டி, பொய்கைக்கரைப்பட்டி முதலிய ஊர்களிலும்‌ 
மதுரைவடக்கு வட்டத்திலுள்ள திருமோகூர்‌, யானைமலை, குன்னத்தூர்‌, செங்கோட்டை, சக்குடி. 
முதலிய ஊர்களிலும்‌ உள்ளவை ஆகும்‌. 


திருவாதவூர்‌ கல்வெட்டுகள்‌ 

சமயச்‌ சிறப்பு வாய்ந்த திருவாதவூர்‌ சைவசமயக்‌ குரவர்களில்‌ ஒருவரான மாணிக்கவாசகர்‌ 
பிறந்த தலமாகும்‌. இங்கு இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்‌-பிராமி கல்வெட்டுகளைக்‌ 
கொண்ட சமணர்‌ குகைத்தளமுள்ள குன்று ஒன்றுள்ளது. திருவாதவூர்‌ திருமறைநாதசுவாமி 
கோயிலிலும்‌, மடைவளாக வீதியிலும்‌, பாசன ஏரியிலும்‌ பிற்காலப்பாண்டியர்‌, நாயக்கர்‌, ஆங்கிலேயர்‌ 
காலக்‌ கல்வெட்டுகள்‌ உள்ளன. இவற்றில்‌ பழமையானது கி.பி. 12-ஆம்‌ நூற்றாண்டைச்‌ சார்ந்த 
வீரபாண்டியன்‌ கல்வெட்டாகும்‌ இவன்‌ நெட்டூரில்‌ மூன்றாம்‌ குலோத்துங்க சோழனால்‌ முறியடிக்‌ 
கப்பட்டவன்‌ 'பூமருவிய திருமாதும்‌' என்று தொடங்கும்‌ மெய்க்கீர்த்தியுடன்‌ கூடிய இவனது 
கல்வெட்டு திருவாதவூர்‌ சிவன்‌ கோயிலில்‌ (46/2003) உள்ளது. திருவாதவூர்‌ 'தென்பறப்பு 
நாடு என்றழைக்கப்பட்ட பண்டைய உள்நாட்டுப்‌ பிரிவில்‌ இருந்துள்ளது. 


முதலாம்‌ மற்றும்‌ இரண்டாம்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌, சடையவர்மன்‌ குலசேகர 
பாண்டியன்‌, மாறவர்மன்‌ வீரபாண்டியன்‌, முதலாம்‌ மாறவர்மன்‌ குலசேகரபாண்டியன்‌ ஆகியோரது 
கல்‌ வெட்டுகள்‌ திருமறைநாதசுவாமி கோயிலில்‌ காணப்படுகின்றன. இவற்றோடு மதுரை 
சுல்தானியர்கள்‌ காலத்தில்‌ கி.பி. 14-ஆம்‌ நூற்றாண்டில்‌ ஆட்சிபுரிந்த சடையவர்மன்‌ பராக்கிரம 
பாண்டியனின்‌ கல்வெட்டுகளும்‌ உள்ளன (3-6/2003). 

வெள்ளான்வகை நிலங்களைப்‌ பெற்றிருந்த ஊரார்‌ மற்றும்‌ நாட்டார்‌ இப்பகுதிகளில்‌ 
மேற்கொண்ட நடவடிக்கைகள்‌ பற்றி திருவாதவூர்க்‌ கல்வெட்டுகள்‌ தெரிவிக்கின்றன. இவர்களோடு 
உறவுகொண்டிருந்த பிரமதேய சபையார்‌ பற்றியும்‌ கல்வெட்டுகள்‌ தெரிவிக்கின்றன, பிற்காலப்‌ 


பாண்டியர்‌ காலத்தில்‌ வெள்ளான்வகை ஊர்கள்‌ பல கோயிலுக்கு வரி நீக்கித்‌ தானமாகத்‌ தரப்‌ 
பட்டுள்ளன. இவை நல்லூர்‌ என்ற பின்னொட்டுடன்‌ அழைக்கப்பட்டன. வேதமாயககல்லூர்‌, 
வலங்கைமிகாமறநல்லூர்‌, பள்ளிக்குறிச்சியான வோணாடு கொண்ட பெருமாள்நல்லூர்‌, திருமறை 
நாயகநல்லூர்‌, வேலங்குடியான தேவர்கள்தேவநல்லூர்‌, செங்குளமான நாற்பத்தெண்ணாயிர 
நல்லூர்‌, காமர்மங்கலமான மாகேஸ்வரநல்லூர்‌, மண்டலிககெம்பிரநல்லூர்‌ என்று பல நல்லூர்களின்‌ 
பெயர்கள்‌ திருவாதவூர்‌ கல்வெட்டுகளில்‌ அறியப்படுகின்றன. 


திருவாதவூர்ப்‌ பகுதியில்‌ போர்த்தொழில்‌ செய்யும்‌ குடியினர்க்குரிய ஊர்களும்‌ இருந்தன. 
இதனை மானியமாகப்‌ பெற்றவர்கள்‌ அரசன்‌ வேண்டும்போது படைவீரராகப்‌ போருக்குச்‌ செல்ல 
வேண்டும்‌. இவ்வாறு படைத்தொழிலுக்காக மானியமாக அளிக்கப்பட்ட ஊர்கள்‌ படைப்பற்று 
என்று அழைக்கப்பட்டன. இவற்றை நிர்வகித்தவர்கள்‌ (படைக்காரணவர்‌' என்று அழைக்கப்‌ 
பட்டனர்‌. திருவாதவூர்ப்‌ பகுதியில்‌ இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி என்று இரண்டு 'படைப்பற்று” 
ஊர்கள்‌ இருந்துள்ளன (47/2003). ஊர்களின்‌ தன்மைக்கு ஏற்றமுறையிலும்‌, தொழில்களுக்குரிய 
முமறயிலும்‌ நிலங்களின்‌ தரங்களுக்கு ஏற்ற முறையிலும்‌ பயிர்வகைகளுக்குரிய முறையிலும்‌ 
பல்வேறு விதமான வரிகள்‌ வாங்கப்பட்டுள்ளதைக்‌ கல்வெட்டுகள்‌ தெரிவிக்கின்றன. கடமை, 
அந்தராயம்‌, பொன்வ்ரி, கோவில்வினியோகம்‌, ஊர்வினியோகம்‌, தரவுகுழி, கார்த்திகைப்‌ 
பச்சைபிள்ளையார்‌ நோன்பு, கூற்றிலக்கை, கடைகூட்டிலக்கை, ஆனைசாலை, குதிரைப்பந்தி, 
சந்திவிக்கிரகம்‌, பஞ்சுபீலி என்று இவை திருவாதவூர்‌ கல்வெட்டுகளில்‌ ருறிப்பிடப்படுகின்றன. 


பிற்காலப்பாண்டியர்‌ காலத்தில்‌ “காடாள்வான்‌' என்ற பெயரில்‌ அரசியல்‌ அலுவர்களாகச்‌ 
சிற்றரசர்‌ மரபினர்‌ உள்நாட்டுப்‌ பிரிவுகளில்‌ பணியாற்றியிருக்கின்றனர்‌. அரசனுக்கும்‌ ஊர்களுக்கும்‌ 
இடையே தொடர்பாளராக இவர்கள்‌ செயல்பட்டிருக்கின்றனர்‌. ஊர்களிலிருந்து வரிவசூல்‌ 
செய்தல்‌, அரசனது வரிவிலக்கு தொடர்பான ஆணைகளை நிறைவேற்றல்‌ முதலிய பணிகளை 
இவர்கள்‌ செய்தனர்‌. திருவாதவூர்‌ பகுதியில்‌ செயங்கொண்ட சோழ சிவல்லபனான களவழி 
நாடாள்வான்‌ என்பவன்‌ ஊர்களிடையே அரசஅலுவலனாகச்‌ செயல்பட்டதைச்‌ சடையவர்மன்‌ 
குலசேகரபாண்டியனின்‌ திருவாதவூர்‌ கல்வெட்டு தெரிவிக்கிறது, (37/2003). 


திருவாதவூர்‌ கல்வெட்டுகள்‌ பெரும்பாலும்‌ கோயிலுக்குக்‌ கொடையளித்தது பற்றியவை 
யாகும்‌, இவற்றின்‌ மூலம்‌ நிலவுரிமைகள்‌, நிலவுடமையாளர்க்கும்‌ கோயிலுக்கும்‌ உள்ள 
தொடர்புகள்‌, பல்வேறு சமூகப்பிரிவுகள்‌ அவற்றின்‌ அடுக்குமுறைகள்‌ பற்றி அறிந்துகொள்ள 
முடிகிறது. அரசனின்‌ பெயரால்‌ திருவாதவூர்‌ திருமறைநாதசுவாமி கோயிலில்‌ ஏற்படுத்தப்பட்ட 
சிறப்புபூசைகள்‌ (சேரனை வென்றான்‌ சந்தி', *'வலங்கைமீகாமன்‌ சந்தி' என்று கல்வெட்டுகளில்‌ 
குறிப்பிடப்படுகின்றன (9,16/2003). 


அறுபத்துமூன்று நாயன்மார்களுக்காக திருவாதவூர்‌ கோயில்‌ மேற்குப்புற திருச்சுற்றில்‌ 
ஆலயம்‌ போன்ற பகுதி ஒன்று கி.பி. 13.ஆம்‌ நூற்றாண்டில்‌ தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 
அங்கு சுவற்றில்‌ இருந்த அறுபத்து மூவர்‌ சிற்பங்கள்‌ இன்று இல்லை. ஆனால்‌ அச்சிற்பங்களுக்கு 
மேலே சுவரில்‌ பொறிக்கப்பட்ட அறுபத்துமூவரில்‌ ஐம்பத்தெண்மர்‌ பெயர்கள்‌ மட்டும்‌ பதிமூன்றாம்‌ 
நூற்றாண்டு எழுத்தமையில்‌ இன்றும்‌ காணத்தக்க வகையில்‌ கல்வெட்டாகக்‌ காட்சியளிக்கின்றன 
(21/2003). 12-ஆம்‌ நூற்றாண்டில்‌ பெரியபுராணம்‌ இயற்றப்பட்டு மக்களிடையே நாயன்மார்‌ 
கதைகள்‌ விரிவாகச்‌ சென்றடைந்ததின்‌ காரணமாக நாயன்மார்‌ வழிபாடு அடுத்த நூற்றாண்டில்‌ 
சிறப்புப்‌ பெற்றமையை இது காட்டுகிறது. திருவாதவூரில்‌ முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ 


xi 


காலத்தில்‌ சைவமடம்‌ ஒன்று இருந்துள்ளது. இதன்‌ தலைவராகப்‌ பராக்கிரமதேவர்‌ இருந்துள்ளார்‌. 
அம்பலத்தாடி என்ற ஊர்‌ இம்மடத்திற்காக வரிநீக்கி அளிக்கப்பட்டுள்ளது (57/2003). 


மூன்றாம்‌ குலோத்துங்கசோழன்‌ மற்றும்‌ முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியனின்‌ 
கல்வெட்டுகள்‌ திருவாதவூர்‌ பாசன ஏரியின்‌ மடைத்தூணில்‌ கண்டறியப்பட்டன. இவற்றில்‌ 
சோழரது கல்வெட்டு, மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ பாண்டிய நாட்டின்‌ மீது படையெடுத்து 
வெற்றி கண்ட போரில்‌ கலந்துகொண்ட அதிகாரி மங்கலக்கோன்‌ பாஞ்சாலராஜன்‌ 
என்பவன்‌ திருவாதவூர்‌ பாசன ஏரியில்‌ தன்‌ பெயரால்‌ மடையமைத்ததைத்‌ தெரிவிக்கிறது 
(58/2003). அதன்‌ பின்பு சோழநாட்டை வெற்றிகண்ட சுந்தரபாண்டியன்‌ காலத்தில்‌ இம்மடையை 
அவனது அதிகாரி விரதமுடிச்சானான பராக்கிரமசிங்கதேவன்‌ என்பவன்‌ திருத்தியமைத்ததை 
மற்றொரு கல்வெட்டு கூறுகிறது (59/2003). 
செக்கு கல்வெட்டு 

தமிழ்நாட்டிலுள்ள பலவூர்களில்‌ கல்லாலான கல்வெட்டு பொறித்த செக்குகள்‌ கிடைத்‌ 
துள்ளன, மதுரை மாவட்டத்து மேலூர்‌ வட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டி.யிலும்‌ வட்டெழுத்துப்‌ 
பொறித்த கி.பி. 10-ஆம்‌ நூற்றாண்டு கல்செக்கு ஒன்று கிடைத்துள்ளது, இது தற்பொழுது திருமலை 
நாயக்கர்‌ அரண்மனையில்‌ உள்ளது. வழுதிவளநாட்டிலுள்ள மிழலூரினைச்‌ சார்ந்த அப்பனூழன்‌ 
என்பவன்‌ *பொற்கொடிவீரர்‌' என்ற வீரர்‌ குழுவின்‌ பெயரால்‌ இச்செக்கினைச்‌ செய்வித்ததாக 
அதிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது (61/2003), வழுதிவளகாடு என்பது ஸ்ரீவைதண்டம்‌ 
வட்டதைச்‌ சார்ந்த பழமையான உள்நாட்டுப்‌ பிரிவாகும்‌. இந்நாட்டில்‌ இருந்த அப்பனூழன்‌ 
பாண்டிய நாட்டின்‌ வடபகுதிக்கு வந்து இச்செக்கினைச்‌ செய்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
பாண்டியநாட்டில்‌ 'வீரக்கொடியார்‌ பெயரில்‌ வீரர்குழுவினர்‌ இருந்திருக்கின்‌ றனர்‌, எனவே படைப்‌ 
பிரிவில்‌*கொடி.வீரர்‌' பிரிவு ஒன்று இருந்தமை இதன்மூலம்‌ தெளிவாகிறது. 
அருவிமலை கல்வெட்டுகள்‌ 

வஞ்சி நகரத்திற்கு அருகிலுள்ள சிறுகுன்றின்‌ உச்சியில்‌ இடிந்துபோன பிற்காலப்பாண்டியர்‌ 
சிவன்‌ கோயில்‌ ஒன்றின்‌ கட்டடப்பகுதியிலும்‌ அருகிலுள்ள பாறையிலும்‌ பிற்காலப்பாண்டியர்‌ 
கல்வெட்டுகள்‌ காணப்படுகின்றன. குலசேகரபாண்டியன்‌ காலத்தில்‌ இச்சிவன்கோயில்‌ கட்டப்பட்டு 
அதற்குப்‌ பலகொடைகள்‌ அளித்ததைக்‌ இக்கல்‌ வெட்டுகள்‌ கூறுகின்றன. இக்கோயில்‌, கல்வெட்டில்‌ 
திருமேலழகிய பாண்டிய நாயனார்‌ கோயில்‌ என்று அழைக்கப்படுகிறது. இம்மலையைச்‌ சார்ந்த 
ஊர்‌ அருவிக்குடி. என்று குறிப்பிடப்படுகிறது. அருவிக்குடிப்‌ பகுதியில்‌ வாழ்ந்த கண்மாளர்‌ 
சமூகத்தினைச்‌ சார்ந்தவர்கள்‌ அரசனுடனும்‌, கோயிலுடனும்‌ தொடர்புடையவர்கள்‌. இவர்களில்‌ 
பல தட்டார்களின்‌ பெயர்கள்‌ அருவிமலைக்‌ கல்வெட்டுகளில்‌ குறிப்பிடப்படுடன்றன (64/2003). 
தர்க்காகுடி கல்வெட்டுகள்‌ 

மேலூர்‌ வட்டத்தில்‌ மற்றொரு பிற்காலப்‌ பாண்டியர்‌ கோயில்‌ தர்க்காகுடியில்‌ உள்ளது. 
இதில்‌ கி.பி. 14- ஆம்‌ நூற்றாண்டைச்‌ சார்ந்த பாண்டிய மன்னனான பராக்கிரமபாண்டியன்‌, 
விசயநகரவேந்தனான சதாசிவராயர்‌ ஆகியோர்‌ கல்வெட்டுகள்‌ உள்ளன. (69, 70, 71/2003). 
கல்வெட்டுகளில்‌ இவ்வூர்‌ தருக்காய்குடி என்றும்‌, கோயில்‌, திருக்கோடீசுவரமுடையார்‌ கோயில்‌ 
என்றும்‌ குறிப்பிடப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகள்‌ கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள்‌ 
ஊரார்‌, நாட்டார்‌ நடவடிக்கைகள்‌ பற்றித்‌ தெரிவிக்கின்றன. இக்கோயிலின்‌ பகுதியில்‌ இருந்து 
அழிவுற்ற அம்மன்கோயிலை அருவியூர்‌ நகரத்தார்‌ எடுத்ததை சதாசிவராயர்‌ கல்வெட்டு கூறுகிறது 
(71/2003). கல்வெட்டில்‌ இவ்வம்மன்‌ 'திருக்காமகோட்ட திருமாமடந்தையார்‌' என்று குறிப்பிடப்‌ 


xii 


படுகின்றார்‌. தருக்காகுடி கோயில்‌ வளாகத்தில்‌ நடப்பட்டுள்ள தனிக்கல்லில்‌ பொ றிக்கப்பட்டுள்ள 
கல்வெட்டு தர்க்காகுடியோடு தொடர்புடைய கடகமறுக்கிகள்‌ என்ற வீரர்‌ குழுவினர்‌ இவ்வூருக்குப்‌ 
பாதுகாவலாக இருந்ததைத்‌ தெரிவிக்கிறது (73/2003). 


கருங்காலக்குடி கல்வெட்டுகள்‌ 

கருங்காலக்குடியிலுள்ள பஞ்சபாண்டவர்‌ படுக்கை என்றழைக்கப்படும்‌ சமணமுனிவர்‌ 
களுக்குரிய கற்படுக்கைகள்‌ உள்ள குகைத்தளம்‌ ஒன்று அதனை உருவாக்கியவரைக்‌ குறிப்பிடும்‌ 
தமிழ்‌-பிராமி கல்வெட்டோடு காணப்படுகிறது, இப்பள்ளியின்‌ பாறையில்‌ கி.பி. 9-10 ஆம்‌ 
நூற்றாண்டில்‌ வாழ்ந்த அச்சணந்தி என்ற சமணமுனிவரால்‌ செய்யப்பட்ட தீர்த்தங்கரரின்‌ சிற்பம்‌ 
ஒன்று உள்ளது (76/2003). இதனடியில்‌ உள்ள வட்டெழுத்துக்‌ கல்வெட்டு அச்சணந்தி 
அதனைச்‌ செய்வித்ததைத்‌ தெரிவிக்கிறது. அச்சணந்தி பாண்டிய நாட்டில்‌ வாழ்ந்த 
புகழ்பெற்ற சமணமுனிவர்களில்‌ ஒருவர்‌ ஆவார்‌. அரிட்டாபட்டி, ஆனைமலை, அழகர்மலை, 
கீழவளவு, சிதறால்‌, உத்தமபாளையம்‌ போன்ற பல இடங்களில்‌ இவர்‌ பாறையில்‌ தீர்த்தங்கரர்‌ 
சிற்பங்களைச்‌ செய்வித்துள்ளார்‌. இடைக்காலத்தில்‌ பாண்டிய நாட்டில்‌ சமணம்‌ வளர்வதற்கு 
இவர்‌ உறுதுணை புரிந்துள்ளார்‌. கருங்காலக்குடி சமணப்பள்ளியுள்ள முற்காலப்பாண்டியர்‌ கால 
வட்டெழுத்துப்‌ பாடல்‌ கல்வெட்டு 'பள்ளித்தரையன்‌' என்ற பாண்டிய அரசனின்‌ 
அதிகாரியின்‌ செயல்களை எடுத்துக்‌ கூறுகிறது (75/2003). 


கருங்காலக்குடிக்கு அருகிலுள்ள வயலிப்பாறையினை ஒட்டிய பகுதிகளில்‌ பாசனஏரி குறித்த 
கல்வெட்டுகள்‌ கண்டறியப்பட்டன. இவற்றில்‌ ஒன்று மாடக்குடையான்‌ சீராளன்‌ திருவெண்‌ 
காடுடையரன்‌ என்ற கணக்கன்‌ ஒருவன்‌ ஏரியின்‌ கலிங்கினைப்‌ பிற்காலப்‌ பாண்டியர்‌ காலத்தில்‌ 
செய்வித்துள்ளதைக்‌ கூறுகிறது (77/2003). இங்குள்ள ஏரியின்‌ மடைக்கல்லில்‌ உள்ள கல்வெட்டு 
(கி.பி. 18ஆம்‌ நூற்றாண்டு) அம்மடையினை வத்தலைராவுத்தர்‌ என்ற இசுலாமியர்‌ திருத்தி 
யமைத்ததைத்‌ தெரிவிக்கிறது (79/2003) 


வயலிப்பாறையின்‌ கல்வெட்டு இப்பகுதியில்‌ கி.பி. 18-ஆம்‌ நூற்றாண்டில்‌ மாமரங்களை 
நட்டதைக்‌ கூறுகின்றது (78/2003). உப்புச்சுனை என்றழைக்கப்பட்ட சுனையை ஒட்டி உள்ள 
பாறைக்‌ கல்வெட்டுகள்‌ இப்பகுதியில்‌ நாயக்கர்காலத்தில்‌ பாளையக்காரனாக இருந்த இலிங்கம 
நாயக்கன்‌ காலத்ததைச்‌ சார்ந்தவையாகும்‌ (80/812003). 
சொக்கலிங்கபுரம்‌ கல்வெட்டுகள்‌ 

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டில்‌ எடுப்பிக்கப்பட்ட சிவன்கோயில்‌ என்று சொக்கலிங்கபுரத்தில்‌ 
உள்ளது. சுரநாட்டு மேல்மலையூர்‌ அழகியசேழீசுவரமுடைய நாயனார்‌ கோயில்‌ என்று இங்குள்ள 
சிவன்கோயிலைக்‌ கல்வெட்டு குறிப்பிடுகிறது (91/2003). இங்குள்ள கல்வெட்டுகள்‌ கோயிலுக்கு 
அளிக்கப்பட்ட இறையிலி நிலங்கள்‌ அவற்றிற்கான வரிகள்‌. வரிசெலுத்தாதவர்‌ குறித்து எடுக்கப்‌ 
பட்ட நடவடிக்கைகள்‌ பற்றிய விவரங்களை விரிவாகக்‌ கூறுகின்றன (95/982003). 


மருதூர்‌ 

மருதூரில்‌ கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டில்‌ கட்டப்பட்ட பெருமாள்கோயில்‌ ஒன்று உள்ளது. 
சிதைவுற்ற நிலையில்‌ உள்ள இக்கோயில்‌ கல்வெட்டு *கண்ணாழ்வார்‌ கோயில்‌' என்றழைக்கப்‌ 
பட்ட இக்கோயிலுக்குத்‌ திருநாராயண நல்லூர்‌ தேவதான இறையிலியாக அளிக்கப்பட்டதைக்‌ 
கூறுகிறது (104/2003). மேலும்‌ “மலைக்குடி மலைமேல்கோல்‌' என்ற நில அளவுகோல்‌ பற்றி 
மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கிறது (103/2003). இக்கோலின்‌ அளவு சோழவந்தானை 


xiii 


அடுத்துள்ள தென்கரை மூலநாதசுவாமி கோயிலின்‌ மகாமண்டபச்‌ சுவரிலும்‌ படமாகப்‌ 
பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்‌. 


ஆமோ 
ஆமூரிலுள்ள பிற்காலப்பாண்டியர்‌ சிவன்கோயிலை முதலாம்‌ சடையவர்மன்‌ குலசேகர 
பாண்டியன்‌ கரலத்தில்‌ தென்னிந்தியாவில்‌ புகழ்பெற்று விளங்கிய திசையாயிரத்து ஐஞ்னூற்றுவர்‌ 
என்ற வணிகர்‌ குழுவினர்‌ கட்டியுள்ளனர்‌. தக்கணப்பிரதேசத்தில்‌ அய்ஹோளே என்று அழைக்கப்‌ 
பட்ட ஊரில்‌ இக்குழுவினர்‌ இருந்துள்ளனர்‌. அங்கிருந்து பலவிடங்களுக்கும்‌ சென்றுள்ளனர்‌. 
அய்ஹோளே என்பதே அய்யப்பொழில்‌ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கல்வெட்டுகளில்‌ 
ஆமூர்‌ “ஈல்லணி ஆமூர்‌' என்று குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில்‌ செம்பியன்‌ பல்லவரையன்‌ 
என்ற அதிகாரி முதலாம்‌ சடையவர்மன்‌ குலசேகரபாண்டியன்‌ காலத்தில்‌ பள்ளியறை நாச்சி 
யாரைச்‌ செய்தளித்துள்ளான்‌ (106/2003). ஆமூர்‌ கண்மாய்‌ வட்டெழுத்துக்‌ கல்வெட்டில்‌ கி.பி. 
9-10ஆம்‌ நூற்றாண்டில்‌ பாண்டியனது அதிகாரியாக விளங்கிய கலிதீரன்‌ தந்‌ைத சாத்தன்‌ 
குறிப்பிடப்படுகின்றான்‌ (110/2003). 


பனங்காடி 

பனங்காடியிலுள்ள விஷ்ணுகோயில்‌ கல்வெட்டின்‌ மூலம்‌ இங்குள்ள பெருமாள்கோயில்‌ 
கி,பி. பதினோராம்‌ நூற்றாண்டில்‌ சோழர்‌ காலத்தில்‌ எடுப்பிக்கப்பட்டுப்‌ பிற்காலப்‌ பாண்டியர்‌ 
காலத்தில்‌ திருத்திக்‌ கட்டப்பட்டிருக்கிறது என அறிகின்றோம்‌. இதில்‌ முதலாம்‌ சடையவர்மன்‌ 
குலசேகரபாண்டியன்‌, மாறவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ ஆகியோரது கல்வெட்டுகள்‌ உள்ளன. இவ்வூர்‌ 
இராசேந்திரசோழச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்ற பெயரில்‌ பிரமதேயமாக விளங்கியுள்ளது. 
இது பலசேரிகளாகப்‌ பிரிக்கப்பட்டிருந்தது. அவை வானவன்மாதேவிசேரி, சுந்தரசோழச்சேரி, 
இராசேந்திர சோழசேரி என்று அழைக்கப்பட்டன (112/2003). அழகர்கோயிலில்‌ 
சக்கரத்தாழ்வாரின்‌ சிற்றாலயம்‌ ஒன்றினை அமைத்ததை இங்குள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிப்பது 
குறிப்பிடத்தக்கது -(115/2003). களவழிநாடாழ்வான்‌ இவ்வூர்க்‌ கோயிலில்‌ பரதேசிகளுக்கு உணவு 
அளிப்பது தொடர்பானஆணையைக்‌ கோயில்‌ நிர்வாகத்தினர்க்கு அனுப்பிவைத்ததை கல்வெட்டு 
ஒன்று தெரிவிக்கிறது(114/2003). 


உரல்‌ கட்வெட்டுகள்‌ 

கீழவளவிலுள்ள சமணப்பள்ளியில்‌ ஸ்ரீகட்டி, காளந்‌அரட்டி உரலில்‌, என்று பொறிக்கப்பட்ட 
கி.பி 9-10-ஆம்‌ நூற்றாண்டு கல்வெட்டுகள்‌ கண்டறியப்பட்டன (118/2003). இவை சமண 
முனிவர்கள்‌ மருந்தினை இடிப்பதற்காகப பயன்பட்டிருக்க வேண்டும்‌. 
பறம்புக்கண் மாய்‌ 

மேலவளவிற்கு அருகிலுள்ள பறம்புக்கண்மாய்‌ கல்வெட்டுக்கள்‌ பாசனஏரி அமைப்பதையும்‌ 
நிர்வகிப்பதையும்‌ பற்றித்‌ தெரிவிக்கும்‌ முக்கிய கல்வெட்டுகளாகும்‌. இங்குள்ள சோணாடு 
கொண்டருளிய சுந்தரபாண்டியன்‌ கல்வெட்டு தென்பறப்புநாட்டுப்‌ பறம்பான திருகாராயண 
மங்கலத்து குளத்தின்‌ கரையினை ஆள்வான்‌ சக்கரக்கையன்‌ என்பவன்‌ உயர்த்தியதையும்‌ அதன்‌ 
உள்வாய்ப்‌ பகுதியில்‌ கரைகுலையாமல்‌ (அழியாமல்‌) கருங்கற்கள்‌ பதித்து கலிங்கு அமைத்ததையும்‌ 
தெரிவிக்கிறது (120/2003). இங்குள்ள விசயநகரவேந்தர்‌ விருபாக்சராயர்‌ கல்வெட்டு 
திருநாராயணமங்கலத்துக்‌ குளத்தினைக்‌ காத்து நீர்‌அடைத்து திறக்கும்‌ பணி செய்ய திருநாராயண 
சம்பான்‌ என்பவனை நியமித்ததைத்‌ தெரிவிக்கிறது. இதற்காக ஊரில்‌ விளையும்‌ கெல்லிலிருத்து 


xiv 


ஆ 


ஒருமா நிலத்திற்கு ஏழு நெற்கட்டுகள்‌ ஊதியமாக அளித்துவர ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்‌ 
தக்கது (121/2003). 


அரிட்டாபட்டி 

கல்வெட்டுக்களில்‌ திருப்பிணையன்மலை என்று அழைக்கப்படும்‌ அரிட்டாபட்டி குன்றிலுள்ள 
சமணர்‌ குகைத்தளத்தில்‌ கி.மு. 2-ஆம்‌ நூற்றாண்டைச்‌ சார்ந்த மற்றொரு தமிழ்‌-பிராமி கல்வெட்டு 
கல்வெட்டு படியெடுக்கும்‌ முகாமின்போது கண்டறியப்பட்டது. இலஞ்சி இளம்‌ பேராதன்‌ மகன்‌ 
இமையன்‌ முனிவர்களுக்கு உறைவிடம்‌ அமைத்துக்‌ கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது 
(122/2003). இன்று அரிட்டாபட்டி என்று அழைக்கப்படும்‌ ஊர்‌ பாதிரிக்குடி என்று 
பழங்காலத்தில்‌ அழைக்கப்பட்டுள்ளது, இது வணிக நகரமாக விளக்கியுள்ளது இவ்வூரில்‌ கண்டறியப்‌ 
பட்ட விக்கிரமபாண்டியன்‌ கல்வெட்டு இதனைப்‌ பாதிரிக்குடியான ஐஞ்ஞூற்றுவப்‌ பெருந்தெரு 
என்று குறிப்பிடுகிறது (125/2003). 


பொய்கைக்கரைப்பட்டி 

இவ்வூரில்‌ படியெடுக்கப்பட்ட அறுவகைத்‌ தொழில்‌ செய்யும்‌ நால்வகை இரதகாரர்களின்‌ 
மெய்க்கீர்த்தியுடன்‌ கூடியகல்வெட்டு வாசகம்‌ இத்தொகுதியில்‌ இடம்‌ பெற்றுள்ளது குறிப்பிடத்‌ 
தக்கது. பவித்திரமாணிக்கபுரத்தில்‌ இருக்கும்‌ இவர்கள்‌ கூட்டம்‌ நடத்தி திருமாலிருஞ்சோலையில்‌ 
தெய்வகாரியங்கள்‌ செய்த அவர்கள்‌ சமூகத்தினைச்‌ சார்ந்த ஒரு பெரியவருக்கு மரியாதை 
செய்தததை இது தெரிவிக்கிறது (126/2003), 


திருமோகூர்‌ கல்வெட்டுகள்‌ 


திருமோகூர்‌ காளமேகப்பெருமாள்‌ கோயிலில்‌ உள்ள கல்வெட்டுகளின்‌ வாசகங்கள்‌ முதல்‌ 
முதலாக இங்கு வெளியிடப்படுகின்றன. இக்கோயிலின்‌ பகுதிகளைக்‌ கட்டியவர்கள்‌ பெயர்களும்‌, 
தானம்‌ அளித்தவர்‌ பெயர்களும்‌ உள்ள பல சிறுகல்வெட்டுகளும்‌ இவற்றில்‌ அடங்கும்‌. விசய 
நகர வேந்தர்‌ காலத்தில்‌ இக்கோயிலைத்‌ திருப்பணி செய்தபோது அவற்றில்‌ இருந்த பல 
பிற்காலப்பாண்டியர்‌ கல்வெட்டுப்‌ பொறித்த கற்கள்‌ கோயில்‌ சுவரிலும்‌ தெப்பக்குளத்து மைய 
மண்டபத்திலும்‌ வைத்துக்‌ கட்டப்பட்டுள்ளன. 


திருமோகூர்‌ கோயில்‌ பற்றிய முதல்குலோத்துங்கன்‌ கல்வெட்டு கோயிலின்‌ வெளிப்புறத்தில்‌ 
கண்டறியப்பட்டது. இது இக்கோயிலை விண்ணகரம்‌ என்று குறிப்பிடுகிறது (143/2003). 
கோயிலைத்‌ திருப்பணி செய்வதற்காகச்‌ செங்குடிநாட்டுச்‌ சிறுகுன்றத்தூர்‌, பாகனூர்‌ கூற்றத்து 
வீரகாராயணச்‌ சதுர்வேதிமங்கலம்‌, வெண்பில்நாட்டு ஆலோடுபட்டான்‌ குமாரபவித்திர சதுர்வேதி 
மங்கலம்‌ முதலிய ஊர்கள்‌ திருப்பணிப்புற இறையிலியாக அளிக்கப்பட்டுள்ளன (139/2003). 


திருமோகூர்‌ காளமேகப்பெருமாள்‌ கோயிலில்‌ தற்போது சக்கரத்தாழ்வார்‌ வழிபாடு 
சிறப்புடன்‌ நடைபெற்று வருகிறது. இவ்வழிபாடு இக்கோயிலில்‌ கி.பி. 1259ல்‌ தொடங்கிவிட்டது. 
இச்சக்கரத்தாழ்வாரைத்‌ திருவாழியாழ்வார்‌ ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருமோகூர்‌ 
கோயில்‌ வளாகத்தில்‌ கி.பி. 1259இல்‌ முதலாம்‌ சடையவர்மன்‌ சந்தரபாண்டியனின்‌ அதிகாரி 
காளமேகமான காங்கேயன்‌ என்பவன்‌ திருவாழியாழ்வார்‌ கோயிலைக்‌ கட்டுவித்து நிலக்கொடையும்‌ 
தந்துள்ளான்‌. இவனே சேனாபதி ஆழ்வார்க்கும்‌ (விஸ்வச்சேனர்‌) இங்கு சிற்றாலயம்‌ எடுப்பித்‌ 
துள்ளான்‌ (141/2003). 


XV 


திருமோகூர்க்கு அருகிலுள்ள யானைமலையின்‌ வடகோடியில்‌ பெருமாள்‌ கோயில்‌ ஒன்று 
உள்ளது. இக்கோயில்‌ துங்கவனம்‌ என்று அழைக்கப்டும்‌ பகுதியில்‌ இருக்கிறது. இங்குள்ள 
பிரம்மதீர்த்தக்கரையில்‌ *வேதநாயகர்க்கு கோயில்‌' ஒன்றினைச்‌ சுந்தரபாண்டியக்கோனார்‌ என்ற 
அதிகாரி அரசனது பெயரால்‌ கி.பி. 1308-ல்‌ எடுப்பித்தாகத்‌ திருமோகூரிலுள்ள முதலாம்‌ 
மாறவர்மன்‌ குலசேகர பாண்டியன்‌ கல்வெட்டு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது (140/2003). 

திருமோகூர்‌ தெப்பக்குளம்‌ பகுதியிலுள்ள துண்டுக்‌ கல்வெட்டு ஒன்று பெருமாள்‌ சடகோபன்‌ 
பாட்டுக்‌ கேட்டதைக்‌ கூறுகிறது. திருமோகூர்‌ பள்ளிகொண்ட பெருமாள்‌ சன்னதிக்குப்‌ பின்புறமுள்ள 
பிற்காலப்‌ பாண்டியர்‌ கல்வெட்டு மார்கழித்‌ திங்களில்‌ திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதைக்‌ 
கூறுகிறது (134/2003). தென்பறப்புநாடு என்ற நாட்டுப்பிரிவில்‌ இருந்த திருமோகூர்‌ காளமேகப்‌ 
பெருமாள்‌ கோயில்‌ நிர்வாகத்தில்‌ திரிதண்டி சன்னியாசிகளும்‌, ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ ஈடுபட்டுள்ளனர்‌ 
இவர்களோடு ஜீயர்‌ செளமிதரதாசன்‌ என்பவரும்‌ குலசேகரபாண்டியன்‌ காலத்தில்‌ இக்கோயில்‌ 
நிர்வாகத்தில்‌ இருந்துள்ளார்‌. இவர்‌ இக்கோயில்‌ திருமடைவளாகத்தினை உருவாக்கும்‌ முயற்சியில்‌ 
ஈடுபட்டுள்ளார்‌ (137/2003). 

கி.பி. பதினாறாம்‌ நூற்றாண்டில்‌ திருமோகூர்‌ கோயில்‌ கருவறை, அர்த்தமண்டபம்‌, 
மகாமண்டபம்‌ பகுதிகள்‌ முற்றிலுமாகப்‌ புதுப்பித்துக்‌ கட்டப்பட்டுள்ளன. கி.பி, 1551-ஆம்‌ 
ஆண்டினைச்‌ சார்ந்த இரண்டு கல்வெட்டுகள்‌ மகாமண்டபத்‌ தென்சுவரில்‌ பொறிக்கப்பட்டுள்ளன. 
இவற்றில்‌ ஒரு கல்வெட்டு வசவண்ணநாயக்கர்‌ காலத்து அரச ஆணையையும்‌ மற்றொன்று 
காளமேகப்பெருமாளின்‌ நித்திய நைவேத்தியங்களுக்காகக்‌ களவேள்விநாட்டில்‌ இருந்த மானகுழி 
என்ற ஊர்‌ திருவிடையாட்டமாக அளிக்கப்பட்டதையும்‌ கூறுகின்றன (132/2003). முன்பு களவழி 
என்று அழைக்கப்பட்ட நாடே விஜயநகரவேந்தர்‌ காலத்தில்‌ “களவேள்வி நாடு' என்று மருவியுள்ளது. 


கி.பி. 1700-ல்‌ மதுரை நாயக்கரின்‌ தளவாயாக விளங்கிய நரசப்பய்யனின்‌ அனுமதியின்‌ பேரில்‌ 
வெங்கப்பய்யன்‌ என்பவர்‌ திருமோகூர்‌ காளமேகப்பெருமாள்‌ கோயில்‌ வெளிச்சுற்றுத்‌ திருமதிலை 
விரிவுபடுத்தியும்‌ உயர்த்தியும்‌ கட்டியதைக்‌ கல்வெட்டு ஒன்று கூறுகிறது (142/2003). 
யானைமலைக்‌ கல்வெட்டுகள்‌ 

நர சிங்கப்பெருமாள்‌ கோயிலைப்‌ பிற்காலத்தில்‌ திருப்பணி செய்தபோது அவற்றில்‌ இருந்த 
கி.பி. 13, 14-ஆம்‌ நூற்றாண்டைச்‌ சார்ந்த கல்வெட்டுப்‌ பொறித்த கற்களைப்‌ பெயர்த்து 
உள்திருச்சுற்று மதிலிலும்‌ வெளிச்சுற்று மதிலிலும்‌ வைத்துக்‌ கட்டியுள்ளனர்‌. இக்காலத்தினைச்‌ 
சார்ந்த பல செய்திகளை இக்கல்வெட்டுகள்‌ தருகின்றன. துண்டுக்கல்வெட்டுகளாக உள்ள 
இக்கல்வெட்டுக்கள்‌ அனைத்தும்‌ படியெடுக்கப்பட்டு இத்தொகுதியில்‌ முதன்முதலாகப்‌ பதிப்பிக்கப்‌ 
படுகின்றன. அவற்றில்‌ ஸ்ரீவல்லபனின்‌ (கி.பி. 1101-1129) கல்வெட்டு, வேலூர்‌ குளக்கீழ்‌ 
நாட்டில்‌ உள்ள குந்தவைச்‌ சதுர்வேதிமங்கலத்துச்‌ சபையார்‌ கூடி. எடுத்த முடிவு ஒன்றினைக்‌ 
கூறுகிறது (167/2003). முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியனின்‌ சிறப்பும்‌ சோழநாட்டு 
வெற்றியைக்‌ கூறும்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதிகளும்‌ இத்துண்டுக்‌ கல்வெட்டுகளில்‌ இடம்‌ பெற்றுள்ளன. 
இம்மன்னனது கல்வெட்டுகளில்‌ நரசிங்கப்பெருமாளுக்குக்‌ கொடுக்கப்பட்ட நிலங்கள்‌ மற்றும்‌ 
பாண்டிய அதிகாரிகள்‌, நாடு, ஊர்ப்‌ பெயர்கள்‌ ஆகியவை உள்ளன. கோயிலில்‌ நடைபெற்ற 
அன்றாட வழிபாடுகள்‌, திங்கள்‌, ஆண்டு உற்சவங்கள்‌ பற்றிய செய்திகளையும்‌ இவை தருகின்‌ றன. 

கி.பி. 14-ஆம்‌ நூற்றாண்டில்‌ மாலிக்காபூர்‌ படையெடுப்பிற்குப்‌ பிறகு மதுரையில்‌ இருந்த 
பாண்டியர்‌ ஆட்சி சீர்குலைந்தது. மதுரையில்‌ கி.பி, 1323-க்குப்‌ பிறகு மதுரை சுல்தானியர்‌ 
ஆட்சி தொடங்கியது. மதுரையின்‌ புறப்பகுதிகளில்‌ இருந்து கொண்டு பாண்டியர்கள்‌ ஆட்சி 


வத்தக்‌ ன 


‘(£002/E61) [802107 ஒழ உம்‌ வ 
இடுடுடி ஊழ ரமமுழீமு& ரட நீவயசது மீ பயக பமக இழ ம௨ உடும்பு 
ர- | “ஐ மி.ம௫ீயயச0 மடு இம [06 ௫-௨ MIA மம பாடி (gory ELS 
ஒவர்‌ ஓ இடு உடஓயயாமது நவாகழ மர்யம்‌ ஏஎ ஒழு மாஜா 
பக பம "Sopp ட-(ம௨௨௫ SமeபபாnseணWle உமரும்‌ கெழம 
ummuieifSnige பயம ௨1௯ MSA ராமப!) “சமுரா “ீயழய்மம 
௫ ஈழிஎ மா ஒுயாறிரு மீனோ ஈழம்‌ ஞூர்ரடூழ மறுக ரர. முழுலோயல 
uSargieameps *(£00Z/081) மம மில (ரண (6081 “நு:ஐ) பராய்‌ கழவ 
சிர மு மலா முநா௫டா ரகமா டம 16௫ 


முரு மழ ஓரு ௨-௫ ஈர ௫ ற॥௰9ஐ௫ 
தகு மாச்மமமா முயலு முச்மமய0016 ஏல இழு ௩௫ மம 
மருமக ௨௫-௫௨ ஓடுமா மட மழஓமுநாயலஐ முயலா “*ஐருமு ஏழா 
மறுஒுொருக முழகை மமம்‌ மீய்ழடுறாழு ௫- 1௩௫0௨ மமம்‌ முழாம௨து மய ுமும ல 
முழுது * மம்ம மமுு௫ மழு உமம ழொ மமக மீமு8 மழு 
ஓப ஓ௫ட்மு மா௱ன்மமியா ருயஎிறு மு ॥ரச்றமுஞரு ஏல மழு 


* 19 யமா 01௨0 
மாம Wee ஸரார்ம[€ 10௨ ஒடு ரிதம்‌ பம எழமக (௪41) 
முல ரஓமுரிய௨ல/௪ மழு உய்‌ பாஜி மறும்‌ மாம மமம்‌ ஏய ௦௨2௫ 
முுோதேர2நு ஈடு பவரிதஉமட யாம *(800₹/611) ராறு மாறல மம 
இம ஒழிபு ரா வயச சரமுமமய0ய 19 ர$2-0 1 6 ௫ எயிறு மக மம 
ஒடும்‌ ஈடு ரான்‌ மழு முழு முநாமுமுறு வேலமரியா முநாழுச-5 மழுமும 
(றர ஒரு மமலட ஏறா இரும இயற - சிரச மாமல பூல்ல 
eNO. ஓம... 


ரம 
ஓஐ௫ உயமகஉயரா்‌ உ முரு முரு பலஐமயராலாகுஉழவ மடு :(6002/891) 
கீழா ww sole நீல௩எ ரரமலாரரர௫ சோக ரழி 
ஜெ! ஓரு மண உரியா மழா॥மாததமலஸ்மமு ஈடிங ம 000௯11 முயூவோமற ஓயா ௮10 
‘(£002/+9।) நிமி முகி உயரும்‌ ஓ ॥--ப010-5 ம ேரிமடு முய உறு 
OG SemsO TTS Ten PAPI 1001 முவழா ம Mr ஜா ॥]ங(ம ॥ஐ 
mdi’ மயஞுயாமரியாமலடு மீய௱முமழ2ாமாு சடு-௩௨ மரன்‌ மமயாஐம௫ 
:(6002/69 ப api ஓடு ௩௨ ம௱்மமயாரும்மன0 ர2ம[எ உயர டாயா ௭11 
முனு மயா [820 மறுகி மல உழும்‌ 0ம9ட ராப 1ஙழருர்முலரு 01௫௪ 
ஜியா! ரய (0ாமறமய௫ செழிய 12ஙழ1வ மமுருமுமுயா :6.ம௫- 1 
ரழி றமல டு ௩2௨௫ ஏடு ௩௨ ஞான்‌ மமயாம்‌௮ஐமட வழர 
ஓய ம26ம॥ர௫௪ டுயமத௩டு ‘மம விம டு ஹான்‌ மம நண மயா 
919] Ae தம. yg ராம ‘FED மக ௫௫0௨ 
(yeel-9lel ‘Ge மான்‌ மயா ஏய ராயா TSO முலய மரம 


TAX 


INTRODUCTION: 


The main aim of the State Department of Archaeology is copying all the stone 
inscriptions in Tamilnadu, deciphering and publishing them as early as possible. 
A number of volumes have been so far published by this department. Now, an 
intensive ‘campaign of copying the inscriptions has been launched since September 2004 
and consequently new volumes are coming up. In this scheme, inscriptions : of 
Madurai District are copied and are to be published in two ப்்க்‌ This volume is 
one among such series. 


In this volume inscriptions of the villages of Melur Taluk and Madurai 
North Taluk are ©incorporatad. Melur Taluk villages like Thiruvathavur, 
Kaccirayanpatti, Kallangadu. Aruvimalai, Dhargakudi, Karungalakudi, Chockalinga- 
puram, Panaiyur, Maruthur, Amur, Kottakkudi, Panankadi, Kuththappanpatti, 
Kottainathampatti Keelavalvu, Melavalavu, Arittapatti and Poykaikkaraipatti are 
explored and inscriptions are deciphered and included here. Inscriptions of 
Thirumohur, Yanaimalai, Kunnathur, Senkottai, Sakkudi and Puliyankulam villages 
in Madurai North Taluk are also incorporated here. All these inscriptions} serve 
as main source materials in the reconstruction of the history of this part of Pandya 
country. Brief discussion about these inscriptions are given below which will help the 
readers to understand the general content. 


Thiruvathavur Inscriptions 


Thiruvathavur village is a famous religious centre since early Sangam 826. 
Two Tamil . Brahmi inscriptions are noticed datable to 200 B.C. in a natural Jain 
Cavern. It is stated as the birth place of இடப poet Kapilar and Manickka- 
vasaka, the author of Thiruvasakam, 


In this village, inscriptions are copied from the walls: of Thirumarainatha 
Swami temple, village irrigation tank. ind stones planted in the middle of the 
village. These records belong to a long span of time from 12th century A.D. up to 
the modern period. Thiruvathavur formed part of Thenparappu Nadu in’ medieval 
days. The earliest inscription found in this temple belongs to Veerapandya 
(1170-1195 A.D.) which begins with the prasasti “Pumaruviya Thirumadhum’, the 
king who was defeated in the battle of Nettur with Kulothunga Chola-IIL. 


Records of the later Pandyan Kings viz. Maravarman Sundarapandya I and II, 
Jatavarman Kulasekhara, Maravarman Vikramapandya and Maravarman Kulasekhara I 


xviii 


are found in the temple walls of Thirumarainatha Nayanar, Inscriptions of Jata 
varman Parakramapandya, who ruled in this region during the Madurai Sultanate 
period are worthy of mention. These records picturise the social conditions of this 
area during the later Pandyan Rule. 


The land holders of Vellan Vagai lands and the Nattars were engaged in 
hectic activities in this area. Brahmin Sabhas of this region had good co-opera- 
tion with the neighbouriong Urars. Temples emerged as well developed fudal 
establishments and consequently most of the Vellan vagai villages were converted 
into Nallurs without any change in their character. This shows the growing 
importance and influence of the temples (temple villages). The following tax free deva- 
dana villages, Vedhanayaka Nallur, Valangai Mikama Nallur, Pallikuricci alias Sonadu 
Konda Perumal Nallur, Thirumarai Nayaka Nallur, Velankudi alias Devarkal Deva 
Nallur, Senkulam alias Narppaththennayira Nallur, Kamar mangalam alias Sri 
Maheswara Nallur, and Mandaliga Gembira Nallur are known from the inscriptions 
of Thiruvathavur. 


Two villages viz, Iluppaikudi and Pallikkurichi were administered by warrior 
groups named as “Padaikkaranavar’. Whenever the war drums were beaten these 
warriors readily marched into battle. A number of taxes were levied on the 
lands during later Pandya period according to the quality of land and kind of 
crops. Kadamai, Antharayan, Ponvari, Kovil viniyokam, Ur viniyokam, Tharavukuli, 
Karthigai Pachchai, Pillaiyar Nonbu, Thanda Korrilakkai, Kadaikuttu Ilakkai, Anai 
Salai, Kuthiraippanthi, Santhivikraham, Panchupeeli were some of taxes levied 
during that time 


Measuring units like Sundara Pandyan Kol (measuring 24 feet), Kalakanda 
devan, Vira Pandyan are known from the inscriptions. Acchu, Palam Pon (old 
gold) Irasipanam, Ainju Meni Drama were some of coins in vogue, 


Cheiftains who hailed from particular families governed these areas as the royal 
representatives or officials. They bore the tile of Nadalvan Thenkalavalinadu, a 
territorial sub division comprising Thiruvathavur and its surroundings. They acted 
according to the direction of the Kings, collected taxes, exempted taxes for certain 
lands and served as a bridge between Urs and the Kings. One Jeyamkonda 
Chola Srivallabha alias Kalivali Nadalvan is mentioned in the inscriptions of 
Jatavarman Kulasekara Pandya. 


Almost all the inscriptions of this temple are donatory in content, From 
these records the relationship between the land, temple and the various social 
groups are known. Number of special Santhi worships had been instituted in 


xix 


Valankai Mikaman Santhi are few among them. Names of 63 Saivaite Nayanmars 
(Saints) are engraved in a single row of inscriptions. 


One Saiva Mutt was astablished at Thiruvathavur during Maravarman Sundara 
Pandyal period. One Parakramadevar was the Pontiff of this mutt and 
for the maintenance of this Ambalathadinallur village was donated as tax free grant. 


The irrigation tank of Thiruvathavur is mentioned in some inscriptions The 
names of the individuals who constructed the sluice are also mentioned. 


Inscription on an oil pressure 


Oil mongers had engaged in oil extraction by stone pressures. Some oil 
pressures are noticed with inscriptions in some villages. In Melur Taluk also one 
such inscribed oil pressure has been noticed by our department at Kachirayanpatti 
village. An individual Appanuzhan by name hailed from Mizhalur in Vazhuthi 
Valanadu had installed this stone oil pressure in the name of Porkodi Virar 
(a warring group) of Nelvelur in Suranadu. 


Aruvimalai inscript ions 


Aruvimalai, a small hillock located near Karungalakudi, is famous for a 
Pandya period temple. Inscriptions of Maravarman Kulasekhara are noticed on the 
temple walls and near by rock surface. The temple is named as Thirumelakiya 
Pandya Nayanar and Thirumelazhi Nayanar in the inscriptions. The hill is named 
Aruvimalai after the name of a village Aruvikkudi. 


Inscrintions of this temple reveal the land donations by the Kammala 
community during 13th Century A.D. and thier association with the temple. The names 
of the Thattans (smiths) are known from these inscriptions and some of them had 
associated with the royal household. 


Dhargakudi Inscriptions 


One later Pandya temple found in the village Dhargakudi has some Pandya 
inscriptions and one Vijayakara ruler Sathasivaraya’s inseription. Thirukkotisvara- 
mudaiyar temple is mentioned in these inscriptions. Activities of the Nattars and 
Urars, their role in the day to day functions of the temple and festivals are 
known from these inscriptions. Irrigation tanks, minor channels and their maintenance 
are all described in the inscriptions. One group Kadakamarukkikal, a security 
force of traders is mentioned in ‘a slab stone inscription planted near by the 
temple. Nagarathars of Aruviyur had installed Goddess Thirukkamakottamudaiya 
Thirumamadanthai Nacciyar image at this temple. 


XX 


Karungalakudi 


A Tamil - Brahmi inscription datable to 2nd Century B.C. is found here on a 
natural cavern where Jain manks resided. One ninth century A.D. inscription 
engraved below a Mahavira’ bas-relief sculpture mentions that Accanandhi caused 
to carve that figure. Another inscription in Vatteluthu script refers to 
Pallitharaiyar who served as royal officials during the early Pandya period 
(9-10 Century A.D.). 


Vayalipparai, another rocky place contains many Tamil inscriptions. 
Construction of sluice during 13th Century A.D, its repairs during 18 Century A.D. by 
one Muslim donor are known by inscriptions. Raising of a mango grove with a 
well during 18th Century A.D. is. mentioned in an inscription. Inscriptions of Lingama 
Nayak period are: also noticed in near by area called Uppuchunaiparai. 


Chokkalingapurum :Inscriptions 


Alater Pandya temple Alagiya Cholisvaram udaiyar built by Maravarman 
Kulasekhara I 18 found here. Donation of tax free lands, details of the tax defaulters, 
lands attached with the temple and establishment of a flower garden are 
mentioned . in the inscriptions engraved on the walls of the temple. 


Maruthur 


One 13th Century A.D. later Pandyan’ Vishnu temple is located in dilapidated 
conditon. Rajendra Chola Chaturvedimangalam and its association with the temple is 
known from the inscriptions here.. 


Amur 


Amur is situated on the way to Thiruvathavur from Madurai. The merchant 
guild Thisai Ayirathu Aynurruvar had constructed a Siva temple during 13th 
Century A.D. and named it as Ayyappozhil Isvaram. An official Sembiyan Pallavaraiyan 
had installed a bronze idol for Palliyarai Nacciyar and instituted a perpetual lamp for 
it _during Jatavarman -Kulasekhara’s days. Construction of a sluice is mentioned 
in a Vatteluthu record.which is in a verse from. 


-Paaankadi 


One Siva temple and Vishnu temple are found in this village. They were 
constructed by later Cholas and renovated by later Pandyas. It was a brahmadeya 
village and named as Rajendra Chola Chaturvedimangalam. Once this place was 
occupied by the Cholas, hence the names of the different quarters of this village 


xxi 


are named as Vanavanmadevicheri, Sundara Cholacheri, Rajendra Cholacheri and so 
on. Vishnu temple is named as Virriruntha Perumal temple from which inscriptions 
of Jatavarman Kulasekhara I and Marvarman Sundara Pandyal are copied now. An 
interesting inscription records about the establishment of Chakkarathalvar shrine at 
Alagarkoil. Temple administration, land disputes and the role playedby Kalavali 
Nadalvar in this region are traced out from the inscriptions found here. 


Kaththapatti inscription datable to 17th Century A.D. tells about the donation 
of a well by one Marudhan Thondaiman. 


Keelavalavu, a Jain centre is famous for its Brahmi inscription. Here some 
inscribed grinders are found on which lables like Katti, Kalam Aratti are traced 


Two inscriptions revealing the fomation, structure and management of the tank 
Parambukkanmai are included in this volume. Inscription of Marvarman Sundara I 
mentions the village name as Parambu alias Thirunarayanamangalam Arrangements 


were made for the maintenance and proper water management during Vijayanagar 
period. 


Arittapatti 


Arittapatti is a famous Jain centre in which recently one more Tamil 
Brahmi inscription was noticed by the epigraphists of this department. Another 
Vatteluthu inscription which mentions about the Accanandhi’s works, dated to 9-10 
Century A.D. is also included here. One ruined later Pandyan Siva temple was located 
recently and the inscriptions are copied which reveal a mercantile settlement 
existed here during 14th Century AD. The original name of present Arittapatti is 
known as Pathirikudi from these inscriptions, 


Poykaikarapatti 


An important inscription of Rathakaras (Kammalas) which gives the Prasasti 
of that community is found here. One mercantile centre Pavithiramanikkapuram 
is also known by an inscription. The association of this village with Alagargoil 
has come into light from the inscriptions noticed here. 


Thirumohur 


The texts of the inscriptions found on the walls of Thirumohur 
Kalamegapperumal temple are published for the first time in this volume, 
Inscriptions of Kulothunga Chola I (1170-1120 AD), Jatavarman Sundara pandya I 
(1251-1271 A.D.) and Maravarman Kulasekhara are to be mentioned significantly. 
Moreover two inscriptions of Vijayanagara rulers (1551 A.D.) are also worthy to 
mention. Generally the regnal years of the rulers will be mentioned in the 


xxii 


Pandya inscriptions. Quite differently an in inscription a date of Karif year 
has been mentioned. This year corresponds with the eighth regnal year of 
Jatavarman Sundara Pandya. From this we can surmise that the numbering of the 
regnal year was also based on the cultivation seasons. 


Some inscriptions of this temple reveal the names of the temple builders and 
the donors of various donations given to this temple. When the renovation was 
carried out in Vijayanagar period, some of the stones, bearing later Pandya 
inscriptions were dislocated and misplaced. in temple walls and the central mantapa 
of the temple tank. These multilated- inscriptions also reveal various donations to 
this temple. The names of Pandyan officials and the village names included in 
various nadu sub divisions are known from these inscriptious. 


The earliest inscription of this temple which belongs to Kulothunga Chola I 
was discovered at the outerside of the temple, This inscription mentions the 
name of this temple as Vinnagaram (Vishnu temple). Large extent of lands were 
donated during 13-14th Century A.D. for this temple. Villages like, Sirukunrathur in 
Senkudinadu, Viranarayana Chaturvedi mangalam in Pakanur Kurram,  Alodupattan 
Kumara Paviththira Chrturvedimangelam were donated for the renovation of this 
Thirumohur temple. 


Worship of Chakkarathalvar is well flourished and adopted till today in this 
temple. This cult was initiated during:1259 A.D. here and it is mentioned as “Thiru- 
vali Alwar’ in inscriptions. During 1259 A.D. an official of the King Jatavarman 
Sundara Pandya, Kalamegan alias Kangeyan constructed this Chakkarathalvar shrine 
and donated some lands. Another small shrine to Senapathi (Visvaksenar) was also 
established here by the same official. 


At the northern end of the Yanamalai hill lies a forest named as Thungavanam 
in whieh a Vishnu temple constructed is noticed, An inscription dated 1308 A.D. 
of Maravarman Kulasekhara I period, reveals that a temple was constructed 
on the banks of - Brahmathirtham by an official Sundara Pandya Konar, That 
temple was named as Vedanayakar (Brahma) temple. 


A fragmentary inscription found in the temple tank mentions that Lord Vishnu 
had listened the hymns of Sadagopan. (Nammalwar), One later Pandya inscription found 
on therear side to the Pallikondapsrumal shrine mentions about the divine 
marriage (celestial wedding) between Andal and the Lord Ranganatha to that was 
celebrated in the month of Margali (December - January), This Kalamegapperuma 
temple was administered by Thiridhandi Sanyasis and Sri Vaishnavas, One Jeeyar 
Sowmitharadasa also is noticed as an between Audal and the Land Ranganet 
aministrator during Kulasekhara Pandya period, He had taken steps to construct the 
Thirumadaivilagam. 


xxiii 


The whole temple including Sanctum sanctorum, Ardhamauniapa and Maha- 
mantapa were fully renovated ‘during the 16th Century A.D. On the southern walls of 
mahamandapa two important inscriptions dated to 1551 AD have been engraved. 
Among these two, one is the royal order of Chief Vasavanna Nayaka and another 
one is the order of Lord Kalamega Himself. These inscriptions state about the 
donation of the Ur Manakuli situated in Kalavelvinadu. Kalavalinadu has been 
corruptedly mentioned here as Kalavelvinadu. 


The outer prakara wall of Kalamegapperumal temple was constructed by 
a chief Venkappayya with the permission of the Dalvay Narasappayya of Madurai 
Nayak ruler during 1700 AD. Such important events engraved in the inscriptions 
are included in this volume. 


Yanaimalai 


One Tamil - Brahmi inscription dated to lst Century AD. engraved on a 
natural cavern in Yanamalai hill has been already published by the epigraphy 
branch of Archaeological Survey of India. Some Vatteluthu inscriptions dated to 
9-10 century AD are also published by the same agency. In the recent field survey 
the state department of Archaeology has noticed some more new inscriptions at 
Narasingapperumal temple walls which are included in this volume. 


During the later renovation work of Narasingapperumal temple, a number of 
stones bearing 13-14th Century A.D. inscriptions were misplaced. They are now located 
onthe walls of the first and outer prakaras and are copied and published in this 
volume. All the fragmentary inscriptions are studied and included here. Among 
them,inscriptions of Sri Vallaba (1101-1129 A.D ), Maravarman Suidara Pandya 1 and 
some other later Pandyas are worthy to be mentioned. 


Sri Vallaba’s inscription reveals a decision taken by the Sabha of Kundavai 
Chaturvedimangalam. Some fragmentary inscriptions elobarate the victories of 
Maravarman Sundara I in his prasasti portions. Some inscriptions descr!be the donated 
lands their boundaries, official donors, the names of Nadus, Urs and so on. Details of 
daily worship, monthly and annual festivals conducted are also mentioned in some 
inscriptions. 


Malikafur's invasion during the beginning of 14 CenturyA.D resulted in the 
end of Pandya rule in Madurai proper. Since 1323 A.D. Madurai was ruled by Sultans 
of Madura. Pandyas were driven away to the pheripheral regions. Some inscriptions 
of Jatavarman Parakrama Pandya (1316-1334 AD.) were so far discovered at 
Thiruvadavur and Thiruppuvanam temples. In the recent survey his inscriptions are 
noticed in Yanamalai temple also. On the southern adhistana of the Mahamantapa 


XXIV 


of. Narasingapperumal temple this inscriptlon-and another’ one-of:Kulasekara Pandya 
are noticed now. These two Pandya inscriptions found very near to ‘Madurai- during: 
Sultanate rule are very important in constructing the later Pandyan: history. 


Another one inscription of Parakrama Pandya reveals the donation of a tank, 
named Muthudaiyankulam, situated at a merchantile nagara at Vikkiramasingapuram 
near Ambasamudram in Thirunelveli District as a Thiruvidaiyattam donation to 
Yanamalai Narasingapperumal temple, - This donor is namedas Marakkalankaththan 
who was the: son-in-law of Makkanavan, Kulasekara’s inscription states that one 
Dezyvachilaiyan alias Ilaiyalvar Sundara. Pandya Kalingaraya has donated the village 
Puravu Varinallur for a flower garden. 


Vijayanagar’s greatruler Krisbnadevaraya’s inscriptions also are found engraved 
in this temple. Two officials.  Timma Poopan and Madhuranathan are mentioned 
in this inscription. They might have constructed the Mahamantapa of Narasingap- 
perumal temple, 


Kunnaththur 


. Inscriptions found in the temples on Kunnathur Hill and in the middle of 
the village are included in this volume. These records belong to early Pandya, 
later Pandya, Vijayanagar Kings and Vanathiraya cheifs period. 


On the terrace of Kunnaththur hill, a . basement of a dilapidated Siva 
temple is found. One Vatteluthu inscription datable to 9-10th century AD is noticed - 
now on the southern side of the dilapidated temple. This record. states that some: 
donation was made for the daily offering. of: a temple. Mulabala Isvaram, 
sitiated at Kunraththur, is a brahmadeya village in Kunraththur Kulakkilnadu. This 
endowment was handed over to Akanaligayar (temple preists) by the donor Araiyan 
Nakkan of Kavanur, This Siva temple is now identified: on the.top-of Kunraththur. 
hill. 


At the back side of this Siva temple, on the slope of the. hill another : 
structural temple datable to later Pandya period dedicated to Siva.is now noticed. 
So far unnoticed inscriptions found on the walls of this temple are incorporated 
in this volume, The records engraved, on the walls of Neelakantesvara cave 
temple are also helpful to know the history of this temple. Most of the. records 
belong to Sadaiyavarman Kulasekara I and Maravarman Sundara Pandya period. 
which reveal various donations given to this temple. 


Some fragmentary records found on the walls of Siva and Vishnu temple 
built at the centre of the village are also included in this volume, most: of which are 


XXV 


donatary in content. On the stone bed of a Jain cave at Kunnathur, an inscription 
of Vijayanagar ruler Immadi Narasingaraya (1509 A.D.) has been noticed. By this 
record the flourishing Virabhathra cult of worship during Vijayanagar period comes to 
light. Two villages viz. Malaikkudi and Puliyankulam were donated for this 
Virabhathra temple. Inscription of a Bana chief Sundaraththoludaiya Mavali 
Vanathiraya is also noticed in this village. One 17th Century A.D. inscription 
mentions about the maintenance of a water tank by the Kunnaththur Urar. 


Inscription copied at village Senkottai reveals the existence of a Vishnu 
temple during 13 century A.D. Puliyankulam record tells about the establishhment 
of ‘Appan Thiruvenkatanathan Matha’ a Vaishnava mutt, during 1449 A.D. by one 
Mavalivanathiraya. Kumankulam and Puliyankulam villages were donated as. 
Madapuram for this Vaishnava mutt. 


This volume consists of important source materials whieh are essential for 
the reconstruction of Tamilnadu History. These inscriptions were copied and 
decipherd by the able guidence of Mr P. Rajendran, Dr V. Vedachalam, Epigra- 
phists and Mr. R. Jeyaraman, Junior Epigraphist. Dr, C. Santhalingam, Archaeological 
Officer. Madurai has associated in editing the inscriptions and preparing introducing 
notes. Our Epigraphical attenders Mr. Mathivanan, Mr. Murugesan, Mr. Jothi, 
Mr. Anbalagan and Mr, Muthusamy have done their job neatly in copying these 
records. It is sure that this volume will be received well by the research world 
and by enthusiasts of epigraphy alike. 


SUMMARY OF INSCRIPTIONS 
MADURAI DISTRICT - Vol. I 


Thiruvathavur 


1/2003 Later Pindya - 13-14c. AD. 


The name of the temple is given as Thiruvathavirudaiyar Thirumarainayanar 
Koyil. In this temple the image of Subramanya was installed by one Seyyaperumal 
Aranan Tholaninran alias Rajakandagopalar Seyyaperumal. Land measuring about 
four Ma and Kani was donated at Kalakulam located in Karuikulam in Kalavalinidu 
for food offerings. 


2/2003 Later Pandya - 13-14c. A.D. 


The details of the previous inscription is stated in this record in the form 
of a royal order. 


3/2003 Parikkirama Pandya - 14௦, A.D, 


Records gift of land for the maintenance of a flower garden and for the 
Supply of certain quantity of flowers to the temple. This inscription is in the 
words of the God Himself and the Sanskrit portion in the beginning states that this 
is a record of Vadhapurisvara. 


4/2003 Parikkirama Pandya - 1322 A.D. 

Records a land gift by one Thiruppivanamudaiyan alias Arasan Chakravarti, who 
was a merchant of Sivalapuram located within Thiruvathavar in Thenparappu Nadu. 
5/2003 Parakkrama Pandya - 1322 A.D. 

Records certain land donation which was irrigated by the Ulakalantha Chola 
Peréri, for repairing some jewels of the temple, 

6/2003 Parikkrama Pandya - 1324௦. A.D. 

Records an annual expenditure of eighty Palam Pon and eight hundred Irasi 

Panam collected from certain villages including Kuttampuli alias Valaigai Mikamanallur. 


7/2003 Later Pandya - 14௦, A.D. 


Incomplete inscription. Records a land donation to conduct Valanigai Mikaman 
Thirunal! (Festival). 


xxviii 


8/2003 Maravarman Virapandya - 1281 A.D. 
Records the gift of service lands to eight deity bearers by the temple authorities, 
9/2003 Maravarman Kulasekara - 1297 A.D. 


Incomplete record. Seems to be a gift of tax free lands by two ladies in the 
old Devadaina village Panaigadi parru. 


10/2003 Later Pindya - 13௦, A.D. 


Records the tax free gift of Pallikurichi Ur to the Thirumarai Nayanar temple 
as per the royal order. This village was given as mAnya for the warriors and it was 
administered by. Karnavars (a warrior group), 


11/2003 Later Pindya - 13c. A.D. 


Records the royal order which explicit the tax free donation of the village 
Pallkiurichchi alias S5nadukondaperumal Nallur to the temple. Gold tax was excempted 
from this village according to the royal order. 


12/2003 Later PAndya - 13c. A D. 
Damaged record. Registers the gift of tax free land to the temple. 
13/2003 Later Pandya - 13௦, A.D. 


Mutilated inscription. Records the consecration of Perumal and Nacciyar and 
certain land gift. One measure, Kalakantadevan by name, is also mentioned, 


14/2003 Maravarman Kulasekara I - 1298 A.D. 


Mutilated record. Gift of 132 sheeps fortwo perpetual lamps donated by one 
Muthali Atkontin, a Kaikola of Thiruvathavir and one Rahuthan. The sheeps were 
entrusted in equal share to three shepherds (Surabi - Idaiyar) of the temple who 
agreed to supply ghee for the lamps, 


15/2003 Maravarman Sundarapindya I - 13௦, A.D. 


Incomplete record. Part of a prasasti of Maravarman Sundarapandya is 
traceable. Seems to be a land sale to one Tisai Ariyum Perumal, 


16/2003 Later Pandya - 18௦. A.D. 


Incomplete. Seems to be a record of the tax free gift of certain lands for the 
expenses of Ceranai Venran Santhi and another Santhi instituted in the name ‘of Annalvi 
(brother). Ceranai Venrain was one of the titles of Maravarman Kulasekara I (1268A.D.). 


17/2003 Maravarman Sundarapandya I - 1237 A.D. 


Seems to be a record of the gift of tax free lands for food offerings, lamps and 
other expenses of the temple, The donated lands were irrigated by ThiruvAthavir tank; 


XXiX 


This record also mentions about the installation of bronze images of Chandrasekara and 
Gowri by the temple dancing girl Kulaijal Arasan alias Alala Sundara Nangai and 
made arrangements for procession of the deities. 

18/2003 Later Pindyas - 13௦. A.D. 


Records the gift of a devadana land to the temple of Thirumarainathar for food 
offerings and other expenses. This is a record of execution of a royal order in 
different stages. 

19/2003 Later Pandya - 13௦, A.D. 

Records the gift of certain lands from the villages like Ulakalantha Chojapuram 
and Thirumarainayaka Nallur to this temple. Thennagangadevan an diginitory pleaded 
the king to retain the Karinmai right and succeeded. 

20/2003 Maravarman Suadarapindya I - 13௦, A.D. 


Fragmentary. Seems to be a record of land donation. 


21/2003 Later Pandya - 13c. A.D. 


Names of 58 Saiva Nayanmars (out of 63) are engraved. Some are partly 
damaged. From these names it is known that the images of 63 Nayanmars were 
installed during 13௦, A.D. and later on they were left out. Such figures can be seen 
at DarAsuran and Kijaikadampur temples also in Chola country. 


22/2003 Later Pandya - 13c. A.D. 

Badly damaged record, Gift of lands from the village Velankudi alias Devarkal 
Devanallur to the temple Thirumarainathar by the Sabha of Rajendra Chola Chaturvedi- 
mangalam. 

23/2003 Kulaseékara - 13C. A.D. 

Mutilated record. A record of sale of tank to Kulasekara Vadapperumal 
of Thiruvathavur, 

24/2003 Later Pandya - 13௦ .A.D. 


Damaged record. Mentions about the gift of tax free devadana lands by the 
Sabha of Rajendra Chola Chaturvedimangalam. Details of taxes levied according 
to the standard of lands and the variety of crops are also traceable, 


25/2003 Later Pandya - 13c. A.D. 


Highly damaged record. A village namely Seikulam alias Narppaththenni.. 
yiranallur is mentioned. 


XXX 


26/2003. Later Pandya - 13c. A.D 
்‌ த்‌ Fragmentary. Records the gift of tax free lands to the Thirumarai Nayanar 
temple which were brought from the villages like Narppaththennayiranallir and 
Vakaikkudi. The name of the Sthapathi of this ES Perumal Periyin alias 
Thillaivithi Divakaran is also traceable. 
27/2003" - 13௦. A.D. 

“Two mutilated fragments. King is mentioned as the son of God in the first 
bit. The second bit enumarates some land taxes levied and a land sale. 
= த 1 A. D. 

‘The name of the garland maker Pajaniyindi Pandaram is engraved on a slab in 


which flower garlands were prepared. 
29/2003 Later Pandya - 14௦, A.D.’ 
Badly damaged. Appears to be a land donation by a dancing girl. 


30/2003 Maravarman Kulasekara I - 1296 A.D. 

Slightly damaged record. Registers the installation of deity Nacciyar and one 
twilight lamp for_it by the assembly of Thenparappu Nadu, 
31/2003 Maravarman Kulasekharan I - 1308 A.D. 

Highly damaged inscription. Records the land donated from the village 
Kamarmangalam alias Sri Panmahesvara Nallur in Meliranyamuttam subdivision to 
Thiruvathavur temple. One official as Vikkirarna Pandya Vilupparayar is mentioned. 
32/2003 Jatavarman Kulasekara Pandya - 13௦, A.D. 

Incomplete record, A royal order of Jatavarmnn Kulasekara to the temple 
authorities of Thirumarai Nayanar temple. The details are lost. 


33/2003 Later Pindya - 13௦. A.D. 
Highly damaged inscription. Seems to be a land sale. 


34/2003 Later Pandya - 13௦. A.D, 

Slightly damaged record. It is a royal order of Kalavali Naidalvin. The names 
of certain villages Panankattankudi, Iluppaikkudi and Valaiyankudi are mentioned, 
35/2043 Maravarman Kulasekhara Pandya - 13c. A.D, 


Damaged record. Seems to be a land donation by one Sri Vikkiramapandya 
Vilupparaiyan and another individual to Thirumarainayanar temple. 


XXxi | 


36/2003 Later Pandyas - 13௦. A.D. 1 


Badly damaged record. Appears to be a record of land donation to the temple- 
Names of some signatories are traceable. 


37/2003 Jatavarman Kulasékara Pandya - 13c. A.D. 


Records the tax free donation of lands to the temple which were bought from one 
Kalavali Nadalvair, The prasasti of Jativarma Kulasekhara is engraved in 
the later portion. Another one village Mandalikanallir by name was also donated; jas 
tax free to the temple. Taxes levied according to the variety of crops and their yields 


are mentioned, g 


38/2003 Later Pandya - 13௦. A.D. 
Mentions the donation of garland making stone by one Sridharan hoi Srivallaba 
Pandipuram village. 
39/2003 Later Pandya - 13௦. AD. 
Highly damaged record. Records some land donations and ~©instalation, of 
some idols. 
40/2003 Later Pandya - Mar. Vikkiramapaindya - 13c. A.D. அ | 


Incomplete inscription. Gives the prasasti portion of the king Maravarman 
Vikiramapandya (1218-1252). Records a land sale. 


ப 


41/2003 Later Pandya. Maravarma Sundarpandya - 13௦, A.D. 
Mutilated inscriptions mentions the lands donated to the temple and their 
boundaries. து ்‌ 
42/2003 Madurai Nayak - 1578 A.D. = | 
Incomplete inscription. Details are lost. 
43/2003 17c. AD. ந 
Highly damaged inscription. Details are lost. 
44/2003 Madurai Nayak - 17௦. A.D, | | 
Badly damaged inscription. Lands of Kaiicaraikottai village were ‘donated, 
A Sanskrit verse is found at the end. [ 
ந த ப்‌ இ 


45/2003 Later Pandya - 13௦. A.D. அ 
5 SMD ! 
Badly damaged inscription. “ Seems to be a record a land "donation. 


XXXii 


46/2003 Later Pandya. Vira Paindyan - 13௦, A.D. 


Incomplete record. Lands of Rajendra Chola chaturvedimaigalam were 
donated as சரக்குக்‌ to Thiruvathavur temple. . This king Virapindya was defeated 
by Kulothunga Chola 111. Presence of his record in this region during Chola rule 
is very significant one. 

47/2003 Maravarman Sundara Pandya ll. 13c. A.D. 


Unfinished inscription. An individual Oruvaiurnarnthin Nallaperumal Annan 
Tamilpallavaraiyan of Rajavallipuram in. Kilvemba nadu, donated tax free lands 
at Kuladipan village. as davadiva to Thiruvathavur temple. 24 ft. measuring rod 
Sundara Pandyan kol by name is also mentioned. 

48/2003 19 - 20c. A.D. 

It records that the image at Munmandapa was installed by one Kuppaiyar, 
a resident of Madurai. 

49/2003 13c. AD. 

Mutilated record. Reveals one measuring jar called Virapindyan and 
a tax free land gift. - 

50/2003 Later Pandya. Sundara Pandya 13c. A.D. 

In complete. Records the dsévadina lands and their boundaries. Inscribed 
stones were misplaced during later renovation. 
51/2003 Maravarman Sundara Paindyan 13c. A.D. 


Records the sale of lands to one Athiccan alias Visaiyarayan. A 
village Pothukkuricci is mentioned. 


52/2003 Later Pandya 13c. A.D. 
Fragmentary. Boundaries of lands are mentioned, 
53/2003 Later Pandya. Sundara Pindya, - 13c. A.D. 


Records the land. taxes. One eurrency Dirama, equal to five kasus is. 
mentioned. One military regimeat headed by Abhimina Bhusana a kaikkola 
of Taccanir of Kilvemba nidu and an individual Kaikola, Kessavan Athiththan 
alias Visaiyarayan are mentioned. 


54/2003 13௦. A.D. 
Fragmentary. Prasasthi of Pandya King is traceable. 


| 
ழ்‌ | 
207711] | 


Boundareis of the temple lands were marked with boundry stones engraved with 


trident.  Sundarapindyan  Pallavaraiyan of Thunjalur is mentioned as a 
signatory. 


55/2003 Later Pandya. 18௦. A.D, 
{ 


56/2003 13௦. A.D. 
The last portion of a mutilated record is alone exists. Mentions an accountant 
of Rajendra Chola chaturvedimangalam. / 


57/2003 Later PAindya - Maravarman Sundara Pandyal - 13c. A.D. 


| 
Records the land donated to a Saiva mutt in Thiruvathavur, Ampalatadi 

Nallir and a name of a sculptor Uyyavantan are mentioned, The donation was 

made by Athigaimin Devan to the head of the monastry (mutt) Mutaliyar 

Parakramadeva, 

58/2003 Chola Kulotunga 11] - 1195 A.D. 


It is in verse form. Reveals the construction of a sluice by Mangalakon 
Pancalaraijan in his name. He might have been a participant in the war waged 
by Kulothunga Chola against Paindyas. 

59/2003 Later Pandya Maravarman Sundara Pandya l - 1225 A.D. | 

Records the construction of a sluice by one Kaikkola, வ்கி 
Virathamudiccan alias Parakramasiigadeva, a resident of Madurai in his name. 
It may be a renovation work of a sluice made by Cholas. 

60/2003 British ruler George V - 12-12-1911 

It is a memorial pillar planted in commemoration of the coronation of 
George V as the Emperor of India. Inscription is neatly underlined and then 
engraved, 
Kaccirayanpatti | 
61/2003 10௦. A.D. ்‌ 

Records the installation of oil mill by one Appanulan of Milalir in 
Valutli Valanadu in the name of Porkodi Virar at Nelevlir in Suranadu. 
Kallanikadu 
62/2003 14௦, A.D. 


Damaged and incomplete inscription. Mentions about the land donation 
the temple and failure of the crop. 


4 
்‌ 
1 
t 


to 


XXXiV 


Aruvimalai 
63/2003 Later Pindya Maravarman Kulasékaral - 1293 A.D. 


Records the land donation made by two goldsmiths to the temple of 
Thirumelajakiya Pandya Nayanar located at  Pakkudi in  Vadaparappunidu., 
Boundaries of the lands and boundary stones with trident marking are also 
stated. 

64/2003 Later Pindya. Kulasekhara Pandya - 1295 A.D. 

Registers the lands donated by some carpenters and their boundaries to the 
God Thirumelajakiya naiyanar of Pakkudi. 

65/2003 Later Pandya - 13௦, A.D. 


Records the land donation to the temple of Pakkudi Thirumelaliyindar 
temple for food of offernigs and daily day and mid-night services. The cultivation 
right (காராண்மை) 04 these lands were given to Pilliy Deivaccilaiyin alias 
Viraparakrama னக of Ajakiya Pandya Puram and a Kaikola of Thirumothur. 
The land tax amount were defosited at the temple. 


66/2003 13௦. A.D. 


Seems to be a land donation to the temple of Thirumsliyindi Nayanar. 
Since the inscribed stones are dislocated the continuity of the message is not 
traceable. 
67/2003 Later Pindya. Sundarapandya - 13௦. A.D. 


Fragmentary inscription. Continuity is given at the possible extent. Seems 
to bs a land donation. 


68/2003 13c. A.D. 
Records the excavation of 15 steps on the rock by one Kantaka Nadalvan 
Alalasundarapperumal. 


Tharkakudi 
69/2003 Later Pandya Jata. Parakrama Pandya - 14௦, A.D. 
Registers the land donation by many villagers for the food offerings in the 
month of Aippasi at Thirukkotisvaramudaiyar temple at Tharkakudi. 
70/2003 Later Pandya Jata. Parikrama - 140, A.D. 


Records the lands and their boundaries donated as Thirunamathukkani to 
Thirukkotisvaramudaiyar. Tharkakudi is mentioned as located within Sura(bi)nidu 
subdivision. 


XXXV 


71/2003 Vijayanagarar Sathasivarayar - 16c. A.D, 

Mentions about the consecration of Thirukkamakkottamudaiya Thiruma- 
madanthai Nacciyar (Goddess) by one Pundi Udaiyin of Aruviyur Nagaram, 
Tharkakudi is mentioned within the subdivision of Thuvaripathinadu. 


72/2003 Later Pandya - 14௦, A.D. 


Fragmentary. Records the land donations with their boundaries to the Siva 
temple. 


| 
73/2003 - 14௦. A.D. | 


Tharkakudi is otherwise called as Velkula Narai Anta Nallur It was under 
the protection of Katakamarukkikal Kamukaicci denotes one kind of betel nut. 


The stone is engraved with a purankumbha and lamps one on each side as line 
drawings. 


| 


Karuiigalakkudi 
74/2003 - 2c. B.C. 

Denotes the monastry made by Arithin of Ejaiyur. 
75/2003 - 9-10c. A.D. 


Inscription is in a verse form. It mentions about the construction of 8 
water tank with sluice by one Pallattaraiyan who was an official of & Pindya 
King. | 


76/2003 - 10௦. A.D. 
It records that the sculpture was made by Accananthi. 
77/2003 - 12-13c, A.D. 


It mentions that the sluice was made by an accountant Madakkudaiyan 
Siralan Thiruvenkidudaiyan. 


78/2003 - 1713 & 1722 A.D. 


Records about the plantation of a mango groove and excavation of a well 
during these years, 


79/2003 - 18c. A.D. 
Records the construction of a sluice by one Vattalai Ravuthar, 
80/2003 Nayakkar Ilihgama Nayakar - 1604 A.D. 


Mentions about the nabbing of theives by Vattalai Ravuthar son of 
Singara Ravuthar who was the reprerentative of Lingaya Nayakkar, 


ண (ல்லை ல 


XXXVI 


81/2003 Nayakkar Iliigama Nayakar - 17௦. A.D. 


. Highly mutilated record. Lingama Nayak, the poligar of Naththam region 
Is mentioned. 


82/2003 - 18c. A.D. 


Mentions about the construction of a parapet wall around a salt water 
Spring by one Kamala and acccountant of Pirinmalai village Sundarapandya 
Piccisari Senthan Ajagappan by name. 

83/2003 Later Pandya Sundarapindya - 13௦, A.D. 


Fragmentary inscription, Mention about a land donation. 


84/2003 Later Pindya Maravarman Suudarapindyan - 13௦. A.D. 


Fragmentary record. Mentions about the lands donated to Ajagagperumal 
Vishnu temple. Signatories name are also known. 


85/2003 - 13௦. A.D. 


Two fragmentary records mention about the land donations to the Alagap- 
perumal Vishnu temple. 


86/2003 - 13௦. A.D. 


Records a land donation of Aljagapperumal Vishnugraha and the details 
of signatories of the document. 


87/2003 Later Pandya Sundarapandya 13௦. A.D. 


Mentions about the lands donated by the villagers of Silum Arasar Kantan 
village and the boundaries of the lands. 


88/2003 - 13c. A.D. 


Fragmentary inscription, denote land donations. 


89/2003 - 13௦. A.D. 


Mutilated inscription. Mentions about the land donations and ~ their 
boundaries at the village Sulum Arasar Kantan Alappirantha 00௦1௧ chaturvedi 
maigalam in Surabinidu. 


90/3003 Later Pandya 1௧18, Sundafa Pandyal - 1263 A.D. 


Incomplete inscription. Registers the sale deed of the village Pakaiyaneri 
alais Alagapperumal Nallur located at the southern side of Sijum Ararar Kandan 
village by the same பாகா, The land was sold to one Kaikola Manickachockar, a 
resident of Madurai. 


xXxVii 


Chokalingapuram 


91/2033 Later Pindya Maravarman Kulasekaral - 1273 A.D. 


Seems to be a royal order, Denotes the donation of Vanciyir tank and 
Thuraiyur tank which was lies on the south of Amuthanarl for the day today 
expenses of Alakia Cholisvaram temple at Manmalaiyur in Surabinadu, As per the 
request of the official Kalingarayan when the King was camped at Alliyur, this 
donation was made. 


92/2003 Later Pandya Maravarman Kulasekaran I - 1306 A.D. 

This record is connected with the next one. Deals about the donation of 
Akathiyan Kulam a tank to one Pontiff of a Saiva mutt at Madurai. 

93/2003 Later Pindya Maravarman Kulasekara I - 1306 A.D. 

Connected with the previous record (93/2003). Records an assurance given by 
the four urars viz, Tharkakudi, Sulum Arasar Kantan, Ainnurruvaneri and Virasulamani 
to the uravar of Menmalai about the tax reduction of a donated tank. 

94/2003 Later Pindya - 13௦ A.D. 

Registers the land donation to the flower garden “காகம்‌ Kantaraman’ by 
name by one Thiruccirrambalamudaiyar a devotee of Alakiya Cholisvaramudaiyar 
of Melmalai in Surabinadu. 

95/2003 Later Pandya - 13c A.D. 


Deals about the land donated for the flower garden of the temple and some 
taxes are also mentioned. 


96,2003 17 - 18c. AD. 

This record reveals the constant devotion of one Kattasimban Ambalakaran 
Piccan Ambalam and his wife Viraiyi who were the residents of Chokalingapuram. 
97/2003 Later Pandya - 13C. A.D. 

Mentions a land donation in the irrigatory canal for Thirukkamkkotta mudaiya 
1480014787. 

98/2003 Later Pindya Mar Kulasekhara I 1279 A.D. 


Records the sale of one Puraverikulam to the Aljagiya Cholisvara temple by 
the பாகா of Melmalai in Suranidu. Originally this tank was enjoyed by one 
Maruthilappéraiyan but because of his default in paying the tax dues the tank was 
taken from him and sold to the temple. 


3002007111 


99/2003 13௦. A.D, 


Fragmentary, seems to be the continuation of the previous record (98/2003) 
Because of treacherous act of Maruthilappéraiyan the tank and the lands under 
his possession were seized and sold by the urars. The signatories of the document 
are mentioned. 


100/2003 13c. A.D. 


Fragments. Reveals the sale deed of tank and irrigated lands and the 
related royal order. Sundara Nacciyar shrine is also mentioned. 


101/2003 Later Pandya Sundarapaindyan - 14௦, A.D. 


Records the allotment of certain land taxes by the Urar of Puliyur for the 
day to day ritual expenses of the Pallavanesvaran temple which was built by one 
Pillai Pallavariyar of Puliyur. 


Panaiyir 
102/2003. British King George V - 1912 A.D. 


Reveals that the lamp post was planted in commenoration of the coronation 
of George V as the Emperor of India at Delhi. 


Maruthir 


103/2003 Later Pandya - 13௦, A.D. 


Registers the purchase of the flower garden, temple tank and open pavillion 
(Tirumurram) of Maruthur Vishnu temple from the Sabha of Panankidi alias 
Rajendra choja Chaturvetimangalam. The other lands were also donated for the 
day to day expenditures to Kannalvar temple, which may be the another name 
of same Vishnu temple. 


104/2003 Later Pandya Srivallabha - 1142 A.D. 


Records the gift of certain lands merged into a new village namely 
Thirunarayananallir as a tax free devadana to the Kannalvar temple which was 
situated on the western hamlet of Rajendra 061௧ chaturvetimangalam. 


105/2004 Later Pindya Maravarma Suidarapandya 1 - 1219 A.D. 


Registers the donation of 8 Pajaikasu by one Sundarththolan Thiruppivana 
mudaiyan alias sembiyan Pallavaraiyan of Nallani Amur in Tendparappu nidu for the 
mid-day service and twilight lamps. 


XXXIX 


106/2003 Later Pandya Jata. Kulasekharan - 1203 A.D. 

Records the construction of Palliyarai Nacciyar shrine by one Sembiyan 
Pallavaraiyan in Aiyyapolil Isvaram Udaiyar temple premises and the lands donated 
for lamps. 

107/2003 Maravarma Suiidarapandyal - 13cC. A.D. 

Registers an endowment entrusted with the Sivabrahmanas of Aiyyapolil 
Isvaram udaiya nayanair temple at Nallani Amur in Thenparappunidu, A land 
measuring rod, Malaikudi kol is also refered 
108/2903 Later Pandya - 13c. A.D. 

Records the construction of door jamb (Nilaikkal) of the central shrine by 
one Ajagan Ariyin alias Kaduvetti 
109/2003 Later Pandya - 13c. A.D. 

Fragmentary inscriptions seems to be the donation of 90 panam for a lamp 
to Vinayakar shrine and some land donations. 

110/2003 - 9-10c. A.D. 


Records the construction of a sluice by one Saththan, father of Kali Thiran 
who seems to have been an official of the Pandya rulers. 


Kottakudi 
111/2003 Later Pandya Maravarman Kulasekaran - 1297 A,D. 


Incomplete record which reveals the construction of a sluice in a tank, 


Panankadi 


112/2003 Later Pandya Jata. Kulasekara - 13௦. A.D. 


Records the gift of Ambaveli tank and lands of Panankadi to the temple 
of Uththamachojla Vinnigar Emperuman at Rajendrachoja chaturvedimaigalam. The 
taxes such as Kadamai, Antharayam were also donated to the temple.  Scribal 
mistakes are found in the inscription here and there. 


113/2003 Pandya Kulasekhara - 1213 A.D, 


Records the dispute and settlement about the enjoyment of the Uththama 
Chola Vinnakara temple by one merchant Thillai Alagan who was attached with 
Kulasekharan Madikai at Madurai. 


XL 


« 
பி 


114/2003 Maravarman Sundarapindya - 1226 A.D. 

Registers the gift of one ma extent of land at the hamlet Dhamodharaman 
galam for food offerings of the God and devotees came from distance at Uththama 
Choja Vinnakara Emperuman temple which was situated in Rajendra Chola chatur. 
vedimangalam a brahmadeya at Tenparappunadu. 

115/2003 Later Pandya - 13c. A.D 


It is a royal order sent to the sabha of Rajendrachola chaturvedimangalam 
a brahmadsya of Tenparappunidu. All the taxes collected from the hamlet are 
excempted and. donated to the food offerings of Chakrathajvar shrine newly 
constructed at Thirumalirunijolai (Alagarkail) by one Thunjalur udaiyan. 


116/2003 Maravarman Sundrrapindya - 13௦, A.D. 

It recorcs that the boundary markers of the Sabha of Rajendrachola 
chaturvetimangalam sold six ma extent of lands as tax free Devadana to one 
Karumanicka Alvin alias Srivimanan at Enathimahgalam attached with Vanavan- 
madesvicceri. 

Kiththappanpatti 
117/2003 17c. A.D. 
Registers that one well was dug by Marudhan Thondaimin 


Kilavalavu 
118/2003 9-10c. A.D. 

Two labels inscribed on the two stone grinders, One gives the name Sri Katti 
and another Srikalan Aratti. These two persons may be the donars of the grinders. 
119/2003 - 17௦. A.D. 


Records the name of the scribe Idai Sivanthi who inscribed the names of 
the donars, Bumi Alagar and Sundara Alankaran sons of Perumpadai kollan (smith), 
a resident of Pufijurutti in the year of Virothikrithi. 


Mélavalavu 


120/2003 Maravarman Sundarapandya - 1238-39 A.D, 


Out line is drawn on four sides of the inscription, Four lamps are engraved 
one on each in all four cordinal directions) Registers the raising of tank bund 
and provision made for sluice to out let the water in the tank at Parambu alias 
Thirunarinamaigalam by one Kovirudaiyan Chakkarakkaiyan 


XLI 


121/2003 Vijayanagarar Virupaksharaya - 15௦. A.D. 


Records the wages given by the land owners to one Thirunarayana samban 
the urparaiya of the village Parampu alias Thirunairanamaigalam who took care of 
the maintanance per one ma extent of land. 


Arittapatti 
122/2003 In Tamil Brahmi Script 2c, B.C. 

Registers the provision of rock cut cave by one Nelveli Silivan Athinan 
Veliyan. 
123/2003 In Tamil - Brahmi script - 2c. B.C. 

Records the gift of rockcut cave mujangai by one Emayavan son of Ilam 
Perathan of 118901 
124/2003 

Records the carving of the Mahavira image by Accananthi on behalf of 
Porkkottukkaranathar, in this Thiruppinaiyan hill, It was guarded by the urars of 
Pathirikkudi, 
125/2003 Later Pandya Vikkramapandya - 13௦, A.D. 


Records the sale deed .of certain lands at Devan Embal by one merchant 
Adhicia dévan alias Siruma Nadailvin who was a resident of Pathirikkudi alias 
AiiAurruvapperuntheru in Tenparappunidu. 


Poykaikaraipatti 
126/2003 Later Pandya Kulasekhara - 1307 A.D. 


Records the Sanskrit prasasti of the Rathakaras (smiths) who engaged in six 
diffent crafts, who are the residents of Paviththiramanikkapuram. They assembled 
in a place and honoured one Thiruvaikkulamudaiyin who executed the devotional 
activities at Thirumaliruisolai (Algar Koil). 


127/2003 Later Pandya - 13௦, A.D. 

States that Vambarrur is under the protection (Asiriyam) of one Sundaraththol 
nambi, 
128/2003 13c. A.D. 


Records the gift of a garden by one Uyyavandhin Thirunokkalakiyan alias 
Thondaiman of Kilkurru Maijakkudi. 


XLU 


129/2003 14௦. AD. 

This incomplete inscription records the name of one Thirumaliruficholai 
Narayana Bhattan of Maniparanamaigalam. 
130/2003 13c. AD. 


This inscription records that the Kumara Suriya flower garden (Tirunan- 
tavanam) was gifted by one Therkajvar of Rayur. 


131/2003 14 - 15௦, A.D. 


Records the gift of flower garden (Tirunantavanam) by certain Nallasiddhi- 
rajadevar, who belonged to the Kaduvetti lineage. 


Thirumohur 
132/2003 Vijayanagarar - 1551 A.D. 


This inscription records the provisions made for the puja expenses of 
Pallikondaperumal by a certain Thimmappa naiyakkar, The annual, plan of the 
above said puja expenses was 450 Kalams of paddy and 36 Kalipon, 


133/2003 Vijayanagarar - 1551 A.D. 


Records the same endowment mentioned in the previous inscription. This 
inscription states that this gift was made as per the orders of the God Himself, 


134/2003 Later Pindya - 13௦, A.D. 


This inscription records the provisons made for the marriage festival 
conducted in the month of Margali. The God Himself had issued the orders for ° 
this endowment too. The brahmins of Kundhavai chaturvedhimongalam hold the 
responsibilities of the above said gift. The food offered to the God during the 
above said festival was distributed to two Bhagavars (the temple staff). 


135/2003 14 & 17௦. A.D. 


One inscription records the constant devotion of a certain Perumal who 
hailed from Perunthurai. Another records the constant devotion of a certain 
Solaimalai. Third fragment which is written in the 140 A.D. characters seems to 
be a portion of the document of a certain gift. 


136/2003 18 & 19௦ A.D. 


One inscription records the constant devotion of a certain person who 
records himself as the son of Parahkusa aiyankar. Another inscription records the 
constant devotion of a certain Sundarappillai Pindyan, 


XLII 


137/2003 Later Pindya Kulasekara - 13c. A.D. 


This inscription records that nali uri of offered food (prasidham) was given 
daily to a certain person who carried out of the works of Thirumadaiviligam. To 
meet the expenses of this offered food, ten achchu (coins) were collected from the 
carpentors by the Jeyar Sowmitradhasan and that amount was deposited in the 
temple treasury (Sripandaram). 


138/2003 Later Pandyas - 13௦. A.D. 


This incomplete inscription records that Sirukunratthur located in Senkudi 
nidu was endowed to the temple of Thirumohur Ninraruliya paramasvamigal as 
Thiruppanippura thiruvidaiyatta iraiyili. 


139/2003 Later Pandya - 13௦, A.D. 


This inscription records that Alodu Pattin Kumarapavitthira chaturvedhi 
mangalam, a brahmadsyam located in Venbilnadu was gifted as Thiruppanippura 
thiruvidaiyattam, to the temple of Thirum5hur nindraruliya Paramasvamigal, to meet 
the renovation expenses of that temple. 


140/2003 Later Pandya, Maravarman Kulasekara Pandyan I - 13௦, A.D. 


This inscription records that Pannattankottai was endowed as Karanmai 
thiruvidaiyatta iraiyili to the temple of Vedhanathar. This Vedhanathar temple 
which is located in the southern most part of Yanaimalai, was in dilapidated 
condition prior to the period of  Maravarman Kulaseékara Pandya I and it was 
reconstructed by one Suidharapandya cholakonar in the name of the ruling Pandya 
king, MaAravarman Kulasekara Pandya I. The location of this temple while it was 
in a dilapidated condition is recorded in this inscription as the tank of the 
Brahmathirttham located in Srithudgavanam. 


141/2003 Later Pandya, Jadavarman Sundharapandya -1259 A.D. 


The Thiruvali Alwar (Chakkaratthiljwar) now a very popular deity in the 
Thirumohur Perumal temple, was consecrated by a certain Kalamegam alias Kaigeyan. 
This inscription also records certain lands endowed to this deity. 


142/2003 Madurai Nayak - 1700 A.D. 


These three labal inscriptions record that the outer wall of the temple complex 


was constructed by Vengappayyan with the permission of his father Dhalavay 
Narasappaiyan 


XLIV. 


143/2003 Later Pandya - 12-13c. கற, 

Fragments, Seems to be the portions of the documents of land gifts to the 
temple. In one of the fragments a tank named after a Pandya ruler is noticed. 
Since Thirunanthavanappura iraiyili land is mentioned in that fragment, that garden 
might have been located near that tank and might have been irrigated by that 
tank, 


144/2003 Later Pandya, - 13௦, A.D. 
Fragments, In one of these fragments the name of the goddess(?) Alagiya 
Nachchiyar is mentioned. 
145/2003 Later Pandya - 13௦, A.D. : 
Fragment. Seems to be a portion of the document of a land gift to the 
temple of Thirumohurninraruliya Paramaswaimigal. 
146/2003 Later Pandya - 13௦, A.D. 


Fragments, In one of the fragments the name of a certain village Thulaikkudi 
and the name of the Goddess Bhagavathiyilwar are traceable. The fragments 
seem to be the portions of the documents of land gift to the temple. 


147/2003 13 & 17c. A.D. 


Fragments, One fragment seems to be a portion of the docimeat of a 
land gift. Another fragment records the constant devotion of a certain Appaiyangar. 


148/2003 Later Pindya, Jadivarman Sundhara Pindyan 


This inscription records that lands in Viranarayana chaturvedhimangalam, 
which was bifurcated from Thiruvadagam located very near Thenur in Pakanur 
Kurram (S5javantin area), were endowed as Thiruppanippirath thiruvidaiyattam to 
meet the renovation expenses of the Thirumb>hur ninrraruliya Paramaswamigal, 


Yanaimalai 
149/2003 In Tamil Brahmi Script 1௦. A.D, 
This inscription records that a certain Eri Arithan Atthuvayi Arattakayipan 


had donated this rock bed which is located in the Jain shelter at Ivakunram (Iva 
Kunrathir?) 


150/2003 9-10c. A.D. 

This label inscription in Vatteluttu engraved below the Jain image sculptured 
in bas-relief near the cavern at Yanaimalai records that the image was sculptured 
by a certain Enathi Nadi on behalf of a certain Aniyan who hailed from Kalavali 
Nadu. 


XLV 


151/2003 9-10c. A.D. 


This label inscription in Vatteluttu engraved below the Jain image sculptured 
in bas - relief near the cavern at Yanaimalai, states that this sculpture was protected 
by the Thinaikkalaththir (officials of tax office). 


152/2003 - 10௦. A.D. 


This label inscription in Tamil script engraved below the Jain image sculptured 
in bas-relief near the cavern at Yanaimalai, records that this Jain image was protected 
by the Sriporkottuk Karanaththar, 


153/2003 9-10. - A.D. 


This label ‘inscription in Vatteluttu engraved below the Jain image sculptured in 
bas-relief near the cavern at Yanaimaiai, states that this Jain image, seulptured by 
Achchananthi, was protected by the Sabha of SriNarasingamangalam, 


154/2003 9-10c. A.D. 


This label inscription engraved in Vatteluttu character below the Jain image 
sculptured in bas - relief near the cavern at Yanaimalai records that this Jain 
sculpture was carved by a certain Seliya Paindi, who hailed from Peruvembarruir 
located in Thenkalavali nadu. 


155/2003 9-10. A.D. 


This label inscription engraved in Vatteluttu characters below the Jain image 
sculptured in bas - relief near the cavern at Yanaimalai bya certain Saththan 
Araiyan alias Saththan Ambiraiyan who hailed from Venpurai located in Venpunaidu. 


156/2003 9-10c. A.D. 


This label inscription engraved in Vatteluttu characters near the Jain image 
sculptured in bas - relief states that this Jain image was carved by a certain person 
(black smith?) hailing from Vallaththirukkai (NAdu?) 


157/2003 9-10. A.D. 


This label inscription engraved in Vatteluttu characters below the Jain image 
sculptured in bas - relief near the cavern at Yanaimalai records that this Jain image 
was carved by a certain Pudhiyameviyambhuthi (Pudhumaieliyambhuithi) a resident 
of Vettafichari in Venbaikkudi located in Venbaikkudi nidu and this sculpture was 
under the protection of the Puravuvarikalaththar. 


XLVI 


158/2003 9-10c. A.D. 


This inscription engraved in Vatteluttu characters at the entrance into the 
mandapa of the cave dedicated to Muruga near the Narasinga - Perumal temple, 
records that a certain Nambiranbhatta - Somasi - Parivirajakar renovated (pudukku) 
this temple (or a portion of this temple?). The portion renovated by him is not 
clearly pointed out in this inscription. 


159/2003 770 A.D. 


This inscription engraved in Vattejuttu characters states that the excavation 
of the rock - cut temple (of Narasimha) was begun by Maran-Kari alias Muvendha- 
mangalapperaraiyan, a Vaidya of Karavandapura alias Kalakkudi. This Vaidya who 
was also a minister (Uththaramanthiri) of the Pandya king, died before the 
completion of that monumental work. Soon after his death, his brother Maran 
Eyinan alias Pindimangala Visaiyaraiyan became the minister and completed the 
te nol: work. Farthsr he added the mukhimandapa and had the consecration 
ceremony performed. Karavanthapuram, the native place of the above said brothers 
has been identified with Ukkirankottai in Thirunelveli District. 


160/2003 Kali year 3871 - 770 A.D. 


This Sanskrit inscription engraved in early Grantha Characters belongs to 
Maralijadaiyan who is also known as Parintaka. The Kali year 3871 quoted in 
this insription for Maranjadaiyan furnishes a valuable chronological land mark for 
early Pindya history. The rock - cut cave temple for Vishnu was carved in the 
Kali year 3871, by Marankari alias Madhurakavi, a native of Karavanthapuram. 
He also created an agrahara for the Brahmins, Since he died before the completion 
of the temple work, his younger brother Maran Eyinan who succeded him as the 
minister of the Pandya king, completed the temple work, 


161/2003 Chola, Parintaka Chojal, - 940 AD. 


This inscription engraved in Vatteluttu characters on a rock tothe left of 
the entrance into the central shrine of the rock cut temple of Narasinga Perumal, 
records a gift by Maruiduirudaiyan Arunidhi Kaliyan, an officer of Choja Peruma- 
nadigal (Parintaka 1), who hailed from Marudir locatedjin Purakkarambainadu. 
This inscription recorded in the 33rd year of Parantaka chojal states that the 
temple which had to pay 18 ilakkisu every year to the assembly had only 
arranged for the payment of six ilakkasu. The above mentioned officer Arunidi 
Kaliyan apparently agreed to pay the rest himself after taking possession of the 
tank Kaliyineri which must have belonged to the temple. With the 300 kalam of 
paddy obtained from two Velis of wet land which was under the irrigation of the 
Kaliyaneri tank, he made provisions for the offerings to the God and for feeding 


XLVII 


of five brahmanis, who recited Veda during the midday services of the temple. 
The feeding of these brahmanas commenced when there was an eclipse of the 
sun and the nakshatra was Aslesha in the month of Karkaitaka. These astronomical 
details help us to confirm the initial date of Parantaka cholal (viz, 907 A.D.) 
From this inscription it is also understood that + puttakkam coin was the interest 
charged on 1 tlakkasu per one month and that each ilakkasu was equal to 7 Puttakkam 
(Pudhu + akkam), 


162/2003 Choja Pandya Jadivarman Sundharachojapandya - 11௦. A.D 


This inscription registers a gift of. 25 sheep by a certain Ven Iranniyan Solai 
for a lamp in the temple of Narasiigadeva at Anaimalai, 


163/2003 Later Pandya Parakkiramapandya - 14௦, A.D. 


This inscription records that one tank by name Muththudaiyin located near 
Vikkiramasingapuram was sold as Thiruvidaiyaittam to the temple of Narasinga- 
perumal by a certain Marakkalaikattan. 


164/2003 Pandya Kulasékara Pandya - 14௦, A.D. 


This inscription records the provision made for a flower garden to the 
temple of Narasingapperumal. For this purpose, a certain ™Deivachchilaiyin 
Kilaiyilvan alias Sundhara Pandya Kalingarayan hailing from Kirttivisaiyalayanallur 
alias Kilai nettur located in Karunkudi nadu, purchased Puravuvarinallir and handed 
over it to certain persons including Deivachchilaiyin Kuljaikidhar. The flower 
garden was named as Iraiyajvin, 


165/2003 Vijayanagarar Krishnadevaraiyar - 1519 A.D. 

This inscription engraved on the west wall of the Mahimandapam of 
Narasingapperumal temple, mentions Timmabhupa as the king‘s door keeper and a 
certain Madhura Ramanatha as his agent, The name Yanaimalai is recorded as 
‘Gajagirl’. 


166/2003 Later Pindya 

Fragments. In the first fragment the prasisti of JadAvarman Srivallabha 
is noticed, The second fragment seems to be a portion of the royal order issued 
by Sundarapandyadeva. 


167/2003 Later Pandya - 13௦. A.D. 

Fragments placed on the innerside of the north wall of the mahamandapa. 
The first fragment seems to be a portion of the document of a land gift. The 
second fragment seems to be a portion of the document of the Pandya ruler 
Srivallaba deva’s fifth year, The name of the village Sri Kundthavai Chaturvedi- 
margalam is traceable. 


XLVIII 


168/2003 Later Pandya - 13c A.D. 


Fragments. In one fragment a person hailing from Masilir located in 
Muthirrukkottam is mentioned. In an another fragment the village name 
Manaviramaturai (Minimadurai) and a measure by name Virapindyan are noticed. 


169/2003 Later Pandya - 13c A.D. 


Fragments, It is understood that every month the god was taken out in 
procession. The name of a village Sattamangalam is traceable. 


170/2003 Later Pandya - 13c. A.D. 


Fragments. These inscriptions engraved on the innerside of the north outer 
wall of the Narasingapperumal temple seems to be the portions of the documents 
of certain gifts, 


171/2003 Later Pandya, Maravarman Sundarapandya I - 13௦. AD, 


Fragments, These fragments engraved on the innerside of the north outer 
wall. of the Narasingapperumal temple, contain the prasasti portion of the Pindya 
ruler Maravarman Sundhara Pandya 1 


172/2003 Later Pandya - 13௦. A.D. 


Fragments. These fragments are engraved on the innerside of the north 
outer wall, These seems to be the portions of the documents of certain land 
gifts. The name of one village Siruvaliyur located in Meliranyamuttam is traceable. 


1732003 Later Pindya - 13௦, A.D. 


Fragments. In one of the fragments the for mation of Thirumadaivilagam 18 
recorded. 


174/2003 Later Pandya - 13௦. A.D. 


Fragments. The first fragment seems to be a portion of a document in 
“ which the land donation made by a certain Srivallaban Ajagiya Manavalan at 
Chsljakulanthaka Chaturvedimaigalam is recorded. In an another fragment the 
provisions made for a festival of this god (Alwar) is recorded, 


175/2003 Later Pandya - 13௦, A.D. 


Fragments. One records the provisions made to meet the expenses that 
occur while the deity is taken out in procession. Another fragment seems to 
record some provision made for the worship. In this the name of the temple is 
recorded as “Narasinga Alwar Koyil’. 


11%. 


176/2003 Later Pandya - 13௦. A.D. 


These fragment inscriptions build in the Mahamandapa of the Narasingap- 
perumAl temple seem to be the portions of the document of certain land gifts. 


177/2003 Later Pandya - 1892 A.D. 


This inscription engraved on the pillar of the Mandapa of the Narasingap- 
perumal temple records that the window was the gift of certain Umapathi Aiyyan 
of Madurai, in the year 1892. 


178,2003 17 - 18c. AD. 

This inscription engraved on the outer side of the north wall of the 
Mahamandapa of the Narasingapperumal temple records some gift made by a 
certain Rathinapperumal Bhagavathar who belonged to the Bharathvaja gotram., 
Varichchiur (Kunnaththirmalai) 

179/2003 Pandya - 9-10c. A.D. 


This inscription engraved on the basement of the structural temple construc. 
ted on the Kunnaththuir hill (Varichchiyur), records the gift for Thiruchchennadai, 
to the temple of Mulabala Iévaram. 

180/2003 Vijayanagarar Immadi Narasiiga Maharayar - 1505 A.D, 


This inscription engraved on the bed of the Jain cave records that Vira- 
marasayyan who was the ‘Karththar’ of Madurai mandalam, had endowed the 
villages Malaikkudi and Puliyaikulam to the temple of Virapaththiranayanar, 


181/2003 
Fragment inscriptions engraved on the dilapidated Siva temple. 
182/2003 19c. A.D, 
These inscriptions engraved on the Nilakandeswara (rock-cut cave) temple 


records the constant devotion of a certain Tiththarama(pa)liyaichi and Ariyayara 
puththiran, 


183/2003 19௦. A.D. 


This inscription records the constant devotion of a certain Vamaichi 
Pandaram who lived in the hermitage which was known as Srivanni aisiramam, 


184/2003 13௦. A.D. 


This inscription engraved on the Kannimar mandapa of the Nilakandeswara 
(rock - cut cave) temple records some land gift. 


185/2003 13c. A.D. 


These are fragments engraved on the wall of the mandapa of the Kannimar 
temple of the Nilakandeswara (rock cut eave) temple. These fragments which can 
be dated to the period of Maravarman Sundhara Pandya I, seems to record the lands 
gifted to the temple. 


186/2003 Later Pindya Jadivarman Kulasekara Pandya 1 - 13c. A.D. 
This inscription engraved on the South wall of the Kannimar mandapa of 


Nilakandeswara (rock - cut cave) temple, 


This inscription which is incomplete begins with the prasasti of Jadivarman 
Kulasekara Pandya I, seems to record the action taken by the assembly of Kavanir 
as per the order issued by Kalavali Nadalvan. 


187/2003 Later Pandya Jadivarman Sundhara Pandya - 13c. A.D. 


This fragment inscription which is engraved on the South wall of the Kanni- 
mir mandapa of Nilakandeswara temple, seems to record the gift of tax free lands 
to meet the day to day expenses of the temple. 


188/2003 - 13c. A.D 
These inscriptions engraved on the mandapa of the Vishnu temple at 


Kunnaththur, seem to record certain gifts made to the temple. 


189/2003 13c. A.D. 

These inscriptions engraved on the entrance mandapa of the Vishnu temple 
seem to record certain gifts made for the Margali festival, The name of a village 
Pulankudi is traceable from one fragment. 

190/2003 13c. A.D. 

These fragments belonging to the later Pandya period, may be the portions. 
of the documents of certain gifts made to the temple. 
191/2003 - 13௦, A.D. 

Fragment, Seems to be a portion of a sale deed. 


11 


192/2003 Later Pindya Maravarman Kulasekara Pandya - 1296 AD. 


This inscription engraved on the north wall of the Ardhamandapa of the 
Siva temple, records the gift of tax free land, located at Vikkirama Pandya nallur 
alias Kavanur, to the temple of Thaniyinai Iswaramudaiyar. This land was 
located on the northern side of the tank Adhichchap peréri. 


193/2003 - 17c. A.D. 


This inscription engraved on a stone lying near the Siva temple, records 
that the Mahajanas and Kudis of Kunnaththir agreed to contribute themselves 
(certain amount and grains?) for the upkeep of the tank. 


194/2003 Vanidhiraya Sundharaththol Mavali Vanathiraya - 1507 A D. 


This inscription engraved on stone setup near the Siva temple is damaged 
and the details are lost. Some titles like Bhupaila gopalan, Bhuvanskaviran, Samara- 
kolakalan etc. of the Bhanathiraja Sundharaththsl Mavalivanathiraya are traceable, 


Senkottai 
195/2003 Later Pindya Kulasekara Pandya - 13c. A.D. 
Fragments, Seem to be the portions of the document of a land gift to the 
Vaishnu temple, Sri Raima Vinnagaram. 
Sakkudi 
196/2003 13௦, A.D. 


Fragment. Seems to bea portion of the document of a gift. 


Puliyankulam ்‌ 
197/2003 Vanidhiraya Thirumaliruicholai ninran Mavali Vanathirayan - 1449 A.D, 


This inscription records the two villages Puliyatkulam and Kumanikulam were 
endowed as Madappura iraiyili to the mutt of Appan Thiruvsnkaianathin mutt at 
Puliyaikulam, 


ரர ஓலா சிடுஓமபஙடு௨ 8002/92 


ன்‌ கடு 204) ல்‌ TTS PR 
ஆ அ 24 ட்‌ ்‌ 7+. 


ல்ச்‌ ட கஷ்டம்‌ ட்‌ 3 
ல 8 


202 7 சி ராமாய 60 


ஸ்‌. ன ஆ. 


7 FA 
11 
? பட்‌ 


ப்‌ 
கூரத்‌ 
ரத 


Ep ‘zy ween JES 800812 
010.௨ 06 ॥ஒ 


புய - ஏம்மா சமமா 


96 ரா 1மடரிஓ 6002/811 த பக ட்‌ 2 தட பர ரசா லே தந்த ட கர 
சிரப்‌ மம ர ய்யா மடியின்‌ 


es, 


வல்‌ 


1 ய்‌இயடி 


பாடகா 


6 ரா சும £00Z/0L 


9792 Teen wwe 8006/651 


‘ey ரமா wD £00Z/89 


Oey 


3 


(2 


53 
ஞ்‌ 


2 


தக: 4 


ட 


க்கம்‌. 103 


64/2003 அருவிமலை ப 


ஙி 


கில்லி ல்‌ 


ம்‌ 98 


ர்‌ பக்க 


எ 


58/2003 திருவாதவூ 


126/2003 பொய்க்கரைப்பட்டி 


73/2003 தருக்காக்குடி பக்கம்‌ 121 


பக்கம்‌ 206,207 


861 12% 
pr மம 6002 
/0௦1. 


4 வக்‌ 
ல 
வ வஸ்‌ 


626 ‘Teen 6008/191 
யாரி நியமி மாமயராதழ்‌ 602 “ஏலா சமம்‌ 6006/201 


uss முழுக மம ர 
பாயு மலம யாற 
10, “௮ 
சுமா £00₹/19 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 1/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு: — 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13, 14-ஆம்‌ 

ஊர்‌ : திருவா ர்‌ தூற்றாண்டு 
ச பத்தியக்‌ கல்வெட்டு 478/1958-59 

மொழி; தமிழ்‌ ஆண்டு அறிக்கை 

எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

அரசு : பிற்காலப்பாண்டியர்‌ 

த்தல்‌: வஸ்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ்‌ 

இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ வடசுவர்‌. 


குறிப்புரை : திருவாதவூர்‌ திருமறை நாயனார்‌ கோயிலில்‌, செய்யப்பெருமாள்‌ ஆரணந்தொழ 


நின்றான்‌ என்பவன்‌ சுப்பிரமணியர்‌ உருவத்தினை எழுந்தருளுவித்தான்‌. 
அத்திருமேனிக்கு அமுதுபடி, சாத்துப்படி முதலிய செலவினங்களுக்காக களவழி 
நாட்டுக்‌ கருங்குளம்‌ - களகுளத்தில்‌ நிலம்‌ அளிக்கப்பட்டது. கல்வெட்டு எழுத்துக்கள்‌ 
பல இடங்களில்‌ தெளிவாக இல்லை. 


கல்வெட்டு : 


1. 


ஹஹிஸ்ரீ கிரலஃவனச்சக்கரவத்தி கோனேரின்‌[மை[கொண்டான்‌ தென்‌ 
பறப்பு னாட்டுத்‌ திருவாதவூர்‌ உடையார்‌ திருமறை நாயனார்‌ கோயில்‌ 
தானத்தாற்கும்‌ இக்கோயில்‌ செய்ய பெருமான்‌ ஆரண 


ந்‌ தொழ நின்றானான இராசகண்டகோபால செய்ய பெருமாள்‌ பேரால்‌ 
எழுந்தருளப்‌ பண்ணின ஸுவூஷஸுப்‌ பிள்ளையாற்கு அமுதுப்படி 
சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும்‌ நித்த நிமந்தங்களுக்கு களவழிநாட்டு 


. கருங்குளம்‌ களக்குளத்தில்‌ எ[முமிபோது சடைகோபன்‌ விலை கொண்டு 


உட்கிடையான இவ்வூர்‌ கோல்படி நிலம்‌ நாலு மாக்காணியும்‌ இன்னிலத்‌ 
தால்‌ வருங்கிணறு மாமர மற்றும்‌ எப்பேற்பட்ட ஸூஸஉராஷிகளும்‌ 


. முன்னுடையாரும்‌ முதல்லு[ம்‌ உ]ழவுந்‌ தவுந்து இவன்‌ விலை கொண்ட 
, படியிலே இவனுக்குக்‌ காணியும்‌ இன்னிலத்துக்கு கடமை அந்தராயம்‌ 
காரியவாராட்சி வெட்டிப்பாட்டம்‌ பஞ்சுபீலி ஸ.ஹிவிம,ஹப்‌ பேறு வா 


. சல்பேறு இலாஞ்சினைப்பேறு தறியிறை செக்கிறை தட்டொலி 
தாட்டார்ப்பாட்டம்‌ இடைவரி இனவரி ஏர்வரி மற்றும்‌ எப்பேற்பட்ட 
ஸூராஷிகளு ந்‌ தவிர்ந்து முன்பு நமக்கு முப்பத்தொன்பதாவது 
வரையும்‌ இறு 


. த்துப்‌ போதும்‌ , . . இறைக்கு அச்சு இரண்டே காலே அரைக்காலும்‌ 
முப்பத்திரண்டாவது தைமாதம்‌ முதல்‌ வரியில்‌ கழித்து இப்பிள்ளை 
யார்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நித்த நிமந்தங்களுக்குடலாக 


. தந்தோம்‌ . . . [இது] பிடிபாடாக கொண்டு அ௩ரசித்தவற்‌ செல்ல 
இன்னிலம்‌ நான்கெல்லையிலும்‌ திருச்சூலலாபனமும்‌ பண்ணிக்‌ கல்லிலும்‌ 
செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க : ௨ 


. மஞ்சக்குடியுடையான்‌ எழுத்து:-' யாண்டு ௩௰௨ [நா]ள்‌ ௨௱௮ :- இவை 
காலிங்கராயன்‌ எழுத்து :- சானுழ இது திருவெழுத்து:- 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : மதுரை 


தொடர்‌ எண்‌ : 2/2003 


ஆட்சி ஆண்டு : — 


வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 19-14ஆம்‌ 

ஊர்‌ : திருவாதவூர்‌ ன்‌ ்‌ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு | 478/1958-5 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | ப 9 

எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு ர 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு | ்‌ 

மன்னன்‌: ௨ எண்‌ ர்‌ 

இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ வடசுவர்‌. 


குறிப்புரை: எண்‌ 1/2003 கல்வெட்டின்‌ செய்தியே இக்கல்வெட்டிலும்‌ கூறப்படுகிறது 
கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. 


கல்வெட்டு : 


1. ஷீஹிஸ்ரீ கிரலுவனச்சக்கரவத்தி கோடநொன்மை கொண்டான்‌ களவழி: 
நாட்டு இலுப்பைக்குடிக்‌ காரணவர்க்கு திருவாதவூர்‌ உடையார்‌ 
திருமறை நாயனார்‌ கோயில்‌ செய்யபெருமாள்‌ ஆரணந்தொழ 


நின்றானான 


2. இராசகண்டகோபாலர்‌ செய்யபெருமாள்‌ பேரால்‌ எழுந்தருளப்‌ பண்ணின 
ஸஸ,ஸறைப்‌ பிள்ளையாற்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளுட்டு 
வேண்டும்‌ நித்த நிமந்தங்களுக்குத்‌ தங்கள்‌ பற்றில்‌ இருக்கும்‌ கருங்‌ 
குளம்‌ களக்குளம்‌ எழும்போ 


3. து சடைகோபன்‌ விலை கொண்டு உட்கிடையான தங்களூர்‌ கோல்படி 
நிலம்‌ நாலு மாக்காணியும்‌ இந்நிலத்தால்‌ வரும்‌ கிணறு மாமர மற்றும்‌ 
எப்பேற்பட்ட ஸூஸவராவீகளும்‌ முன்னுடையாரும்‌ முதலும்‌ உழவுந்‌ த 


4, விர்ந்து இவன்‌ விலை கொண்டமையிலே இவனுக்குக்‌ . காணியும்‌ 
இன்னிலத்துக்கு கடமை அந்தராயம்‌ காரியவாராட்சி வெட்டிப்பாட்டம்‌ 
பஞ்சுபீலி ஸஷிவிக்கிரகபேறு வாசல்‌ பேறு இலாஞ்சினைப்‌ பேறு 


5. தட்டொலி தட்டார்பாட்டம்‌ ஏர்வரி இனவரி இடைவரி மற்றும்‌ எப்பேற்‌ 
பட்ட ஸூஸைராவுகளும்‌ தவிந்து முன்புடையா]ரையும்‌ இறுத்து போதும்‌ 
அச்சு இரண்டேகாலே அரைக்காலும்‌ மு. . .* 


* கல்வெட்டு முற்றுப்பெறவில்லை 


த. நர. ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3/2003 


மதுரை ஆட்சி ஆண்டு : — 


மாவட்டம்‌ : 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 14-ஆம்‌ 
ன்‌ தி த்‌ \ நூற்றாண்டு 
ஊர்‌ : வாதவூர்‌ ர படட ட்‌ 
யு இந்தியக்‌ கல்வெட்டு | (91/1959-59 
மொழி; தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ மன; == 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 5 
மன்னன்‌ ; பராக்கிரம பாண்டியன்‌ வ்‌ ] 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ வடசுவர்‌. 
குறிப்புரை: திருவாதவூர்‌ திருமறை நாயனார்க்கு செங்கழுரீர்ப்பூவும்‌ பிறபூக்களும்‌ அளிப்பதற்‌ 
காக ஏற்பாடு செய்யப்பட்டு அவற்றை அளித்தோர்க்கு, வேதநாயக நல்லூரில்‌ 
நிலம்‌ காணியாகக்‌ கொடுக்கப்பட்டதைக்‌ கூறுகிறது. இக்காணியைப்‌ பெற்றுக்‌ 
கொண்டவர்கள்‌ நாள்‌ ஒன்றுக்கு முக்குறுணி பூவும்‌, ஆண்டு ஒன்றுக்கு செங்கழுரீர்ப்பூ 
இருபதினாயிரமும்‌ கோயிலுக்குக்‌ கொடுக்க வேண்டும்‌ என்று முடிவு செய்யப்பட்டது. 
பராக்கிரம பாண்டியன்‌ கி.பி. 1315 - 1334ல்‌ ஆட்சிசெய்தவனாகலாம்‌. 
கல்வெட்டு : 
1. யது சமது திராண ஸுஹார காரணடி பஸ்ரீ£து வாஉ உ௱ஙிமஸ மமாஸழ 


ஸாமுகஓ வா நம்பிள்ளை பராக,8 பாண்டிய தேவற்கு [, ம] 8ஷூஹ 
தாயற்று உ8லு-4 பக்ஷ 


2. த்து உபசியும்‌ பெற்ற சோதி நாள்‌ நம்‌ தொண்டர்களில்‌ திருப்பூவணத்தன்‌ 


பொடியணிமார்பனுக்கும்‌ தம்பிக்கு நல்லானுக்கும்‌ சொக்கனான திருப்‌ 
பாடகப்‌ பி 


3. ச்சனுக்கும்‌ விண்ணவதரயப்‌ பெருமாளுக்கும்‌ இவ[ர்‌]*கள்‌ கண்டு நம்‌ 


பத்தன்‌ மலைகுனிய நின்றானான காடுவெட்டி நமக்கு உஜா.ம்‌ பற்று 
ஆக தந்த குளமாவது நம்‌ ௮ 


10. 


dd. 


12. 


. டுக்களைப்புறம்‌ பனைங்காட்டங்குடிய்‌ இறங்கல்‌ மீட்ட பெருமாள்‌ நல்லூர்‌ 


பற்றில்‌ சிவதிராக்குடியான வேதநாயக நல்லூரில்‌ உஜாகம்‌ கைக்‌ 
கொண்டு இதுக்குப்‌ ப 


ற்று ஆன இக்குளம்‌ சாதனப்படியான பெருநான்கெல்‌[லைக்குட்பட்ட] 


நஞ்சை புஞ்சை நத்தம்‌ தோட்டம்‌ குளமும்‌ கால்வாயும்‌ மரமும்‌ கன்றும்‌ 
மற்றும்‌ [இப்‌]*பெ 


ரூ நான்கெல்லைக்குட்பட்ட எப்பேற்பட்ட ஸ்ஸ்‌ உராவிகளும்‌ காணியாக 


கைக்கொண்டு இவன்‌ உஷாகத்துக்கு நாள்‌ ஒன்றுக்கு இவன்‌ நமக்கு 
அளக்கும்பூ 


, [வா]யில்க்‌ காலால்‌ ஆள்‌ மூன்றுக்கு அளக்கும்‌ பூ முக்குறுணியும்‌ ஆண்டு 


ஒன்றுக்கு இடுவதான செங்கழுநீர்‌ இருபதினாயிரமும்‌ இடுவானாகவும்‌ 
நாலு பவ_ஃமுள்ளதுக்‌ 

கு அசல்க்கோயி[மரதசர்‌] இப்பூவிலே செலவு பெறுவானாகவும்‌ அளந்த 
[பூவுமாக] பூத்தாழ்வு கிடந்ததுக்கு ஈராண்டாக செலவறுப்பானாகவும்‌ 
இவகளுக்கும்‌ 

இவகள்‌ வற்கத்தாற்கும்‌ இவ்வோலை பிடிபாடாக கொண்டு ௪௩ கரசி. 


[வரை] செல்வதாக கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க ௨ இப்படிக்கு 
பொன்னம்பல 


ப்பட்டன்‌ எழுத்து உ குலைசேகரபட்டன்‌ எழுத்து ஸாஉ சேதருளின 
திருமுகப்படிக்கு பராக,2 பாண்டிய பட்டன்‌ எழுத்து ௨ இப்படிக்கு வேத. 
நாயகபட்டன்‌ எழுத்து தேவ 


கன்மிகளில்‌ விக்கிர[ம]*பாண்டிய பிரமாதிராயன்‌ எழுத்து அழகிய 
பாண்டிய பிரமாதிராயன்‌ எழுத்து மாடாபத$ திருமாளிகைப்பிள்ளை 
எழுத்து :- இக்கோயில்‌ சிவப்பிர ... .. ..... 


£ . , களில்‌. ... திருவாணை ஆசாரியன்‌ எழுத்து :- 


த. நர, அ. தொல்லியல்‌ துறை 


குறிப்புரை : தென்பறப்பு நாட்டுத்‌ திருவாதவூரில்‌ ஈடுவீதியில்‌ இருந்த சீவல்லவபுரத்து வியாபாரி 
- திருப்பூவணமுடையானான அரசன்‌ சக்கரவர்த்தி 
கோயிலுக்கு இறையிலியாக இருமா அரையே அரைக்காணி நிலம்‌ அளித்ததை 
இது அரசனது அரண்மனைக்குரிய அடுக்களைப்‌ 
இக்கல்வெட்டில்‌ கோயில்‌ வினியோகம்‌ 
தரவுக்கூலி, ஊர்‌ வினியோகம்‌ போன்ற பல வரிகள்‌ அரசனது கணக்கிலிருந்து 
கழித்துக்‌ கொடுக்கப்பட்டன. 


இக்கல்‌ வெட்டுத்‌ தெரிவிக்கிறது, 
புறப்‌ பற்றிலிருந்து அளிக்கப்பட்டது. 


கல்வெட்டு : 


1. கணாளால வரஸாஉடி , . 
2. மாவது கார்த்திகை 


3. உள்ளிட்டார்‌ நா[ள்‌ புண்யன்‌ நாழிகை பாப்பா]ரோமும்‌ கோவணவ 


ரோமும்‌ கூடி நின்று அனுதரித்து போதுவதாக இவன்‌ காராண்கிழமை 


காணியாந நம்‌ 


தொடர்‌ எண்‌ : 4/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 7 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 1322 
ர திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு ] 
்‌ ்‌ ட 482] 1958-59 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: தமிழ்‌ திம்‌ ப 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1. 2 
மன்னன்‌ : பராக்கிரமபாண்டியன்‌ ச J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ வடசுவர்‌. 


ஜம து , கிண ஸு௦ஹார காரண ஸ்ரீ£து 
வா[உ]௨) உரீஸஸஷு பயாஸ்‌ பமாபய தடி வாட நம்பிள்ளை பராக;8பாண்டி௰ 
தேவற்கு யாண்டு ஏ 


மாஸம்‌ தென்பறப்பு நாட்டு திருவாதவூரில்‌ 
நடுவில்‌ வீதியான சீவலபுரத்தில்‌ வியாபாரிகளில்‌ திருப்பூவணமுடைய 
அரசானான ச[க்‌]கரவத்தி 


உள்ளிட்டவர்கள்‌ திருவாதவூர்‌ 


௮ 


அடுக்களைப்புறப்‌ பற்றில்‌ கீழ்க்களர்ச்‌ செய்‌ தடி ஒன்றில்‌ நிலம்‌ இரு 
மாவும்‌ வாணியன்செய்‌ தடி ஒன்று நிலம்‌ அரைமா அரைக்காணியும்‌ 
ஆகநிலம்‌ இருமா 

வரையே யரைக்காணியில்‌ கடைமை அந்தராயம்‌ பொன்வரி கோயில்‌ 
வினியோகம்‌ தரவுகூலி ஊர்வினியோகம்‌ மற்றும்‌ இன்னிலத்தால்‌ வந்த 


. எப்பேற்பட்ட 


இறுப்பும்‌ கழித்து குடுத்து நம்‌ வரியிலார்‌ கணக்கிலும்‌ இவனுக்கும்‌ 
இவன்‌ வர்க்கத்தாற்கும்‌ இறையிலியாக குடுத்தோம்‌ இலை குலசேகர 
பட்டன்‌ எழுத்து இவை 


. பொன்னம்பல பட்டன்‌ எழுத்து ௨, இவை பராக,8 பாண்டிய பட்டன்‌ 


எழுத்து ௨. இவை வேதநாயக பட்டன்‌ எழுத்து ௨. இவை... 
பட்டன்‌ எழுத்து. ம்‌ 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 5/2003 


மாவட்டம்‌; மதுரை ஆட்சி ஆண்டு : 7 
வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1322 
ஊர்‌ : திருவாதவூர்‌ ்‌ 
த ள்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 483 / 195850 | 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ௮ | 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ | 
அரசன்‌ ; பராக்கிரம பாண்டி யன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 த 
்‌ எண i 
J 
௯ 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ வடசுவர்‌. 
ப | 
குறிப்புரை : திருவாதவூரில்‌ இருக்கும்‌ சீவல்லவபுரத்து திருப்பூவணமுடையான்‌ அரசப்பிள்ளை 
சக்கரவர்த்தி என்பவன்‌ திருவாதவூர்‌ உலகளந்த சோழப்‌ பேரேரியின்‌ பாசனத்திலுள்ள 
சில நிலங்களைத்‌ திருவாதவூர்‌ கோயிலுக்கு இறையிலியாக அளித்ததை 
இக்கல்வெட்டு கூறுகிறது. கோயிலில்‌ திருவாபரணம்‌ பழுது நீக்குவதற்கு 
(திருவாபரணப்‌: பார்வைக்கு) இக்கொடை அளிக்கப்பட்டது. (இளவரசர்‌) தேவப்‌ 
பெருமாள்‌ திருமுகப்படி பலவரிகள்‌ அரசவருவாயிலிருந்து கழிக்கப்பட்டதை 
இக்கல்வெட்டு கூறுகிறது, | 
கல்வெட்டு : 


1. ஸ்ரீகதுகீத்திக்கு மேல்‌ ௨ ஸ்ரீகோச்சடைய பன்மரான கிரவாவன சக்கர 


வத்திகள்‌ ஸ்ரீபராக,£ பாண்டிய தேவற்கு யாண்டு! ஏழாவது மார்கழி 
மாதம்‌ ௩௨ திருவாதவூருடையார்‌ திருமறைநாய 


2. னார்‌ கோயில்க்‌ காரியம்‌ செய்வார்‌ தேவகன்மிகள்‌ பீருஉ, ஸ்ரீராஹேபார 


3. 


[கண்‌]*காணி செய்வார்களோம்‌ இவ்வூர்‌ எவவ கத ருப்பு டை 


யார்‌ அரசபிள்ளையான ௪க,வ 

த்தியள்‌ உள்ளிட்டாற்கு பிடிபாடு பண்ணிக்குடுத்த பரிசாவது இன்னாய 
னார்‌ திருவாபரணப்‌ பார்வைக்கு இவ்வூர்‌ உலகளந்த சோழப்‌ பேரேரிக்‌ 
[குலைக்‌]கீழ்‌ பெரிய மடையா 


10. 


1. 


லும்‌ சிறிய மடையாலும்‌ நீர்‌ பாஞ்சு விளையும்‌ [மனை காராண்மை 


காணியான மனைப்பற்றில்‌ கிடக்காச்‌ செய்‌ தடி ஒன்றில்‌ நிலம்‌ முக்காணி 
அரைக்காணி முந்திரிகைகீழ்‌ 


. ரையும்‌ வாணியன்செய்‌ தடி ஒன்றில்‌ நிலம்‌ முக்காணி அரைமா அரை 


காணி முந்திரிகைக்‌ கீழரையே மூன்றுமா முக்காணியில்‌ நாயனார்‌ 
கடமை அந்தராயம்‌ கோயில்‌ வினியோ 


. கம்‌ தரவுகூலி பொன்வரி [ஆள]மஞ்சி[சி]*ல்‌ வரி மற்றும்‌ இன்‌ நிலத்தால்‌ 


வந்த ஸூைராவ்களில்‌ இறையும்‌ கழித்து நாயநார்‌ தேவப்‌ பெருமாள்‌ 
௨,ஸா5$ செய்தருளின திரு 


. முகப்படி கழித்துக்‌ குடுத்தபடி . . . களும்‌ இந்த இறை கழித்துக்‌ 


கொடுத்தோம்‌ இவனுக்கும்‌ இவன்‌ வற்கத்தாற்க்கும்‌ ச௩ரதித்தவற்‌ 
செல்வதாகப்‌ பிடிபாடு பண்ணிக்குடுத்தோம்‌ ச[க்‌] 


. சரவத்தி உள்ளிட்டாற்கு சீகாரியம்‌ செய்வார்‌ தேவகன்‌ மிகள்‌ ஸீசாவேறார 


கண்காணி செய்வார்களோம்‌ இப்படி சுந்தரபாண்டியப்‌ பிரமாதராயன்‌ 


எருத்து [இப்படி] . . . 


... பாண்டிய பிரமாதராயர்‌ எழுத்து இப்படி செய்ய பாண்டியப்‌ பிரமாதி 
ராயன்‌ எழுத்து இப்படி அழகியபாண்டிய பிரமாதிராயர்‌ எழுத்து 
இப்படி . . . 


எழுத்து ௨ இப்படி சீகாரியம்‌ வில்லவராயப்‌ பிரமாதராயன்‌ எழுத்து 
இப்படிக்கு . . . ஆசாரியன்‌ எழுத்து 


“யாண்டு?” என்பது குறியீடாக உள்ளது. 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 6 / 2003 ! 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 9 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1324 
ஊர்‌ : திருவாதவூர்‌ ர்‌ த்‌ + 
இந்தியக்‌ கல்வெட்டு ; 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை [ 485/1958-59 | 
எழுத்து: தமிழ்‌ 4 | 
முன்‌ பதிப்பு : — | 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ | 
மன்னன்‌ பராக்கிரமபாண்டி யன்‌ 2: பதா க விவ | 6 
எண்‌ | 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ வடசுவர்‌. 
குறிப்புரை : அரசனுக்குரிய அடுக்களைப்புறமான  தென்பறப்பு நாட்டு கூட்டாம்புளியான 
வலங்கை மீகாம௩ல்லூரில்‌ உள்ள நிலங்கள்‌ இறையிலியாக அளிக்கப்பப்டதை 
இக்கல்வெட்டு கூறுகிறது. இதன்படி பழம்பொன்‌ எண்பதும்‌, இராசிபணம்‌ 
எண்ணூறும்‌ ஆண்டு தோறும்‌ திருவாதவூர்க்‌ கோயில்‌ நிர்வாகத்தினரிடம்‌ 
கொடுக்கப்பட்டது. | 
கல்வெட்டு : 

1. ஹஹிஸ்ரீ வத ெ.துமொக் தி௨.$சரண[ காண] ஸ௦ஹாம காணடு | ஸ்ரீது 
ஸ்ரீவாஉ௨-றீபஸு [ராஸ].5டி ஸமாறதழ வாட. நம்பிள்ளை ப்ரா௯,2 
பாண்டிய தேவற்கு 

2. யாண்டு ௯வது மாசிமாத முதல்‌ நம்‌ . . . களில்‌ ... அம்மையார்‌ 
நமக்கு அடுக்களைப்‌ புறமாக நம்பிள்ளை பராக;2பாஷை தேவற்கு 

8. . . . தென்பறப்பு நாட்டு கூட்டாம்புளியான வலங்கை மீகாம நல்லூர்‌ 


உள்ளிட்ட பற்றுக்கும்‌ பல உபாதி உள்‌ 


11 | 


ப்பட ஆண்டொன்றுக்கு நாம்‌ கொள்ளுவுதான பழம்பொன்‌ எண்பதுக்கும்‌ 
இராசிபணம்‌ எண்ணூறும்‌ ஆண்டுதோறும்‌ நம்‌(மைப்‌ பாரா) 


. கோவணவர்‌ [பிடிபாட்டு] ஓலை கொண்டு சிலவு அறுத்தும்‌ போதச்‌ 
சொன்னோம்‌ இப்படிக்கு கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க 


. ரஸா செய்தருளினபடிக்கு பொன்னீம்பல பட்டன்‌ எழுத்து இப்படிக்கு 
பராக,2 பாண்டிய லட்டன்‌ எழுத்து குலசேகரபட்டன்‌ எழுத்து 


. அழகிய பாண்டிய பிரமாதிராயன்‌ எழுத்து வடுகப்பிராயந்‌ எழுத்து 


ஸூாபமிவலட்டன்‌ எழுத்து ௨, வூஷவ.சசுவரன்‌ எழுத்து ௨. 


12 


த. நா. அ. 


மாவட்டம்‌ 1 
வட்டம்‌ : 
ஊர்‌ : 
மொழி: 
எழுத்து : 
அரசு : 


மன்னன்‌ ; 


இடம்‌ : 


குறிப்புரை : 


கல்வெட்டு: 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 7/2093 


மதுரை ஆட்சி ஆண்டு : 9 
மேலூர்‌ வரலாற்று ஆண்டு ; கி.பி. 14-ஆம்‌ 
நூற்றாண்டு 
கரத இந்தியக்‌ கல்வெட்டு | 
தமிழ்‌ ஆண்டு! அறிக்கை ர்‌ 484/1958-59 
தமிழ்‌ முன்‌ பதிப்பு: — 
பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ஊர்க்‌ கல்வெட்டு " 
ல்‌ எண்‌ [்‌ 


திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ வடசுவர்‌. 


திருவாதவூர்‌ திருமறைநாதர்‌ கோயிலில்‌ அம்மான்‌ மஹாபலி வாணாதராயர்‌ 
அவருடைய பெயரால்‌ பங்குனித்‌ திங்களில்‌ ஏற்படுத்திய வலங்கை மீகாமன்‌ 
திருநாள்‌ செலவினங்களுக்கு கூட்டாம்புளி, பாதிரிக்குடிப்‌ பகுதியில்‌ குடிரீங்கா 
இறையிலியாக நிலங்கள்‌ அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இந்நிலங்களில்‌ 
பயிரிடப்பட்ட பயிர்களின்‌ பெயர்களும்‌ இவற்றிற்குரிய வரிகளும்‌ இக்கல்வெட்டில்‌ 
குறிப்பிடப்படுகின்றன. இவற்றில்‌ பிள்ளையார்‌ நோன்பு என்ற வரியும்‌ குறிப்பிடப்‌ 
படுகிறது. 


1. ஷுஹிஸ்ரீ கிரலுவனச்சக,வத்தி கோனேரின்மை கொண்டான்‌ தென்பரப்பு 
நாட்டுத்‌ திருவாதவூருடையார்‌ திருமறைநாயனார்‌ கோயிலில்‌ பதிபாத 


மூலப்‌ பட்டுடைப்‌ பஞ்சாசாரியன்‌ தேவ 


2. கன்மிகளுக்கு இன்னாட்டு பாதிரிக்குடி உள்ளிட்ட பற்றில்‌ கூட்டாம்‌ 
புளி உள்ளிட்டபற்று அம்மான்‌ மஹாவலி வாணாதராயர்‌ தம்பேரால்‌ 
கட்டின வலங்கை மீகாமன்‌ திருநாளாக பங்குனி மாத 


9. த்து கட்டின திருநாளுக்கு இவ்வூர்‌ உள்ளிட்ட பற்று ஒன்பதாவது 
மார்கழி மாதம்‌ முதல்‌ முதல்‌ அடங்க குடி நீங்கா இறையிலியாக குடுத்து 
இவ்வூர்‌ காரும்‌ மறுவும்‌ ஒரு பூவும்‌ அடியும்‌ கரும்‌ 


13 


பும்‌ செங்கழுநீர்‌ கொழுந்து வாழை மஞ்சள்‌ இஞ்சி தெங்கு கமுகு 
மாப்‌ பலா பருத்தி ஆமணக்கு உள்ளிட்டு தான்‌ வேண்டும்‌ பயிற்ச்‌ செய்து 
கொள்ளும்படியும்‌ சொல்லி இவ்‌(வ்‌)வூர்‌ உள்ளி 


. ட்டபற்றில்‌ வரும்‌ கடமை அந்தராயம்‌ பொன்வரி வினியோகம்‌ 
கார்த்திகை பொன்‌ பச்சை பிள்ளையார்நோன்பு தெண்‌ கொற்றிலக்கை 
கடைக்கூட்டு இலக்கை நத்தப்பச்சை எடுத்து 


. க்காட்டும்‌ பச்சை ஆனைச்சாலை குதிரைப்பந்தி சந்திவிக்கிறகம்‌ பஞ்சு 
பீலி... 


7. துட்டு[[] தவை தச்சுதேவை அற்கிறை “செக்கு இதத்‌ தட்டொலி 


தட்டார்ப்‌ பாட்டம்‌ ந. 


கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை. 


[4 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 8/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 25 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1281 

ஊர்‌ ! திருவாதவூர்‌ 1 

சதிக்கு கல்வெட்டு r 483/1962-63 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ்‌ 

அரசன்‌ : மாறவர்மன்‌ வீரபாண்டியன்‌ எண்‌ ] 

இடம்‌ ; திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, ஈடராசர்‌ சன்னதி மேற்குச்சுவர்‌. 

குறிப்புரை : திருமறைகாதர்‌ கோயிலில்‌ உலாக்‌ காலங்களில்‌ இறைவனைச்‌ சுமந்து செல்லும்‌ 
ஸ்ரீபாதம்‌ தாங்கிகளான எட்டு நபர்களுக்குக்‌ கோயிலைச்‌ சேர்ந்த ஸ்ரீருத்ர மாகேஸ்வரர்‌ 
ஆன தர்மகர்த்தாக்கள்‌ இவ்வூரின்‌ சில ஏரிகளின்‌ பாசணத்தில்‌ உள்ள நிலங்களைக்‌ 
காணியாகக்‌ கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. 

கல்வெட்டு : 

1. 


ஷஹிஸ்ரீ கோமாறபன்மரான கி,லுவன சக;,வத்திகள்‌ ஸ்ரீவீரபாண்டிய 
தேவற்கு யாண்டு ௨௰௫ வது 8ஷவ நாயற்று ௬௨௱உகஷ்த்து [உமசியும்‌ 
வெள்ளிக்கிழமையும்‌ பெற்ற திருவோநத்து நாள்‌ [தென்பறப்‌] 


பு டத்‌ திருவாதவூர்‌ உடையார்‌ திருமறைநாயனார்‌ கோயில்‌ ஸ்ரீ 
ஆ ஸ்ரீராவெறற 0௨.2 கர்த்தாக்களோம்‌ இந்னாயநார்‌ கோயில்‌ 
ராகம்‌ தாங்கும்‌ ஆண்டார்களில்‌ , . . 


 ப்பெருமாளான சோழகோன்‌ பிச்சனுக்கும்‌ எங்குமா நின்றான்‌ எழும்‌ 


போதழகியானான ஆரண்யன்‌ தொழும்‌ பிச்சனுக்கும்‌ பக்கமழகியான்‌ 
சொக்கனான வேதனாயகப்‌ பிச்சனுக்கும்‌ மறக்கவுணாதான்‌ ஆக... 


15 


10. 


24 


12. 


௨ ராய பிச்சனுக்கும்‌ திருபூவணமுடையான்‌ சோதியான சுன்தர பாண்டியப்‌ 


பிச்சனுக்கும்‌ அழகியான்‌ மக்களான குலசேகரப்பிச்சனுக்கும்‌ பரம்பன்‌ 


[கூத்‌]தாடுவானான இராசகண்ட கோபால பிச்சனுக்கும்‌ . . . 


சண்டேசுர பிச்சனுக்கும்‌ ஆக பேர்‌ எண்மற்கும்‌ பிடிபாடு பண்னிக்‌ 
குடுத்த பரிசாவது இற்றை நாள்‌ இவர்கள்‌ சீபாத[ம்‌]* தாங்க 
இட்ட நிலமாவது இவ்வூர்‌ உலகளந்த 0. . . பேரேரிக்‌ குளக்‌ கீழ்‌ 


.பெரியமடை 
விளையும்‌ காஞ்சவர்கா , . ம்‌ உள்ப்பட தடி இரண்டு ௫ ப. . வாய்க்‌ 
காலால்‌ நீர்பா[ய்ஞ்சு] விளையும்‌ சண்‌ . . . குளமும்‌ விசையராய 


நிலையில்‌ நாயனார்‌ திருவிளக்குபட்டி [யும்‌] பேரிகைப்ப . . . 


. ௫௯ ஆக ௫ ஊ௨உப இந்த முக்காலே இரண்டு மாவுக்கு தேற்‌ 


குளத்துக்கு விளைந்த தாங்கு பூள ௰௨ப , , , இராச கண்ட கோபால 
௨... இவர்களுக்கு சீ பாதந்‌ தாங்க, ,.. குடியானசூர 


௨ கண்டன்‌ குளமும்‌ இதன்‌ தென்பால்‌ சின்னமூதி குளமும்‌ பெருநான்‌ 


கெல்லைக்குட்பட்ட ௩2௯ ,. களுக்கும்‌ திருசெட்டி .. குடன்‌ தடி .. 
ந்தா.. தடி௪௫ ... நிலம்‌ இருமாவரை... : : 

ஆள்‌ ௦௭ ஏரிக்கும்‌ இட முன்னாள்‌ இவர்களுக்கு இட்ட சண்டேசுர 
நல்லூர்‌ வயலில்‌ ௫- ற திருவாதவூர்‌ வயலில்‌ , . . வயக்கலில்‌ ௫.... 
ஆக ௫... நிலம்‌ இரண்டே காலே முக்காணி. முந்திரிகையும்‌ 
சண்டேசுர நல்லூர்‌ . . '. சின்னமூதி குளம்‌ பெருநான்‌ கெல்‌ை ... பாதி 
களுக்கும்‌.. .. i 

மும்‌ தாங்கி ஏரிகளும்‌ .... வார்களாகவும்‌ ஏரிகளும்‌ . புக உ ஞ்சிக்கு 
முன்‌ நாளிறுக்கும்‌ எச்சோறு விழுக்காடு .. று வாராகவும்‌ .. இடுவார்‌ 
களாகவும்‌ இப்படிக்கு இக்குளங்களும்‌ யின்‌ நிலங்களும்‌ காணியாக ௦.. 
நிமந்தம்‌ செய்து போதுவார்களாக பிடிபாடு பண்ணி[க்‌ கொடுத்தோ 
இவ்வெண்மற்கும்‌ ஸ்ரீபாஉ ஸ்ரீசாஹெபற (2.48 கர்த்தாக்களோம்‌ உ 
இவை சுந்தர பாண்டி.... 


16 


13, 


14 


15. 


எழுத்து இவை குலைசேகர வ,ஹாயராயன்‌ எழுத்து இவை... மாத 
ராயன்‌ எழுத்து இவை . . . யன்‌ எழுத்து இவை குலைசேகரபட்‌[ட]7ன்‌ 
எழுத்து உ இவை நாப்பத்தெ . . . 


ன்‌ எழுத்து இவை செய்ய பாண்டிய .ஹாமராயன்‌ எழுத்து. . 
ஸைஹாயிராயன்‌ எழுத்து ௨ .. . இவை இராச கண்ட கோபால வஹா 
மராயன்‌ எழுத்து... 


ரணைச்‌ சாமுண்டன்‌ எழுத்து உ ௬ஷத . , . , . இவர்கள்‌ சொல்ல இப்பிடி 
பாடு எழுதினேன்‌ ஆலால சுந்தரன்‌ எழுத்து 


அவை 


17 


த..நா. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 9/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 29 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1297 

ஊர்‌ 3 திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 

மொழி: தமிழ்‌ ்‌ ஆண்டு அறிக்கை i 

எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ஸர்‌ 

அரசு : பிற்காலப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ 

மன்னன்‌ : மாறவர்மன்‌ குலசேகரன்‌ ண ர 

இடம்‌ : திருமறைகாதசுவாமி கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ தெற்குச்சுவர்‌. 

குறிப்புரை : எம்மண்டலமும்‌ கொண்டருளிய மாறவர்மன்‌ குலசேகரபாண்டியன்‌ ஆணைப்படி 
திருவாதவூர்‌ திருமறைநாயனாரின்‌ . பழந்தேவதானமான பனங்காடிப்‌ பற்றில்‌ 
இறையிலியாக நிலங்கள்‌ அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. 
கூத்தாண்டாள்‌ மகள்‌ அழகியநாச்சி, தாயாண்டாள்‌ என்ற பெண்கள்‌ 
இக்கொடையைச்‌ செய்துள்ளனர்‌. 

கல்வெட்டு : 


1. ஜஹிறீ கோமாறபன்மரான கிரலுவனச்சக,வத்திகள்‌ எம்மண்டலமுங்‌ 
கொண்டருளிய குலலெவரதேவர்க்கு யாண்டு ௨௰௯ வது நாள்‌ , . ௫௰௩ 


2. ஜஷிஹீ ௨,ஸாஉட6 செய்தருளிய திருமுகப்படி உ சி,லுவனச்‌ சக்கரவத்திகள்‌ 
கோநேரின்மை கொண்டான்‌ [செசிங்க] தேவர்க்கு உடை 


3. யார்‌ திருவாதவூருடையார்‌ திருமறை நாயனாற்க்குப்‌ பழந்தேவதான 
மான பனைங்காடிப்‌ பற்றில்‌ காகூத்தாண்டாள்‌ மகள்‌ அழகியா . . 


4. லம்‌ நாச்சியும்‌ தாயாண்டாளும்‌ சேமாழ்வாளும்‌ அனுபவி[த்து இவர்கள்‌] 
மக்கள்‌ பக்கல்த்‌ தாம்‌ ஒற்றியும்‌ விலையுங்கொண்ட ஊரர்‌]. . . 


5. சனேரி முன்பு நின்றபடியே தமக்கு காராண்மை . .யும்‌ இந்த னாய 
னார்க்குக்‌ கடமை அந்தராயம்‌ பொன்வரியும்‌ இறுத்‌ 


18 


1. 


6... . . ராகச்‌ சொன்னோம்‌ இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக்‌ கொண்டு 
அடராரிதவத்ச்‌ செல்ல கல்லிலும்‌ செம்‌ 


உ ட டட ௨ 


7. [பிலும்‌] வெட்டிக்கொள்க . . . அச்சு ஒன்றரையு . . கடமையும்‌ அந்த 
ராயமும்‌ கோயில்த்‌ தானத்தார்‌ வசம்‌ செ... 


8. லவறுத்துப்‌ போதுக இவை விக$மபாண்டிய வாணாதிராஜனெழுத்து 
இவை காலிங்கராஜனெழுத்துக்‌ ற்காக 


9. லில்‌ வெட்டிநேந்‌ இந்நாயனார்‌ கோயில்‌ பரிவா வாயன்‌ பெருமாள்‌ 


கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. 


19 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 10/2003 


மாவட்டம்‌ : மதுரை ்‌ ஆட்சி ஆண்டு : 29-வது 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
; ள்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு ) 
| ட ர ட 479/1962-63 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து : தமிழ்‌ முன்பதிப்பு : — 
அரசு : பிற்காலப்பாண்டியர்‌ 
மன்னன்‌ ப ஊர்க்‌ கல்வெட்டு தி 10 
எண்‌ 
J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌ திருச்சுற்றுமாளிகை தெற்குச்சுவர்‌ உட்புறம்‌, 
குறிப்புரை: அரசனது திருமுகப்படி பள்ளிக்குறிச்சி என்ற ஊர்‌ திருவாதவூர்‌ திருமறைநாயனார்‌ 
கோயிலுக்கு இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. படை 
வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மானிய ஊர்‌ பள்ளிக்குறிச்சி. இதனைப்‌ படைக்‌ 
காரணவர்‌ என்பார்‌ நிருவகித்துள்ளனர்‌. 
கல்வெட்டு : 
1. வுஷஸ்ரீ:௨ ௨.ஸாஉ$ செய்தருளின திருமுகப்படி உ தி,லுவனச்‌ சக,வத்திகள்‌ 


கோநேரின்மை கொண்டான்‌ பள்ளிக்குறிச்சி படைக்‌ காரணவர்க்கு 
தங்களூர்‌ 
[இருபத்‌] தொன்பதாவது ஆடிமாதம்‌ முதல்‌ திருவாதவூர்‌ உடையார்‌ 


திருமறை நாயனார்க்குத்‌ தேவதானமாகக்‌ குடுத்தோம்‌ இப்படிக்கு 
இவ்வோலை பிடிபாடாக 


க்கொண்டு தாங்கள்‌ பொன்வரி இறுத்துப்‌ போதும்‌ அச்சுப்பத்தும்‌ 


இக்கோயில்‌ தானத்தாற்கு இசைய இறுத்து சகூராத்தவல்ச்‌ செல்லக்‌ 
கல்லிலும்‌ 


- [செம்பிலும்‌] வெட்டிக்‌ கொள்க இவை விக,மபாண்டிய வாணாயி 


ராஜனெழுத்து இவை காலிங்கராசனெழுத்து உ யாண்டு ௨0௯ வது[நா]*ள்‌ 
௫௦௩. இப்படி கல்வெட்டிநேன்‌ 


இந்நாயனார்‌ கோயில்ச்‌ சில்பாச்சாரியன்‌ பெருமாள்‌ பெரியாநான 
[(௨]சி சவாகரனெழுத்து. 


20 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 11 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ்‌ ஆட்சி ஆண்டு : 29 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 1297 
ஊர்‌ : திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 1 480/1962-63 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ய்‌ 
அரசு? பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்ச்‌ கல்வெட்டு ம்‌ க 
அரசன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ எண்‌ J 
குலசேகரன்‌ 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ தெற்குச்‌ சுவர்‌ 
உட்பக்கம்‌. 


குறிப்புரை : திருவாதவூர்‌ திருமறை நாயனார்‌ கோயிலுக்குப்‌ பள்ளிக்குறிச்சியான சோணாடு 
கொண்ட பெருமாள்‌ நல்லூர்‌ இறையிலியாக அளிக்கப்பட்டதைத்‌ தெரிவிக்கும்‌ 
அரசஆணை. கோயிலுக்குக்‌ கொடுக்கப்பட்ட இறையிலி நிலத்துக்கு பொன்வரி 
வாங்கக்கூடாது என அரசஆணை வெளியிடப்பட்டுள்ள து. 


கல்வெட்டு : 


1. ஸ்ரீ கோமாறபன்மரான கிரஜுஃவன சக்ரவத்திகள்‌ எம்மண்டலமுங்‌ கொண் 
டருளிய குலசேகர தேவற்கு யாண்டு உ௰௯ வது ஆடி மாதம்‌ தென்‌(பறபு) 
பறப்பு நாட்டுத்‌ திரு 


2. வாதவூர்‌ உடையார்‌ திருமறைநாயனார்‌ கோயில்‌ ஸ்ரீ அன்ரீசாஹேறர 
ரோம்‌ இன்னாட்டு இந்நாயனார்‌ தேவதா[ன]*ம்‌ பள்ளிக்குறுச்சியான 
சோணாடு கொண்ட பெருமாள்‌ நல்லூர்‌ ஊ 


3. ர்க்குச்சமைந்த ஊராற்கு பிடிபாடு பண்ணிக்‌ குடுத்த பரிசாவது இவ்வூர்‌ 


உலகுடைய நாயனார்‌ ஸாஉ சேதருளின திருமுகப்படி இந்நாயனார்க்கு 
இறுப்பதாக வந்த அச்சு பத்துக்கு இ 


21 


4. வ்வூர்‌ முன்பிலாண்‌[டு]*கள்‌ இறுத்துப்‌ போதும்‌ நா[ளி]டு விழுக்காடு 
அச்சொழிய ஏற இறோம்‌ என்று சொல்லுவராய்‌ இக்கோயில்த்‌ தன்மத்‌ 
துக்கு கடவ தேவர்‌ இராசகண்‌[ட] கோபால தேவற்கு 

5. நாளிடு விழுக்காடு கோ[ள்ள] தேவர்‌ சாதனம்‌ வருகையில்‌ 

6. நாள்‌ ஒன்றுக்கு இறுத்துப்‌ பொன்வரி அச்சு ௬ இவ்வா . 

7. செம்‌[பிலும்‌]* வெட்டிக்‌ குடுத்தோம்‌ ஸ்ரீம்‌ உழீமாலேரரோம்‌ பள்ளிகு. . 


8. க இப்படிக்கு... .! 


1. கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை. 


22 


த. நர. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 12/ 2003 | 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ரது 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ | 
ஊர்‌ திருவாதவூர்‌ கதத 
இந்தியக்‌ கல்வெட்டு | | 
எய்தி தமிழ்‌ ஆண்டு அறிக்கை r | 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பி ர | 
ட 12 
மன்னன்‌ — த்தம்‌ J | 
| 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ தென்புற உட்சுவர்‌. 
| 
| | 
குறிப்புரை : திருவாதவூர்‌ திருமறைநாதர்‌ கோயிலுக்கு இறையிலி நிலம்‌ அளித்ததைக்‌ 
குறிப்பிடுகிறது. ் 
கல்வெட்டு : 
1. ஹஹிறீ கி,வஸஈவனச்‌ சக்கரவத்திகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ 


2. 


3. 


4, 


0. 


திருவாதவூர்‌ திருமறை (நா) நாயநார்‌ கோ[யி]ல்‌ தானத்தார்க்கும்‌ 


ரம ஸ்ரீ மாஹேமரர்க்கும்‌ இத்தேவர்‌ தேவதானம்‌ இவ்வூர்‌ நிலத்தில்‌ 


தேவன்‌ பட்டனான விக்கிரம பாண்டிய மாராயனுக்கும்‌ பட்டன்‌ காங்‌ 


i 


கேயனுக்கும்‌ காராண்மையான! . .... முன்பு . . படி பகவதியும்‌ 
வாரக்கு 
யிந்த வீர பாண்டிய தேவற்க்கு யா! ., . . கொண்டு இட்ட பொன்வரிக்கு 
இவர்களுக்கு ஊர்‌ [கீழ்‌] திறப்பான ்‌ 
நிலத்தால்‌ வந்த பொன்‌ வரி பண்டைக்‌ கல்வெட்டின்‌ (ப்‌) படியே இட்டுக்‌ 


கொள்ளாதோம்‌ இப்படி கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்ளக 
இப்படி . , 


22 


1. 


. படிக்குச்‌ செல்வதாக இராசநாராயணதேவன்‌ அடைப்பில்‌ ச! . 


வரக்காட்டச்‌ சொன்னோம்‌ இவை சுந்தரபாண்டியக்‌ கள 


 ப்பாளராயன்‌ எழுத்து யாண்டு இருப்பதா . . . பழந்தீபராயன்‌ எழுத்து 


இவை பல்லவராயன்‌ எழுத்து இப்‌ 


. படிக்‌ கல்வெட்டினேந்‌ கயில[ா]சமாரா . . . தாளனான தேவே; வல்லவ 


சூலாமியன்‌ எழுத்து 


கல்வெட்டு இவ்விடங்களில்‌ சிதைந்துள்ளது. 


24 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 13/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13 - ஆம்‌ 

ட்‌ த்‌ நூற்றாண்டு ! 
ஊர்‌ : ருவாதவூர்‌ ்‌ ட்‌ த \ 

இத்தியக்‌ கல்வெட்டு  ,59/1962-69 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
A டி: ள்‌ ்‌ 

அரசு காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ia 
அரசன்‌: பக்‌ J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி கோயில்‌ திருச்சுற்றுமாளிகை, தென்புற உட்சுவர்‌. 


குறிப்புரை: கல்வெட்டின்‌ ஒரு பகுதி சிதைக்கப்பட்டுள்ளது. பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ 
எழுந்தருளுவித்து ஆண்டு தோறும்‌ 15 கல நெல்‌ வருவாய்‌ வரும்படி நிலம்‌ 
கொடுக்கப்பட்டமை இக்கல்வெட்டில்‌ சொல்லப்படுகிறது. கால கண்டதேவன்‌ என்ற 
பெயரில்‌ முகத்தல்‌ அளவு ஒன்றும்‌ குறிக்கப்படுகிறது. 


கல்வெட்டு : 


1. ஷுஹிஸ்ீ 8௧௨, உக கில, கிஸ௦ஹாற காமணாடி பீூ[மொ]ஹெமாஸஷெ 


2. நிறைந்து கூடிய பெருந்திருக்கூட்டத்து ஸ்ரீ *உமாறஹேயுரோம்‌ இ 


3. பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ எழுந்தருளுவித்து . . . . செக்‌... 
[குடி] 


4, தாங்கியால்‌ நிலம்‌ ஒன்றே இரண்டு மாவுக்கும்‌ வினியோகம்‌ ஆட்டை 
5. திருவாயிலமர்ந்தருளின நங்‌ கோவணவரும்‌ நம்‌ கை[பிடிப்‌]பாரும்‌ தங்களு 
6. கும்‌ காலகண்ட தேவனால்‌ பதினைங்‌ கல நெல்லு ஆட்டை வட்டம்‌ 


வினியோகம்‌ வைத்து தரவு கொள்வானாகவும்‌ .. . 


22: 


10. 


11. 


இப்படியே இவளுக்கும்‌ இவ[ள்‌]வற்கத்தாற்கும்‌ அ௩ராசித்தவச செல்வ 
தாகவும்‌ இப்படி கல்லிலும்‌ செம்பிலும்‌ . , . 


. இப்படிக்கிவை திருவம்பலபட்டன்‌ மகன்‌ சோலையான திருவாதவூர்‌ 


பெருமாள்‌ எழுத்து 


௨௨... எழுத்து இப்படிக்கு இவை ஆள்கொண்டான்‌ அம்பலக்கூத்தன்‌ 
எழுத்து 

ம்‌ ஒட்டன்‌ எழுத்து இவை வீரபத்திர அப்பன்‌ எழுத்து இப்படிக்கி 
இவை . ... 


சாஹேமரக்‌ கண்காணி சாத்தமங்க[ல*]முடையான்‌ எழுத்து இப்படிக்கு 
இவை . . . மேசுவரன்‌ எருத்து 


சு 


26 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 14/2003 


மதுரை ஆட்சி ஆண்டு : 90 


மாவட்டம்‌ : 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1298 
ஊர்‌ : திருவாதவூர்‌ ள்‌ க. f 
பத்தியக்‌ க௦வெட்டு 472/1962-63 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: தமிழ்‌ ட்‌ க்‌ 
முன்‌ பதிப்பு : — 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ள்‌ > ரு 
மன்னன்‌ முதலாம்‌ மாறவர்மன்‌ ண்ட கல்வெட்டு 14 
குலசேகரன்‌ ப்ட்‌ 1 
இடம்‌ : திருமறைநாதசுவாமி கோயில்‌ திருச்சுற்று மாளிகை, தெற்குச்சுவர்‌ உட்புறம்‌. 
குறிப்புரை: திருமறைகாத சுவாமிக்குத்‌ திரு௩ந்தாவிளக்குகள்‌ இரண்டு எரிப்பதற்காகத்‌ 
திருவாதவூர்‌ கைக்கோளன்‌, முதலி ஆட்கொண்டான்‌, ராகுத்தன்‌ ஆகியோர்‌ 132 
ஆடுகள்‌ அளித்ததை இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது. இராகுத்தன்‌ என்பதைக்‌ 
குதிரை வீரன்‌ எனக்‌ கொள்ளலாம்‌. 
கல்வெட்டு : 


1. ஷுஹிஸ்ரீ கோமாற பன்மரான கி,வாவனச்சக்கரவத்திகள்‌ எம்‌ [மண்டல 


2. 


முங்‌ கொண்டருளிய] ஸ்ரீகுலசேகர தேவற்கு யாண்டு 


௩ம்வது ஸி௦ஹநாயற்று உ௰தியதி உூஏஃவக்ஷத்து ஸப்தசியும்‌ [சனிக்‌ 
கிழமை] பெற்ற மூலத்தில்‌ நாள்‌ தென்பறப்பு நாட்டுத்‌ திருவாதவூர்க்‌ 


கைக்கோ 


8. எரில்‌ முதலி ஆட்கொண்டானேன்‌ உடையார்‌ திருமறைநாயனார்க்கு 


[சந்திராதித்தவற்‌] செல்லக்‌ கடவதாக வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றும்‌ 


ம 


ட ரைத்தான்‌ இராகுத்தர்‌ வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றும்‌ ஆக 
விளக்கு இரண்டுக்கும்‌ இந்நாயனார்‌ . . . இடையரில்‌ சிங்கன்‌ 
கொற்றியான . . : 


27 


. நாவுக்கரயன்‌ கோன்‌ கொண்ட ஆடு சம்சம்‌ , , . . நாற்பத்‌ தெண்‌ 
ணாயிரக்‌ கோன்‌ கைக்கொண்ட ஆடு ச௫சம்‌ குடிமை மேவு கருனன்‌ 
ஆரையனான 


. கோன்‌ கை கொண்ட ஆடு ௪0௪ ஆக ஆடு ஈ௩௰உ இவ்வாடு நூற்று 
முப்பத்திரண்டும்‌ சாகா மூவா பேரா . 


ணுக்கு . - . . அட்டு 


 றுக்கு சிவபாத கோந் தற்குதிக்கும்‌ . யிரக்‌ கோன்‌ தற்குறிக்கும்‌ . . .. 
அடைக்கோன்‌ தற்குறிக்கும்‌ > 


சுந்தர நம்பி எழுத்து இப்படிக்கு இவை . . . . பெருமாள்‌ . . . 


28 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : 
ஊர்‌ : திருவா தவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 1 ௨ 
மொழி ட்‌ தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 
எழுத்து: தமிழ்‌ பத்த ப 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ்‌ 15 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ னை J 
சுந்தர பாண்டியன்‌ 
இடம்‌ : திருமறைகாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ தெற்குச்சுவர்‌ 


உட்புறம்‌. 


குறிப்புரை : முதலாம்‌ மாற்வர்மன்‌ சுந்தரபாண்டியனின்‌ (கி.பி. 1216-1238) மெய்க்கீர்த்தியுடன்‌ 
உள்ள இக்கல்வெட்டில்‌ திசையறியும்‌ பெருமாள்‌ என்பவற்கு நிலம்‌ கொடுத்த செய்தி 
உள்ளது. கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. 


கல்வெட்டு : 

1, ஹஹிஸ்ரீ பூமருவிய திருமடந்‌ . . . நாமருவிய கலைமடந்தையும்‌ . . ட்‌ 
கோளார்ந்த சினப்புலியும்‌ கொடுங்கலியுங்‌ குலைந்தொளிப்ப . . . (ஹரி 
கயல்கள்‌ விளையாட யிருங்கடல்‌ வலய . . . னிதறம்‌ பெருக ..... 
கடிந்து செங்கோல்‌ . . . கு குடைநிழல்‌ இருநிலங்குளிர மூவகை தமிழு 
முறை ... 

2. ல்லவர்‌ முதலிய பார்த்திவரெல்லாம்‌ . . . . . ஒருவர்‌ முன்னொருவர்‌ 
முறை முறை கடவ தம . . . திறைஞ்ச இலங்கொளி மணிமுடி யிந்திரன்‌ 
பூட்டிய . . . . பனிமலர்‌ தாமரை திசைமுகன்‌ . . . கன்னிசூழ்‌ நா த 


29 


9. .. .. முடியும்‌ பொன்மணி ... தருள பாடற்‌ சிறப்பில்‌ பரிசி .. வளர்ந்து 
உ ங்காசனத்து . . . . யிருந்து . . . தென்பறப்பு நாட்டு, . . திசை 
யறியும்‌ பெருமாளுக்கு விலைப்பிர . 


5. மற்று மெப்பே , . . உண்ணில மொழிவின்றி இந்நில . யறியும்‌ . . . . 
சிலால்‌ . 
6 . . மையும்‌ ... 


30 


த. நா. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 16 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : அன்ன 
வட்டம்‌ 7 மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 19 - ஆம்‌ 
ஊர்‌ : திருவாதவூர்‌ நூற்றாண்டு 
ம்‌ இந்தியக்‌ கல்வெட்டு ] 
மொழி: தமிழ்‌ த ௮ டை ர்‌ உப 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : _— 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
அரசன்‌ : — ஊர்க்‌ .கல்வெட்டு 1 16 
எண்‌ 
ம்‌ ] 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ தெற்குச்சுவர்‌ உட்புறம்‌. 
குறிப்புரை : பாண்டியன்‌ மன்னனின்‌ அண்ணன்‌ (அண்ணாழ்வி) பெயரால்‌ சிறப்பு வழிபாடு 


திருமறை நாயனார்‌ கோயிலில்‌ ஏற்படுத்தி இறையிலியாக நிலமளித்தை இக்கல்வெட்டு 
கூறுகிறது. இவ்வழிபாடு “சேரனை வென்றான்‌ சந்தி” என்று அழைக்கப்பட்டது. 
முதலாம்‌ மாறவர்மன்‌ குலசேகரபாண்டியனுக்கு (கி.பி, 1268) சேரை 
வென்றான்‌ என்ற பட்டப்பெயர்‌ உண்டு, 
கல்வெட்டு : | 
1. . . . . திருவாதவூருடையார்‌ திருமறை தாயனார்‌ கோயில்‌ பதியர்த 
மூலபட்டுடை பஞ்சாசாரும்‌ தேவகன்மிகளு. 


2. பல்லவராயர்‌அண்ணாழ்வி திருநாமத்தால்‌ கட்டினசந்திக்கும்‌ சேரனை 
வென்றான்‌ சந்தி . 


3. ...... நாகமங்கலம்‌ அம்மாகுடி சிற்றம்மாகுடி [அ]ரையாண்டார்குடி 
மதிராயகுடி சேமத்தராயகுடி காங்‌[க]*யப்‌ பரைப்பள்‌ , . . 


4, . . . மலகுறிச்சிக்குள . . . களுக்கு எல்லை கீழெல்லை ,... . . வோ 


31 


 டக்கும்‌ மேலெல்லை கோட்டை மழவெட்டி முகசுத்த . . ,.. . வெல்லை 


. மேனேரி எல்லைக்கு . 


. சந்திவிக்கிரகப்‌ பேறும்‌ தறியிறையும்‌ செக்கிறை . . . தட்டார்பாட்டம்‌ 
மற்றும்‌ எப்பேற்பட்ட அந்தராய 


. அச்சு நாற்பதும்‌ வரியிலார்‌ கணக்கிலும்‌ கழித்து குடிநீங்கா தேவதான 
மாக இறையிலியாக குடுத்தோம்‌ .. இவ்‌ ..] 


1. கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை. 


32 


த. நர. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 17 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு: 21 
வட்டம்‌; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1237 
ஊர்‌ ; திருவாதவூர்‌ g வு க 
இந்தியக்‌ கல்வெட்டு 471/1962-63 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : பிற்காலப்பாண்டி யர்‌ 
அரசன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ சர்க்‌ கவிவெட்டு 1 17 

சுந்தர பாண்டியன்‌ ம்க்‌ ] 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ தென்சுவர்‌. 


குறிப்புரை : திருமறை நாயனார்க்கு அமுதுபடி, சாத்துப்படி திருமேற்பூச்சு, திருவிளக்கு, 
பயணிகளுக்கு உணவு அளித்தல்‌ ஆகியவற்றுக்காகத்‌ திருவாதவூர்‌ குளத்து 
நீர்ப்பாசனத்தில்‌ அமைந்த நிலங்களை இறையிலியாக அளித்ததை இக்கல்‌ வெட்டு 
கூறுகிறது. மேலும்‌ குழைஞ்சாள்‌ அரசனான ஆலால சுத்தரநங்கை என்ற 
இக்கோயில்‌ தேவரடியாள்‌ இக்கோயிவில்‌ சந்திரசேகர்‌, கெளரி ஆகியோரது 
செப்புத்திருமேனிகளைச்‌ செய்வித்து திருவீதி எழுந்தருளச்‌ செய்தமையையும்‌ 
கூறுகிறது. 


கல்வெட்டு : 

1. ஷஹி . , , . ஸகடிஸமாறயதடி வர கோமா பன்மரான திரிபுவன சக்கர 
வத்திகள்‌ சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து விஜையாபி 
ஷேகம்‌ பண்ணியருளிய ஸாடீர வாண்டிய சேவற்கு யாண்டு ௨௰ வது 
எதிராமாண்டு தென்பறப்பு நாட்டு திருவாதவூர்‌ குளம்‌ [ஸு]னக்கு 

2. நீர்பாஞ்சு நெல்விளையும்‌ [கண்ட] ௨ூமியிலே இவர்‌ [தேமாற்றசதி]ருக்க 
மூன்றும்‌ தடிக இல்‌ ௫-ப இந்நிலம்‌ ஒரு மாவும்‌ கொண்டு அமுதுபடி 
சாத்துப்படி திருமேற்பூச்சு திருவிளக்கு அங்கு வந்த திருப்பேற்கும்‌ 
திருக்கை வழக்கத்துக்கும்‌ அற்றைக்கு அழிய வேண்டுவன எல்லாத்‌ 
துக்கும்‌ மற்றை நம்‌ நிமந்தங்களுக்கும்‌ வ௩ரதித்தவரை செல்வதாக 
கல்லிலும்‌ செம்பிலும்‌ . , . . 


33 


. ரூுடையான்‌ பெரிய முதலியான ேவேஈ,வலவாவாய.4லெல) உய௫ ௪.மஆய 

நிண தாரண ஸஹாரகாறணடி ஸ்ரீகது வாஉவாீமஸ ஸமாஸனம்‌ பாமா தடி 
வட நம்‌ தாசிகளில்‌ குழைஞ்சமள்‌ அரசனான ஆலால சுந்தர நங்கைக்கு 
தானிமக்குச்‌ செய்தபடி நம்முடைய தண்டீசன்‌ செய்தபடி செய்தான்‌ 
தான்‌ செய்தபடி யாவன நம்முடைய திருநீற்றுத்‌ தொண்ட 


ன்‌ தென்னகங்க தேவனுக்குச்‌ சொல்ல [நாயனார்‌] ௮ஈ,சேவர [மான] 
. . .முனையதரையன்‌ . ...... வீதியாக்கும்படி செய்வித்தமையாலும்‌ 
நம்‌ வீதியிற்‌ கிடந்த . . . டந்து நம்‌ வீதி வரம்பும்‌ செய்தமையாலும்‌ 
நம்‌ பிள்ளை க்ஷெகுவாஓன்‌ அ,கிஷெ பண்ணுவித்தமையாலும்‌ நமக்கும்‌ 
பலவூர்களுக்குஞ்‌ சொல்லி திருநீற்றுத்‌ தொண்டனு[க்கும்‌] சொல்லி 
வீரபாண்டிய நல்லூர்க்கும்‌ சேமம்‌ 


. செய்வித்தமையாலும்‌ நமக்கு . . . . யெறிந்து வீட்டை கலியாமலும்‌ 
மார்கழி ஆதிரையில்‌ நமக்கு நம்‌ வாதவூரன்‌ கோ .... வை 
வாதவூரன்‌ கேட்பித்த நாள்‌ முதல்‌ நம்மை கேட்பிப்பான . . யிருக்க 
அதுவும்‌ நமக்கு. செய்வித்தமையாலும்‌ -இவள்‌ இப்படி செய்தபடியால்‌ 
நம்முடைய உ௱[ஸர்‌] நமக்குச்‌ செய்ய கடவ உரிமைக்ளில்‌ இ 


டாகவும்‌ குடுத்தோம்‌ இப்படி கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 
கொள்‌ .. ளாகவும்‌ குடுத்தோம்‌ நம்‌ கோவணவரும்‌ இப்படிக்கு 
தங்கள்‌ சத்திமுகமும்‌ [குடுக்க] இப்படி சிறப்பாக குடுத்த இம்முறை 
இவளுக்கும்‌ இவள்‌ வற்கத்தாற்கும்‌ இவள்‌ வ௦முத்தாற்கும்‌ குடுத்தோம்‌ 
இப்படிக்கு திருவாய்மொழிந்தருள திருமந்திரவோலை எழுத்து . . 
வாராயிர நாற்பத்தெண்ணாயிரபட்டன்‌ எழுத்து இப்படிக்கு . ... . 


34 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 18 /2003 


மாவட்டம்‌ : 
வட்டம்‌ : 
ஊர்‌ : 
மொழி: 
எழுத்து : 
அரசு : 


மன்னன்‌ : 


இடம்‌ : 


குறிப்புரை : 


மதுரை ஆட்சி ஆண்டு : 94 

மேலூர்‌ வரலாற்று ஆண்டு 1 கி.பி. 19-ஆம்‌ 

வர்ம நாற்றாண்டு 
ட்‌ இத்திலக்‌ கல்வெட்டு 477/1962-63 

தமிழ்‌ ஆண்டு அறிக்கை 

தமிழ்‌ முன்‌ பதிப்பு: — 


பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ஊர்க்‌ கல்வெட்டு | 


ள்‌ த ர்‌ 18 
எண்‌ 


திருமறைகாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ தென்சுவர்‌. 


திருமறைநாதசுவாமி கோயிலுக்கு இறையிலியாக நிலமளித்ததைத்‌ தெரிவிக்கிறது. 
இச்செய்தி முந்தைய கல்வெட்டுகளிலும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. *கோனேரின்மை 
கொண்டான்‌' என்ற பெயரில்‌ அரச ஆணையாக இக்கல்வெட்டு உள்ளது, 
அரசாணை பல நிலைகளில்‌ பல காலக்கட்டங்களில்‌ நிறைவேற்றப்படுவதற்கு 
இக்கல்வெட்டு நல்ல எடுத்துக்காட்டாகும்‌. 


4 
ர்‌ 


கல்வெட்டு : 


1. [யம்பது]அரத்தூர்‌ அச்சு நாலும்‌ மேலைப்பள்ளிக்‌ குறிச்சி அச்சு பத்தும்‌ 
புளிங்குடி அச்சு பத்தும்‌ . . 


ட்‌ பதத 


பத்தொன்பதாவது ஆடி மாதம்‌ முதல்‌ தவிந்து வரியிலும்‌ கழித்து 


இதந்நாயனார்க்குத்‌ தேவதானமாகத்‌ தந்தோம்‌ இப்படிக்கு இப்ப.... 


8. [யனம்‌] பண்ணி அசி அவற்‌ செல்லக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 
கொண்டு [அ௩ா]2.த;வற்‌ இறையிலியாக அனுபவிக்க 


4. மாவலி வாணாயிராயன்‌ எழுத்து இவை காலிங்கராயன்‌ எழுத்து 
தூம ௨ 


35 


10. 


LL. 


13. 


. ஹவிஸ்ரீ திரிபுவனசக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்‌ தென்பறப்பு 


நாட்டுத்‌ திருவாதவூருடையார்‌ திருமறை நாயனார்‌ கோயில்‌ தானத்‌ 
தார்க்கு களவழி நாட்டுத்‌ க..தேரிப்பற்றில்‌ பாண்‌..ய்யராயன்‌ 
கொண்டுடைய 


..... இவனுக்குக்‌ . காராண்மையும்‌ அந்தராயமும்‌ இந்நாயனார்க்குத்‌ 
தேவதானமாவதாகவும்‌ முப்பத்து நாலாவது ஆனி மாதம்‌ முதல்‌ 
குடுத்தோம்‌ இவ்வூற்கு கடமை அந்தராயம்‌ [பொன்‌] வரி தறிஇறை 
செக்கிறை 


. தட்டொலி தட்டார்‌ பாட்ட மனைத்தந்தராயங்களும்‌ உட்பட இறுப்பதாக 


அச்சு ஒன்று இவ்வச்சு ஒன்றும்‌ நாயனாற்கு அமுதுபடி சாத்துப்படி 
உள்ளிட்ட நித்த நிமந்தங்களுக்கு உடலாகத்‌ தந்து வரியிலும்‌ கழிக்கச்‌ 
சொன்னோம்‌ இப்படிக்கு 


இவ்வோலை பிடிபாடாகக்‌ கொண்டு சரசிஆவற்‌ செல்ல கல்லிலும்‌ 


செம்பிலும்‌ வெட்டிவித்து நான்கெல்லையிலும்‌ திருச்சூலஸ்தாபனம்‌ 
பண்ணிக்‌ கொள்க இவை துஞ்சலூருடையான்‌ எழுத்து இவை . 
வராயன்‌ எழுத்து 

யாண்டு [௩௱ச௰௫] துஓஜ6 உ 

[ஷஹிஸ்ரீ] திரிபுவனசக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்‌ களவழி 
நாட்டுப்‌ படைக்‌ காரணவற்கு தங்கள்‌ பற்றில்‌ .. கலாதேரியில்‌ தங்கள்‌ 
பக்கல்‌ கொண்டு. .. 

தேவதானமாக . . . ஆனி மாதம்‌ முதல்‌ குடுத்த இவ்வூர்‌ கடமை 
அந்தராயம்‌ பொன்‌ வரி தறியிறை செக்கிறை தட்டொலி தட்டார்‌ 


பாட்டம்‌ 


. அச்சு ஒன்றும்‌ இவ்வச்சு ஒன்றும்‌ இன்னாயனாற்கு அமுதுபடி சாத்துப்‌ 


படி உள்ளிட்ட நித்தநிமந்தங்களுக்கு உடலாக தந்‌(த)து வரியிலும்‌ 
கழிக்கச்‌ சொன்னோம்‌ இப்படிக்கு . . . இப்படி 


[கண]க்கிலும்‌ வரியிலும்‌ கழித்து சந்திராதித்தவற்‌ செல்ல கல்லிலும்‌ 


செம்பிலும்‌ வெட்டி திருசூல லாபனம்‌ பண்ணிக்‌ கொள்க இவை துஞ்ச 
லூருடையான்‌ எழுத்து யாண்டு ௩௰௪ வது ௩௱ச௰௫ 


36 


14, 


15. 


16. 


17. 


ஹஹிஸ்ரீ யாண்டு ௩௪வது எதிராமாண்டு ஆடி மாதம்‌ டு உடையார்‌ 
திருமறை நாயனார்‌ ஆதிசண்டேமரர்க்கு தென்களவழி நாட்டு 
தேரியில்‌ . . . . . 


பண்டுடைய சிறுகுளமான வேதநாயக நல்லூர்‌ அளந்து கண்ட si 
னாயன்‌ கையில்‌ சாதனப்படி . . . 1 


+ 
நான்கெல்லை , . . ச்சயபடி அச்சு ஒன்றும்‌ அந்தராயம்‌ உபாதியும்‌ வினி 
யோகம்‌ . . . ந்தராயரும்‌ உலகுடைய [நாயனார்‌] ..க்‌ கருளிய | 


i] 
ஊர்க்குச்‌ சமைந்த ஊரோ ... எழுத்து இந்நாயனார்‌ கோயிற்‌ சிற்பா 
சாரியன்‌ . . . 


37 


தொடர்‌ எண்‌ : 19/ 2003 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு : ம 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 
2 . தூற்றாண்டு 
ல்‌ திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு ட 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ' 
எழுத்து: தமிழ்‌ தப்பும்‌ ப - 
அரசு: பிற்காலப்‌ பாண்டி யர்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ க 
க ர எண்‌ ்‌ ட்‌ 
மனனன : க J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை தென்சுவர்‌ உட்புறம்‌. 
குறிப்புரை : திருவாதவூர்‌ திருமறைநாயனார்‌ கோயிலுக்கு உலகளந்த சோழபுரம்‌, திருமறை 
நாயக நல்லூர்‌ முதலிய ஊர்களிலிருந்து பலர்‌ சேர்ந்து இறையிலி நிலமளித்ததை 
இக்கல்வெட்டு தெரிவிக்கிறது தென்னகங்கதேவன்‌ என்பவன்‌ அரசனிடம்‌ எடுத்துச்‌ 
சொல்லி மக்களின்‌ காராண்மை உரிமை பாதிக்கப்படாமல்‌ இத்தானத்தைப்‌. 
பெற்றுள்ளான்‌. 
கல்வெட்டு : 


1. கோனேரின்மை மேல்‌ கொண்டான்‌ தென்பறப்பு நாட்டுத்‌ திருவாதவூர்‌ 


உடையார்‌ திருமறைநாயனார்‌ கோயிலில்‌ தேவர்‌ கன்மிகளும்‌ ஸ்ரீ 


மாஜேமவரக்‌ கண்காணி செய்வார்களும்‌ . 


ஈரச்‌ சோழ சதுவெ-சி மங்கலத்தில்‌ மேல்‌ பிடாகை உலகளந்த 
. குளக்கீழ்‌ மாதேவன்‌ அழகியான்‌ உள்ளிட்டார்‌ 


சோழபுரப்‌[பேரேரிக்‌] . 
நிலங்களும்‌ கோ[வள] த 


நிலங்களும்‌ சீராமன்‌ மாதேவனு 
ஸலைவிலையுமாக ஆலி 


. குடிநாதனாதிச்சனுள்ளிட்டார்‌ 
ள்ளிட்டார்‌ நிலங்களும்‌ குளவிலையும்‌ 
கோன்மை சித்தசண்டான்‌ விலைகொண்ட நிலங்களும்‌ தன்‌ . , . 


38 


i 


க்க நில[மு]ம்‌ இந்நாயனார்‌ திருனாமத்தால்‌ தேவன்பட்டனான 


விக்கிரமபாண்டிய பிரமராயனும்‌ தேவன்‌ காங்கேயனும்‌ இவ்வூர்‌ 
பிராமணர்‌ பக்கல்‌ திருமறைநாயனார்‌ சிவனாமத்தால்‌ தங்களுக்கு 
காராண்‌ ... 


நிலம்‌ முக்காலும்‌ நத்தமும்‌ மற்றும்‌ இவ்வூரில்‌ குடிப்பற்று உள்ள 


வையும்‌ ஊர்‌ முற்றும்‌ நல்லணி ஆமூர்‌ சுந்தரத்தோளன்‌ திருப்பூவண 
முடையான்‌ செம்பியன்‌ பல்லவரையன்‌ ஸலெயார்‌ பக்கல்‌ வி. ... 


குடியான செம்பியன்‌ நல்லூரும்‌ மேல்படியான்‌ உள்ளிட்டார்‌ விலை 


கொண்ட குறிஞ்சிலிக்‌ குடியான i தாமோதர 


னக்கபிரான்‌ பட்டன்‌ பக்கல்‌ த . . . . வந்தான்‌ குழைஞ்ச . . 


... தேவநல்லூரும்‌ நெரிஞ்சியான அழகியபிள்ளை[ப்‌ புறத்து] அரசு 
பல்லவனான சேநாவரையன்‌ இன்னாயனார்‌ சிவனாமத்தால்‌ விலை 
கொண்ட வேலங்குடி யெந்[ற] 


தேவகள்‌ தேவநல்லூரும்‌ கூறியூர்ச்‌ செட்டி இந்நாயனார்‌ 
சிவனாமத்தால்‌ விலைகொண்ட முடவனேம்பலான [முட]தேவியார்‌ 

. நல்லூரும்‌ மேல்‌ குறிச்சியும்‌ நாயனார்‌ வத்த 
அந்தராயம்‌ . . . . 


9. இறையிலி தேவதானமாகவும்‌ குடிமக்களுக்கு காராண்மை பெற 


10. 


11. 


La 


* 


வேணுமென்று பட்டன்‌ தென்னகங்கதேவன்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ 
இராஜேட, சோழ சதுர்வே2 மங்கலத்து முதலியார்‌ . . . 

தேவதானம்‌ உட்பட அந்தராயம்‌ கடமை இந்நாயனார்‌ திருமறை 
நாயனார்க்கு குடுத்தோம்‌ . . . . யாண்டு ௫ வது நெதிராமாண்டு முதல்‌ 
ராஜே சோழ சதுஃவேதி மங்கலத்‌ . 


ல்‌ காசும்‌ கொள்க வென்று நம்மோலைப்படியும்‌ நம்கேழ்விப்படியும்‌ 
. நாம்‌ [திருவாய்‌ மொழிந்தபடியும்‌] கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 
கொள்க என்று திருவாய்மொழி 


._ [வெந்த வேளான்‌ எழுத்து நாள்‌ அஞ்நூற்றிருபத்தொன்பதினால்‌ 
திருவாய்மொழி[ந்தருள எழுதினேன்‌] செம்பிநாட்டு மேலைக்கொடுமளு 


ரான உத்தமபாண்டிய . 


கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. 


39 


த. நா. அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ : மதுரை . 

வட்டம்‌ ; மேலூர்‌ 

ஊர்‌ : திருவாதவூர்‌ 

மொழி: தமிழ்‌ 

எழுத்து: தமிழ்‌ 

அரசு ட பிற்காலப்பாண்டியர்‌ 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ 
்‌ சுந்தரபாண்டி யன்‌ 
இடம்‌ ; 

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. 
கல்வெட்டு : 


1. வாளுவர்‌ சிங்களர்‌ தெலிங்கர்‌ வில்லவர்‌ மாகதர்‌ விக்கலர்‌ . 


2, 


தொடர்‌ எண்‌ ; 20/2003 


ஆட்சி ஆண்டு : 
. வரலாற்று ஆண்டு ₹ 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்பதிப்பு : 


ளர்க கல்வெட்டு 
எண்‌ 


1 


J 


20 


திருமறைநாதசுவாமி கோயில்‌ திருச்சுற்று மாளிகை தென்சுவர்‌ உட்புறம்‌. 


இறையிலி தானம்‌ பற்றிக்‌ கூறுகின்றன. 


. மன்னனின்‌ 


மெய்க்கீர்த்தியும்‌ பெயரும்‌, வடகளவழிநாடு எனும்‌ பெயரும்‌ காணப்படுகின்றன. 


தொழுது வத்தடை[யா]* 
பரப்பி கழுதை . ந்த... 


நாட்டு . 


யாய்‌ இறுப்ப ... 


நிருபரின்‌ பப்‌ அழுத கண்ஷ்சாது 


யான்‌ கொ... 


ராயன்‌ எழுத்து இப்படிக்கு இவை ... 


40 


ம. சுந்தரபாண்டிய தேவற்கு ௩ றாவது 


. வரம்புக்கு மேற்கும்‌ ஆக இவ்விசைந்த பெருநான்கெல்‌ .. 


வடகளவழி 
ஆக இறையிலி 


. த்தொன்று இறுப்பாராகவும்‌ .. வதாகவும்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌.. .. 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 21 / 2003 


ஆட்சி ஆண்டு : ணு 


41 


மாவட்டம்‌ மதுரை 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : 
தூற்றாண்‌ 
ஊர்‌ திருவாதவூர்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர] ஞு 
எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
டன்‌ = ஊர்க்‌ கல்வெட்டு | ன்‌ | 
மன்னன்‌ ப எண்‌ J 1 
1 
இடம்‌ திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை மேற்குச்‌ சுவர்‌ 
உட்ப்றம்‌. | 
குறிப்புரை : மேற்குத்‌ திருச்சுற்றுமாளிகையில்‌ பெரியபுராணத்தில்‌ கூறப்பட்ட 63 அடியார்‌ 
மற்றும்‌ தொகையடியார்களுக்குத்‌ தனிச்சன்னிதி பிற்காலப்பாண்டியர்‌ காலத்தில்‌ 
இருந்துள்ளது. இதில்‌ இருந்த அடியார்கள்‌ சிற்பங்களுக்கு மேலே சுவரில்‌ 
அவர்களின்‌ பெயர்களைப்‌ பொறித்துள்ளனர்‌. நாளடைவில்‌ சிற்பங்கள்‌ அகற்றப்‌ 
பட்டுவிட்டன. கல்வெட்டுகள்‌ மட்டும்‌ எஞ்சியுள்ளன. அவை வரிசையாக இங்கு 
தரப்படுகின்றன. கடலூர்‌ மாவட்டம்‌ காட்டுமன்னார்குடி வட்டம்‌ கீழைக்கடம்பூர்‌ 
உருத்திராபதி ஈஸ்வரர்‌ கோயிலிலும்‌ சில சைவ அடியார்களின்‌ பெயர்கள்‌ 
தற்போதுள்ளன. தாராசுரத்தில்‌ நாயன்மார்களின்‌ சுதைச்‌ சிற்பங்களும்‌ கல்வெட்டு 
களும்‌ உள்ளமையும்‌ இங்கு குறிப்பிடத்தக்கதாகும்‌. 
கல்வெட்டு : 
1. எறிபத்த . குங்குலிய | 
நாயனார்‌ நாயனார்‌ 
2. ஏனாதி . மானக்கஞ்சாற 
நாயனார்‌ நாயனார்‌ 
3. கண்ணப்ப . அரிவாட்டாயி 
நாயனார்‌ னாயனார்‌ 


20. 


21. 


22. 


ஆனாயனார்‌ 


. திருமூத்தி 


நாயனார்‌ 


௨முருகனா 


யினார்‌ 


. உருத்திரபசுப 


தி நாயனார்‌ 


திருநாளை 


ப்போவார்‌ 


. திருக்குறிப்பு 


த்தொண்டர்‌ 


. சண்டேசுர 


நாயனார்‌ 


 குலைச்சிறை 


நாயனார்‌ 


. பெருமிழலை 


க்குறும்பனார்‌ 


. காரைக்கா 


லம்மை 


. அப்பூதி 


நாயனார்‌ 


. நீலிரக்க 


நாயனார்‌ 


. நமினந்தி 


நாயனார்‌ 


ஏயகோ 
நாயனார்‌ 


திருமூல 
நாயனார்‌ 


கண்டிய 
னாயனார்‌ 


42 


28. 
24, 
95, 
26. 
97. 
28, 
29. 
30. 
81. 
32, 
33. 
34, 
85, 


36. 


37. 


38. 


மூற்கநா 
யனார்‌ 
சோமாசி 
நாயனார்‌ 


சாக்கிய 
நாயனார்‌ 
சிறப்புலி 
நாயனார்‌ 
சிறுத்தொ 
ண்ட நாயனார்‌ 
சேரமானா 
யனார்‌ 
திருநாவுக்கர 
சு நாயனார்‌ 
பிள்ளையா 
நாயனார்‌ 
சுந்தர 
நாயினார்‌ 
கணநாத 
நாயனார்‌ 
களந்தைக்‌ 
கோன்‌ நாயனார்‌ 
யியற்புகை 
நாயனார்‌ 
புகட்சோ 

ழ னா[யனார்‌] 
நரசிங்க 
முனையரைய 
[நா]யனார்‌ 


அதிபத்த . 


நாயனார்‌ 


கலிக்கம்ப 


னாயனார்‌ 


89. கலிய 


நாயனார்‌ 


40. சத்தி நாயனார்‌ 


41. காடவர்கோ 
நாயனார்‌ 


42. கணம்புல்ல 
நாயனார்‌ 


48. காரி நா 
யனார்‌ 

44, நின்றசீர்‌ நெ 
டுமாற நாயனார்‌ 


45. வாயிலா 


நாயனார்‌ 


46. முனையடுவா 


நாயனார்‌ 
47. கழச்சிங்க 
நாயனார்‌ 
48, இடங்கழி 
நாயினார்‌ 


49, செரு[ துணை] 


43 


50. 


51. 


52. 


59. 


54. 


95. 


56. 


57. 


58. 


59. 


புகழ்துணை 


நாயனார்‌ 


கோள்பு 
லி நாயனார்‌ 


பத்தராய்‌ பணிவார்‌ 


பரமனை 
யே பாடுவார்‌ 


[சித்தத்தைச்‌ சிவன்‌ பாலே] 
வைத்தார்‌ 

திருவாரூர்‌ 

பிறந்தார்‌ 

முப்பொழு 

தும்‌ திருமேனி 
தீண்டுவார்‌ 


முழுனீறுபூ 
சிய முனிவர்‌ 
அப்பாலும்‌ 
அடிசார்ந்தார்‌ 


பணக னை யம்‌ பயல, பபட்டட 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தெரடர்‌ எண்‌ ; 22 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : பகம்‌ 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
ஊர்‌ : திருவாதவூர்‌ ன்‌ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ல்‌ கட்க 
எழுத்து: தமிழ்‌ த்க்‌ 
முன்‌ பதிப்பு! வி 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ கி ஊர்க்‌ கல்வெட்டு \ 22 
எண்‌ ர 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குச்சுவர்‌ உட்புறம்‌. 


குறிப்புரை : திருமறைகாயனார்க்கு வேலங்குடியான தேவர்கள்‌ தேவநல்லூரில்‌ இறையிலியாக 
நிலம்‌ அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இராசேந்திரச்‌ சோழ சதுர்வேதி 

தி மங்கலத்துச்‌ சபையாரிடமிருந்து இந்நிலம்‌ பெறப்பட்டிருக்கலாம்‌. கல்வெட்டு மிகவும்‌ 
சிதைந்துள்ளது. 


கல்வெட்டு : 


1. [வாக] கோநேரின்மை கொண்டான்‌ தெந்பறப்பு நாட்டு திருவாதவூர்‌ 
உடையார்‌ திருமறை நாயனார்‌ கோ... 


2. களுக்கு தென்பறப்பு நாட்டு எ ஷடெயட ராஜே, சோழச்‌ சதுவெி 
மங்கலத்து ஸலஸெயார்‌ பக்கல்‌ 


3. . . . வேலங்குடியான தேவர்கள்‌ தேவநல்லூர்‌ . . . 


4. , . து. செய்யக்காட்டி . . . குறுணிக்கும்‌ கறியமுது விஞ்சனத்துக்கும்‌ 


சபை கணக்கன்‌ . . . . 


5. . . னும்‌ இம்முதல்‌ வா[சல்‌] கூற்றிலக்கை கடை, கூட்டிலக்கை வெட்டி 
பாட்டந்‌ தறியிறை செக்கிறை கூ... .. 


44 


6. வினியோகம்‌ வாசற்பேறிலாஞ்சினைப்பேறு  . .. ஏர்வரி யினவரி! 


10. 


11. 


இடைவரி மனைவரி [கார்த்திகை] 


பணம்‌ . , கை[கொரிண்டு வரியிலார்‌ கணக்கிலும்‌ நாட்டுக்‌ கணக்கிலும்‌ 


ஊர்க்‌ கணக்கிலும்‌ கழிக்க . 


| 
தந்தோம்‌ இவ்வோலை பிடிபாடாகக்‌ கொண்டு சந்திராதித்தவற்‌ 
செல்‌ , . 


உணரு . . கடமை ஆசுவிகம்‌ பொன்வரி வினியோகம்‌ மற்றுமெப்பேற்‌ 


பட்ட 
கச்‌ சொன்னோ. . . [இரவை குச்சைகேனி மலையுடையான்‌ 
எழுத்து , . . 


வாதி பெ லமொக நிமாணு . . ஸுஹா௱ காண? ஸ்ரீ. ட. 


45 


த. நர்‌. ௮, தொல்லியல்‌ தூறை தொடர்‌ எண்‌ ; 23/2003 


மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு ! க்‌ 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு ! கி.பி. 18-ஆம்‌ 
ஊர்‌ திருவாதவூர்‌ } தூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு ன 
மொழி: தமிழ்‌ ணக அன உரல்‌ ர 484/ 1962-68 
எழுத்து: தமிழ்‌ " முன்‌ பதிப்பு : ES 
அரசு பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
க 23 
மன்னன்‌ : குலசேகரன்‌ சல்‌. 
இடம்‌ : * * ” திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குச்சுவர்‌ உட்புறம்‌. 
குறிப்புரை : திருவாதவூர்‌ குலசேகர வேதப்‌ பெருமாளுக்கு குளவிலைப்‌ பிரமாணம்‌ செய்து 
கொடுத்ததை இக்கல்வெட்டு: கூறுகிறது. கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. 
கல்வெட்டு : 


ட 


1. 


[மெய்க்கீர்த்திக்கு] மேல்‌ ஸ்ரீ கோமாறபன்மரான கி,ஜுஃவனசக்கர 
வத்திகள்‌ எம்மண்ட . . .... 


2. ..... இத்திருவாதவூ[ர்‌]1க்‌ குலசேகர வேதப்‌ பெருமாளுக்கு மாடக்குளக்‌ 

3. .. . குளவிலைப்‌ பிரமாணம்‌ பண்ணிக்‌ குடுத்த பரிசாவது கங்கதேவ 
னான . ... 

4, .. ட்டகுடிக்கும்‌ யுற்பட்ட குடிக்கும்‌ . . . 

5. . . க்கு வடக்கு இவ்வெல்லை , . . . இக்‌... . 

6. . .ன்செய்‌ , .. ..ங்காலுக்கு குடு... 


46 


7. குளங்களால்‌ வந்த ... . . 

தா்‌ பட இறுப்‌. . . னுபவித்து கய்யில்‌ பற்றின . . . 
9. . . . குடுத்த குளங்களுக்கு . . . . பிடிபாட்டின்படி . , . . 
10. , . குடுத்தோம்‌ குலைசேகர , . கொண்டாரும்‌ அஞ்சாத பெருமாளுக்கும்‌ 
11. தற்குறிக்கும்‌ , . . தற்குறிக்கும்‌'. , . அஞ்சாத பெருமாள்‌ ,. 4. 


இப்படி சொல்ல இப்பிடிபாடு . . . . எழுதினேன்‌ தென்பறப்புநாபிடு 
திருவாதவூர்‌ அழகிய பிள்ளை எழுத்து 


47 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 24/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18 - ஆம்‌ 
ஊர்‌ : திருவாதவூர்‌ \ தூற்றாண்டு 
, இந்தியக்‌ கல்வெட்டு s 
மொழி: தமிழ்‌ அண்டு அடிக்கக்‌ ர்‌ 488/1962-63 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு: ன்ப 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ல ட ஊர்க்‌ கல்வெட்டு ம த 
எண்‌ 
J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குச்சுவர்‌ உட்புறம்‌. 
குறிப்புரை: இறையிலி தானத்தைக்‌ குறிப்பிடுகின்றது. நிலங்களின்‌ தரம்‌, பயிர்வாரியான 
வரிவிதிப்பு ஆகியவை கூறப்பட்டுள்ளன. 

கல்வெட்டு : 

அ) 1. ஷஹிஸ்ரீ திரிபுவனசக்கரவத்திகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ 


திருவாதவூர்‌ உடையார்‌ திருமறை நாய ... 


. தேவகன்மிகளுக்கும்‌ இ நாயனார்க்கு[ம்‌] வடபறப்பு நாட்டு. . . 


குலசேகர வாணாதிரா .... 


. இராசேந்திர சோழ சதுவெஃசிமங்கலத்து ஸவெெயார்‌ .. .. 


. பொய்யிலும்‌ இவ்வூர்க்கு ... கள்‌ நிலங்களும்‌ உட்பட 


வினியோகம்‌ பொன்வரி வினியோகம்‌ தறியிறை தட்டொலி . .. தட்டா 


பாட்டம்‌ 
. தீது காணி உடையாரும்‌ பழந்தேவதானமு திருவிடையாட்டமு 


தம்மக்களுக்கும்‌ காராண்மையும்‌ நாயனார்க்‌ கடமையும்‌ ஆக . . .. 


48 


10. 


11, 


. கழித்து ஒன்று முக்காலாக வந்த நிலம்‌ ஒரு மாவுக்கும்‌ மாத்தரல்‌ 


பண 


. ரைக்கால்‌ கொள்வதாக ஆடிக்குறுவை விளைந்த நிலத்துக்கு 


க்கு ஒன்று காலும்‌ இறுப்பதாகச்‌ சொன்னோம்‌ இப்படி 


சூலத்தாபனம்‌ பண்ணிக்‌ கொள்க. இவை 


௬ வூர்‌ .. . குமக்கல்‌ சொல்லுகையில்‌ தன்‌ 
த்து . . . னம்‌ இன... 
கும்‌. . . இப்படிக்கு இவ்‌... . 
. இவர்‌ கொடுத்த அருள 
. எழுத்து இவை .. .. 


49 


த. நர. அ. தொல்லியல்‌ துறை . 


தொடர்‌ எண்‌ ; 25/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 15 - ஆம்‌ 

ம்‌ ருள்ரத்தம்‌ \ நூற்றாண்டு 
பப்ப இ வ ர்‌ ட்‌ . > . 

இதயச்‌ கல்வெட்டு 486 / 1962-63 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : த 
அரசு : பிற்காலப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] ன 
மன்னன்‌ ஜ -- எண்‌ 1 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ கிழக்குச்சுவர்‌ 
உட்புறம்‌. 


குறிப்புரை: கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது, - செங்குளமான நாற்பத்தெண்ணாயிர நல்லூர்‌ 
இக்கல்வெட்டில்‌ குறிப்பிடப்படுகிறது. 


கல்வெட்டு : 


1, ஷஹிஞஸ்ரீ ஸ்ரீமக்கீர்த்திக்கு மேல்‌ கோமாறபன்மரான திரஜுஃவமசக்கர . . . 


2. [செ]ங்குளமான நாற்பத்தெண்ணாயிர நல்லூர்‌ .. .. 


9... திருமு[ன்பு] அழகியானுக்கு பாண்‌ . . . 
4 உண்டி 
9 அதம்‌ 


50- 


ப்பி இர. அ. 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 26 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு: ன்‌ 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ 
ஊர்‌ : திருவாதவூர்‌ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு \ 492/1962-63 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
அரசு : பிற்காலப்பாண்டி யர்‌ 
த்த ௮ ஊர்க்‌ கல்வெட்டு 1 க 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்றுமாளிகை, கிழக்குச்சுவர்‌ உட்புறம்‌. 
குறிப்புரை : திருமறை நாயனார்க்கு ஈாற்பத்தெண்ணாயிர௩ல்லூர்‌ போன்ற சில ஊர்களிலிருந்து 
நிலங்களை விலைக்குக்‌ கொண்டு இறையிலியாகக்‌ கொடை அளித்ததைக்‌ 
கல்வெட்டு கூறுகிறது.  ௩ாற்பத்தெண்ணாயிரரநல்லூர்‌, வாகைக்குடி, முதலிய 
ஊர்களும்‌ இக்கல்வெட்டில்‌ குறிப்பிடப்படுகின்‌ றன. 
கல்வெட்டு : 
1. .. .. கோனேரின்மை கொண்டான்‌ தென்பறப்பு நாட்டு திருவாதவூர்‌ 
உடை 
2. ௨... இப்படி . . . . காயஞ்‌ செய்வார்‌ தேவகன்மி . . . 


3. வரர்‌ மகன்‌ மக்கணாயன்‌ ஊரவர்‌ பக்கல்‌ விலை கொண்டுடைய 


க்‌, .. 


9. த 


. நல்லூரும்‌ நெடுங்குளத்துக்கு சேவிப்பான்‌ பொன்‌ உ௰ம்‌ முதல்‌ வ 


ட. தறியிறை செக்கிறை தட்டொலி தட்டார்பாட்டம்‌ பஞ்சு பீலி 


சந்து விக,கப்‌ பேறு 


, பேறு ஏர்‌ வரி இனவ்ரி இடைவரி காணிக்கை கார்த்திகை பச்‌ , . . 


முதல்‌ வரியிலார்‌ கணக்கிலும்‌ கழித்து 


51 


10. 


11. 


2 420 


18. 


-, -இந்நாயனார்க்கு வாகைக்குடி .. .. 


. வும்‌ இம்மக்கணாயனுக்கு காராண்மையாகவும்‌ தந்தோம்‌ இப்படிக்கு 


இவ்வோலை பிடிபாடாக கொண்டு 


. ௨. இவூர்‌ நான்கெல்லையிலும்‌ திருசூலலாபனம்‌ பண்ணி இவ்வூர்க்கு வரும்‌ 


கடமை அந்தராய . . 


. உ௨ய்யார்‌ .. ட்ட மனைத்தாய உபாதிகளும்‌ இடுகைக்கு இறுக்கும்‌ 
அச்சு மூன்றே முக்காலுக்கு 


...௨.பக்கல்‌ விலைப்படி பணம்‌ நூற்றிரண்டே மூன்றுமா முக்காணி 
இப்பணம்‌ நூற்றிரண்டே மூன்று மாமுக்காணியும்‌ 


௨. களுக்கு இறுத்து அனுபவித்தும்‌ போக ॥ ௨ இவை காலிங்கராயன்‌ 
எழுத்து இவை பல்லவராயன்‌ எழுத்து 


..... இந்நாயனார்‌ கோயில்‌ ஸீமுபா வாயன்‌ பெருமாள்‌ பெரியாந்‌ 
தில்தைவீதி நிவாகரஸு .. [துல்யம்‌] உ 


22 


த. நர. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 27/ 2003 | 
| 
| 
| 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு ! ்‌.. 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு 1 கி.பி. 19-ஆம்‌ | 

ஊர்‌ : திருவாதவூர்‌ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு ட்‌ 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 

எழுத்து: தமிழ்‌ முன்‌ குதிப்பு, த 

அரசு : — ஊர்க்‌ கல்வெட்டு ன்‌ 

மன்னன்‌ ; ௨ எண்‌ ர்‌ 

இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குச்சுவர்‌ உட்புறம்‌. 


குறிப்புரை : இரண்டு துண்டுக்கல்வெட்டுகள்‌. . முதல்‌ கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. ; *நம்‌ 
பிள்ளை” என்று அரசனைத்‌ தெய்வம்‌ குறிப்பது போலத்‌ தொடங்குகிறது. பிடிபாடு 
ஒன்‌ நினையும்‌ கூறுகிறது. இரண்டாவது பகுதி இறையிலியாக நிலங்கள்‌ கொடுக்கப்‌ 
பட்டதையும்‌ சிலவரிகளின்‌ பெயர்களையும்‌ குறிப்பிட்டு விலைக்கு நிலம்‌ பது 
பட்டதைக்‌ குறிப்பிடுகிறது, 


கல்வெட்டு ன்‌ 
அ) 1. ஷீஹிஸ்ீ , , . நம்பிள்ளை 
2- 7, (வரிகள்‌ சிதைவு) 
8, .. பிடிபாடாகக்கொண்டு கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க 
ஆ) 1. நாயனார்‌ கோயில்‌ பதிபாதமூலப்‌ பட்டுடை பஞ்சாசாரி . 
2. . . . ஊரவர்‌ பக்கல்‌ விலை கொண்டுடைய .. .. 
ற்றி இலக்கை கடைக்கூட்டிலக்கை வெட்டிப்பாட்டம்‌ 
, யிலாஞ்சினைப்‌ பேறு ஏரி வரி இனவரி இடைவரி . . 
. மாளுக்கும்‌ உடையார்க்கும்‌ இன்நாயனார்க்கு 
இப்படி முதல்‌ இடுகவென்று இவன்‌ 
ணம்‌ முப்பது இப்பணம்‌ முப்பதும்‌ இறுத்து வாரமு . . . 


௦33 ௬ல்‌ % ம 


53 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 28 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : னு 
ட்டன மேலூர்‌ வரலாற்று ஆண்டு; கி.பி. 19 - ஆம்‌ . 
நூற்றாண்டு 
ஊர்‌ : திருவாதவூர்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு 1 2 
, மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : = 
ல்‌ ப்‌ ஊர்க்‌ கல்வெட்டு | ட 
மன்னன்‌: “-: எண்‌ J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குப்புறம்‌ பூக்கட்டும்‌ 
பலகைக்‌ கல்‌. 
குறிப்புரை : பூக்கட்டும்‌ பலகைக்‌ கல்லினைப்‌ ்‌ பழனியாண்டி பண்டாரம்‌ செய்வித்ததை 


இக்கல்வெட்டு கூறுகிறது. 


கல்வெட்டு : 
1. பழனியாண்டி 


2. பண்டாரம்‌ 


54 


த. நா. ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 29/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌: மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 14-ஆம்‌ 
i - நூற்றாண்டு 
ஊர்‌ : திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை po 
எழுத்து: தமிழ்‌ மின்பதிப்பு உல்‌ 
அரசு : பிற்காலப்பாண்டி யர்‌ 
ல்க 2 ஊர்க்‌ கல்வெட்டு 1 
எண்‌ ட 
] 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குச்சுவர்‌ உட்புறம்‌. 
குறிப்புரை : நிலக்கொடை அதன்‌ வரிகள்‌ குறித்த கல்வெட்டு. இதில்‌ திருவாதவூர்க்‌ கோயிலில்‌ 
பணிபுரிந்த தேவரடியார்‌ ஒருத்தி குறிப்பிடப்படுகிறாள்‌. 
கல்வெட்டு : 
1. ஷுஹிஸ்ரீ கிரலுவனச்‌ சக்கரவத்திகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ தென்‌ 


த 


பறப்பு நாட்டு ... 
தேவகன்‌ மிகளுக்கு இன்னாயனார்‌ கோயில்‌ தேவரடியாரில்‌ 


அம்மை . ... 


. அனுபவித்து வருகிற கற்குழியான வேத நாயக நல்லூர்‌ நிச்சைவிப்பான்‌ 


பொன்‌ 

௨யிறை இருக்க . . . சந்திவிக்கிறப்பேறு . . . 
௨... .காத்திகைப்‌ பச்சை ஆனைச்சாலை குதிரைப்பந்தி, .. ட்ட 
திருமு 


ட. களுக்கு முன்னாள்‌ . .ன்நா.. .. 
௨... க்குடுத்து இவ்வூர்‌ கரணத்தான்‌ . 


. சந்திராதித்தவற்‌ செல்ல கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க . ன்‌. 


35 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 30 / 2003 


மாவட்டம்‌ : மதுரை . ஆட்சி ஆண்டு : 28 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1296 
ஊர்‌ : திருவாதவூர்‌ டம்‌ க ப 
இத்தியக்‌ கல்வெட்டு 1 494/1962-63 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ ்‌ 
முன்‌. பதிப்பு : — 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ முதலாம்‌ மாறவர்‌ மன்‌ காக்‌ கல்வெட்டு |! 30 
குலசேகரன்‌ பல்‌ J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி உட்புறம்‌ தெற்குச்சுவர்‌. 
குறிப்புரை : தென்பறப்பு நாட்டு நாட்டவையினர்‌ திருமறைகாயனார்‌ கோயிலில்‌ நாச்சியாரை 
எழுந்தருளுவித்து சந்தியா தீபம்‌ வைத்ததைக்‌ கூறுகிறது. 
கல்வெட்டு : 
1. மெய்க்கீர்த்திக்கு மேல்‌ ஸ்ரீகோமாறபன்மரான திரிலாவனச்‌ சக்கர 
வத்திகள்‌ 
2. [எம்மண்டலமு]ம்‌ கொண்டருளிய ஸ்ரீகுலசேகரதேவற்கு யாண்டு 
இருபத்தெட்டாவது 
3. . வ பக்ஷத்து உரசியும்‌ சனிக்கிழமையும்‌ பெற்ற அத்தத்து னாள்‌ 
தென்‌ 
4, [பறப்புநாட்‌]டுக்கு - சமைந்த னாட்டோம்‌ இன்னாட்டுத்‌ திருவாதவூர்‌ 
ஆளுடையார்‌ திரும 
9... ற்கு தன்மதானமாக கல்வெட்டி குடு 
6. . . . கலத்துக்கு விக்கிரம பாண்டிய[ர்‌ ஸ்ரீமு] 


56 


12. 


13. 


ப்‌ போந்த பொன்‌ [௨௰க] இன்னாயன . . . 


. எழுந்தருளப்‌ பண்ணின . . . யாற்குச்‌ ச௩ழா தீபத்‌ திரு 


. விளக்கு எரிக்க இக்கோயில்‌ தானத்தார்க்கு இசை . . 


[௨௱] இருப்போமானோம்‌ 


. வரியிலுங்‌ கழித்துக்குடுத்தோம்‌ இ[வ்வூ]ரோம்‌. . . . 


பறப்பு னாடு.... 


எழுத்து இவை. . . ராயன்‌ எழுத்து . . . எழுத்து. . . 


ரணிக்கத்தின்‌ எழுத்து 


| 
| 


| 


ர்கள்‌ இப்பொன்‌ 


த. நா. ௮, தொல்லியல்‌ துறை . .: தெொரடர்‌ எண்‌: 31/2003 


மாவட்டம்‌; மதுரை ஆட்சி ஆண்டு : 40 
வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1808 
ஊர்‌ 3 திருவாதவூர்‌ \ 
. இந்தியக்‌ கல்வெட்டு ப 
மொழி : தமிழ்‌ த்க்‌ ந்தது ட 495/1962-63 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 91 
குலசேகரன்‌ த்தம்‌ J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி உட்புறம்‌ தெற்குச்‌ சுவர்‌. 
ச 
குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. திருமறை நாயனார்க்குத்‌ தேவதானமாக 
மேலிரண்ய முட்டத்தில்‌ இருந்த காமர்மங்கலமான ஸ்ரீ பன்மாஹேஸ்வர நல்லூர்‌ 
நிலங்கள்‌ தானமாக அளிக்கப்பட்டன. இத்தானத்தை முன்னின்று செய்தவர்‌ 
விக்கிரமபாண்டிய விழுப்பரையராகலாம்‌. 
கல்வெட்டு : 
1. ஸ்ரீ மெய்க்கீர்த்திக்கு மேல்‌ ஸ்ரீ கோமாற பன்மரான. .. . 
2. ன கி,வுாவன சக்ரவத்திகள்‌ எம்மண்டலமுங்‌ 
5. கொண்டருளிய ஸ்ரீ குலசேகர தேவற்கு யாண்டு சம வது 
4. மகர ஞாயற்று ௨ூவஃபக்ஷத்து ஆயோதஸியும்‌ சனிக்கி 
5. ழமையும்‌ பெற்ற அத்தத்து நாள்‌ தென்பறப்பு நாட்டு 
6. திருவாதவூரூடையார்‌ திருமறைநாயனார்க்கு சிரிகாரியஞ்‌ செய்யும்‌ 
ஸ்ரீ ..கள்‌ ஸ்ரீ மாஹேயுரக்கும்‌ 
7. ஸ்ரீ காரணவர்க்கும்‌ மேலிரணிய முட்டனாட்டு . . . ரையூருடை 


58 


15 


1௮5 


. குடுக்க 


விக்கிரம. பாண்டிய விழுப்பரையற்கு , . . 


தேவதானம்‌ காமர்மங்கலமான ஸ்ரீ பன்மாஹேறர நல்லூர்‌... 


னாற்பதாவது வரை பொன்‌ வரியும்‌ கடமையும்‌ இறு... 


இக்குளம்‌ பாழ்கிடக்கையில்‌ 

யில்‌ பிடித்த தேவதானத்‌ 

வேணுமென்று .. இவ்விக்கிரமபாண்டிய 
விழுப்ப . . . பாதியையும்‌ வஙிராதவரை த்ர க 


இக்காமர்மங்கலத்து நான்கெல்லைக்குட்பட்ட குள.. 


59 


த. நா. அ. தொல்லியல்‌ துறை. தொடர்‌ எண்‌ : 32/2003 


மாவட்டம்‌ : மதுரை . ஆட்சி ஆண்டு : 13 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
. ்‌ - நூற்றாண்டு 
வம்‌, நம்பப்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ ஞு 
எழுத்து: தமிழ்‌ மூன்‌ பதிப்பு : த்த 
அரசு: பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ட 
மன்னன்‌ : குலசேகரன்‌ எண்‌ J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி உட்புறம்‌ கிழக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை : சடையவர்மன்‌ குலசேகரன்‌ மாடக்குளக்கீழ்‌ மதுரையில்‌ இருந்த அரண்மனையில்‌ 
மழவராயன்‌ ஆசனத்தில்‌ வீற்றிருந்தபோது இக்கோயில்‌ நிர்வாகத்தினரின்‌ வேண்டு 
கோளை ஏற்று. வழங்கிய ஆணை. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. 
கல்வெட்டு : I 
1. . . . செயப்புயத்திருப்ப மாக்கலை மடந்தை வாக்கினில்விளங்க திசையிரு 
நான்குமிசை நில நல்க வெறிப்பம . . ...... அறநெறிச்‌ சமய 


[ங்களாறும்‌ தழைப்ப கானில்‌ வேங்கை] வில்லுடன்‌ துரந்து மீனங்கன 


- காசனத்து வீற்றிருப்ப 


௨... நெடும்பிலத்‌ தொளிப்ப வில்லவர்‌ செம்பியர்‌ விராடர்‌ வராடர்‌ 


[பல்ல]வர்‌ திறையுடன்‌ முறை முறை பணிய இருநேமியளவுமொரு 
நேமியோங்க இன்னமு [தாகிய இயல்‌ இசை நாடகம்‌ மன்னி] வளர 
மணிமுடி சூடி வெற்பெநவோங்கிய வீரசிங்ஙாவானத்துக்‌ கற்பக 
நிழற்‌ [கீழ்‌*] க[சை]ல வ[ல்‌*]லோர்‌ புகழ்‌ மன்னவர்‌ தேவியர்‌] 


கோச்சடைய பன்மரான கி,வாவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலபேகர 
தேவற்கு யாண்டு பதிமூன்றாவது நாள்‌ ஆயிரத்தறு னூற்றொருபத்‌ 
வலன்‌ [மதுரோதய] வளநாட்டு மாடக்குளக்கீழ்‌ மதுரைக்‌ 
கோயிற்‌ பள்ளியறைக்‌ கூடத்துப்‌ பள்ளிப்பீடத்து மழ 
. ..௨ஸ்ரீகாரியஞ்‌ செயிவானும்‌ தேவகன்மியும்‌ மாயேசுரக்‌ கண்காணி 
செயிவாரையும்‌ செய்யத்‌ திருவாய்‌ மொழின்தருளினபடி 


60 


த. நர்‌. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌: ஏண்‌ : 33 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13 - ஆம்‌ 
a! 3 நூற்றாண்டு 
கக்‌ னத்‌ இந்தியக்‌ கல்வெட்டு | _ | 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ]) | 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 | 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ க | 
மன்னன்‌ : .-- எண்‌ ] 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி உட்புறம்‌ கிழக்குச்‌ க 
1 
குறிப்புரை மன்னனின்‌ மெய்க்கீர்த்தி, நில எல்லைகளின்‌ விவரங்கள்‌ உள்ளன. | 
கல்வெட்டுத்‌ தெளிவாக இல்லை. சிதைந்துள்ளது. | 
| 
| 
கல்வெட்டு ப்‌ 
1. ஈழியப்‌, ...லகோ. .. 
ல அல்‌ ப கலம்‌ , 
8. . . மணம்‌, . . முறைகேளா . . 
. ... . மீளவழங்கி வில்‌ . . . | 
ல தக்கல்‌ க வழங்கியருளிய .. . | 
இ” உட 1௮ செங்கோல்‌ . . . 
ரத ல்‌ கதி 
8. . . . ஸ்ரீ ருத்ரமாஹேமர . . . நாயகற்கு திரு 
9. . . . குடிகாடும்‌ நாம்‌ விற்று . . . நான்கெல்லைகளுக்குட்பட்ட | நிலங்‌ 
102 291 முக்காலும்‌ 
11. . . . யாக மற்றும்‌ எப்பேற்பட்டனவும்‌ 


12 - 24 (வரிகள்‌ முற்றிலும்‌ சிதைவு) 


61 


. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 34 / 2003 


த.நா. ௮ 
மாவட்டம்‌ 1 மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு ! கி.பி. 18-ஆம்‌ 
்‌ ்‌ நூற்றாண்டு 
க திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு க 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு: — 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ஊர்க்‌ கல்வெட்டு 1 
மன்னன்‌ : எண்‌ i S$ 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி உட்புறம்‌ மேற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை : திருமறைநாயனார்க்கு பனங்காட்டங்குடி, இலுப்பைக்குடி, மடைக்கழி ஏம்பலான 
வலையங்குடி ஆகிய ஊர்களை இறையிலிதானமாக வழங்கப்பட்டமை பற்றிய 
செய்தி. நிலவரிகள்‌ சிலவும்‌ குறிப்பிடப்படுகின்றன. களவழி நாடாழ்வான்‌ 
ஓலையாக இக்கல்வெட்டு உள்ளது. 
கல்வெட்டு : 
1, ஷஷிஸ்ரீ களவழிநாடாழ்வான்‌ ஓலை தென்பறப்பு நாட்டுத்‌ திருவாதவூர்‌ 
உடையார்‌ திருமறை. . ... 
2. .யிட்டுப்பனங்காட்டாங்குடி தென்பால்‌ இலுப்பைக்‌ குடிக்கும்‌ தென்‌ 
மடைக்‌ கீழ்‌ ஏம்பலான வலைய . . . 
3. ..ஒரு திரமமும்‌ கடமை வளையிற்காலால்‌ முக்கல நெல்லும்‌ இவ்‌ 
வரிசைப்படி அற்பசிக்‌ குறு. . . 
4. கணக்கர்‌ ஓலை எழுதுவார்கள்பேறு எச்சோறு கூற்றரிசி வெட்டி 
முட்டாவாள்‌, இனவரி [கொழிவரி] நாடோ... 
9. கல்லுநாட்டி இவ்வோலைப்படியும்‌ வமாணப்படியும்‌ அ௩ரதித்தவற்‌ 


கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டி .... 


62 


bikers 


மிய. . . . தரையன்‌ எழுத்து இப்படிக்கு இவை .... திருப்புத்தூர்வேள்‌ 
கோவன்‌... .. 

 ள்ளிகாட்டாய்‌ . . . காதல்‌ மாதுகவின்‌ . . 

 ராவது முதல்‌ . . . . நூற்றதி,. . 


. பசியும்‌ புதன்கிழமையும்‌ பெற்ற மூலத்து நாள்‌ ளவழி நாட்டு 
இலுப்பைக்குடி 


௨... தென்பால்‌ இலுப்பைக்‌ குடிக்கும்‌ தென்மடைக்கீழ்‌ ஏம்பலான 
வலையங்குடிக்கும்‌ பெருநான்கெல்‌ . . .. 


| 
| 
| 
| 


63 


த, நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 35/2003 


மாவட்டம்‌ : மதுரை i ஆட்சி ஆண்டு : — 


வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13 - ஆம்‌ 

தி தி ்‌ நூற்றாண்டு 
ந்து ப ன்‌ | 493/1962-63 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
அரசு : முற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு a ர 
மன்னன்‌ : குலசேகரன்‌ 1 J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருமறைநாத நாயனார்‌ கோயில்‌ நிர்வாகத்தினரின்‌ கோரிக்கைக்கு இணங்க இறையிலி 
யாக நிலம்‌ வழங்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலமுடையானான ஸ்ரீ விக்கிரம 
பாண்டிய விழுப்பரையரும்‌ திருக்குடந்தையைச்‌ சேர்ந்த மற்றொருவரும்‌ இந்நிலக்‌ 
கொடையை அளித்துள்ளனர்‌. கல்வெட்டு சிதைந்துள்ளது. 


கல்வெட்டு : 

1. . . . கோமாறபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்‌ எம்மண்டலமுங்‌ 
கொண்டருளிய குலசேகர . . 

2. . . . பூவ பச்சத்து ஸப்தமியும்‌ சனிக்கிழமையும்‌ பெற்ற பூசத்து நாள்‌ 
_.... தென்பழப்பு நாட்டு திருவாதவூர்‌ 

3. திருமறைநாயனார்‌ கோயில்‌ ஸ்ரீருத்ரமாஹேறரக்‌ [கண்காணி] செய்ய 
திருவாய்‌ மொழி... 

4. திருச்சிற்றம்பலமுடையானான ஸ்ரீ விக்கிரமபாண்டிய விழுப்பரையர்க்கும்‌ 
திருக்குடந்தை . 


64 


10. 


. .கல்வெட்டிக்‌ குடுத்த பரிசாவது இன்னாட்டு இன்னாய 


தேவதானம்‌ 
[இவர்‌] 


டலூர்‌ இவ்‌. . . [வரை] 
... . ..ஸஜனெல்லுக்கும்‌ . , . க்கும்‌. . 


. ... ௨... அந்தராயமும்‌ அச்சு . . . 


கொண்டு . .. 


. எப்பேற்பட்ட . . . . 


65 


குளமுடைத்து வயலும்‌ தரிசு.. 
. நிலம்‌ . . . இருமாவுக்கு 


. முக்காணி முந்திரிகை , . . 


வவட, 


னார்‌ 


| 


கைக 


த. நர. அ, தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 36/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு: — 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 

ஊர்‌: . திருவாதவூர்‌ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு | 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 

எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு : - 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 

மண்டன ட ஊர்க்‌ கல்வெட்டு 1. ட 

இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி வெளிப்புறம்‌ மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : ... கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. நிலக்கொடை பற்றிய அரச ஆணையாகத்‌ 


தெரிகிறது. 


கல்வெட்டு : 


1. . . பாண்டி மண்டலத்து தென்பறப்பு நாட்டுத்‌ திருவாதவூர்‌ உடையார்‌ 
திருமறை நாயனார்‌ கோயிற்‌ .. 


2. ..௨... தேவக . . . முடைய... 


3. விற்றுத்‌ [தந்‌]தமையாலும்‌ நாயநார்‌ திருக்குள .. .. 


4, . . . குளமான நாற்பத்தெண்ணாயிர . .. 


5. க்கு தெற்கு தென்பாற்கெல்லை திருவீதிக்கு வடக்கு ஆக 
இவ்விசைந்த பெருநான்கெல்லைக்குட்பட்ட .. .. 


ம்‌ 


திருமுகப்படி .. 


. சந்திராதித்தவற்‌ செல்வதாக நாயநார்‌ ஹஸாஉம்‌ செய்தருளின 
. குடுத்தோம்‌ 


66 


பககக திருவாலவாயுடையான்‌ எழுத்து இப்படிக்கு . . . கோலிக்குடி 
மாடபத்தியம்‌ வீரபத்திர௨$யன்‌ எழுத்து இப்படிக்கு இவை 


8. . . . திருவாலவாயுடையான்‌ கோவாண்டானான வலங்கை மீகா .. . 


. _தானமுடையான்‌ . .... ஆசாரிய . . . | 
9. விச்சாதிரனான அழகிய ஆசாரிய . . . திருமறையான்‌ . சயிஞ்சை 
'யானமைக்கு சக்கரவத்தி . . . . . 
10. .. எழுத்து செயபாலன்‌ . . . . திருப்பூவணமுடையான்‌ . . . 
11, சாரியன்‌ . . . எழுத்து இப்படிக்கு , . . சயிஞ்ஞாதினமைக்கு . . . .[. 


67 


த.நா. ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 37/2003 


ர்வ்்ல்ம்‌்‌ மதுரை ஆட்சி ஆண்டு : 13+6 
ந்‌ த ள்‌ ன ண்டு : கி.பி, 13 - ஆம்‌ 
வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆ a 
ஊர்‌ : திருவாதவூர்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு | _ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து 1 தமிழ்‌ முன்‌ பதிப்பு : வன்‌ 
அரசு !. பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ம ட 
மன்னன்‌ : சடையவர்மன்‌ குலசேகரன்‌ எண்‌ J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி வடக்குச்‌ சுவர்‌ வெளிப்புறம்‌. 
குறிப்புரை : களவழி நாடாழ்வார்‌ என்னும்‌ அதிகாரியிடமிருந்து விலைக்குப்‌ பெற்ற தச்சன்குடிப்‌ 
பகுதியில்‌ இருந்த நிலங்களை இக்கோயிலுக்கு இறையிலியாக அளித்த 
செய்தி கூறப்படுகிறது, கல்வெட்டின்‌ பிற்பகுதியில்‌ சடையவர்மன்‌ குலசேகர 
பாண்டியனின்‌ மெய்க்கீர்த்தி இடம்பெறுகிறது. அதன்‌ தொடர்ச்சியாக மண்டலீகர்‌ 
கெம்பீரநல்லூர்‌, இறையிலி தேவதானமாகக்‌ கோயிலுக்கு அளிக்கப்பட்ட செய்தியும்‌ 
கூறப்படுகிறது. வரிவிதிப்புகள்‌ பயிர்‌ வகைகள்‌ மற்றும்‌ விளைச்சலுக்கு ஏற்ப 
வரி பெறப்பட்டமையும்‌ சொல்லப்படுகிறது. 
கல்வெட்டு : 
1. . நாக இவ்வூர்‌ பட்டன்‌ . , . . செயங்கொண்ட சோழன்‌ சீவல்ல 


வனான களவழி நாடாழ்வார்‌ பக்கல்‌ விலை கொண்ட[யணி]கொட்டங்கு 


. கடை கொம்புக்கு தச்சன்குடி குளம்‌ நீர்கோவைக்கும்‌ [தெற்கும்‌] 


ஆக நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும்‌ புன்செய்யும்‌ நத்தமும்‌ பட்டன்‌ 
அழகனுக்கும்‌ வற்கத்தாற்கும்‌ காராண்மை ... . 


ப த்‌ 


வித்துக்கும்‌ .. .. டையனா .. நெல்லு .. பதக்கும்‌ .. காசு அரைக்‌ 


காலும்‌ ஆண்டு ஒன்றுக்கு எப்பேற்பட்ட வினி[ஓ]கத்துக்கும்‌ காலகண்ட 
தேவனால்‌... 


68 


18. 


14, 


15. 


16. 


க்‌ பதக்கும்‌ இறையிலிட்டமைக்கு இவை புரவுவரி திணைக்கள 
நாயகம்‌ மிழலைக்கூற்றத்து கீழ்கூற்று பொன்பற்றி உடையானான 
திருப்பூவணமுடை .. .எழுத்து .. 


. இறுப்பானாகவும்‌ ... எழுத்து ... எழுத்து இவை .. முகவெட்டி எழுத்து 


இவை காங்கேயராயனெழுத்து இவை முனையதரையனெழுத்து 
இவை (விழுப்பாத ராஜனெழுத்து , . . . 


._யனான களவழி நாடாழ்வான்‌ எழுத்து இவை குமணராஜன்‌ எழுத்து 


இவை ... சோழனெழுத்து இவை புரவுவரி திணைக்கள நாயகம்‌ வட 
தலைச்‌ செம்பில்‌ நாட்டு ஆய்க்குடியான அழகிய பாண்டிய நல்‌.... 


. தர பல்லவ..முடித்த பெருமாள்‌ உ [பூவின்‌ கிழத்திமேவீற்றிருப்ப 


மேதினிமாது நீதியிற்‌ புணர வயப்பொறி மடந்தை செயப்புயத்திருப்ப 


மாக்‌ கலை 


வில்லவர்‌ செம்பியர்‌ விராடர்‌ வராடர்‌ பல்லவர்‌ திறையுடன்‌ முறை 
முறை பணிந்து... 


. கள்‌ ஸ்ரீகுலசேகரதேவற்கு யாண்டு பதின்மூன்றாவது] நாள்‌ இரண்‌ 


டாயிர... 


௨. இவ்வூர்ப்பட்டன்‌ அழகன்‌ செயங்கொண்ட சோழ ....... 


. பங்கு ... க்கும்‌ தச்சங்குடி குளத்து நீர்‌ கோவைக்கு தெற்கும்‌ ஆக 
இந்நான்‌ .... 


... நாக இடப்பெற வேணுமென்றும்‌ ... காலால்‌ ... வரிசை நாற்பதின்‌ 


கலத்தின்‌ கீழ்‌ புள்ளிபுக்க நிலத்துக்கு முதல்‌ வீரபாண்டியனால்‌.... 


லத்துக்கு இவ்வரிசையில்‌ ஒன்று பாதி ... த்துக்கு .. புன்செய்‌ விளைந்த 
நிலத்துக்கு மாத்தாற்‌ திரமம்‌ அரையும்‌ இறுப்பதாக இறை 


விலை கொண்ட குளங்கா.. ..வாகைக்குடியான. . . .நல்லூ[ரு][க்‌*]கு 
விலை ஓலைப்படி . . . ஓலைக்குட்பட்ட நத்த, , . தழும்‌ பட்டன்‌ 


கீழ்‌ புள்ளிபுக்க நிலத்துக்கு , . . பதக்கும்‌ காசு அரைக்காலும்‌ 
ஆண்றொன்றுக்கு . . . .துக்கு கால்‌. . . 


ன ர. படிகொண்டு வேண்டு நிவந்தங்கள்‌ செல்ல பண்ணுக 
லுஞ்செம்பிலும்‌ வெட்‌ . . . . சந்திராதித்த வற்‌. . .. 


69 


ம்‌. 


18. 


19. 


20, 


21, 


22. 


தென்பறப்பு நாட்டு திருவாதவூர்‌ திருமறை நாயகர்‌ கோயில்‌ 
சீகாரியஞ்‌ செய்வானுக்கு தேவகன்மிக்கும்‌ மாடாபத்தியஞ்‌ சேவாருக்கும்‌ 
இக்கோயில்‌ . 


குடியான (மண்டலீகர்‌ கெம்பீர நல்லூர்க்கு விலையோலைப்படி 
திருவாதவூர்‌ குளத்து நீர்க்காலுக்கு மேற்கும்‌ வேப்பங்குடி எல்லைக்கு 
வடக்கும்‌ சிறுவேலங்குடி வயலில்‌ கீழெல்லை . . 


வனுக்கும்‌ வற்க்கத்தாற்கும்‌ காராண்மையாய்‌ பதின்மூன்றாவதின்‌ 
எதிர்‌ ஆறாமாண்டு முதல்‌ அந்தராயம்‌ உட்பட இறையிலியாய்‌ 
இறுப்பதாக இடப்பெறவேணுமென்று இவ்வூர்‌ கடமை யிறுக்கும்‌ இட. . 
எப்பேற்பட்ட வினிஓகத்துக்கும்‌ காலகண்ட தேவனால்‌ . . . கும்‌ நெல்லு 
பதின்கலமும்‌ ஆடிக்குறுவை விளைந்த நிலத்துக்கு இவ்வரிசையில்‌ ஒன்று 
பாதியும்‌ தினை எள்ளு 

டிக்கு . . . , கோயில்‌ தேவர்க்கு வேண்டும்‌ நிவந்தங்களுக்கு 


ஜெயங்கொண்ட சோழன்‌ சீவல்லவனான 


. பதின்‌ மூன்றாவதினெதிர்‌ ஆறாமாண்டு முதல்‌ அந்தராய 
லியாய்‌ இறுப்பதாகவும்‌ இவ்வூர்‌ கடமையால்‌ 


29. னெல்லு பதின்கலமும்‌ ஆடிக்குறுவை விளைந்த நிலத்துக்கு இவ்வரிசையில்‌ 


24, . 


ஒன்றுபாதியும்‌ தினை எள்ளு, நாலத்தொ[ன்‌] . . . . 


ங்கள்‌ செல்லப்பண்ணி சந்திராதித்தவற்‌ செல்வதாக கல்லிலும்‌ 
செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க இவை மதுரோதயவளநாட்டு காஞை 
யிருக்கை உழக்குடி முத்தன்‌ ஆட்கொண்ட வில்லி ராஜன்‌ மீனவதரைய 
னெழுத்து .. . 


70 


த. நர்‌. அ. 


மாவட்டம்‌ 
வட்டம்‌ ; 
ஊர்‌ : 
மொழி: 
எழுத்து : 
அரசு : 


மன்னன்‌ ; 


இடம்‌ : 


குறிப்புரை : 


தொல்லியல்‌ துறை 


உ மதுரை 


மேலூர்‌ 
திருவாதவூர்‌ 
தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ : 38/2003 


ஆட்சி ஆண்டு : ற 
வரலாற்று ஆண்டு ₹ 
இந்தியக்‌ கல்வெட்டு ம்‌ | 
ஆண்டு அறிக்கை J ந்த்‌ | 
முன்பதிப்பு : — 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி பலகைக்கல்‌ (பூப்பலகை). 


பூக்கட்டும்‌ பலகைக்கல்‌ (பூப்பலகை) செய்து கொடுத்தமை குறிக்கப்படுகிறது. 


கல்வெட்டு : 


1. ஷுஹிஸ்ரீ [ஸ்ரீவல்ல]வ 
திருப்பூப்பலகை ॥௨ 


பாண்டிபுரத்து சீதரன்‌ ௪... 


வன்‌ செய்வித்த 


71 


த. நர. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 39/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு ! வ்‌ 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ 
ஊர்‌ : திருவாதவூர்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு 1 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ மூன்‌ பதிப்பு: fe 
அரசு : க ஊர்க்‌ கல்வெட்டு ] 
மன்னன்‌: ௨ எண்‌ ர்‌ 39 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மகாமண்டப உட்புறச்‌ சுவரில்‌ 
துண்டு கல்வெட்டுகள்‌. 
குறிப்புரை : நிலக்கொடை, திருமேனிகள்‌ செய்வித்தது பற்றிக்‌ கூறுகின்றன. 
கல்வெட்டு : 
அ 1, திருவாதவூர்‌ நாயனார்‌ போகமுட்பட . . 
த க்‌ பக்கலும்‌ 
3. பற்று 
ஆ 1, கீழ்வரம்புக்கும்‌ 

2. கெல்லை தெக்கோடிய வாய்க்காலுக்கு ௨... 

9. பெருமாள்‌ திருவிடையாட்டத்து தெ . . .. 

4. ழக்கோடி வாய்க்காலுக்கு மே... . 

9. மாசாந பிராந்பட்டன்‌ பக்கல்‌ வி. , . 

6. லக்கோடிய வாய்க்காலுக்கு வடக்கும்‌ மே 


12 


உள்ள 


இ 1... இன்னா ,... 
2. . . இராசராசபட்டன்‌ பிரான்‌ கி, *வன [நாற்பத்தெண்ணாயிர] 
8. தென்பறப்பு நாட்டுத்‌ திருவாதவூர்‌ 
4, மை நல்லணி . . 
ஈ 1, பாண்டி மண்டலத்து தென்பரப்பு நாட்டு திருவாதவூ 
2. திருவி , , . தேவர்‌ . . . 


4. . கள்‌ . , . தேவரையும்‌ நாச்சியாரையும்‌ ., . . 


5. , ம்‌ உடைய , 


ள்‌ நாடாழ்வான்‌ 
றும்‌ , . . யில்லார்‌ ததி. . 


. லும்‌ . . எந்று திரு . . . 


oP ம 0. ஷம 


. தேவனான வழுதி .. . 


73 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 40 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு ; கி.பி. 18 - ஆம்‌ 
த நூற்றாண்டு 
ட்ட திருவாதவூர்‌ ப இந்தியக்‌ கல்வெட்டு 1] 2 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ) 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : னு 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 10 
மன்னன்‌ : மாறவர்மன்‌ ப்பம்‌ 1 
விக்கிரமபாண்டியன்‌ 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மகாமண்டபம்‌ உட்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை: மாறவர்மன்‌ விக்கிரமபாண்டியனின்‌ (கி.பி. 1218-1252) திருமகள்‌ செயமகள்‌' 
எனத்‌ தொடங்கும்‌ மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. நில விற்பனையைக்‌ கூறுகிறது. 
கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை. 
கல்வெட்டு : 
1. ஷஹிஸ்ரீ திருமகள்‌ செயமகள்‌ திருப்புயத்திருப்ப நேமி ஓங்கு 


இத்திழ[ல]ாகிய .. நிழற்ற மாயிரு பனமுடி . . 


. வெண்குடை நிழலிற்‌ தங்கிய கோமுதற்‌ [கோச்சடைய] 


.  ரிவிளங்க நதிப்பெருஞ்சடைய . . பெற்ற . . .ஞ்சரத்தினாள்‌. . . 


_பந்மரான அ, வூவன சக்கரவத்திகள்‌ ஸ்ரீ . . . தேவர்க்கு [யாண்டு] . . 


. லெ விலையும்‌ குடிவிலையும்‌ ஆக . . . யார்‌ சீவல்ல 
டி தேவன்‌ காங்கேய, . . பக்கல்‌ . . வசக்கல்‌ பற்றும்‌ தேவ 
னென்னு. . 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 41 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 
ர்‌ திருவாதவூர்‌ பலன ப 
ஊர்‌ : ப 
இந்தியக்‌ கல்வெட்டு le 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
லு மிட்‌ 
எழுத்து தமிழ முன்‌ பதிப்பு : 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ மாறவர்மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 41 
சுந்தரபாண்டி யன்‌ ம்‌ | 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மகாமண்டப உட்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்கல்வெட்டுகள்‌ கோயிலுக்கு அளிக்கப்பட்ட கிலங்கள்‌ அவற்றின்‌ எல்லைகள்‌ 
பற்றிக்‌ குறிப்பிடுகின்றன. 
கல்வெட்டு : 
அ 1... பொற்கோயில்‌ கைகோளன்‌ 
2, , . . கலத்துப்‌ பிராமணர்‌ பக்கல்‌ . . . 
3. . லியும்‌ அந்தராயமும்‌ 
4, . . சொன்னமையில்‌ அஞ்சாவது . . 


9. . . . கைக்கொண்டனுபவிக்க 


6. . . திரிபுவன , . . 


ஆ 1. அரைக்காணி முக்காணி 


2, . . கங்கராய . . 


ர்‌ 
& © 


75 


பே 
ஏ, 


.. படிதன்மம்‌ 


. எழுந்தருளியிருந்து . . . 


 க்கரவத்திகள்‌ சோணாடு கொ... 

ட டியான சூரதேவ நல்லூர்‌ நா. .. 
கு ற்கும்‌ தென்னெல்‌. . . 

்‌ டியான்‌ வசக்கின க்கில்‌ தத 

. நிலமும்‌ நத்தமும்‌ நத்தபாழு. . . 

. தங்களுக்கு விற்று விலை... 


. திருவாதவூர்‌ நாயனார்‌ . 


ற்று . . . குடிதாங்கி கோலால்‌ மாத்தால்‌ . 


தூற்றுக்‌ கூற்றத்து மு[த்‌]தூருடையான்‌ . . . 


. தேவகன்மிகளுக்கும்‌ மாஹேமரக்கண்காணி . 


. தேவன்‌ கண்ணுடையான்‌ . . 


. வேண்டுமென்று நமக்கு . . . 


..மாத்தால்‌ ஆறுகல நெல்லும்‌ . . 


76 


த. நர. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ . 42/2003 


| 
| 
| 
| 
| 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : சகம்‌ 1500 கி.பி. 1578 
தல்‌ திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு | _ | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ | 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : வ | 
அரசு : மதுரை நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ர | 
மன்னன்‌: -- aT | ர 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, சோபான மண்டப அதிட்டானம்‌, ்‌ 
குறிப்புரை : தொடர்ச்சி அறிய முடியாத கல்வெட்டு. 
i 
கல்வெட்டு ்‌ | 
அ 1, ரா0ஈவசதுஸ்நன்றாக ஷுஹிஸ்ரீ மகாஸடி சட௱ ன்மேல்‌ செல்லா நின்ற 
உரசாயி ஸ௦வகீஹஸரத்து உத்தராயணத்து தைய்‌ மாதம்‌ டு௨ சனிவார 
நாள்‌ பிறதமையும்‌ பூசமும்‌ வி[ஷ[ஒ . . , வயோகமும்‌ வா[ர]மும்‌ பெற்ற 
நாளில்‌ தொட்டிய நாயக்கர்‌ தன்மமாக சுவாமியார்‌ திருமறை நாதர்‌ 
ம. ட்‌ | மைக்கு *. பூ ட 
ஆ 1.ர்‌ இறையிலி ௨௬ ௦ சேனாபதி பெருமாளுக்கு கோவி... 


77 


த. நா, அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 43 /2003 


மாவட்டம்‌ 1 மதுரை ஆட்சி ஆண்டு : க்‌ 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு ! கி.பி. 17-ஆம்‌ 
ர்‌: திருவாதவூர்‌ | நூற்றாண்டு 
வக ப்‌ இந்தியக்‌ கல்வெட்டு ள்‌ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: தமிழும்‌ கிரந்தமும்‌ முன்‌ பதிப்பு: — 
அரசு : - 
ஊர்க்‌ கல்வெட்டு ்‌ 
மன்னன்‌ $ ன்‌ | 43 
எண 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌ மகாமண்டப அதிட்டானம்‌. 


குறிப்புரை : கல்வெட்டு சிதைந்துள்ளது. செய்தி அறிய முடியவில்லை. திருவாதவூர்‌ இறைவனது 
தேவதானம்‌ பற்றிய கல்வெட்டாகத்‌ தெரிகிறது. 


கல்வெட்டு : 
1. மஹ , , ஷமிதபமுயம௨ அஆத[த;]* ஊடி வயொ . . . திருமறை . ... 
2, 20 மமக்ஷாயாமமெரநு வஷாவ , , . ப்ப நாயக்கரய்யன்‌ 


3. . . வம்‌ தேவதானமாகி நடந்து வந்ததே . . . 


78 


த. நா, அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 44 / 2003 
மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 17 - ஆம்‌ 
ட ்‌ நூற்றாண்டு 
ல திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 18 இ 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : மதுரை நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 a 
மன்னன்‌ : -- எண்‌ J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மகாமண்டபம்‌ கிழக்குப்புற வெளிச்சுவர்‌, 
குறிப்புரை : காஞ்சரங்கோட்டைப்‌ பகுதி நிலங்கள்‌ கொடையாகக்‌ கொடுக்கப்பட்டது பற்றிக்‌: 
கூறுகிறது. சிதைந்த கல்வெட்டு, தர்மத்தைக்‌ காப்பது நன்மை தரும்‌ என்று 
கூறும்‌ சமஸ்கிருத ஸ்லோகம்‌ இறுதியில்‌ உள்ளது. 
கல்வெட்டு : 
அ 1. வாதவூர்‌ மற்றும்‌ நான்கெல்லை . . 
2. நிலங்களுக்கு திருவாதவூர்‌ புரவும்‌ . . . 
ஆ 1, சேஜம மியி மிச்ஷெவ ஐமு ஹாஷாணங்கழு . . ..்ங்கழுக்கும்‌ .. 
2. சனகுடி காஞ்சிரங்கோட்டை நாலெல்‌[லைநுக்கு [ந]ஞ்சை புஞ்சை நத்தம்‌ 
செய்த , . . வஃிபசி , , . 
3. பாழு.கடி உ௱கல மம பர கிமு மமுணுஓ பதா வாமுகட ௨, . . ௩-௪ 


79 


த. நா. அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : 


வட்டம்‌ 
ஊர்‌ : 
மொழி: 
எழுத்து : 
அரசு : 


மன்னன்‌ : 


இடம்‌ : 


குறிப்புரை : 


மதுரை 


மேலூர்‌ 


திருவாதவூர்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 

பிற்காலப்‌ பாண்டியர்‌ 


தொடர்‌ எண்‌ ; 45 / 2003 


ஆட்சி ஆண்டு : 
வரலாற்று ஆண்டு : 
இந்தியக்‌ கல்வெட்டு | 
ஆண்டு அறிக்கை | 
முன்‌ பதிப்பு : 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


al 
0 
J 


45 


திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மகாமண்டபம்‌ தென்சுவர்‌. 


திருமறைநாயனார்‌ கோயிலுக்குக்‌ கொடை அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 


மிகவும்‌ சிதைந்துள்ளது. 


கல்வெட்டு : 


1. ஜஷிழீ திரிபுவனச்சக்கரவத்திகள்‌ 


திருவாதவூருடையார்‌ 


உக ஐஐ 


அ 


ர்‌ திருமறைநாயனார்‌ தேவ 


௨னத்து தன்மத்துக்கு 


: அச்சு அ .. 


த்து 


சொன்னோம்‌ இப்படி இவை . . . 


80 


கோனேரின்மை 


கொண்டான்‌ 


க. நர. அர, தெரல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 46 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 

வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ 

ஊர்‌ : திருவாதவூர்‌ 2 நூற்றாண்டு 

. இந்தியக்‌ கல்வெட்டு ட்‌ த 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 3 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு: ன ச 

அரசு: பிற்காலப்‌ பாண்டியர்‌ 

மன்னன்‌ : வீரபாண்டியன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 46 

எண ] 

இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மகாமண்டபம்‌, தென்சுவர்‌ வெளிப்புறம்‌. 

குறிப்புரை : கல்வெட்டு அங்கங்கு சிதைந்துள்ளது. முற்றுப்பெறவில்லை. இராசேந்திரசோழச்‌ 
சதுர்வேதிமங்கலப்‌ பகுதியில்‌ இருந்த நிலங்கள்‌ திருவாதவூர்‌ கோயிலுக்குத்‌ தேவ 
தானமாக அளிக்கபட்டுள்ளன. கி.பி. 12-ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ ஆண்ட 
“பூமருவிய திருமாதும்‌' எனத்‌ தொடங்கும்‌ மெய்க்கீர்த்தி உடைய வீரபாண்டியன்‌ 
மூன்றாம்‌ குலோத்துங்க சோழனால்‌ தோற்கடிக்கப்பட்டவன்‌. இவனது கல்வெட்டு 
இக்கோயிலில்‌ கிடைப்பது முக்கியத்துவம்‌ வாய்ந்தது, 

கல்வெட்டு : 


1. பூமருவிய திருமாதுஞ்‌ செயமாதும்‌ புயத்திருப்ப தேமருவிய 

2. லி வெய்தப்‌ புணரிசூழ்ந்த மண்‌ முழுதுங்‌ குடை நிழற்றி மாவ. . . 
சிர..டி செங்கோ 

3. ௫ . * 


. . கோ... 


௨ட்டின புறஞ்செலுத்தி வெங்கோ வெ. 
4, . . வேதமும்‌ அமைந்தோங்க வண்ட .. . 


5. வீரஸி௦ஹாஸனத்து வீற்றிருந்தருளி . குலம்‌ 


திரிபுவனச்சக்கரவ 


மதிக்குலம்‌ . , . 


6. த்திகள்‌ வீரபாண்டியதேவர்‌ , . . . கூடத்துப்‌ ப 


7. ள்ளிப்‌ பீடத்து எழுந்தருளியிருந்து . . . . 


81 


18. 


19. 


20, 


21. 


. காராண்மையாகவும்‌ பெற வேண்‌... 

. காராண்மையாகக்‌ குடுத்தோம்‌ இ. . .. 

. கல நெல்லும்‌ காசும்‌ கடமை அந்தராயம்‌ யிறுப்பதாக வரியிலிட்டு.. 
..மொழிந்தருளிந.... 

. தூற்றுக்‌ கூற்றத்துச்‌ செழுவத்தூருடையான்‌ அரையன்‌ உதயஞ்‌ செய்‌ 


5, திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ திருவாத 


வூருடையார்‌ திருமறைநாயனார்‌. . . ஸ்ரீமாஹேமர 


விப தட்டில்‌ ளுக்கும்‌ . . . ராஜே, சோழச்‌ சதுவேதிமங்கலத்து . . . .க்கோ 
. தேவன்பட்டன்‌ . . . தேவன்கண்ணு. . . தேவன்‌ . . . . கொண்டுடைய 
நிலம்‌ 
அரைக்காலே அரை மாவும்‌ இந்நாயனார்‌. . . ளுக்கு காராண்மை 
. என்று நமக்குச்‌ சொன்ன. . 
. இந்நாயனார்க்குத்‌ தேவதானமாக .... களுக்குக்‌ , நில ... கடமை 
யந்தராயம்‌ ... 
கோலால்‌ மாத்தால்‌ அறுகலநெல்‌ . கால்‌ அச்சுங்‌ கொண்டு , 


வெட்டிவித்துக்‌ கொள்க 


அறல்‌ க ற்றுத்து எழு கதுருபையான்‌. அனையன்‌ உடையன்‌ 


செய்தான்‌ . . . ட்டாவதினெதிர்‌ நாள்‌. 


படட . நாள்‌ ௱௯௰௪ திருவாய்க்கேழ்விக்கு மேல்‌ அி;வூவனச்‌ சக்கர 


வத்திகள்‌ வீரபாண்டிய தேவற்கு யாண்டு . . . ஆவதினெதிர்‌ . . . நாள்‌ 
முன்னூ . 


2 தை அதன செயம்‌ இராஜேந்திர சோழ. .. . 

ட ட ங்‌ க்கல்‌ வ்‌ விடல்‌ குடியிருந்த இவ்வூர்‌ . . 

பலப்‌ பவ மும்முடிச்‌ சோழிக்கும்‌ விலை... . 

0 அடல்ஸ்‌ க்கரவத்திகள்‌ ஸ்ரீவிக்கிரமபாண்டிய . , . . 


82 


த. நர்‌. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌; 47/ 2003 


3. 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு 1 — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு ! கி.பி. 13-ஆம்‌ 
ஊர்‌ : திருவாதவூர்‌ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்‌ (து 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
மன்னன்‌ : இரண்டாம்‌ மாறவர்மன்‌ எண்‌ 47 
சுந்தரபாண்டி யன்‌ 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை, தென்சுவர்‌ வெளிப்புறம்‌. 
குறிப்புரை : கீழ்வேம்ப நாட்டு இராஜவல்லிபுரத்து ஒருவாறுணர்ந்தான்‌ நல்லபெருமாள்‌ 
அண்ணன்‌ தமிழ்ப்‌ பல்லவரையன்‌ கண்ணிறைஞ்சான்‌ என்பவன்‌ திருமறை 
நாயனார்க்குத்‌ திருப்படி மாற்று உள்ளிட்டு வேண்டும்‌ செலவினங்களுக்கு குலதீபன்‌ 
ஊர்ப்‌ பகுதியில்‌ தேவதான இறையிலியாக நிலங்கள்‌ கொடுத்ததைக்‌ கூறுகிறது. 
*இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன்‌ கோல்‌' என்ற நிலம்‌ அளக்கும்‌ கோலும்‌ 
இக்கல்வெட்டில்‌ குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை,. 
கல்வெட்டு : 
1. . . . . களவழிநாட்டு பள்ளிக்குறிச்சி ஐஞ்சில்‌ முக்கூறு கீழ்வேம்ப 


நாட்டு இராஜவல்லிபுரத்து ஒருவாறுணர்ந்தான்‌ நல்லபெருமாளான 
அண்ணன்‌ தமிழ்ப்பல்லவரையர்‌ கண்ணிறைந்தான்‌ விலைகொண்டுடைய 
இக்குலதீபனுக்கு . . . 

க்கு வடக்கு மேலெல்லை இப்பள்ளிக்குறிச்சி குளத்து நீர்‌ 
கோவைக்குக்‌ கிழக்கும்‌ களவழிநாடன்‌ ஆற்றுக்குத்‌ தெற்கும்‌ ஆக 
நான்கெல்லைக்குட்பட்ட நீர்‌ நிலமும்‌ புன்செயும்‌ நத்தமும்‌ தோட்டமும்‌ 


உட்பட . . . ள்ள நிலம்‌ கடமை அந்தராயம்‌ விநியோகம்‌ . . . 
இந்நிலமிறுக்கும்‌ இ , . . இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன்‌ 
கோலால்‌ நிலமளந்து . . . நிலத்துக்கு கடமை அந்தராயமும்‌ 


83 


10, 


11. 


விநியோகமும்‌ தருவதான அச்சும்‌ காரியவாராச்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ 
பஞ்சுபீலி . . . . லாஞ்சினைப்பேறும்‌ . . யும்‌ பொன்‌ வரியும்‌ ... 


ம்‌ புன்செய்‌ விளைந்த நிலத்துக்கு மாத்தால்‌ திரமம்‌ அரையும்‌ ஆக 


இறுப்பதாக இறைப்படி பெறவேணுமென்று மழவராயர்‌ நமக்குச்‌ 
சொன்னமையில்‌ இத்திருமறைநாயனார்க்குத்‌ திருப்படிமாற்றுள்ளிட்டு 


வேண்டும்‌ நிவந்தங்களுக்கு . . . . பக்கல்‌ விலை கொண்டு இ ..., 
பள்ளிக்குறி . . . 
- இறுக்கும்‌ இக்குளத்து . . . கோலுக்கும்‌ . . . கலவ . . , வரம்புக்கும்‌ 
க்கு வடக்கும்‌ மேலெல்லை . . . ஆற்றுக்கு , . . ஆக நான்கெல்‌ 
லைக்குப்பட்ட நிலம்‌ , . . 

. எப்பேற்பட்டனவும்‌ [உட்‌]பட இவ்வாண்டு முதல்‌ தேவதான . . .வென்றும்‌ 
இந்திலம்‌ இறுக்குமிடத்து இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன்‌ 
கோலால்‌ நிலமளந்து . . . . விளைந்த நிலந்துக்கு கடமையும்‌ அந்த 
ராயமும்‌ வினியோகமும்‌ , . . காரியவாராய்ச்சியும்‌ , . 
நிலத்துக்கு ஒன்று காலு . . . நிலத்துக்கு .. . ஒன்றும்‌ , . , புன்‌ 
செய்‌ விளைந்த நிலத்துக்கு மாத்தாற்‌ திரமம்‌ அரையும்‌ ஆக இவ்‌ 
வாண்டு முதல்‌ இறுப்பதாக இடவேணு . . . உள்வரியும்‌ நம்கேழ்வியும்‌ 


தரச்‌ சொன்னோம்‌ கைக்கொண்டு இப்படி சந்திராதித்தவற்‌ செல்வதும்‌ 
கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டி . . . 


. எழுத்து இவை சக்கரபாணிநல்லூர்‌ விரதமுடித்தானான பல்லவ 
ராயர்‌ எழுத்து ஹஸஹிறீ பூமலற்திருவும்‌ பொருசெய மடந்தையும்‌ 
தாமரைக்‌ குவிமுலை சேர்புயத்திருப்ப வேதனாவின்‌ வெள்ளித்‌ 
தாமரை காதல்‌ மாது கவின்‌ பெற தி... 


. செய தீர்‌ கொற்றத்து எண்டிசையானை . . . கோசலந்‌ துருவங்‌ குதிரங்‌ 


குச்சரம்‌ பண்டரங்‌ கலிங்கமும்‌ கடாரங்‌ . . . தெலிங்கம்‌ சோனகம்‌ 
வேந்தர்க்‌ கொடுத்தருளி[நாய] . . . 

யாளோடும்‌ வீற்றிருந்தருளிய மாமுதல்‌ மதிக்குலம்‌ விளங்கிய கோமுதற்‌ 
கோமாறபன்மரான சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு . . 


தினொன்றாவது நாள்‌ நானூற்று அறுபத்திரண்டாவது . . . 


௨... ஏழகப்‌ பெருமானான களவழி நாடா ,... 


84 


த. நா, அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 48 /2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ௭ 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.19 -20 ஆம்‌ . 
நூற்றாண்டு 
ஊர்‌ : திருவாதவூர்‌ 
ள்‌ இந்தியக்‌ கல்வெட்டு ] க்‌ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 
எழுத்து? தமிழ்‌ முன்‌ பதிப்பு : ன்‌ 
அரசு : — 
ஊர்க்‌ கல்வெட்டு 1 ல 
மன்னன்‌ : — எண்‌ J 
இடம்‌ : திருமறைநா தசுவாமி திருக்கோயில்‌, முன்மண்டபச்‌ சிற்றாலயம்‌. 
குறிப்புரை : 


மதுரையிலுள்ள குப்பையர்‌ என்பவர்‌ முன்மண்டபத்திலுள்ள தெய்வத்தைப்‌ பரதிஷ்ஸ்ட 
செய்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 


கல்வெட்டு : 


1. விக்கிரம றி ஆவணி மீ” ௫ மதுரையிலிறுக்கும்‌ 
2. குப்பையரவர்கள்‌ பிறதிலஸெ பண்ணினது 


3... . ய்யர்‌ 


85 | 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 49/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு ;: கி.பி. 19-ஆம்‌ ழ்‌ 

; : நூற்றாண்டு 
ஊர்‌ $ திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] பி 
எழுத்து: தமிழ்‌ முன்ப்திப்பு ட்‌ 
அரசு — 5 
பதட்ட ஊர்க்‌ கல்வெட்டு ்‌ ன்‌ 

எண்‌ J 

இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை, தென்சுவர்‌ வெளிப்புறம்‌. 


குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்தள்ளது, “வீரபாண்டியன்‌' என்ற முகத்தலளவை கூறப்‌ 
படுகிறது. இறையிலி நிலக்கொடை பற்றிய கல்வெட்டு. 


கல்வெட்டு : 


அ) 1. முட்பட நிலம்‌. . 


. பழந்தேவதானம்‌ பள்ளிச்சந்தம்‌ நீக்கி உள்‌ 


த லல ம்‌ வலும்‌ பொன்வரி,. . . 
9. கூற்றத்து . . . . குளத்தாழ்வானான .. . 
4. . . . தருமமும்‌ தழைப்ப இமைய. . . ர 
5. . . றைக்கு, . . . நடைமு, . . . நவமணி வீரசிங்கா. . . 
ஆ) 1.. . . யிறற்ற அறு... 
2. , . - படித்தசையும்‌,. . . 
3. . தொழுது .. ..யா.. 
4, . தன்னலால்‌ தட. . . விழு. . . விழுக்காடு 
5, முதல்‌ வீரபாண்டியனால்‌ கலனே . . . . நிலம்‌ ஒரு மாவுக்கு. . . 


86 


த. நா. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 50] 2003 | 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு: 8 
வட்டம்‌; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 
ஊர்‌ : திருவாதவூர்‌ தூற்றாண்டு, 
இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி; தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] க்‌ 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ : சுந்தரபாண்டியன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 50 
எண J 
இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குச்‌ சுவரின்‌ 
வெளிப்புறம்‌. | 
குறிப்புரை : கல்வெட்டு தொடர்ச்சியில்லாமல்‌ உள்ளது. திருமறை நாயனார்க்குத்‌ தேவதானமாக 
வழங்கப்பட்ட நிலங்களும்‌ அவற்றின்‌ எல்லைகளும்‌ குறிப்பிடப்படுகின்றன. பிற்காலத்‌ 
திருப்பணியின்‌ போது கல்வெட்டுள்ள கற்கள்‌ இடம்மாறியுள்ளன. 
கல்வெட்டு : 
| 
1. . ... திருமறைநாயனார்‌ , . . ஆக குடுத்தோம்‌ இன்னாட்டு . -. . 
2. டாந்‌ , . . , யாநும்‌ கடாரத்தரையன்ரென]ல்லை திருசூலக்கல்லுக்கு 
மேற்கும்‌ தென்னெல்லை காரிகுழிக்குளம்‌ வடக்கடைக்‌ கொம்புக்கும்‌ 
இக்குளத்து வடவாய்‌ வெல்லைக்கு . . . , கலிங்கலும்‌ எ 
கோல்‌ குடிதாங்கியால்‌ புள்ளிபுக்கு நிலம்‌ . . . அந்தராயம்‌ ஒரு திரமம்‌ 


இறுப்பதாகவும்‌ வினியோகம்‌ . . . . 


.. வடக்கும்‌ மேலெல்லை . . . . குடிகுளத்துக்கு நின்ற காலுக்கெல்லைக்கு 


லை இக்குளத்து காலுக்கு திருவரத்தூர்‌ குளத்து நீர்காலுக்கு 
தெற்கும்‌ ஆகவிசைந்த பெருநான்‌ கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும்‌ 
... குடிதாங்கியால்‌ நிலம்‌ ஒரு மாவுக்கு . . . விற்று . . வரிசையில்‌ 


ஒன்று . முக்காலிலும்‌ வரகும்‌ எள்ளும்‌ விளைந்த நிலத்துக்கு 
இவ்வரிசைகளில்‌ , . . 


4, [காசு] ஒன்றுக்கு . . . நெல்லும்‌ , . . அற்பசி குறுவை இவ்வரிசைப்‌ 
படி ஒன்றுபாதி இறுப்பதாகவும்‌ . . . வரிசைப்படி ஒன்று 
வினியோகம்‌ . . இப்படியிலே கடமை அந்தராயம்‌ கைக்கொண்டு 
கெல்லையிலும்‌ திருசூலக்கல்லு நாட்டிக்‌ கொள்ளவும்‌ 

5. எப்பேற்பட்ட வினியோகங்களும்‌ நிலத்தால்‌ போகம்‌ , . . புள்ளிபுக்க 
நிலத்துக்குமாக கால்தூணி நெல்லு இக்கால்தூணி இறுப்பதாகவும்‌ 
புன்செய்‌ பயிர்கண்ட நில . . . நிலத்தில்‌ எள்ளு விளைஞ்ச நிலத்துக்கு 
கோலால்‌ ஒரு மாவுக்கு . . .. முக்கூற்றெ வி. . . யென்‌ பேர்க்கு 


இப்பிரமாணம்‌ படியிலே கல்லிலும்‌ விலை நிற்செய்யித்து [பொருள்‌ 
மாவறுதி பொருட்‌ செலவோலை] 


- த்‌ . . தந்தோம்‌ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு எட்டாவது 
முதல்‌ இவ்வழகிய பெருமாளுக்கு காராண்மையும்‌ இந்நாயனார்க்கு 


கடமை அந்தராயம்‌ வினியோகம்‌ இட்டபடி இறுப்பதாகவும்‌ 
சகிரதித்தவற்‌ செல்வதாக |॥- செய்யான்‌ சோலையான வீர ,,.,. 
இப்படிக்கு விரதமுடித்தான்‌ . .. இவை... 


88 


த. நர, அ. ரிதால்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 51/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 11 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு ! கி.பி. 13 - ஆம்‌ 
ப நூற்றாண்டு 

வரி திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு | _. 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 

எழுத்து: தமிழ்‌ oS 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு | ப 

மன்னன்‌ : மாறவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ எண ர 

இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை, கிழக்குச்‌ சுவரின்‌ 
வெளிப்புறம்‌. 

குறிப்புரை : ஆதிச்சனான விசையராயன்‌ என்பவனுக்கு நிலவிலைப்‌ பிரமாணம்‌ பண்ணிக்‌ 
கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இதில்‌ பொதுக்குறிச்சி என்ற ஊர்‌ 
குறிப்பிடப்படுகிறது. 

கல்வெட்டு : 

அ. 1. ஷஹவிஸ்ரீ மற்கீற்திக்குமேல்‌ கோமாறபன்மரான திரிபுவனச்‌ சக்கர 
வத்திகள்‌ ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு பதினொன்றாவது 
தென்களவழி நாட்டு அளகை மானகர்‌ உடையார்‌ .. சிவல்லவ . . . 

2. . .  பூவேந்திர பிரமனான உதையாதி .. ழிநாட்டுத்‌ தச்சனூர்‌ 
அபிமான [ஹஹ] . . . தோ .. ஆதிச்சனான விசையராயனுக்கு . . . 
பிரமாணம்‌ பண்ணி. . . . 

3. யக்கு . . . கடமையால்‌ இக்கிடார . . . மையில்‌ நாமும்‌ இவ்வாண்டு 
முதல்‌ பிடிபாடு பண்ணிக்‌ குடுத்த [பொது] குறிச்சிக்கு எல்லை. . . 
இக்குளத்து நீர்காலுக்கு .. 

4, அஞ்சும்‌ இப்பொன்‌ . . . யன்‌ வீட்டில்‌ தோட்டத்து . . . க்கும்‌ வடக்கு 
இத்தோட்டத்து மேக்கு 

ஆ, 1, இப்படிக்கு இவை பூழியத்தரையன்‌ எழுத்து. . . 

2. .. வராக... 

3. ௨வது. . . 


89 


த, நர, அ. தெரல்லியல்‌ துறை 


- தொடர்‌ எண்‌ : 52 / 2003 


மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 19 - ஆம்‌ 
மதி . நூற்றாண்டு 
டல்‌ திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு | _ 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ன்‌ 
வு டன ஊர்க்‌ கல்வெட்டு 1 ர்‌ 
மன்னன்‌: எண்‌ ] 
இடம்‌ 'திருமறைநகாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. கோயில்‌ நிலங்களின்‌ எல்லைகளைக்‌ கூறுகின்றன. 
கல்வெட்டு 
அடி டல 
2, . வென்‌ ... 
3. உடையார்‌ தார்தண்டலிடை ., . 
-ஆ.1. இக்குளத்து நீர்கோவைக்கு . . . 
2. ஊரணங்‌ கரைக்கும்‌ மேற்‌ .. 
3. பெரு நான்கெல்லைக்குட்பட்ட நில , ... 
4. மும்‌ மற்றும்‌ எம்மிலிசைந்த . . . 
இ. 1. 
2. [சிண்டாள வீரசிங்கதேவன்‌ 
3. மரைத்திரை முக . . 
4, .. ஆவிய . யாறு நீர்‌ நிலலொளித்து 
9. மெறிய பொருந்து சுரம்‌ புகவோட்டி [பைம்முடி] 


90 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 53 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 15 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
தி நூற்றாண்டு 
(ந 
ன்‌ த்தல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 1. 
மொழி தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 — 
அரசு பிற்காலப்‌ பாண்டியர்‌ கரக்‌ கல்வெட்டு \ க 
மன்னன்‌ சுந்தரபாண்டி யன்‌ எண்‌ 1 
இடம்‌ திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை, கிழக்குச்‌ சுவர்‌ வெளிப்‌ 
புறம்‌. 
குறிப்புரை : கோயில்‌ நிலங்களுக்கு உரிய வரிகள்‌ கூறப்படுகின்றன. திரமம்‌ என்ற பழங்காசு 
குறிப்பிடப்படுகிறது. ஐந்து காசுகள்‌ ஒரு திரமத்திற்குச்‌ சமம்‌ என்ற குறிப்பும்‌ 
உள்ளது. கீழ்வேம்பநாட்டுத்‌ தச்சனூர்‌ அபிமான பூசனத்‌ தெரிந்த கைக்கோளர்‌ 
படைப்‌ பிரிவும்‌ அதில்‌ இருந்த கைக்கோளன்‌ கேசவன்‌ ஆதித்தனான விசையராயன்‌ 
என்பவனும்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌, 
கல்வெட்டு : 
1. க்கு... 
2. கற்குடி [சாட்சியு]மாகவும்‌ . . . நாற்பதின்‌ . . . பதின்‌ஒன்று நிலம்‌ ஒரு 


மாவுக்கு தத்து ஐஞ்சு த்தம்‌ ஒரு திர[ம]மும்‌ , . கடமை . , 
லமும்‌ வெ... 


3. இவ்வரிசைப்படி ஒன்று பாதிக்கு இறு . . . ஆக இவ்வரிசைப்படி ஒன்று 


கா. . இறுப்பதாகவும்‌ வினியோகங்களும்‌ இவர்‌ பொருட்டு மற்றும்‌ 
எப்பேற்பட்ட வினியோகங்களுக்கு நீர்‌ . . போக . . . புள்ளிபுக்க நிலம்‌ 


நிலத்துக்கு . . . . ஒரு மாவுக்கு இம்மேனிப்படி அரைதிரமம்‌ 
இறுப்பதாக உடையார்‌ திருமறைநாயனார்‌ [காரியவாராய்ச்சியும்‌] 


91 


இவர்களுக்குக்‌ காராண்மையுமாக ஸ்ரீஸூந்தரபாண்டிய தேவற்கு 
பதினைஞ்சாவது முதல்‌ 


கு... குடுத்தோம்‌ ... நாடா , . . கணக்கப்‌ பண்டாரிகளோம்‌ 
தேவர்‌ . . . வீரபாஞ்சாளர்‌ சோள , . . சோளசிவாகர பூபாலராஜன்‌ 
எழுத்து கீழ்வேம்பை நாட்டு தச்சனூர்‌ அபிமான பூசனத்தெரிஞ்ச 
கைக்கோளரில்‌ கேசவன்‌ ஆதித்தனான விசையராயனேன்‌ சோழ 
மண்டலத்து ச௩,லெகையிற்‌ உடையாற்‌ 


செம்பியன்‌ . . . குடுத்து கல்லிலும்‌ செம்பிலும்‌ , . . 


92 


த. நர, 


மாவட்டம்‌ 1 மதுரை 

வட்டம்‌ : மேலூர்‌ 

ஊர்‌ : திருவாதவூர்‌ 

மொழி: தமிழ்‌ 

எழுத்து: தமிழ்‌ 

அரசு — 

மன்னன்‌ : 

இடம்‌ : 

குறிப்புரை : 

கல்வெட்டு : 
1. ... ல்லவா. 
2. ல்ல [களிற்று]. . . 
3. சென்னி இடு... . 
4. குரைதெங்கள்‌ மீனவற்கும்‌ 
5. கொன்று சினந்தளி . ப 
6. ..டிசூடி மார்‌... 
7 


அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 54/2003 
ஆட்சி ஆண்டு: — 
வரலாற்று ஆண்டு: கி.பி. 13-ஆம்‌ 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு: — 
ளர்க ன்‌ . | 

ஊர்க்‌ கல்வெட்டு ட 54 
எண ] 


திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை, கிழக்குச்‌ சுவர்‌ வெளிப்புறம்‌. 


ஸ்‌ ச க 
்‌ ம்பம்‌ நாட்டி வாகைக. 


துண்டுக்‌ கல்வெட்டு. பாண்டிய மன்னனின்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதி உள்ளது. 


93 


த. நா. ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 55/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 13 - ஆம்‌ 

; ்‌ ்‌ நூற்றாண்டு 
உணர்‌ 5 திருவாதவூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | - 
எழுத்து: தமிழ்‌ மூன்‌ பதிப்பு: ன்‌ _ 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ச 
மன்னன்‌: ௨ எண்‌ J 
இடம்‌ : திருமறைநா தசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகை கிழக்குச்‌ சுவர்‌ வெளிப்புறம்‌ , 
குறிப்புரை : கோயில்‌ நிலங்களின்‌ எல்லைகளில்‌ திருச்சூலக்கல்‌ நடப்பட்டு தானம்‌ அளிக்கப்பட்டதை 


இக்கல்வெட்டு புலப்படுத்துகிறது. துஞ்சலூருடையான்‌ சுந்தரபாண்டிய பல்லவரையன்‌ 
இதில்‌ கையொப்பமிட்டுள்ளான்‌. 


கல்வெட்டு : 
1. .. தரச்‌ சொன்னோம்‌ .. 
2. * . .னாமத்து நாலரைகாணி. . . கெல்லையும்‌ திரிசூல சாபனம்‌ 


பண்ணிக்‌ குடுத்து இப்படிக்கு சந்திராதித்தவற் 


3. செல்வதாக கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்கொள்க துல, இப்படிக்கு 
இவை துஞ்சலூருடையான்‌ சுந்தரபாண்டிய 


4. பல்லவராயன்‌ எழுத்து யாண்டு அஞ்சாவது நாள்‌ உ௱௰க ௨ 


94 


த. நா. அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : மதுரை 

வட்டம்‌ : மேலூர்‌ 

ஊர்‌ : திருவாதவூர்‌ 

மொழி: தமிழ்‌ 

எழுத்து: தமிழ்‌ 

அரசு : ன க 

மன்னன்‌ : -- 

இடம்‌ : 

குறிப்புரை : சிதைந்த கல்வெட்டின்‌ 


தொடர்‌ எண்‌ : 56 / 2003 


ஆட்சி ஆண்டு : — 

வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
நூற்றாண்டு 

இந்தியக்‌ கல்வெட்டு | _ 

ஆண்டு அறிக்கை ர்‌ 


முன்‌ பதிப்பு : 

ளர்க . 3) 
ஊர்க்‌ கல்வெட்டு ட்‌ 56 
எண்‌ ] 


திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, அம்மன்‌ கோயிலின்‌ வடபுற அதிட்டானம்‌. 


குறிப்பிடப்படுகிறான்‌. 


கல்வெட்டு : 


இறுதிப்பகுதி மட்டுமே உள்ளது, கணக்கன்‌ ஒருவன்‌ 


1. ..ஈற்கு இப்படிக்கு. . . கொண்டான்‌ . . . எழுத்து . . . இப்படிக்கு .. 
வஸ . , . அமவெவ௱ன்‌ எழுத்து இவர்கள்‌ சொல்ல இப்பிடிபாடு எழுதி 
னேன்‌ வஹூெயம்‌ ஸ்ரீஇராஜேட, சோழ அதுவ.$ரி மங்கலத்து சலை 


2. பெரியன்‌ ... 


கணக்கு 


களூடையார்‌ ,. . ||-- 


95 


லைல்‌ விபட ட வலைய ப யன்‌ 


த. நா. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 57 / 2003 


மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு : 15+1 
வட்டம்‌ ; மேலூர்‌ i வரலாற்று ஆண்டு ; கி.பி. 19-ஆம்‌ 
ஊர்‌ : திருவாதவூர்‌ + நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு 
மொழி: தமிழ்‌ அண்டு அறிக்கை ர்‌ 2 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | தர 
சுந்தரபாண்டியன்‌ ப்‌ J 
இடம்‌ : இவ்வூர்‌ நடுநிலைப்‌ பள்ளியில்‌ உள்ள தனிக்‌ கல்‌. 
குறிப்புரை : திருவாதவூரில்‌ இருந்த சைவ மடம்‌ ஒன்றிற்கு அளித்த தானம்‌ குறித்து இக்கல்டெடு 
கூறுகிறது. அம்பலத்தாடி நல்லூரும்‌, சிற்பாச்சாரியன்‌ உய்யவந்தான்‌ பெயரும்‌ 
குறிப்பிடப்படுகின்றன. இம்மடத்தின்‌ தலைவரான முதலிபார்‌ பராக்கிரமதேவர்க்கு 
அதிகைமான்‌ தேவன்‌ செய்த தானத்தைக்‌ குறிப்பதாகத்‌ தெரிகிறது. கல்வெட்டு 
மிகவும்‌ பொறிந்து எழுத்துக்கள்‌ தெளிவில்லாமல்‌ உள்ளன. 
கல்வெட்டு : 
1. ஹஷிஸ்ரீ திரிபுவனசக்கரவத்திகள்‌ சோனாடு கொண்டு 


சோழபுரத்து வீராபிஷேகமும்‌ விசையாபிசேகமும்‌ பண்ணிய 
பாண்டிய தேவற்கு யாண்டு ௰௫ வ்தின்‌ எதிராமாண்டு இராசிங்‌ 
கன்‌ குளக்கீழ்‌ அம்பலத்தாடி நல்லூர்‌ . . . பூவணமு... 

மா . . . தெவனேன்‌ திரு... 


௨ [முதலியார்‌ பராக்கிரம தேவர்‌] 


டாவது தென்பறப்பு நாட்டுத்‌ திருவாதவூர்‌ சேவகப்‌ பெருமான்‌ . . . 
டில 


ல்கைக்குக்‌ கீழெல்லை . . . 


96 


LO. ௮4 
11, 


தெருவுக்கு வடக்கும்‌ . . . ண்ட எல்லை, 


நாயனார்க்கு வடவெல்லை . . . விலைகொண்ட ... 


பத்‌ த்தல்‌ 


18. 


மற்றும்‌ எப்பேற்பட்ட 


14-28. (வரிகள்‌ தேய்ந்துள்ளன) 


1 அதத்கள்‌ 
25. 
26. 
217. 


க்குப்‌ .. யாய்‌ இம்மடத்திலே . . . 


ரைப்பூசித்து 


இப்படி சம்மதித்து கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்கொ . . . 


கச்‌ சம்மதித்து , . . 


தலில்‌ டம 


29. 
30. 
31. 
32. 
33. 
84. .. 


ன முதலியார்‌ பராக்கிரம தேவ்ற்கு மும்முடி சோழ.... 
மு .. னான அதிகைமான்‌ தேவனேன்‌ இப்படிக்கு 
முடிகோன்‌ . . . உனான அதிகைமான்‌ தேவன்‌ 
இப்படி கல்லில்‌ வெட்டினேன்‌ இவ்வூர்‌ சிற்பாசாரியன்‌ 
உய்யவந்தானான மலையன்‌ [அரநாயன்‌] எழுத்து 


கேழரர்‌ ரக, 


97 


த. நா. அ. தொல்லியல்‌ துறை ... தொடர்‌ எண்‌: 58 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 17 
வட்டம்‌: மேலூர்‌ வரலாற்று ஆண்டு: கி.பி. 1195 
ஊர்‌ : திருவாதவூர்‌ 


இந்தியக்‌ கல்வெட்டு | 


மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ — 
தது fr முன்‌ பதிப்பு : க 
அரசு 1 சோழர்‌ 
ஊர்க்‌ கல்வெட்டு i 58 
மன்னன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ எண்‌ J 
இடம்‌ : திருவாதவூர்‌ ஏரியின்‌ மடைத்‌ தூண்‌. 
குறிப்புரை : பாடல்‌ கல்வெட்டு, மங்கலக்கோன்‌ பாஞ்சாலராஜன்‌ என்பவன்‌ தன்‌ பெயரில்‌ 


மடை செய்வித்ததைக்‌ கூறுகிறது. இவன்‌ குலோத்துங்கசோழன்‌ பாண்டிய நாட்டின்‌ 
மீது மேற்கொண்ட போரில்‌ கலந்து கொண்டவனாகலாம்‌. 


கல்வெட்டு : 
1. ரீ கொலோ 9. மெறிந்து கொங்க 
2. த்துங்க சோழதே 10. லர்‌ தென்‌ கூடல்‌ 
3. வர்க்கு யாண்டு ௦௨௪ 11. பாணராதியோர்‌ தெந்‌ 
4. வாஹிஸ்ரீ மங்க 12. மந்னரை வென்று 
9. லக்கோன்‌ பாஞ்‌ 18. பாட்டு யார 
6. சாலன்‌ மாவேறி வ 14, லப்ப கோன்‌ 
7. ண்டலர்த்‌ தொ. 15. இம்மடை பாஞ்‌ 
8. ங்கல்‌ வழுதி தா 16. சாலராஜந்‌ 


98 


க. நர. அர. 


மாவட்டம்‌ : 
வட்டம்‌: 
ஊர்‌ : 
மொழி: 
எழுத்து : 
அரசு : 


மன்னன்‌ : 


இடம்‌ : 


குறிப்புரை : 


கல்வெட்டு: 


தொல்லியல்‌ தூறை 


மதுரை 

மேலூர்‌ 

திருவா தவூர்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 

பிற்காலப்‌ பாண்டியர்‌ 


முதலாம்‌ மாறவர்மன்‌ 
சுந்தரபாண்டியன்‌ 


தொடர்‌ ஏண்‌ : 59/2003 
ஆட்சி ஆண்டு: 9 
வரலாற்று ஆண்டு : கி.பி, 1225 


இந்தியக்‌ கல்வெட்டு | 
ஆண்டு அறிக்கை ] 


முன்‌ பதிப்பு : 


ஊர்க்‌ கல்வெட்டு | 
எண்‌ 


திருவாதவூர்‌ ஏரியில்‌ உள்ள மடைத்‌ தூண்‌. 


L 


டன்‌ 


59 


மதுரையில்‌ இருந்த கைக்கோளன்‌ செயமுடையான்‌ விரதமுடிச்சானான பராக்கிரம 


சிங்கதேவன்‌ தன்‌ பெயரில்‌ 


மடை செய்வித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 


மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ காலக்‌ கல்வெட்டும்‌ இதே மடையில்‌ உள்ளது. சோழன்‌ 


காலத்தில்‌ கட்டுவிக்கப்பட்ட மடை பாண்டியன்‌ காலத்தில்‌ 


எனலாம்‌. 


1. ஜஹஷஸ்ரீ கோ 


2. மாறபன்மரா 


ன 


திரிபுவனச்ச 


. க்கரவத்திகள்‌ சிரி 


. சோணாடு வழ 


. சுந்தர பாண்‌ 


. டியதேவர்க்கு யாண்‌ 


டு 


3 
4 
த 
6. ங்கியருளிய சிரி 
7 
8 
9 


ஒன்பதாவது 


10. மாடக்குளக்கீழ்‌ ம 
11. துரையில்‌ திரு[வ] 


திருத்தப்பட்டுள்ளது 


12. ந்திக்காப்பு வேளா 


13. ளர்‌ கைக்கோளரில்‌ 


14. செயமுடையான்‌ வி 


15. ரதமுடிச்சானான ப 


16. ராக்கிரம சிங்கதேவ 


17. ன்‌ [ய]டுத்த மை 


18. ட இம்மடையின்‌ &ே 


19. பர்‌ விக்கிரமசிங்‌ 
20. கதேவன்‌ மை 


21. ட இம்மடையின்‌ 


22. 


99 


த. நர. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 60/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு? ட்‌ 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : 12:12:1911 
ஊர்‌ : திருவாதவூர்‌ ட 

ரத்தத்‌ இந்தியக்‌ கல்வெட்டு ' 
மொழி: ஆங்கிலம்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 
எழுத்து : ஆங்கிலம்‌ முன்‌ பதிப்பு : = 
மன்னன்‌ : ஐந்தாம்‌ ஜார்ஜ்‌ புல்‌ [்‌ 60 


இடம்‌ : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, தெற்கு வீதியில்‌ நடப்பட்டுள்ள விளக்குத்‌ 
தூண்‌. 


குறிப்புரை : ஐந்தாம்‌ ஜார்ஜ்‌ இந்திய சக்கரவர்த்தியாக டில்லியில்‌ முடிசூடிக்‌ கொண்டமையைக்‌ 
கொண்டாடும்‌ நினைவாகத்‌ திருவாதவூரினர்‌ விளக்குத்தூண்‌ ஒன்று அமைத்ததை 
இக்கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு வாசகத்தின்‌ நான்கு புறமும்‌ கோடிடப்பட்டுக்‌ 
கட்டம்‌ பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரி வளைவாக பொறிக்கப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 
1. THE 8. AND 
2. INDIAN CORONATION LAMP 9. MARY 


3. THIRUVATHUR 10. QUEEN EMPRESS 
4. OF 11. AT 

5. THEIR MAJESTIES 12. DELHI 

6. GEORGE V 19. 12 DEC 1911 


7. KING EMPEROR 


100 


த. நா. ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 61/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்‌ . 
த்‌ \ நூற்றாண்டு 
ளர்‌ கச்சிராயன்பட்‌ ்‌ 5 கல்வெட்‌ 
ப பூ இத ௫ L 0291/1973 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து : வட்டெழுத்து சண்ப்திப்பு 2 ந 
அரசு — 
எண்‌ ] 
இடம்‌ : இவ்வூர்‌ வயலிலுள்ள கல்‌ செக்கு. 
குறிப்புரை : வழுதி வளநாட்டு மிழலூர்‌ அப்பனுழான்‌ என்பவன்‌ சுரகாட்டு நெல்வேளூரில்‌ 
இருக்கும்‌ பொற்கொடிவீரர்‌ பெயரால்‌ கல்‌ செக்கு செய்வித்ததைக்‌ குறிக்கிறது. 
கல்வெட்டு : 
1. ஸ்ரீ வழுதி வளநாட்டு மிழலூர்‌ 
2. அப்பனுழஞ்‌ சுர நாட்டு நெல்வே 
3. ளூர்ப்‌ பொற்‌ கொடிவீரர்‌ பேரால்‌ இ 
4. ட்ட செக்கு. 


101 


த. நர, ௮, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 62 /2003 


மாவட்டம்‌ ॥ மதுரை ்‌ ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு ! கி.பி. 14-ஆம்‌ 
ர: கள்ளங்கா நூற்றாண்டு 
கண்க யு இத பக எல்வெட்டு 292/1973 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை / 
எழுத்து: தமிழ்‌ மூன்‌ பதிப்பு? ன 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ன்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] ல்‌ 
மன்னன்‌ : - ன்‌ ர்‌ 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ தென்புற அதிட்டானம்‌. 


குறிப்புரை : சிதைந்த கல்வெட்டு. கோயிலுக்குரிய நிலக்கொடை பற்றியும்‌ அதன்‌ 


விளைச்சலில்‌ தட்டுப்பாடு ஏற்பட்டது பற்றியும்‌ கூறுகிறது. கல்வெட்டு முற்றுப்‌ 
பெறவில்லை. 


கல்வெட்டு : 

1. ஷஹிஞஸ்ரீ , . , 

2. முதலிக .. .. 

3. . ணம்‌ பண்ணி குடுத்த பரிசாவது எங்கள்‌ . . . சொன்னமையில்‌ இவர்‌ 
. அனுபவிக்கப்போது . . . மகிய, ... 

4, ன கிணறுகளும்‌ மேனோக்கி .. னேரி நாகெல்லை . .. 

5. க்குட்ப்பட்ட ஸமைாகிகளும்‌ . . . பேற்பட்டவையிற்றிலும்‌ இந்நிலங்கள்‌ 
விழுக்காடு முற்றும்‌ விலைகொண்டு உடையபடி . . . கண்‌ அனுபவிப்‌ 
பாராகவும்‌ அனுபவிக்கும்‌ இடத்து எங்களூர்‌ 

6. தேவர்‌ .. .. அமனாதேவற்கு . . . ஆ... க்கியம்‌ . . . . [கொ]ண்டு 


கொ .. வைத்துப்‌ பேறாளற்‌ கு[டு]“ப்பித்த அளவில்‌ மழை நிலையுமாய்‌ 
மிறுக்கினபடியினாலேயும்‌ .. முட்டுப்பட்டு . . . 


102 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை தெரடர்‌: எண்‌ : 63 /2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 18:12 
வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1298 
ஊர்‌ : அருவிமலை 


இந்தியக்‌ கல்வெட்டு | 


எம திம்‌ ஆண்டு அறிக்கை J இ 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 | 
குலசேகரன்‌ பண்டி J 
இடம்‌ : மலை மீதுள்ள சிவன்‌ கோயிலுக்கு அருகிலுள்ள பாறை. 
குறிப்புரை : வடபறப்பு நாட்டு பாக்குடி சிவன்‌ கோயில்‌ திருமேலழகிய பாண்டிய நாயனார்க்கு 


அம்மாண்டி ஏரிப்பகுதியில்‌ இரு தட்டார்கள்‌ நிலமளித்ததைக்‌ கூறுகிறது 
இக்கல்வெட்டு. நிலத்தின்‌ எல்லைகளும்‌, அவற்றில்‌ நடப்பட்ட சூலக்கற்களும்‌ கூறப்‌ 
பட்டுள்ளன. 
கல்வெட்டு : 

1. ஷஹிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ சிரிகுலசேகரதேவற்கு யாண்டு 

2. பதிந்மூன்றாவதின்‌ எதிர்‌ பன்னிரண்டாவது பாண்டி மண்டலத்‌ 

3. து வடபறப்பு நாட்டுப்‌ பாக்குடியில்‌ திருமேலழகிய பாண்டிய நாயனா 

4. ற்கு பாக்குடி கண்டர்களில்‌ சட்டை மேலாழியான்டகளில்‌ [பெரு] 

9. ந்தட்டானும்‌ சட்டை உடையானான சேகல்‌ வல்லவத்‌ தட்டானு 

6. ம்‌ இவ்விருவோம்‌ எங்கள்‌ குடிகாடாக அம்மாண்டி ஏரியில்‌ 

7. வளையில்‌ சுற்றுக்கெல்லை கிழக்கு நாட்டின திருச்சூலக்கல்லுக்கு 

மேற்கு 


103 


8, ம்‌ தென்பாற்கெல்லை சூலக்கல்லுக்கு வடக்கு மேல்பாற்கெல்‌ 
9, லை நாட்டின திருச்சூலக்கல்லுக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை 
10. கிழக்கு னோக்கின வழிக்கும்‌ பாறைக்கும்‌ தெற்க்கு ஆக யிப்பெ 
11. ர நான்கெல்லைக்குட்பட்ட மனையிற்‌ தெற்று முற்றுமான சென்‌ 
12. மமானி நிலம்‌ முற்றும்‌ [விபோக நாய முருகனால்‌ முந்‌] 


18. கப்படுகுங்‌ காணிப்பத்து , . தம்மாதன கொ. . . மென்று அனைத்‌ 
தாயம்மும்புள்ளிபுக்க நி 


14, லத்துக்கு யிறுத்து வருவோமாகவும்‌ இப்படி சம்மதித்து .. முன்பு 


15. வெட்டி குடுத்தோம்‌ இவ்விறுவோம்‌ யின்னா[ட்டு சூ . . . எழுத்து 


104 


தத அதல ப்ள பப்‌ ப 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 64 / 2003 
மாவட்டம்‌: மதுரை ஆட்சி ஆண்டு : 1214 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு 2 கி.பி. 1295 
ஊர்‌ : அருவிமலை இந்தியக்‌ கல்வெட்டு | _ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை [்‌ 

எழுத்து: தமிழ்‌ ர்‌, ரு 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு | ல 
மன்னன்‌ : குலசேகரபாண்டி யன்‌ ல்‌ | 

இடம்‌ : மலை மீதுள்ள சிவன்‌ கோயில்‌ அருகிலுள்ள பாறை. 

குறிப்புரை : பாக்குடி. திருமேலழகிய நாயனார்க்கு தச்சர்‌ இனத்தைச்‌ சேர்ந்த சிலர்‌ அளித்த 

நிலக்கொடையும்‌, அதன்‌ எல்லைகளும்‌ கூறப்பட்டுள்ளன. 
கல்வெட்டு : 
1, ஹஹிஸ்ரீ திரிபுவனசக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலசே 


கர தேவற்கு யாண்டு 0௩ எதிர்‌ 0௪ ஆவது பாண்‌ 


. டிமண்டலத்து சுரநாட்டு வீரசூளாமணி தச்சந்‌ பொ 


ந்‌ நந்‌ சாத்தந்‌ ஆன துவராபதி தச்சந்னும்‌ பொந்னந்‌ நம்பி ஆன பள்‌ 
ளி வேளத்து சாநனும்‌ பொந்னந்‌ அணிஞ்சாந்னும்‌ பொந்னந்‌ தில்லை 
யும்‌ பொந்னந்‌ கண்டானும்‌ பொந்நந்‌ சோறன்நும்‌ பொந்னந்‌ இரா 
தடியும்‌ இவனைவோம்மும்‌ திருமேல்லாழி நாயநாற்கு 


. குள[ஏரி] நம்மான்‌ சோறண்டார்‌ வளையில்‌ சுற்றுக்கு எல்லை 


. கிழக்கு நாட்டின திருச்சூலக்‌ கல்லுக்கு மேற்கும்‌ தென்நெல்‌ 


105 


22 லைக்ஸ்‌ 


படபட ப படட ண்ண வலவ சமல படைக்க 


10. 
11: 
18. 
18. 
14, 
15, 
16. 
17. 
18. 
19. 
20. 
21. 


92. 


லை உப்பாற்றுக்கு வடக்கும்‌ மேற்கு நாட்டின திருசூலகல்‌ 


லுக்கு கிழ[க்‌]*கு வடக்கு நாட்டின திருசூலக்கல்லுக்கும்‌ கிழக்கும்‌ சனி 


மூலையில்‌ நாட்டின திருசூலக்கல்லுக்கும்‌ நாப்பக்கல்லு 


க்கு தெற்கும்‌ இப்பெருநான்கெல்லைக்குட்பட்ட மனையில்‌ 


சுற்றும்முற்றும்‌ எந்செந்ம மானி நிலத்தில்‌ யிறைபய . 


றி... 


கு நெல்லும்‌ அந்தராயம்‌ தந்கடம்மை ஆறுமேனி அரை திரமமும்‌ 


பங்க்கு தட்டான்‌ காலால்‌ முக்கலநேய்‌ தூணிபதக்‌ 


புள்ளிபுக்க நிலத்துக்கு இறுப்போமாகவும்‌ எங்கா[ணி] 


உண்ணும்‌ துவாரபதித்தச்சந்நும்‌ தி[ர]மம்‌ யிரண்டு கூறு உண்போமா 
- - [காரம்‌]கண்டந்நும்‌ தம்பி மாசம்‌ ஒரு கூறு உண்போமாகவும்‌ யிப்‌ 


படி சம்மதித்து கல்லில்‌ வெட்டிக்‌ குடுத்தோம்‌ இவ்வனைவோமும்‌ திரு 


மேல்லாழி ஆண்ட நாயற்கு இது பந்மாகேசுர யிர 


ப; 


106 


த. நர. ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 65 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 18 - ஆம்‌ 

ஊர்‌ : விமலை ப்ப 
்‌ ௮௫ இந்தியக்‌ கல்வெட்டு | “ 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 7” 

எழுத்து: தமிழ்‌ முன்‌: பதிப்பு? ஸ்‌ 

அரசு :: பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 

மன்னன்‌ $ — எண்‌ ] 

இடம்‌ : அருவிமலை மீதுள்ள சிவன்‌ கோயில்‌ வடபுற அதிட்டானம்‌. 


குறிப்புரை : பாக்குடி திருமேலாழியாண்ட நாயனார்‌ கோயிலுக்கு அழுதுபடி, சாத்துப்படி 
முதலிய பூசைகளுக்கும்‌, அர்த்தசாம பூசைக்கும்‌ நிலமளிக்கப்பட்டதைக்‌ கூறுகிறது. 
* அழகிய பாண்டியபுரத்து பிள்ளான்‌ தெய்வச்‌ சிலையான்‌ ஆன வீரபராக்கிரம 
தேவனுக்கும்‌ திருமோகூர்‌ கைக்கோளனுக்கும்‌ இந்நிலம்‌ காராண்மையாகக்‌ 
கொடுக்கப்பட்டு அவற்றின்‌ வரிகள்‌ கோயிலுக்குத்‌ தரப்பட்டன. 


கல்வெட்டு : 


1. திரலுவனசக,வத்தி கோனேரின்மை கொண்டான்‌ [து]வராவதி நாட்டுப்‌ 
பாக்குடி மேலாழியாண்ட நாயனார்‌ கோயில்‌ தேவகன்மிகள்‌ உள்ளிட்ட 
தானத்தார்க்கு அழகிய பாண்டியபுரத்து பிள்ளான்‌ தெய்வச்சிலையானான 
வீரபராக்கிரம சிங்கதேவனும்‌ தென்பறப்பு நாட்டு திருமோகூர்‌ கோயில்‌ 


கைகோ., . 


2. நான்கெல்லைக்கு உள்ப்பட்ட நன்செய்‌ புன்செய்யும்‌ நீர்நில[மும்‌] 
நத்தமும்‌ நத்தப்பாரும்‌ குளமும்‌ குளபரப்பும்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட 
ஸை ாஉிகளும்‌ அஞ்சாவது முதல்‌ இவர்களுக்கு காராண்மையும்‌ தங்கள்‌ 
பிள்ளையார்க்கு தேவதானமுமாக இந்நிலத்துக்குப்‌ பிள்ளையார்க்கு கடமை 
மரியாதியாக அளந்து கண்ட நிலத்துக்கு [மாகேக] நாட்டுகாலா.. . 


107 


3. ளாயும்‌ சொல்லி இப்படி வரியிலார்‌ கணக்கிலும்‌ கழிக்கச்‌ சொன்னோம்‌ 
இப்படி சந்திராதித்தவற்‌ செல்வதாக கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டி 
சூலத்தாபரமும்‌ பண்ணிக்‌ கொள்க இவை கப்பலூருடையான்‌ எழுத்து 
இவை வீரபாண்டிய காலிங்கராயன்‌ எழுத்து யாண்டு ௨௩ துல 
-அருளிச்செயல்‌ பாக்குடி மேலாழியாண்ட நாயகர்‌ கோயில்‌ தேவகன்மி 
உள்ளிட்ட தானத்தார்‌ . . . 


4. சேகர பிள்ளையார்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட பூசைக்கு 
டத்‌ இடன்‌ யாண்டு அனுபவித்து வருகிற அமணன்‌ . , நான்கெல்லைக்குள்‌ 
பட்ட நன்செய்‌ புன்செய்‌ நத்தமும்‌ நத்தபாரும்‌ குளமும்‌ குளப்பரப்பும்‌ 
எப்பேற்பட்ட ஸூஸவராஉிகள்‌ உள்ளிட்டகளுக்குக்‌ காராண்மையும்‌ 
நாயனார்க்குக்‌ கடமை . . 


108 


த. நர, அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 66 / 2003 
மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18 - ஆம்‌ 
ஊர்‌ விமலை க்கத்‌, 
= இந்தியக்‌ கல்வெட்டு 1 த 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
So ஞு ஊர்க்‌ கல்வெட்டு 1. 4 
மன்னன்‌ — எண்‌ J 
இடம்‌ : மலை மீதுள்ள சிவன்‌ கோயில்‌ தென்புற அதிட்டானம்‌. 
குறிப்புரை : திருமேழியாண்ட நாயனார்‌ கோயிலுக்கு நிலமளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு 
கூறுகிறது. கற்கள்‌ இடமாறியுள்ளமையால்‌ கல்வெட்டைத்‌ தொடர்ச்சியாக அறிய 
இயலவில்லை. 
கல்வெட்டு : 
அ. 1. புன்செய்‌ பயிர்‌ செய்துண்டாகில்‌ மாத்தால்‌ தூணிப்‌ பதக்கு தானியமும்‌ 
விழுக்காடு புரவுவரி வாடாக்கடமை ஆக மாத்தால்‌ ஆண்டு ஒன்றுக்கு 
ஒரு பணமும்‌ விழுக்காடு ஆக... .. . 
2, சாதகண்ட பட்டன்‌ எழுத்து திருக்கை வேல்லழகியான்‌ சீவல்ல பட்டன்‌ 
எழுத்து இக்கோயில்‌ கணக்கு 
3. அழகிய மணவாளனான சுரபி நாட்டு வேளான்‌ 
4, எழுத்து 
ஆ. 1, வ௫வ.$உ௨க்ஷத்து திங்கட்கிழமையும்‌ பெற்ற [நாள்‌] .. திரையனூர்‌ 


நாட்டுப்‌ புகழியான இராசராசபுரத்து இருமுடி வல்லான்‌ தம்பிக்கு 
நல்லாநான கங்கை நாராயணச்‌ சகூவத்திகளுக்கு வடபறப்பு நாட்டுப்‌ 
பாக்குடி உடையார்‌ மேலாழியாண்ட நாயனார்‌ கோயில்‌ தான. .. 


109 


2. 


3. 


என்று பேர்‌ சொல்லப்பட்ட குடிகாடு வளையில்‌ சுற்றுக்கும்‌ நாட்டின 
திருச்சூலத்தாபநங்களுக்குட்பட்ட நன்செய்‌ புன்செய்களும்‌ நத்தமும்‌ 
நத்தப்பாருக்கும்‌ மற்றும்‌ எப்பேர்ப்பட்ட சமுத்தஹாத்திகளும்‌ இ[த]ற்கு 
காராண்கிழமை காணியாக விலை எழுதி உடையார்‌ ஸ்ரீ கயிலாய 


முடைய நாயனார்‌ . .. 


களுக்கு .. கடமை அந்தராயம்‌ பொன்வரி வினியோகம்‌ தறி இறை 
செக்கிறை தட்டொலிப்‌ பாட்டம்‌ இடைவரி இனவரி ஈழம்‌ புஞ்சை 
பஞ்சுபீலி சந்து விக்றகப்பேறு வெட்டி முட்டாவாள்‌ மற்றும்‌ எப்பேற்‌ 


பட்ட வரிகளும்‌ உட்பட . . . 


4, தூணிப்‌ பதக்கு நெல்லும்‌ வரகு தினை உள்ளிட்ட பயிர்‌ செய்த 


துண்டான நிலம்‌ மாத்தால்‌ இரு தூணிக்கு பணிந்தானியமும்‌ எள்ளு 
பயிற்‌ செய்துண்டான நிலம்‌ மாத்தால்‌ தூணி எள்ளும்‌ செங்கழுநீர்‌ பயிர்‌ 
செய்துண்டான நிலம்‌ மாத்தால்‌ ஒரு . . 


110 


த. நர. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 67/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு]: கி.பி. 18-ஆம்‌ 
நூற்றாண்டு 
ஊர்‌ : அருவிமலை ன்‌ கள்‌ , 1 
இந்தியக்‌ கல்வெட்டு சத்வ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : _— 
ரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ஞ்‌ ப ம்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ ட 
மன்னன்‌ : சுந்தரபாண்டி யன்‌ ஏண்‌ ர 
இடம்‌ : அருவிமலை மீதுள்ள சிவன்‌ கோயில்‌ கிழக்கு வடக்கு அதிட்டானப்‌ பகுதிகள்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. கூடியவரை இணைத்துத்‌ தரப்பட்டுள்ளன. நிலக்கொடை 


பற்றிய கல்வெட்டு. 


கல்வெட்டு : 


அ 1. ஸ்ரீ கோமாறு பன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீசுந்தர பாண்டிய 
ரேத]வற்கு யாண்டு ௨ வது நாயனார்‌ சொக்க நா..... வனெனும்‌ 
வடபறப்பு நாட்டு பரக்கால்லாந்‌ திருவரனான தென்ன கங்க தேவனார்‌ 
கம்படி முதலிகளில்‌ நாயகனெ . . . 


2. மேலாழியாண்ட நாயனார்‌(ற்குக்‌ குடுத்த தேவதானம்‌ கல்லாண்டார்க்‌ 
குளமும்‌ வயலும்‌ மிக்குளத்துக்‌ கெல்லை தென்பாற்கெல்லை யருவிக்கு 
போக்குக்கு மேற்கு பெருவழிக்கு மேற்கும்‌ மே[லெல்‌]லையாவதுக்‌ கீழ்பாற்‌ 


கெல்லை உள்‌ . . 
3. மேலழகிய நாடாழ்வான்‌ குடிகாட்டில்‌ வரம்பிட்டுக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்‌ 


கெல்லை யருவிக்குடி வரம்‌ [பில்‌] பிட்டுக்கு யேழு . , . குட்பட்ட நிலம்‌ திருச்‌ 
சூலக்‌ கல்லுக்கு தெற்குமாக இசைந்த பெருநான்‌ கெல்‌ . .. 


111 


. நீதராய முட்பட இறையிலி தேவதானமாவதாக இதுகொண்டு 


னாயனார்கு செல்லும்‌ . . . மாசி நாயனார்க்கு . . . மஞ்சனமயாற்‌ இரு 
நாழியாக அரிசி யெண்ணாழி [பி]ராட்டியாற்கு இருநாழி வினாயகப்‌ 


பிள்‌ . .. 


. லைகொண்டு எல்லாந்‌ தருவான்‌ சந்தி சிறுகாலைக்கும்‌ உச்சிசந்திக்கும்‌ 


நடுசெல்வதாகக்‌ குடுத்தோம்‌ தென்னக . . பணம்‌ திருமேலாழியாண்ட 
நாயனார்க்கு இத்தேவனும்‌ ஊராயிசைந்த ஊரோமு . .. 


௨ க்கும்‌ யூராயிசைந்த ஊரோமும்‌ எங்கள்‌ நாயனார்‌ தி... 
. பெருவழிக்கு வடக்கும்‌ மேற்பாற்கெல்லை 


தும்‌ வெட்டிக்‌ குடுத்த படியாவது கடமை 


. எங்கள்‌ . . சந்தியாதீபம்‌ நாலும்‌ உட்பட 
தார்‌ ரக்ஷை, 
. ஸவட£ ௩வது. . , எதிராமாண்டு .. . 


. தவசேகரன்‌ திருப்பணிப்‌ புறமாக தாங்கள்‌ பற்‌ ... 


. புகுமேக்கு . . . தென்பாற்கெல்லைக்கு . . . , 


 காகுடி , . . றைக்கும்‌ யிர. , , . கைக்கு... . 


ர்‌ 


112 


த. நர, அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ ஏண்‌ : 68 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ன 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 18-ஆம்‌ 
தூற்றாண்டு 

ப்‌ ப்பத்‌ இந்தியக்‌ கல்வெட்டு | _ 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

கால்‌ ப ஊர்க்‌ கல்வெட்டு 1 6 

மன்னன்‌ _— எண்‌ | 

இடம்‌ : அருவிமலை சிவன்‌ கோயிலுக்குச்‌ செல்லும்‌ பாறையில்‌ வெட்டப்பட்டுள்ள படிகளின்‌ 
அருகில்‌ உள்ளது. ்‌ 

குறிப்புரை: கண்டக நாடாழ்வான்‌  ஆலாலசுந்தரப்பெருமாள்‌ மலையேறிச்‌ செல்ல 15 
படிக்கட்டுகள்‌ அமைத்ததைக்‌ குறிக்கிறது. 

கல்வெட்டு : 


1. அணிஞ்சான்‌ பெருமா 

2. ளாள கண்டக நாடாழ்வ 
டான்‌ ஆன ஆலால சுந்‌ 
4, தர பெருமாள்‌ வெட்டு 


5. வித்த படி பதின்ஐஞ்சு 


113 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 69/2003 
மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 5 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு ; கி.பி 14-ஆம்‌ 
. 5 நூற்றாண்டு 
ஊர்‌ : தருக்காக்குடி இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை j a 
எத்தகு தமிழ்‌ முன்‌ பதிப்பு : : ன, 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ : சடையவர்மன்‌ பராக்கிரமன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 1 
எண 
J 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ கருவறை வடபுற அதிட்டானம்‌. 
குறிப்புரை : திருக்காய்க்குடி. திருக்கோடீசுவரமுடையார்‌ கோயிலில்‌ ஐப்பசித்‌ திங்களில்‌ திருவமுது 
செய்வதற்காக பல ஊரார்‌ சேர்ந்து இறையிலி நிலம்‌ ட்ட இக்கல்வெட்டு 
கூறுகிறது. 
கல்வெட்டு : 
Ls 


2 


ஸ்ரீகோச்சடைய பன்மரான அி,வ*வனச்சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீபராக்க,ம 
பாண்டிய தேவற்கு யாண்டு ௫வது பங்குனி மீ” சுரபி நாட்டு நாட்டவரு 


௨ம்‌ திருக்காக்குடி ஊரவரும்‌ சூழுமரைசர்‌ கண்டன்‌ ஊரவரும்‌ மேன்மலை 


வீரகண்டன்‌ 


ஊர வரும்‌ அறுநூற்றுவனேரி 
எங்களில்‌ அமைந்த 


ஊர வரும்‌ ஊர வரும்‌ 


ப்படி அழகிய நாடாழ்வான்‌ பொன்நாயினானுக்கு நாங்கள்‌ இறையிலி 


யாகப்‌ பிடிபாடு பண்ணிக்குடுத்த பரிசாவது முன்னாள்‌ பிள்ளை பல்லவ 
ராயர்‌ நாளில்‌ பொன்னின்‌ பிள்ளை அளவிலும்‌ இவனுக்கு நாங்‌. . . 


யும்‌ [புறண்டாடி] வயலிலே இவன்‌ சேர இறையிலும்‌ குடுத்த நிலம்‌ 


காணி இன்ன பிடிபாடு 
சந்திராதித்தவரை செம்பிலும்‌ கல்லிலும்‌ வெட்டிக்‌ கொ .. 


காணியும்‌ பண்ணிக்‌ குடுத்தபடிக்கு 


114 


10. 


11. 


 லத்து நாட்டார்‌ யிறையிலியாகப்‌ பிடிபாடு பண்ணிக்‌ குடுத்தோம்‌' 


இப்படி அழகிய நாடாழ்வான்‌ பொன்நாயனுக்கு இத்திலத்துக்குத்‌. 
திருக்கோயில்‌ நாயனார்‌ திருக்கோடிறரமுடைய .. .. 


. க்காராண்மையாகவும்‌ . . . கடமைக்கு இவன்‌ வச்ச. . . .. . வறட்‌ சாவி: 


நிக்கி நின்ற நிலத்துக்கு அற்பசி விஷுக்கு கலநெல்‌ . குடுத்து அமுது ' 
செய்விப்பானாகவும்‌ இப்படிக்கு சுரபி நா .. 


ஊரவளும்‌ சூளும்‌அரசர்கண்டன்‌ ஊரவரும்‌ இவ்வனைவோரும்‌ 


இப்படிக்கு த 


. படிக்கு தருக்காகுடி கணக்கன்‌. ௮ ..ன்‌ எழுத்து இளங்கோதரையன்‌ ' 


எழுத்து மங்கலதேவ நாடாழ்வார்‌ தற்குறிக்கு வீரம்மழகியன்‌ எழுத்து ! 
வேள்குல சிங்கவரையன்‌ தற்குறிக்கு மயிலேறும்‌ பெ[ரு] 


மாள்‌ . . . தேவபட்டன்‌ எழுத்து அமர .. ழகிய பேரையன்‌ தற்குறிக்கு ! 


வடமுத்தரையன்‌ எழுத்து இப்படிக்கு வீரப்புலி தற்குறிக்கு தென்னவ | 
ராயன்‌ தற்குறிக்கு மழிமாண்டான்‌ எழுத்து குலசேகர ! 


த்தென்னவ . . . தற்குறிக்கு மயிலேறும்‌ பெருமாளான மாதவபட்டன்‌ ' 
எழுத்து இப்படிக்கு கெ. க. வேளார்‌ . . . தற்குறிக்கு . . . டையான்‌ 


எழுத்து இப்படிக்கு இலாத . . . ராயன்‌ எழுத்து புகலிடங்‌ குடுத்த 
நாடாழ்வா . 


ன்‌ தற்குறி மாட்டெ ... நாடாழ்வான்‌ எழுத்து பஞ்சவராயன்‌ எழுத்து 
. . எழுத்து கோனாட்டு வேளான்‌ எழுத்து 


115 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 70 / 2003 


மாவட்டம்‌ : மதுரை அட்சி ஆண்டு ப 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 14-ஆம்‌ 
ஊர்‌ : தருக்காக்குடி ம்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு | = 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு: த்‌ 
அரசு : பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ய 
மன்னன்‌ : சடையவர்மன்‌ பராக்கிரமன்‌. எ ர்‌ 2 
இடம்‌ ; சிவன்‌ கோயில்‌ கருவறை மேற்குப்புற அதிட்டானம்‌. 
குறிப்புரை : சுரநாட்டுத்‌ திருக்காய்க்குடி திருக்கோடீசுரமுடைய நாயனார்க்குத்‌ திருநாமத்துக்‌ 
காணியாக அளிக்கப்பட்ட நிலம்‌, அதன்‌ எல்லைகள்‌ கூறப்பட்டுள்ளன. 
கல்வெட்டு : 
1. ஷீஹிஸ்ரீ கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீபராக்கிரம 


3. 


4, 


பாண்டிய தேவற்கு டுவது மகரநாயற்று வலஃக்ஷத்து பஞ்சமியும்‌ 
புதன்‌ கிழமையும்‌ பெற்ற உத்திரட்டாதி நாள்‌ சுரபி 


 னாட்டுத்‌ திருக்காய்குடி[யில்‌] உடையார்‌ திருக்கோடீசுவரமுடைய 


நாயனார்‌ ஆதிசண்டேசுவர தேவர்‌ அருளால்‌ திருதாச மயேசுர 
கண்காணி செய்வார்களும்‌ தேவகன்மிகள்‌ கோயிற்கணக்கு இவ்வ[னை] 
வோரும்‌ முத்தூற்று 

க்கூற்றத்து திருப்புனவாசல்‌ கைக்கோளரில்‌ மறக்க ஒண்ணாதான்‌ 


திருப்புனவாசலுடையாற்கு ஆதிசண்டேசுவரர்‌ அருளால்‌ குளவிலைப்‌ 
பிரமாணம்‌ பண்ணிக்‌ குடுத்த பரிசாவது முன்னா 


ள்‌ சுரனாட்டு நாட்டவர்‌ பக்கல்‌ நாட்டா .. பாதியாக விலை கொண்டு 


இன்னாயனாற்கு திருநாமத்துக்காணியான கன்‌ .... விற்பதாக 


116 


10. 


11. 


இசைந்து விற்றுக்‌ குடுத்ததுக்கு பெருநான்கெல்லை ஆவது கீழ்பாற்‌ 
கெல்லை நெடுமை 


டக்குளத்து நீர்கோவையில்‌ மேற்குன்றத்து திருச்சூலத்தாபனத்துக்கு 
மேற்கும்‌ தென்பாற்கெல்லை நாட்டார்மங்கலத்து வடபாற்கெல்லை 

சூலத்தாபனத்துக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை , . . மாக 
குளத்துக்கு . . . 


. லையில்‌ னிற்கிற திருச்சூலத்தாபனத்துக்கு கிழக்கும்‌ கோடனேரி 


எல்லைக்கு தெற்கும்‌ வடபாற்கெல்லை , . . தக்காய்க்குடி .. ஈறைக்கும்‌ 
சூலதாபனத்துக்குத்‌ தெற்கு ஆக .. . 


. இசைந்த பெருநான்கெல்லைக்குட்பட்ட நத்தமும்‌ நத்தப்‌ பாழும்‌ குளப்‌ 


பரப்பும்‌ காலுங்‌ காலரைணை]யுங்‌ கீணோக்கிய கிணறும்‌ மேனோக்கிய 
மரமும்‌ .... தேன்படு பொதும்பும்‌ உடும்போடியும்‌ ஆமை தவழியும்‌ ஸ 


. மற்று யெப்பேற்பட்ட சமத்தப்‌ பிரா[ப்‌] திகளும்‌ விற்று விலைப்‌ பிரமாணம்‌ 


பண்ணிக்‌ குடுத்தோம்‌ இப்படிக்கு சண்டேசுர தேவர்‌ அருளால்‌ விற்றுக்‌ 
குடுத்த குளத்துக்கு எம்மிலிசைந்த விலை நிச்செயித்த அன்றாடு 
நற்காசு வராகன்‌ பண ... 


ம்‌ ௨௰௫ இப்பணம்‌ .. த்தவராகளும்‌ தேவகன்மி கோயிற்கணக்கரோம்‌ 
இப்படி நாங்கள்‌ ஆதிசண்டேச தேவர்‌ அருளால்‌ விற்றுக்குடுத்த பெரு 
நான்கெல்லைக்குள்பட்ட இக்‌ .. க்கு கடமை விநியோகம்‌ அந்தராயம்‌ 
பொ 


ன்வரி பஞ்சுபீலி சந்து விக்கிரகப்‌ பேறும்‌ மற்று எப்பேர்ப்பட்ட கடமை 
வினியோகங்களும்‌ ஆண்டொன்றுக்கு வாடாக்‌ கடமையாக இறுப்பதான 
இராசி[க] முனைப்பணம்‌ [ஈ௯௰] இப்பணநூற்றருபதும்‌ 


தேவதானம்‌ கோயிற்கணக்கர்‌ கைய்யால்‌ தரவு கொள்ளக்கடவராகவும்‌ 


இப்படி சம்மதித்து ஆதிசண்டே ..... ற்றுக்குடுத்த பெருநான்‌ 
கெல்லைக்குஇளகப்பட்ட இந்தான . . 


த. நர, ௮, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 71 / 2003 


மாவட்டம்‌ ! மதுரை ஆட்சி ஆண்டு; வு 
கவ தரு மேலூர்‌ வரலாற்று ஆண்டு : சக ஆண்டு 152[7] 
கி.பி, 16-ஆம்‌ 

ஊர்‌ : தருக்காக்குடி நூற்றாண்டு 
மொழி : தமிழ்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
எழுத்து: தமிழ்‌ ல த படவயு 
அரசு : விசயநகரர்‌ முன்‌ பதிப்பு : ல்‌ 

அட அகல 1 
மன்னன்‌ : சதாசிவராயர்‌ க கல்ட்‌ ட 3 

] 

இடம்‌ : சிவன்‌ கோயில்‌ தென்பற அதிட்டானம்‌. 


குறிப்புரை : துவராபதி நாட்டுத்‌ தருகாய்குடி சிவன்‌ கோயிலில்‌ திருக்காமக்கோட்ட திருமா 


மடந்தை நாச்சியாரை அருவியூர்‌ நகரத்துப்‌ பூண்டி உடையான்‌ எழுந்தருளுவித்த 
செய்தியைத்‌ தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 


1. சுவத்தி ப்ரீ மண்மகாமண்டலீசுவரன்‌ சதாசிவராயற்கு செல்லா நின்ற 


சகாத்தடி ௯௫௱௨[௪ ] மேல்‌ செல்லாநின்ற விசுவாஷு ஷ்‌ சித்திரை மீ£௩௨ 
இல்‌ லி 


2, [ங்/கைய நாயக்கர்‌ தன்மமாக மகா பூசை கொண்டருளிய துவராபதி 


நாட்டு திருக்காய்குடி நாயனார்‌ திருக்கோடிசுரமுடையார்‌ நாயனா 
ருடைய நாச்சியா 


3. ர்‌ திருகாமக்கோட்ட திருமாமடந்தைஆரை எழுந்தருளப்‌ பண்ணிவித்தது 


அருவியூர்‌ நகரத்து பூண்டி உடையான்‌ [சிவப] . , . பாண்டியப்‌ 


பெருமாள்‌ தன்மம்‌ 


4, சுபமத்து. 


118 


த, நர, அ, தெரல்லியல்‌ துறை “தொடர்‌ எண்‌ : 72/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 14-ஆம்‌ 

ஊர்‌ : தருக்காக்குடி தவப்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு | 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 ஞ்ச 

எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 

ல்‌ ஊர்க்‌ கல்வெட்டு | i 
எண்‌ J 

இடம்‌ : சிவன்‌ கோயில்‌, தென்புற அதிட்டானம்‌, 


குறிப்புரை : சிவன்‌ கோயில்‌ இறைவனுக்கு இறையிலியாக நிலமளித்ததையும்‌ அதன்‌ எல்லை 
களையும்‌ தெரிவிக்கிறது. இரண்டு துண்டுகளாக உள்ளது. 
கல்வெட்டு : 
அ. 1. . .யனார்‌ கோயில்‌ மாமடி செய்விக்கிற பா ... 
2. கு கீழ][ல்[லை நெடுமடை நீர்கோவைக்கு கைமன்ற பழவா . . . 
3. இவயல்‌ வடவரபுக்கு வடக்கு வடவெல்லை ஒடுங்‌ , . . . 
4. . ஈதிசன்‌ ப[ற்‌]றுக்கு வடக்கும்‌ மேல்‌ எல்லை நாவல்‌ குளத்தில்‌ வர . .. 
ஆ, 1. . . க்கு கிழக்கும்‌ வடவெல்லை ஒடுங்காக்குடி குளத்து நீர்கோவைக்கு 
தெற்க்கு ஆக யிசைந்த பெருநான்கெல்லைக்குட்பட்ட நத்தமு ஏம்பல்‌ 


களும்‌ குளமும்‌ நஞ்சை புஞ்சை யிதில்‌ கடமை யந்தராய . . எ[ழு]த்தர்‌ 
எழு... 


119 


2, 


3. 


4, 


ஞ்சுபீலி பொன்வரி தறிக்கடமை அச்சுவரி செக்குவரி முகபார்வை சந்து 
விக்கிரம [சிறை அச்சு தண்டல்‌ [ஆரியம்‌] காரியாராஆச்சியும்‌ வரியில்‌ 
கழித்து . . . இசைந்து 


மன்றத்துக்‌ குகை மனாத்து பற்றான்‌ஆன பூவாண்டார்‌ ஏம்பலுக்கும்‌ 
கழித்து அச்சு கய யிவச்சு ஒன்றேகாலும்‌ மற்றும்‌ ஏப்பேற்‌ பட்டனவும்‌ 
முதல்‌ சிலவாகச்‌ சந்திராதித்த வரை . .. 

யில்‌ கழித்துக்‌ குடுத்தோம்‌ இப்படிக்கு க[ல்‌]லிலும்‌ செம்பிலும்‌ வெட்டி 
வித்து திருச்சூலதாபனமும்‌ பண்ணிக்‌ குடுக்கவும்‌ பா[ர்‌]க்க யிவை 
சுந்தரபாண்டிய அதியமானார்‌ எழுத்து . . இது கோயி[ல்‌]தா 


. தம . ன்றத்‌ . . வீரசோழனான . , லாப்‌ பண்ணை செய்வானுக்குக்‌ 


குடுத்தேன்‌ 


120 


த. நா. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 73 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ன 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு: கி,பி, 14-ஆம்‌ 
நூற்றாண்டு 
ஊர்‌ : தருக்காக்குடி 
இந்தியக்‌ கல்வெட்டு | _ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 
எழுத்து! தமிழ்‌ முன்‌ பதிப்பு : ந 
அரசு £ — 
ஊர்க்‌ கல்வெட்டு 5 
மன்னன்‌ : — எண்‌ ] 
இடம்‌ : சிவன்‌ கோயிலில்‌ பைரவர்‌ சந்நிதிக்கு அருகில்‌ நடப்பட்டுள்ள தனிக்கல்‌. 
குறிப்புரை : வேழகுல நாரை அண்டரல்லூரான தருக்காக்குடி , கடகமறுக்கிகள்‌ என்ற படையினர்‌: 
பாதுகாப்பில்‌ விடப்பட்டுள்ளதாகத்‌ தெரிகிறது. கமுகைச்சி என்பது பாக்கினைக்‌ 
குறிக்கும்‌. ஏதோ ஒரு வகையில்‌ ஒப்பந்தம்‌ எனத்தெரிகிறது. ட மா 
கல்லின்‌ மேல்‌ பகுதி வளைவாகச்‌ செதுக்கப்பட்டு கல்வெட்டின்‌ கீழ்‌ பூர்ண கும்பமு 
அதன்‌ இருபுறம்‌ குத்துவிளக்குகளும்‌ கோட்டுருவமாகப்‌ i 
பின்புறம்‌ சூலம்‌ கோட்டுருவமாகப்‌ பொறிக்கப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 


1. வஹிஸ்ரீ இவ்வகம்‌ வே 

2. ழ குலநாரை அண்டநல்‌ 

8. லூ[ர்‌*] ஆன தறுக்காகுடியி 
4. ல்‌ கடகமறுக்கிகள்‌ 


5. பால்‌ கமுகைச்சி 


121 


த. நா. ௮, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 74/2003 


மாவட்டம்‌: மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.மு. 2-ஆம்‌ 
ஊர்‌ : கருங்காலக்குடி நூற்றாண்டு 
்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

மொழி: தமிழ்‌ அண்டு அறிக்கை | ப 
எழுத்து:  தமிழ்‌-பிராமி முன்‌ பதிப்பு : — 
வசு து 
மன்னன்‌ : ட. ஊர்க்‌ கல்வெட்டு 1. 1 

எண்‌ 

J 

இடம்‌ : சமணர்‌ குகைத்தள முகப்பில்‌ உள்ளது. 


குறிப்புரை : எழை ஊர்‌ ஆரிதன்‌ செய்வித்த பள்ளியைக்‌ குறிக்கிறது. 


கல்வெட்டு : 


1. எழை ஊர்‌ அரிதின்‌ பளிய்‌ .. 


122 


த. நர, 


அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ ; 75 | 2003 


ஆட்சி ஆண்டு : ம 
வரலாற்று ஆண்டு ! கி.பி. 9-10-ஆம்‌ 
்‌ நூற்றாண்டு! 
இந்தியக்‌ கல்வெட்டு 
பண்டு பக்தை r 569 1911 


முன்‌ பதிப்பு : — 
ஊர்க்‌ கல்வெட்டு | ம்‌ 


சமணர்‌ குகைத்தளத்துக்கு மேலேயுள்ள இயற்கையான குகைத்தளத்தின்‌ பாறையின்‌: 


பாண்டியனுக்கு 


அமைச்சனாய்‌ பள்ளத்தரையன்‌' 


இருந்த 


கண்ணடை (நீர்நிலை) அமைத்தது குறித்து தெரிவிக்கும்‌ பாடல்‌ வடிவில்‌ உள்ள 


மாவட்டம்‌ : மதுரை 
வட்டம்‌ மேலூர்‌ 
ஊர்‌ கருங்காலக்குடி 
மொழி: தமிழ்‌ 
எழுத்து: வட்டெழுத்து 
அரசு ர 
மன்னன்‌ _— 
இடம்‌ 
அடியில்‌ உள்ளது. 
குறிப்புரை : இக்கல்வெட்டு 
கல்வெட்டு. 
கல்வெட்டு 
1. . ங்கோல்‌ தெ 
2. 
9. 
4 
5. 


மே குணத்து [சோதி] வீமன்‌ மீனவன்‌ முணிக்குமற்றவர்க்காய்‌ 
சே குணத்து விரிந்து கண்ணடை வெட்டி திருப்பொதியில்‌ 
மே குணத்து பொதிகம்‌ நின்றது வேயும்‌ வண்டு மனயு 


மே குணத்து விறலரும்‌ பள்ளத்தரையன்‌ மீனவர்க்கேய்‌ 


123 


த. நர, அ, தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 76 / 2003 


மாவட்டம்‌ s மதுரை ஆட்சி ஆண்டு : ப 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.10-ஆம்‌ 
A 2 ள்‌ நூற்றாண்டு 
மத்த லை இந்தியக்‌ கல்வெட்டு | 162/1911 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: வட்டெழுத்து முன்‌ பதிப்பு : க 
ப்பம்‌ க ஊர்க்‌ கல்வெட்டு 3 
மன்னன்‌ _— what g 
இடம்‌ : சமணர்‌ குகைத்தளத்துப்‌ பாறையில்‌ உள்ள தீர்த்தங்கரர்‌ சிற்பத்திற்கு கீழே உள்ளது. 


குறிப்புரை: அச்சணந்தி என்பவரால்‌ இச்சிற்பம்‌ செதுக்கப்பட்டதைத்‌ தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 


1. ஸ்ரீ அச்சணந்தி செய்‌ 


2. வித்த திருமேனி 


124 


த. நா. ௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : மதுரை 


தொடர்‌ எண்‌ : 77 / 2003 


ஆட்சி ஆண்டு : _— 


வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-183-ஆம்‌ 

்‌ ்‌ ட நாற்றாண்டு 
ஊர : கருங்காலக்குடி 5 க 

இந்தியக்‌ கல்வெட்டு 159/1973-74 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு ; — 

ரசு — 
ட ஊர்க்‌ கல்வெட்டு \ i 
மன்னன்‌ : — எ i 
இடம்‌ : வல்லிப்பாறையின்‌ வடசரிவில்‌ உள்ளது. 


குறிப்புரை : மாடக்குடையான்‌ சீராளன்‌ திருவெண்காடுடையான்‌ என்ற ஊர்க்கணக்கன்‌ இவ்வூர்‌ 
குளத்தின்‌ கலிங்கை அமைத்ததைத்‌ தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 
1. ஸ்ரீ இவ்வூரில்‌ க[லி] 
2. ங்கு செய்கிற பொ 
3. து கணக்கு மாடக்‌ 
4. குடையான்‌ சீராளந்‌ 
9. திருவெண்காடு 


6. டையான்‌.|।- 


125 


த. நர. அ, தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 78 / 2003 


மாவட்டம்‌ :; மதுரை ்‌ ஆட்சி ஆண்டு : ர த்‌ 

தட்டும்‌. ம்ம்‌ ப்‌ வரலாற்று ஆண்டு: கி.பி, 1718 (சகம்‌ 1695) 
கி.பி, 1722 (சகம்‌ 1644) 

ஊர்‌ : கருங்காலக்குடி இந்தியக்‌ கல்வெட்டு | ன 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 

எழுத்து: தமிழ்‌ ப்ப அதல்‌ 

அரசு = ஊர்க்‌ கல்வெட்டு 1 5 

மன்னன்‌ — எண்‌ J 

இடம்‌ : வயலிப்பாறை தென்‌ சரிவில்‌ உள்ளது. 


குறிப்புரை : இப்பகுதியில்‌ மாமரம்‌ ஈட்டு கிணறு வெட்டியதைத்‌ தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 
1. சாலிவாக சகா 
2. த்தம்‌ ச ௬ர ௩௰௫ 
மேல்‌ செல்லா நின்ற விஜய 
ற்‌ வைகாசி மீ ௰ட ஆம்‌ தேதி 
. எட்டு மாமரமும்‌ கிணறும்‌ 


. மேல்படி மாமரத்துக்‌ 


க்கு மேல்‌ [சகாத்தம்‌ சசுரச௰ச] 


9 
4 
5 
6 
7. கண்ணு வைச்சது சார்வரி வருஷத்து 
8 
9. சுப கிருது வருடம்‌ பங்குனி 

0 


10. மாதம்‌ செய்தது 


[26 


த. நர. ௮, தெரல்லியல்‌ தூறை தொடர்‌ எண்‌ : 79/ 2003 


மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு 1 அன்‌ 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 18-ஆம்‌ 

ஊர்‌ ; கருங்காலக்குடி நூற்றாண்டு 
இகல்‌ கட்கு 1 157/1973-74 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 

எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : இ 

அரசு; ஊர்க்‌ கல்வெட்டு 6 

மன்னன்‌ : ௨ எண்‌ 

இடம்‌ : வயலிப்பாறை அருகிலுள்ள கண்மாய்‌ மடைக்‌ கல்‌. 


குறிப்புரை : வத்தலை ராவுத்தர்‌ என்பவர்‌ அமைத்த மடை பற்றிக்‌ கூறுகிறது. 


கல்வெட்டு : 
1, வத்தலை 
2. ராவுத்தர்‌ 
3. தந்த ம 


4,டை 


127 


தொடர்‌ எண்‌ : 80 / 2003 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1604 
(௪க ஆண்டு 1526) 
ல. வவட இந்தியக்‌ கல்வெட்டு | 156197974 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: தமிழ்‌ மூன்‌ பதிப்பு : ட்‌ 
லு கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ட்‌ 
மன்னன்‌ : இலிங்கய நாயக்கர்‌ எண்‌ J 
இடம்‌ : உப்புச்‌ சுனையின்‌ மேல்பக்க சரிவில்‌ உள்ளது. 
குறிப்புரை : இலிங்கய நாயக்கரின்‌ அதிகாரி சிங்கார ராவுத்தர்‌ கள்ளர்களைப்‌ பிடித்ததைக்‌ 
கூறுகிறது. 
கல்வெட்டு ; 
1. சகாப்தம்‌ ௬௫௱உ௰௬ 
2, க்கு மேல்‌ செல்லா நின்ற 
3. குரோதி ஹு காத்திகை மீ” 
4, ௩௨ லிங்கைய நாயக்‌ . 
9. கரையன்‌ காரியத்‌ 
6. துக்கு கடவாரான சி 
7. ங்கார ராவுத்தர்‌ வத்தலை ரா 
8. வுத்தர்‌ கள்ளரைப்‌ பிடித்து 
9... யுங்‌ கள்ளன்‌ 
10. . 
11 


128 


கு. நர. அ. 


மாவட்டம்‌ ! 
வட்டம்‌ : 
ஊர்‌ : 
மொழி: 
எழுத்து : 
அரசு : 


மன்னன்‌ : 


இடம்‌ : 


குறிப்புரை : 


கல்வெட்டு: 


1. கும்மிதிலே காத்த , . . 


தொல்லியல்‌ துறை 


மதுரை 
மேலூர்‌ 
கருங்காலக்குடி 
தமிழ்‌ 

தமிழ்‌ 

நாயக்கர்‌ 


இலிங்கம நாயக்கர்‌ 


தொடர்‌ எண்‌ : 81 / 2003 


ஆட்சி ஆண்டு : 
வரலாற்று ஆண்டு 1 


இத்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
முன்‌ பதிப்பு: 
ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


உப்புச்சுனைப்‌ பாறையின்‌ மேல்ச்சரிவில்‌ உள்ளது. 


கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. 


நாயக்கரின்‌ பெயர்‌ இடம்‌ பெற்றுள்ளது. 


2, லிங்கைய நாயக்கன்‌ 


3. [காரியத்‌]துக்குக்‌ கடவ 


4-7... 
8. .. விட்டுகொன்‌ 


129 


கி.பி. 17-ஆம்‌ 


நூற்றாண்டு 


| 156 / 1973-74 


| 
ட 
J 


நத்தம்‌ பகுதியின்‌ பாளையக்காரரான இலிங்கம , 


த. நர. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 82/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ ்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
ஊர்‌ : கருங்காலக்குடி அதம 
இத்திபக்‌ கல்வெட்டு 155 / 1973-74 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு: — 
அரசு _ 
நல்கல்‌ ம ஊர்க்‌ கல்வெட்டு ட ன்‌ 
எண 
J 
இடம்‌ : உப்புச்சுனைப்‌ பாறையின்‌ கீழ்ப்புறம்‌ உள்ளது. 
குறிப்புரை : பிரான்மலை கம்மாளன்‌ சுந்தரபாண்டிய பிச்சாசாரி சேந்தன்‌ கணக்கப்பிள்ளை 
அழக்கப்பன்‌ என்பவர்‌ உப்புச்சுனையைச்‌ சுற்றிப்‌ பாதுகாப்புச்‌ சுவர்‌ கட்டியதைக்‌. 


கூறுகிறது. 


கல்வெட்டு : 
1. லவ ஸி புரட்டாசி 
மாதம்‌ ௯ . . . இந்த 


. உப்புச்சுனை கல்லு 


௨ கட்டிவிச்சது பிரான்‌ 


 ளரில்‌ சுந்தரபாண்‌ 


2 

3 

4 

9. மலையில்க்‌ கண்மா 
6 

7. டியப்‌ பிச்சாசாரி 

8 


. சேந்தன்‌ கணக்க 


9. ப்‌ பிள்ளை அழகப்ப[ன்‌] 


130 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 83/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ஆடம்‌ 
வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 19-ஆம்‌ 
ஊர்‌ : கருங்காலக்குடி : இந்தியக்‌ கல்வெட்டு ) 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] வ்‌ 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ர. 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ : சுந்தரபாண்டியன்‌ ஊர்க்‌ கல்வெட்டு i 10 
எண்‌ J 
இடம்‌ : முத்தாலம்மன்‌ கோயில்‌ கிழக்கு, வடக்கு குமுதப்பட்டிகளில்‌ உள்ளன. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. கோயில்‌ நிலம்‌ பற்றிக்‌ கூறுகின்றன. 


கல்வெட்டு : 


அ. 1. இவ்வூர்‌ திருமேற்கோ . 
2. க தந்தோம்‌ இப்படிக்கு . . . 
3.க சேரிப்பற்றுக்கு மேற்கும்‌ 
4, டவெல்லை வல்லம்‌ , . 


கும்‌ குற்றெள்ளு வரகுக்கு [இ]க்‌ கடமை .. 

. டிபாழளவு நீக்கிய பயிர்‌ நின்ற நிலத்துக்கு .. 
க்குச்‌ சந்திராதித்தவற்ச்‌ செல்வதாக ஸ்ரீகோ .. . 
. க்கரவர்த்திகள்‌ ஸ்ரீசுந்தரபாண்டியதே .. 

. தல வாயிற்‌ கழித்து தந்தோம்‌ இப்படி . . . 

. நான்கெல்லையிலும்‌ திருவாழிக்கல்லு .. 


1 த மூ. ஞா து 


இ. 1 ட்டக்‌ கொள்ள .. 
2. தென்‌[ன]வ தரை 
3. ராயர்‌ எழுத்து .. 


131 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 84/2003 


மாவட்டம்‌ : மதுரை . ஆட்சி ஆண்டு : —. 
வட்டம்‌ 7 மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, -18ஆம்‌ 
ஊர்‌ : கருங்காலக்குடி ( ்‌ நூற்றாண்டு 
த த்‌ இந்தியக்‌ கல்வெட்டு ்‌ _ 
மொழி : தமிழ்‌ ண்டு அறிக்‌ ர 154 / 1973-74 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : பாண்டியர்‌ 
மன்னன்‌ : மாறவர்மன்‌ சுந்தரபாண்டி யன்‌ ஊர்க்‌ கல்வெட்டு |. 11 
எண J 
இடம்‌ : முத்தாலம்மன்‌ கோயில்‌ வடபுற அதிட்டானம்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. அழகப்பெருமாள்‌ விண்ணகர ஆழ்வார்‌ கோயிலுக்கு அளித்த 
நிலக்கொடைபற்றிய செய்தியும்‌, சாட்சிகள்‌ கையொப்பமும்‌ உள்ளன. 
கல்வெட்டு : 
அ. 1, வனசக்கரவத்திகள்‌ எம்மண்டலமும்‌ கொண்டருளி . 
2. கோயில்‌ நாயனார்‌ அழகப்பெருமாள்‌ விண்ணகர எம்பெரு .. 
3. ஆதன்‌ஏரி முன்‌ குளத்தில்‌ பருவரம்புக்கும்‌ கம்ப ஊற்கு .. 
4. சீராம லட்டன்‌ காணிய்‌ இவூர்‌ நாயனார்‌ கோலங்கரிய .. 
5. களும்‌ நத்தமும்‌ நத்தப்‌ பாடுகளும்‌ கீழ்‌ நோ .. .. 
6. த்து இற்றை நாள்‌ உஃகபூவூமாகக்‌ குடுத்தமைக்‌ , . . 
ஆ, 1. ம்பு மற்றும்‌ ஏப்பேற்பட்ட .. 
2. வை சிறையச்சுத்‌ தண்‌ . 
3. ம்‌ காரிய[வார]ாட்சிப்பெ . . . 
4. மும்‌ புன்செய்‌ கருஞ்செய்‌ . . . 


132 


. படுபள்ளமுந்‌ தேன்படு பொது. .. 
. வினியோகம்‌ கீற்றுவரி முகாம்பா . . 


.த்திகைச்‌ பச்சை வன்பா . . , 


ட்டுக்‌ காலால்‌ நெல்லு ஐங்க 


னிய ஸ்ரீ சுந்தர . , 


பெருமானுக்கு 


குப்‌ போகிற பெ... 
க்கு கடமை ப... 


, க்கன்‌ குண்‌... 


- நான்கெ. .. 


பஞ்சு பி, .. 


வாணிய .. 
ங்கிக்கொ . 


ம்‌ கழித்து வரியிலும்‌ இறுத்துக்‌ குடுத்தமைக்கு சஹராதித்த . .. . 
த்தச்‌ சொக்கனார்க்கு சூழுமரைசர்கண்டன்‌ ஊராய்‌ 

சீ வல்லபட்டன்‌ எழுத்து இப்படிக்கு கொந்தலராயன்‌ எழுத்து . . . 
கரவத்திகள்‌ எழுத்து இப்படிக்கு செழியதரயர்‌ தற்குறி. .. 
வரத்தாழ்வான்‌ எழுத்து இப்படிக்கு அங்கராயர்‌ ... 


. அறிவேன்‌ உத்தரமந்திரிகள்‌ எழுத்து 


. மைஅந்தராயம்‌ இந்த மாணிக்கச்‌ சொக்கனார்க்குக்‌ காராண்மையும்‌ 


ஆக எங்களூர்‌ புரவிலும்‌ . . . 


ட்டிக்‌ கொள்வாராக ௨-சாணம்‌ பண்ணிக்‌ குடுத்தோம்‌ இராசாண்டான்‌ 
பாண்‌ . .. 


௨ த்து வாப்புலி நாடாழ்வார்‌ தற்குறிக்கு தற்குறி மாட்டெறிந்தேனும்‌ 


இப்படி அறிவேன்‌ 


133 


யப்‌ போயர்‌ தற்குறிக்கு தற்குறி மாட்டெறிந்தேன்‌ பாவையூருடையான்‌ 


 ள்னை எழுத்து இப்படிக்கு வழிதிபன்மர்‌ தற்குறி மாட்டெறிந்தேன்‌ 


குரவ * டக 


. எழுத்து இப்படி அறிவேன்‌ மாங்குடையான்‌ வணிகச்சக்கரவத்திகள்‌ 


எழுத்து. 


. பழமையும்‌ பெற்ற உத்திர . . . 
௨.௨... மேல்‌ பாற்குடிகாடு புதுக்‌ 


. குழி கல்லுக்குத்‌ தெற்கும்‌ . . 


. எப்பேற்பட்ட அஸ்‌ . , . 


பணி மற்றுபாற்கவும்‌ இப்படி இந்‌ .. . 


ஜே. ௬ பே. 89 4 


கெல்லைகளிலும்‌ நா . 


டிக்கு மங்கலாதேவன்‌ ,. . 
ராயன்‌ எழுத்து இப்படிக்கு: பிள்‌ . . 
. எழுத்து இப்படி அறிவேன்‌ . 


134 


த. நர. அ. தெரல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ ; 85/ 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌. மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ 
ர நூற்றாண்டு 
ஊர்‌ : கருங்காலக்குடி. இந்தியக்‌ கல்வெட்டு 1 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ முன்‌ அம்ப 
ம்க்‌ ன ஊர்க்‌ கல்வெட்டு 1 12 
மன்னன்‌ — எண்‌ ] 
இடம்‌ : முத்தாலம்மன்‌ கோயில்‌ வடபுற அதிட்டானம்‌. 


குறிப்புரை : அழகப்பெருமாள்‌ விண்ணகரத்திற்கு அளித்த நிலக்கொடை பற்றிக்‌ கூறும்‌ இரண்டு 


துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. 


கல்வெட்டு : 


அ. 


த அல்ப தல ல்ச்‌ 


- இறுக்கவும்‌ இப்ப . 
ட விக்கவும்‌ இப்படி . . 
ன திருபுவனச்ச . . 
வது ஆடி மாசமு 


ww NET 


. வெட்டிக்‌ கொள்‌... . 


அழகப்‌ பெருமாள்‌ விண்ண ... 

க்கு பெருநான்‌ கெல்லையி. , . 

. மாற்றுக்கு வடக்கும்‌ மேலெல்லை ... 
போகிற காலுக்குத்‌ தெற்கும்‌ ஆக. . 
. ப்பம்‌ நத்தமு நந்தப்பாடுந்தெ.. . 


135 


த. நா, ௮, தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : மதுரை 


தொடர்‌ எண்‌ : 86 / 2003 


ஆட்சி ஆண்டு : = 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
்‌ தல்ல ்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : கருங்காலக்குடி இந்தியக்‌ கல்வெட்டு 1 ன 
மொழி தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
வ்‌ = ஊர்க்‌ கல்வெட்டு } 13 
மன்னன்‌ ; - ண்‌ ] 
இடம்‌ : முத்தாலம்மன்‌ கோயில்‌ மேற்குப்புற அதிட்டானம்‌. 


குறிப்புரை : அழகப்பெருமாள்‌ விண்ணகரத்திற்கு அளிக்கப்பட்ட நிலம்‌ மற்றும்‌ அது தொடர்பான 


ஆவணத்தில்‌ கையொப்பம்‌ 
கல்வெட்டில்‌ உள்ளன. 


கல்வெட்டு : 


இட்டவர்கள்‌ பற்றிய செய்திகள்‌ இத்துண்டுக்‌ 


1. பணம்‌ இறுப்பாராகவும்‌ இப்படி இந்நாயனார்‌ அழகப்பெருமாள்‌ . . . 


2. கெல்லைகளிலும்‌ திருவாழிக்கல்லும்‌ நா... 


3. டிக்கு மங்கலாதேவப்‌ பல்லவதரையன்‌ தற்குறி. . 


ராயன்‌ எழுத்து இப்படிக்கு சுந்தரபாண்டிய நாடா . 


. எழுத்து இப்படி அறிவேன்‌: பட்டிணசுவாமிகள்‌ ... 


4 
9. த்து இப்படிக்கு பிள்ளையார்‌ எழுத்து இப்படிக்கு . . . 
6 
7 


௨ம்‌ மங்கலாதேவ நல்லூரான பிள்‌[ளை]பிறந்த சோழ. .. 


136 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 87 / 2003 


மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு 1 11 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு ; கி.பி, 18-ஆம்‌ 
ஊர்‌ கருங்காலக்குடி தீ ன்‌ \ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு 
மொழி: தமிழ்‌ அண்டு றில்‌ ்‌ 153/1973-74 
எழுத்து: தமிழ்‌ ப 7 
அரசு பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ன்‌ I 
மன்னன்‌ ; சுந்தரபாண்டியன்‌ எண்‌ | 
இடம்‌ : முத்தாலம்மன்‌ கோயில்‌ மேற்கு அதிட்டானம்‌. | 
குறிப்புரை : சூழூம்‌அரசர்கண்டன்‌ என்னும்‌ ஊரவையினர்‌ இக்கோயிலுக்கு விட்ட நிலம்‌, 
அதன்‌ எல்லைகள்‌ கூறப்பட்டுள்ளன. 
| 
| 
கல்வெட்டு : | 
1. தர பாண்டிய தேவற்கு யாண்டு மச வது மேஷ நாயற்று திருணா 
2. சூழும்‌ அரசர்‌ கண்டன்‌ ஊராய்‌ அமைந்த ஊரோம்‌ உ௨சுபூவஃமாக ... 
3. பெருவழிக்கும்‌ மேற்கும்‌ தென்பாற்கெல்லை கம்ப .. ஊர்‌ எல்லைக்கு 
வடக்கும்‌ 
4, யிபாத்து இருகல நெல்லு மட்டஇ . ஆன இல்லோடு ஏம்பல்‌ 
எல்லைக்கு 
5. களும்‌ மேனோக்கின மரங்களும்‌ .. . குளமும்‌ குளப்பகுப்பும்‌ காலு ... 
6. லைகளிலும்‌ திருவாழிக்கல்லும்‌ நாட்டி அடாரிதவத்‌ செல்வதாக 


137 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 88 / 2003 


$ மதுரை ஆட்சி ஆண்டு : — 


மாவட்டம்‌ 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
்‌ ்‌ நூற்றாண்டு 
ஊர்‌ கருங்காலக்குடி இந்தியக்‌ கல்வெட்டு ன 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
ரசு — 
A ஊர்க்‌ கல்வெட்டு ] 15 
மன்னன்‌ : — ப ர்‌ 
இடம்‌ : முத்தாலம்மன்‌ கோயில்‌ மேற்கு மற்றும்‌ தெற்கு அதிட்டானப்‌ பகுதிகள்‌. 
குறிப்புரை : நிலக்கொடை பற்றிய துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. 
கல்வெட்டு : 
அ. 1. விண்ணகர்‌ எம்பெருமானுக்கும்‌ , . 


. ட்டிக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ . . 

. இப்படிக்கு வஞ்சி மண்டலதரையர்‌ எழு... 

. வேளா எழுத்து இப்படிக்கு தேர்‌ பா. . 
..ன்னராயன்‌ எழுத்து இப்படிக்கு சாத்த . . 

௨ த்து இப்படி அறிவேன்‌ பிள்ளை உ[டை]யபிள்ளை . . 


. வதுச்‌ செல்வதாக நான்‌ . 


. ஊரோம்‌ இப்ப. . 


. து இப்படிக்கு சோழப்பே . . 
க்கு சிவலபட்டந்‌ எழு. . 

. ற்குறிக்கு சீபாதாழ்யான்‌ . . 
. இநாட்டு வை தெ ப ப்பத்‌ 


ருடையான்‌ பணி... 


138 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 89 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ட 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 18-ஆம்‌ 
2 நூற்றாண்டு 

ஊர்‌ : கருங்காலக்குடி 

இந்தியக்‌ கல்வெட்டு 1] _ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : த 
அரசு ! ணு 

ஊர்க்‌ கல்வெட்டு | ப்‌ 

மன்னன்‌ = எண்‌ J 
இடம்‌ : முத்தாலம்மன்‌ கோயில்‌ தெற்கு, கிழக்கு ஜகதிப்படை. | 


| 


| 


குறிப்புரை : சுரபி நாட்டு சூழம்‌அரசர்கண்டன்‌ ஆளப்பிறந்த சோழச்‌ சதுர்வேதிமங்கலத்து 
நிலங்கள்‌ கொடையளிக்கப்பட்டு அதன்‌ எல்லைகள்‌ கூறப்பட்டுள்ளன. துண்டுக்‌ 
கல்வெட்டுகள்‌. 
கல்வெட்டு : 
அ 1. தியும்‌ வவூயக்ஷத்து நாயற்று 
2. நாமத்துக்காணி இறையிலி குடுத்த எங்களூர்‌ 
8. மேல்பாற்கெல்லை இந்நாட்டு வ,ஹடெயத்து 
4. ப்பும்‌ . . மங்கலத்து 
ஆ 1, ந்தராயம்‌ . , . 
2. மேக்கடை . . . 


3. களும்‌. . . 


139 


. பன்னிரண்டாந்தியதியும்‌ வர௫வ4வக்ஷத்து . . . 
. ௨,சாணம்‌ பண்ணிக்குடுத்த . . . 


. நாள்‌ இந்த சூழும்‌ அரசர்கண்ட . . . 


. ன்ற நிலங்களுக்கு . . . 


. ஹிஹிஸ்ரீ மெற்கீத்திக்குமேல்‌ ஸ்ரீ கோச்சடையபன்மரா . . 

௨ டத்து . . . சுரபிநாட்டு சூளும்‌அரசர்கண்டன்‌ திருக்‌ . . . 

. குளத்துக்குப்‌ பெருநான்‌ கெல்லையாவது கீழ்பாற்கெ . . 

௨. ஈ ஆளப்பிறந்த சோழ சதுவெஃதி மங்கலத்து அன்பில்‌ நாரா . 
. ஆக இசைந்த பெருநான்‌ கெல்லைக்குட்பட்ட நன்செய்யு . . . 


௨ரவுகளும்‌ . . 


த. நர. அ, தெரல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 90/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 12 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1268 

ஊர்‌ : கருங்காலக்குடி இந்தியக்‌ கல்வெட்டு | ப 

. : 152/1973-74 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 

எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ண 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ல்‌ 

மன்னன்‌ : முதலாம்‌ சடையவர்மன்‌ வ்‌ J 

சுந்தர பாண்டியன்‌ 

இடம்‌ : முத்தாலம்மன்‌ கோயில்‌ கருவறை அதிட்டானப்‌ பகுதி தென்புறம்‌. 

குறிப்புரை : கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. சுரபி நாட்டு சூழும்‌அரசர்கண்டன்‌ 
ஊரவையினர்‌ அவர்களது ஊரின்‌ தென்பகுதியில்‌ உள்ள பகையனேரியான அழகப்‌ 
பெருமாள்‌ நல்லூரை மதுரைக்‌ கைக்கோளர்‌ மாணிக்கச்‌ சொக்கர்க்கு விற்றதைக்‌ 
கூறுகின்றது. 

கல்வெட்டு : 


1. ஹஜஷிஸ்ரீ மர்கீர்த்திக்கு மேல்‌ ஸ்ரீ கோச்சடையபன்மரான கி,ஹுவனச்‌ 


சக்கரவத்திகள்‌ எம்மண்டலமுங்‌ கொண்டருளிய ஸ்ரீசுந்தரபாண்டிய 
தேவர்க்கு யாண்டு ௦௨ மீனநாயற்று . . . 


2. ம்‌ பெற்ற மகத்து நாள்‌ மாடக்குளக்கீழ்‌ மதுரையிலிருக்கும்‌ கைக்கோளரில்‌ 


இராசாண்டான்‌ மாணிக்க சொக்கனார்க்கு சுரபிநாட்டுச்‌ சூழம்‌ அரசர்‌ 
கண்டனில்‌ ஊராய்‌ அமைந்த ஊரோம்‌ 


3. நாங்கள்‌ எங்களூர்‌ தென்பால்‌ குடிக்காடுப்‌ பகையனேரியான அழகப்‌ 


பெருமாநல்லூர்‌ விற்றுக்‌ குடுத்த சாதனப்படி . . நான்கெல்லைக்‌ 


குட்பட்ட . . . 


141 


4, அழகப்பெருமாள்‌ விண்ணகர எம்பெருமானுக்கு திருநாமத்துக்காணி 


5, 


இறையிலியாக இந்த மாணிக்கச்‌ சொக்கனூர்‌ வடகரைக்குக்கீழ்‌ 
அருளாளன்‌ வயக்கல்‌ விளையில்‌ இரண்டு உள்ள நிலம்‌. . . 


க்கு கடமை அந்தராயமும்‌ இந்த மாணிக்கச்‌ சொக்கனார்க்கு 
காராண்மையும்‌ ஆக இந்த குளத்துக்கு நாம்‌ . . . . . கழித்து 
இந்நாயனார்க்கு கடமை அந்தராயம்‌ இறுக்க . . 


6. நிலம்‌ ஒரு மாவுக்கு கரும்பு பெரும்பூ பயிர்பாத்து பயிர்‌ நின்ற நிலத்துக்கு 


கடமை அந்தராயம்‌ பொன்வரி வினியோகம்‌ சில்பெருவரி தறிஇறை 


142 


த, நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 91 / 2003 


மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : 5 

வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.1273 

ஊர்‌ சொக்கலிங்கபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு } 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : = 

அரசு பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 A 

மன்னன்‌ முதலாம்‌ மாறவர்மன்குலசேகரன்‌ எண்‌ J 

இடம்‌ : சிவன்‌ கோயில்‌ கருவறை மேற்கு அதிட்டானம்‌. 

குறிப்புரை : சுரபி நாட்டு மேன்மலையூர்‌ அழகிய சேழீசுவரமுடையாரின்‌ திருப்படி மாற்று 
உள்ளிட்ட நிவந்தங்களுக்கு வஞ்சியூர்‌ குளமும்‌ அமுதனேரியின்‌ தென்பால்‌ உள்ள 
துறையூர்‌ குளமும்‌ தேவதான இறையிலியாக வழங்கப்பட்டதைக்‌ குறிக்கும்‌ அரச 
ஆணை. அதிகாரி காலிங்கராயன்‌ கேட்டுக்‌ கொண்டதற்கிணங்க மன்னன்‌ 
அள்ளியூரில்‌ தங்கியிருந்தபோது வழங்கிய கொடை இது. 

கல்வெட்டு : 


1. ஷுஹிஸ்ரீ யாண்டு டு வது நாள்‌ ௩௱ச௰உ னால்‌ அள்ளியூரில்‌ எழுந்தருளி 


யிருக்க நினைப்பு சுரநாட்டு மேன்மலை அழகிய சேழீஸ்வர 
முடையார்க்கு திருப்படிமாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிமந்தங்களுக்கு 
இவ்வூர்‌ வஞ்சியூர்‌ குளமும்‌ அமுநனேரித்‌ தென்பாற்‌ துறையூர்‌: 
குளத்துக்கு நான்கெல்லை ட்‌ 


நம்‌ உழவுந்தவித்து காராண்மையாட்சியும்‌ அந்தராய வினியோகமும்‌ 
தருவதான அச்சும்‌ காரியவாராய்ச்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி 
சந்துவிக்கிரஹப்பேறும்‌ வாசல்பேறும்‌ இலாஞ்சினைப்‌ பேறும்‌ தறி 
யிறை செக்கிறை தட்டளி பாட்டமும்‌ இடைவரி இனவரி பொன்வரி 


143 


வது முதல்‌ தேவதான யிறையிலியாக இடப்பெற வேணுமென்று 
காலிங்கராயன்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ இவ்வழகிய சேழீசுவர 
முடையார்க்கு திருப்படிமாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்களுக்கு 
இவ்வூர்‌ வஞ்சியூர்‌ குளமும்‌ அமுதனேரித்‌ தென்பால்‌ துறையூற்‌ குளமும்‌ 
உழவுந்தவித்து காராண்மை[மீ]யாட்சியும்‌ 


. வெட்டி பாட்டமும்‌ பஞ்சுபீலியும்‌ சந்திவிக்கிரகப்பேறும்‌ இலாஞ்சினைப்‌ 
பேறும்‌ தறியிறை செக்கிறை தட்டளிப்‌ பாட்டமும்‌ இடைவரி பொன்‌ 
வரியும்‌ எப்பேற்பட்டனமுள்பட இவ்வாண்டு முதல்‌ தேவதான யிறை 
யிலியாக இருக்கவென்றும்‌ இப்படி சந்திராதித்தவரை செல்வதாக.. 


. இவை தொண்டைமான்‌ எழுத்து || இவை காலிங்கராயன்‌ எழுத்து |) 
வஞ்சியூர்குளத்து நகரத்தான்‌ மடபுற நீங்கலாக |- திரிபுவனசக்கரவத்தி 
கோனேரின்மை கொண்டான்‌ சுரநாட்டு மேன்மலை அழகிய சேழீசுவர 
முடையார்‌ ஸ்தானத்தாற்கு இத்தேவற்கு திருப்படிமாற்றுள்ளிட்டு 
வேண்டும்‌ நிமிந்தங்களுக்கு 


கடமை அந்தராயமும்‌ வினியோகமும்‌ .. தான அச்சு ஊ காரிய 
ஆராட்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரஹப்பேறும்‌ 
வாசல்பேறும்‌ இலாஞ்சினைப்‌ பேறும்‌ தறியிறை செக்கிறை தட்டளி 
பாட்டமும்‌ இடைவரி இனவரி பொன்வரியும்‌ எப்பேற்பட்டனவும்‌ 
உள்பட்ட அஞ்சாவது .. 


௨ன்னமையில்‌ அழகிய சேழீசுவரமுடையாற்கு திருப்படிமாற்றுள்ளிட்டு 
வேண்டும்‌ நித்த நிமந்தங்களுக்கு இவ்வூர்‌ வஞ்சியூர்‌ குளமும்‌ அமுத 
னேரியான தென்பாற்கு துறையூர்‌ குளமும்‌ உழவு தவித்து காராண்மை 
யாட்சியும்‌ கடமை அந்நராயமும்‌ விநியோகமும்‌ தருவதான அச்சும்‌ 


காரியவாராய்ச்சியும்‌ வெட்டி பாட்டமும்‌ .. . 


_றை செக்கிறை தட்டளிப்பாட்டமும்‌ இடைவரி இனவரி .. . எப்‌ 
பேற்பட்டனவும்‌ உள்பட இவ்வாண்டு முதல்‌ இக்குளத்து வயலில்‌ மடப்‌ 
புறமாக நீக்கி தேவதான இறைபிலியாக தந்தோம்‌ சந்திராதித்தவற்‌ 
செல்வதாக கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிவித்துக்‌ கொள்ள இவை 
திருக்கான .. . 


144 


த. நர. ௮, தெரல்லியல்‌ துறை - தொடர்‌ எண்‌ : 92 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 38 
வட்டம்‌ , மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, - 1306 
னர்‌ : சொக்கலிங்கபுரம்‌ \ 
. . இந்தியக்‌ கல்வெட்டு A 
மொழி: தமிழ்‌ அண்டு அறிக்கை ர்‌ 
அரசு : பாண்டியர்‌ 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 7 2 
குலசேகரன்‌ ல்‌ ர்‌ i 
| 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ தென்சுவர்‌. 
குறிப்புரை :  இக்கல்வெட்டும்‌ அடுத்த கல்வெட்டும்‌ தொடர்புடையன. மதுரையில்‌ உள்ள சைவ . 
மடத்‌ தலைவர்க்கு அகத்தியன்‌ குளத்தினை மடப்புற இறையிலியாக அளித்ததைக்‌ : 
கூறுகிறது. 
கல்வெட்டு : 


1. ஹஹிறீ மக்கீர்த்திக்குமேல்‌ சீகோமாறபன்ம 

2. ரான திருபுவனச்சக்கரவத்திகளெம்மண்டலமுங்‌ கொ 

3. ண்டருளிய ஸ்ரீகுலைசேகரதேவற்கு யாண்டு ௩௦௮ 

4. கன்னிநாயற்று பூர்வபக்ஷத்து திருதியையும்‌ 

5. [செவ்‌]வாக்கிழமையும்‌ பெற்ற சோதிநாள்‌ மாடக்குளக்கீழ்‌ 

6. மதுரையில்‌ உடையார்‌ திருத்தொண்டர்களில்‌ முதலியார்‌ 

7. திருமேனிக்கு சுரபி நாட்டு மேன்மலை ஊரோம்‌ பிடிபாடு 

8. பண்ணிக்‌ குடுத்த பரிசாவது முன்னாள்‌ ௩ுவது ஆவணி மாதம்‌ 
9. நாங்கள்‌ விற்ற அகத்தியன்‌ குளத்தில்‌ சுற்றுமுற்றில்‌ 


145 


12. 
18. 
14. 
15. 


16. 


17. 
18. 


ட 5 9. 


“9. 


21. 


. அகத்தீசுவரமுடைய நாயனார்‌ தேவதானம்‌ நீக்கி நின்ற நஞ்செம்‌ . 


. புஞ்செய்க்கு துண்டிப்பாக நிச்சயித்து எங்களுக்கு முதலி 


[யா]ர்‌ இறுத்துப்‌ போந்த அச்சு க இவ்வச்சு ஒன்றும்‌ இவ்வச்சால்‌ 
[வந்த] உபாதி விநியோகமும்‌ எங்களூரில்‌ நின்றும்‌ கழித்து 
[திருக்‌] காய்குடிக்குமாக . . , னேரியில்‌ 

யுமாக இன்னாலூரிலும்‌ இறுத்துக்‌ கொண்டு இப்படிக்கு எங்களுக்‌ 


கும்‌ முதலியார்‌ சுரபித்திருமேனி மடபுற இறையிலியாக உதகம்‌ பண்ணி 
திருச்சூ - 


லத்தாபனம்‌ பண்ணிக்குடுத்தமையில்‌ நா ...யில்‌ நா 
லூராரும்‌ மடபுற இறையிலியாக உதகம்‌ பண்ணி திருச்சூலத்தாபன . . 


குடுத்த. .இவ்வகத்தியன்‌ , குளத்துக்கு பெருநான்‌ பம்‌ வத்‌ கீழ்ப்‌. 


854 
ன்‌ 


ர வில்‌ தமன்‌ புஞ்சைக்கு. , தேவேந்திர 
நாடாழ்வான்‌ . 


மேற்கும்‌ தென்பாற்கெல்லை . . . ராயன்‌ புஞ்செய்கும்‌ விற்‌ .. 


146 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌.: 93 /2003 


மாவட்டம்‌ ! மதுரை ஆட்சி ஆண்டு : 38 
வத்‌ அம்ர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1806 
ஊர்‌ :. சொக்கலிங்கபுரம்‌ 
மொழி: தமிழ்‌ இந்தியக்‌ கல்வெட்டு ட 
எழுத்து: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
அரசு : பாண்டியர்‌ முன்‌ பதிப்பு: a 

த்க்‌ : ட ஊர்க்‌ கல்வெட்டு ] 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ ட 3 

குலசேகரன்‌ பப்ப J 

இடம்‌ : சிவன்‌ கோயில்‌ கருவறை தென்புறச்‌ சுவர்‌ 


குறிப்புரை : முன்‌ கல்வெட்டுச்‌ செய்தியே இதிலும்‌ இடம்‌ பெறுகிறது, திருக்காய்குடி , 
சூழுமரசர்கண்டன்‌, அறுநூற்றுவனேரி, வீரசூளாமணி முதலிய நான்கு ஊரவை 
யினர்‌ மேன்மலை ஊரவர்க்குச்‌ செய்த பிரமாணம்‌ கூறப்படுகிறது. 


கல்வெட்டு : 
1. ஹஸிஸ்ீ ஸ்ரீமெற்கீத்திக்கி 
2. மேற்‌ ஸ்ரீகோமாற பன்மரா 
3. ன திருபுவனச்‌ சக்கரவத்திகள்‌ 
4. எம்மண்டலமுங்‌ கொண்டருளிய 
5. ஸ்ரீகுலசேகரதேவற்கு யாண்டு முப்பத்‌ 
6. தெட்டாவது கன்னி நாயற்று வூவ.ஃபக்ஷத்‌ 
. துவிதியையும்‌ செவ்வாய்க்கிழமையு 
ம்‌ பெற்ற சோதிநாள்‌ சுரபி நாட்டுத்‌ திருக்காய்க்கு 
. டிவூராரும்‌ சூழுமரசர்கண்டன்‌ ஊரவரும்‌ I 


மல 


10. அறுநூற்றுவனேரி வீரசூளாமணியூர 


147: 


. வரும்‌ மேன்மலையூரவற்கு பிரமாணம்‌ பண்‌ 

, ணிக்‌ குடுத்த பரிசாவது தாங்கள்‌ முதலியார்‌ 

. சுரபித்திருமேனிக்கு விற்ற அகத்திக்‌ குளத்துக்கு த 

, ங்களூரில்‌ நிச்சயிப்பான அச்சுலே அகத்திக்குளத்து 

க்கு ஒரு அச்சும்‌ கழித்து எங்களூர்களிலே யிருத்திக்‌ கொ 

. ண்டோம்‌ தாங்களும்‌ வாட்டை பாட்ட .. ந்தியாளும்‌ முதலாக 
- யிறையிலி மடப்புறமாகச்‌ ச௩ரசிகவற்‌ செல்லும்படியாகத்‌ தி 
. ரச்‌ சூலக்கல்‌ நாட்டிக்‌ குடுப்பது இப்படி ஸம்மதித்து 

i ம்ல்்பிற்‌ இறையிலியாக திருசூல நாட்டி உமாணம்‌ பண்ணி 
க்‌ குடுத்தோம்‌ திருக்காய்குடி யூரவரும்‌ சூழுமரசன்கண்டன்‌ 

- ஊரவரும்‌ அறுனூற்றுவனேரி யூரவரும்‌ வீரசூ 

.. எரமணியூரவரும்‌ மேன்மலையூரவற்கு இளங்‌ 


காதரையவெழுத்து மங்கலாதேவ நாடாழ்வான்‌ எ 


மூத்து . 
. சுந்தரபாண்டிய பல்லவதரையன்‌ எழுத்து திருக்கு , . . . 


. ... _பல்லவதரையனெழுத்து ஏற்சோழ பல்‌ 
ரத அல்‌ ஸ்‌ பத பல்லவதரையனெழுத்து நல்லசிங்கனெழுத்து 
. சுந்தரபாண்டிய நாடாழ்வான்‌ எழுத்து 
- கொந்தளராயன்‌ எழுத்து வீரப்புலி நாடாழ்வான்‌ எழுத்து 
வஞ்சி மணலியரைய எழுத்து தொழ . . . . வதரையன்‌ 
மங்கலாபல : ர 


. னெழுத்து மங்கலபலவத்தரையன்‌ எழுத்து 
. பூவன்‌ விச்சாபன்மன்‌ எழுத்து . . பாண்டிய நாட்டு 
. கணபதியரையன்‌ எழுத்து பல்லவரையன்‌ எழுத்து 


. வீரசங்கன்‌ எழுத்து . அதியமழகிய நாடாழ்வான்‌ எழுத்து 


148 


எழுத்து 


35. 
36. 
317. 
38. 

39. 
40, 

41, 
42. 
43, 


அஞ்சாதசிங்கப்‌ பேரையன்‌ எழுத்து செய்துங்கன்‌ எழுத்து 
பரிமேல்வழகங்கன்‌ நாடாழ்வான்‌ எழுத்து காஞை 
இருக்கை வேழ்‌ நாடாழ்வான்‌ எழுத்து . . . 
வீரபுலிபன்மன்‌ எழுத்து செயபாண்டிய பன்ம எழுத்து 
வடமுகத்தரையன்‌ எழுத்து பஞ்சவராயன்‌ எழுத்து 
வண்டுவராபதி நாடாழ்வான்‌ எழுத்து சடை ப ,.. நா 
டாழ்வான்‌ எழுத்து யாதவராயன்‌ எழுத்து 

புகல்‌ இடங்‌ குடுத்த நாடாழ்வான்‌ எழுத்து 
தென்னவராயன்‌ எழுத்து வழிதிப்பன்மர்‌ எழுத்து 


149 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 94/ 2003 


மாவட்டம்‌ :; மதுரை 3 ஆட்சி ஆண்டு : 5 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு! ., கி.பி. 18-ஆம்‌ 
ல்‌ நூற்றாண்டு 
ஊர்‌ சொக்கலிங்கபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 1 ௬ இ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 
எழுத்து: தமிழ்‌ _ முன்‌ பதிப்பு: தர 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] 
மன்னன்‌ — எண்‌ ர்‌ 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ கருவறை வடபுற அதிட்டானம்‌. 
குறிப்புரை : சுரபிநாட்டு மேல்மலை அழகிய சேழீசுவரமுடையார்க்கு அடியாராக விளங்கும்‌ 
திருச்சிற்றம்பலமுடையார்‌ அரசு கண்டராமன்‌' என்ற பெயரில்‌ செய்கிற 
நந்தவனத்திற்கு இறையிலி நிலம்‌ அளித்ததைத்‌ தெரிவிக்கிறது. 
கல்வெட்டு : 
அ. 1. ஷஷிஸ்ரீ யாண்டு ௫ வது நாள்‌ ௩௱௪ட௨ னால்‌ சுரநாட்டு மேல்மலை 


அழகிய சேழீசுவரமுடையாற்கு தவஸஷரில்‌ திருச்சிற்றம்பல 


. முடையார்க்கு இவ்வூர்‌ குளத்து வடக்கடை கொம்பில்‌ நந்தவனஞ்‌ 


செய்யும்‌ . . . மேற்கு ஜீவனமுள்ளிட்டு வேண்டுவனவுக்கு இவ்வூர்‌ 
அதியமழகியான்‌ குள 


3. ம்‌ உழவு தவித்து காராண்மையாட்சி உள்ளிட்டு தருவதான அச்சு 


காரியவராய்ச்சி வெட்டிப்‌ பாட்டம்‌ பஞ்சுபீலி சந்துவிக்கிறகப்‌ பேறும்‌ 


வாசல்‌ 


4, பேறும்‌ இலாஞ்சனைப்‌ பேறும்‌ தறியிறை செக்கிறை இடைவரி இனவரி 


பொன்வரியும்‌ மற்றும்‌ எப்பேர்ப்பட்டனவும்‌ உட்பட அஞ்சாவது முதல்‌ 


திருநந்தவனப்புறம்‌ இறை 


150 


. . ... இறையிலியாக இடப்பெற வேணுமென்று அழகிய சேழீசுவர 
முடையார்க்கு தவத்தாரில்‌ திருச்சிற்றலம்பலமுடையான்‌ இவ்வூர்‌ குளத்து 


வடக்கரை கொம்‌ 


அக்கு இவ்வூர்‌ அதிய மழகியான்‌ குளம்‌ உழவு தவித்து கா[ராண்மை] 
மீயாட்சியும்‌ கடமையும்‌ அந்‌ 

, ராயமும்‌ வினியோகமும்‌ தருவதான அச்சும்‌... பஞ்சுபீலியும்‌ சந்தி 
விக்கிரகப்பேறும்‌ வாசல்பேறும்‌ இலாஞ்சனைப்பேறும்‌ தறியிறை செக்கிறை 


தட்டார்‌ பாட்டமும்‌ இடைவரி இனவரி இவ்வாண்டு முதல்‌ திரு நந்தவனப்‌ 
புறம்‌ இறையிலியாக இடப்பெற வேணுமென்று இப்படி சந்திராதித்தவற்‌. 


. மாட்டெறிந்தேன்‌ அடைவார்‌ எழுந்‌ . .. . 
 த்துப்பெருமாள்‌ பெருங்கருணைப்‌ பெருமா . ... . 


௨தன்‌ தற்குறிக்கும்‌ இவர்‌ தம்பி உடையார்க்கு , . .. 


. குறிக்கும்‌ ஆக இவ்விருவர்‌ தற்குறிக்கும்‌ . . . 


 ட்டெரி நகைகண்‌ 'பெருநிதி ௨௨.௨... பெருமாள்‌ 


. எழுத்து இப்படிக்கு நம்பிரான்‌ தோழன்‌ உடை. . , 


. கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டி . . . 


. போகவும்‌ இப்படிக்கு . . . 


151 


ந னவை ப சனக லவை 


உ பில்‌ செய்விக்கிற அரசுகண்டராமன்‌ . . திருநந்தவனந்‌ , . . இவன்‌ : 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ , 95 | 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 5 
பம்‌ லர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 19-ஆம்‌ 
தூற்றாண்டு 
ஊர்‌ : சொக்கலிங்கபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு | ட 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
ள்ழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : ட 
ந்து ப்ப ப்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 5 
மன்னன்‌ ; — எண்‌ J 
இடம்‌ : - சிவன்‌ கோயில்‌ கருவறை மேற்கு அதிட்டானம்‌. 
குறிப்புரை : கோயிலுக்கு நந்தவனப்புறமாக இறையிலி நிலம்‌ அளிக்கப்பட்டதைத்‌ தெரிவிக்கிறது. 
நிலத்திற்குரிய வரிகள்‌ கூறப்பட்டுள்ளன. 
கல்வெட்டு : 
1. யாண்டு டுவது. , .யன்‌. எழுத்து யாண்டுடுவது நாள்‌. ௩௱ச௰டு 


இப்படிக்கு திருக்கானப்பேர்க்‌ கூற்றத்து ஆனந்தூரான அவிதாய 
சுந்தரநல்லூர்‌ அரையன்‌ வள்‌ மாதவராயன்‌ எழுத்து 
இவை திருக்கானப்பேர்க்‌ கூற்ற. 


. சியும்‌ வெட்டிபாட்டமும்‌ பஞ்சுபீலி சந்துவிக்கிரஹப்பேறும்‌ இலாஞ்‌ 


சினைப்பேறும்‌ தறியிறை செக்கிறையும்‌ தட்டார்பாட்டமும்‌ இடைவரி 
பொன்வரியும்‌ மற்றும்‌ எப்பேர்ப்பட்டனவும்‌ உட்பட அஞ்சாவது முதல்‌ 
திருநந்தாவனப்புறம்‌ இறையிலியாக இ. . 


ன்‌ அச்சும்‌ காரியவாராச்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்தி 
விக்கிரஹப்பேறும்‌ வாசல்பேறும்‌ இலாஞ்சினைப்‌ பேறும்‌ தறியிறை 
செக்கிறை தட்டார்‌ பாட்டமும்‌ இடைவரி இனவரி பொன்வரி மற்றும்‌ 
எப்பேர்ப்பட்டனவும்‌ உட்பட இவ்வாண்டு முதல்‌ திருநந்தவனபுறம்‌ 


4, இப்படிக்கு திருக்கானப்பேர்‌ கூற்றத்து [கூனான] செருவத்தூர்‌ அரசு 


சதிரனான பல்லவராயன்‌ எழுத்து, 


152 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : மதுரை 


தொடர்‌ எண்‌ :: 96 / 2003 


ஆட்சி ஆண்டு : — 


வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 17-18ஆம்‌ 
. ள்‌ ட்‌ நூற்றாண்டு 
ஊர்‌: சொக்கலிங்கபுரம்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு \ ன 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு க 
தவத. 1 ஊர்க்‌ கல்வெட்டு L க 
எண | 
இடம்‌ : சிவன்‌ கோயிலில்‌ உள்ள விநாயகர்‌ சிற்றாலய முன்‌ மண்டபத்‌ தூண்‌. 
குறிப்புரை:  சொக்கலிங்கபுரத்தில்‌ இருந்த கட்டசிம்ப அம்பலக்காரன்‌ பிச்சன்‌ அம்பலம்‌ மற்றும்‌ 
அவனது மனைவி வீராயி ஆகியோரது பக்தியைத்‌ தெரிவிக்கிறது. 
கல்வெட்டு. : 


. விகாரி அற்பி 

.சி மீட௯௨ செ 

. ஈக்கலிங்கபுற 

. திலிருக்கும்‌ வலை 
௨.யரில்‌ கட்டசிம்பந 

. ம்பலக்காறன்‌ பிச்‌ 

. சநம்பலம்‌ அவன்‌ 

ம்‌ பெண்சாதி வீரா 

யி யிருபே[ரு]ம்‌ பிள்ளை 
10. யாரிடத்தில்‌ நித்திய சே 
11. ருவை. 


ம அவ MPN 


153 


த. நர. அ. தொல்லியல்‌ துறை. ; தொடர்‌ எண்‌: 97/2003. 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ன ன க 

வட்டம்‌ : மேலூர்‌ த வரலாற்று ஆண்டு : கி.பி, 13-ஆம்‌ 

ஊர்‌: சொக்கலிங்கபுரம்‌ ம 
ததி இந்தியக்‌ கல்வெட்டு ., 

மொழி : தமிழ்‌. ஆண்டு அறிக்கை | 

எழுத்து: தமிழ்‌ * யகர 2 

அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] 7 

மன்னன்‌ : நட ண்ட எண்‌ ர்‌ 


இடம்‌ : சிவன்‌ கோயில்‌ அர்த்தமண்டப, வடபுற அதிட்டானம்‌. 


குறிப்புரை : திருக்காமக்கோட்ட முடைய நாச்சியார்க்கு (அம்மன்‌ கோயிலுக்கு) ஒரு னின்‌ 
சிறுமடைப்போக்கில்‌ அரைமா நிலம்‌ அளித்ததைக்‌ கூறுகிறது. 


ப 


கல்வெட்டு : ': 
அ. 1. குளத்தில்‌ சிறுமடைப்‌ போக்கில்‌ நிலம்‌ அரைமாவும்‌ நம்‌ உழவு தவிந்‌ 
2. து இறையிலியாக குடுத்தோம்‌ இப்படிக்‌ குடுத்த இந்நிலங்களுக்கு காரா 


9 


. மைகிழமை கடமை அந்தராயம்‌ வினியோகம்‌ .. - . ர தறிஇறை 
செக்கிறை தட்டளி 


ப 


பாட்டம்‌ இடைவரி இனவரி பொன்வரி ற்ற தம்‌ தவித்து 
இந்நாச்சியார்க்கு 

5. திருநாமத்துக்‌ . . ம்‌ படிக்கு குடுத்து இது சந்திராதித்த வ 

6. ரைச்‌ செல்வ . . செம்பிலும்‌ வெட்டிக்‌ கொண்டு திருசூல 

7. ஸ்தாபநமும்‌ ப , . . பாகனான துவாராபதி வேளான்‌ எழுத்து ' 

5. சீயாழிப்பிள்ளை சிவந்த பாதத்தான்‌ எழுத்து 

9. இவை மன்றமுடையான்‌ எழுத்து இவை அரச நாரண . , .. 

0. இவை அரச நாரணதேவன்‌ எழுத்து ்‌ ள்‌ 


ஆ. 1. இவை ஸு 


154 


த. நரா. அ. தொல்லியல்‌ துநை 


2 
3 
4 
5. 
6 
7 


தொடர்‌ எண்‌; 98 / 2003 


ஆட்சி ஆண்டு : 11 
வரலாற்று ஆண்டு : கி.பி. 1279 


இந்தியக்‌ கல்வெட்டு | 
ஆண்டு அறிக்கை | 


முன்‌ பதிப்பு ள்‌ ஸை 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண்‌ 


பவல்‌ 


சிவன்‌ கோயில்‌ கருவறையின்‌ மேற்கு மற்றும்‌ தெற்குச்‌ சுவர்கள்‌. 


சுரநாட்டு மேல்மலை ஊரவையினர்‌ தங்கள்‌ ஊர்ப்பகுதியில்‌ இருந்த புரவேரிக்‌ 


குளத்தினை அனுபவித்த மருதாலப்‌ பேரையன்‌ என்பவன்‌ அதற்குரிய கடமை, 
குடிமை முதலியவைகளைச்‌ செலுத்தாது ராஜதுரோகம்‌, நாட்டுத்துரோகம்‌, ஊர்ச்‌ 
துரோகம்‌ செய்து வந்தமையால்‌ புரவேரிக்‌ குளத்தினை தங்களூர்‌ அழகிய சேழீசுவீர 


முடைய நாயனார்‌ கோயிலுக்கு விற்றுக்‌ 


மாவட்டம ; மதுரை 
வட்டம்‌ மேலூர்‌ 
ஊர்‌ சொக்கலிங்கபுரம்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு பாண்டியர்‌ 
மன்னன்‌ முதலாம்‌ மாறவர்மன்‌ 
குலசேகரன்‌ 
இடம்‌ : 
குறிப்புரை : 
தெரிவிக்கிறது. 
கல்வெட்டு : 
1. 


கொடுத்தனர்‌ என்று இக்கல்வெட்‌( 


ஹஹிஸ்ீ மக்கீர்‌[த்தி]க்கு மேல்‌ கோமாறபர்மர்‌ ஆன [திரிபு] 


. வன சக்கரவத்திகளெம்மண்டலமும்‌ கொண்டருளிய குலசேகரதேவ 
ற்கு 2௪வது ஆனி மாதம்‌ ௬ ௨ புதன்கிழமையும்‌ பெற்‌ 
. ற மிருகசிரிஷத்து நாள்‌ சுரனாட்டு மேன்மலை ஊரா[ய்‌]இசைந்த ஊ 


ரோம்‌ இவ்வூர்‌ உடையார்‌ அழகிய சேழீசுவரமுடைய ந 


பிரமாணம்‌ பண்‌ 


155 


. ஈயனார்‌ ஆதிசண்டேசுவரர்‌ ஸ்ரீமாஹேசுவரர்‌ தேவக 


_ன்மிகள்‌ ஸ்ரீகாரியஞ்செய்வார்கள்‌ கோயில்‌ கணக்கற்கு நிலவிலை 


௨ ணிக்குடுத்த பரிசாவது இவ்வூர்‌ பாற்‌ புரவேரிக்குளமும்‌ வயலும்‌ முன்‌ 
. னாள்‌[ம]ருதாலப்‌ பேரையன்‌ ஆண்டு போதுகையில்‌ இவன்‌ ஈழத 

. ரையர்கு இசைய கடமை குடிமை செய்யாத படியாலும்‌ ராசத்து 

. ரோகம்‌ ச்ல்ைய்லிம்‌ நாட்டுத்துரோகம்‌ ஊற்துரோகமும்‌ [ச] 

ல்‌ ய்து இவன்‌ மேப்போகையால்‌ .இப்புரவேரிக்கு ௰க துக்கு கடமை 

. க்கு இய ௧ காராங்கிழமையாக விற்றுக்‌ குடுத்தபுரவே 
ரிக்கும்‌ ஏம்பலுக்கும்‌ பெருநான்கெல்லையாவது. வடபா . . . 

. தலைமடை பற்பல ட்‌ தெற்கும்‌ மேல்பார்க்‌ கெல்லல்‌ இல்‌ 


. [ல] நின்றும்‌ அரசாத்துக்கு ல்க அறுவது ௫ கிழக்கும்‌ ளோ கென்ளிச்த்‌ 


கெல்லை 


்‌ கிணற்றுக்கு . .... கீழலாக போகிற கோபூகா(வா)க்கு வடக்கு 


. நான்கெல்லையும்‌ கானகுடிகாட்டில்‌ நீர்கோவைக்கு மேற்கு 


156 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 99/2003 


மாவட்டம்‌ : 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
ல தல்‌ . நூற்றாண்டு: 
ஊர்‌ : சொக்கலிங்கபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 1 _ : 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
ES ஊர்க்‌ கல்வெட்டு 1 க 
மன்னன்‌ : எண்‌ ] 
1 
இடம்‌ : அழகிய சோழீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை அர்த்தமண்டபத்‌ தெற்கு மற்றும்‌ மேற்குச்‌ 
சுவர்கள்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. குறிப்பிட்ட ஒரு குளம்‌ (பார்புரவேரி) மற்றும்‌ அதன்‌ 
பாசண நிலங்களை ஆண்டு அனுபவித்த [மருதாலப்‌] பேரரையன்‌ வரி கொடாது 
போனதால்‌ அவன்‌ இராஜதுரோகி. நாட்டுத்துரோகி, ஊர்த்துரோகி என அறிவிக்கப்‌ 
பட்டு அந்த குளமும்‌ பாசன நிலங்களும்‌ கோயிலுக்கு விற்கப்பட்டமையும்‌ அதன்‌ 
தொடர்பாக எழுதப்பட்ட ஆவணம்‌ மற்றும்‌ அதனை ஏற்றுக்‌ கையொப்பமிட்டோர்‌ . 
ஆகிய செய்திகளும்‌ இத்துண்டுக்‌ கல்வெட்டுகளால்‌ அறியப்படுகின்றன. 
கல்வெட்டு : 
அ. 1. சிலவோலை காணவுங்‌ காட்டவுங்‌ கடவதல்லா 
2, [தா]கவும்‌ இப்படிக்கு காராண்‌ கிஷமையாக யிறுக்‌[க]* குடுத்த ப[டி]* 
வரி பொன்வரி வி 
3. னியோகம்‌ ம[ற்‌]*றும்‌ எப்பேற்பட்டனவையிற்றுகும்‌ ஆண்டொன்றுக்கு 
வினியோக ்‌ 
4, மாக இறுப்பின்படி கெ[£]*ள்ளும்‌ ஆக இவச்சு ஒன்றும்‌ கொண்டு 
[எடுபிறி] இறுத்துக்‌ குடுப்‌ே 
5, பாமாகவும்‌ இப்புரவேரி திருசூலஸ்தாபனமும்‌ பண்ணிக்‌ குடுத்தூ 


மதுரை ஆட்சி ஆண்டு : _— 


பிடிப[ஈ]ட்டின்படி கல்லிலு 


157 


டம்‌ செம்பிலும்‌ வெட்டிவித்துக்‌ குடுத்தோம்‌ மேன்மலை ஊராய்‌ இ[சை]*ந்த 


ஊரோம்‌ உ டையார்‌ அழ 


கிய சோழீசுரமுடைய னாயனார்க்கு' இப்படிக்கு மது . . . பேரையன்‌ - 


- தற்குறிக்கும்‌ பகைகோட்டை 


௦ 


சூர ஷே வகு ம 


ர க்க 


ட தற்குறிக்கும்‌ புகலிடங்‌ குடுத்த நாடாழ்வான்‌ ' 


. தற்குறிக்கும்‌ வீரமழகியப்‌ பேரையன்‌ தற்குறிக்கும்‌ 


இவை சேகர நாடாழ்வர்ன்‌ தற்குறிக்கும்‌ விசையமா 


உ ன்‌ தற்குறிகும்‌ [தி]வாக[ர]* மழகியான்‌ தற்குறிக்கும்‌ 
. காடவராயன்‌ தற்குறிக்கும்‌. - பகையஞ்சாதான்‌ தற்குறிக்கு காலன்‌ 


குறியுமிட்டு வஞ்சி வெ... 


ம்‌ வீரகால[மூத]ரயன்‌ தற்குறிக்கும்‌ தேனாட்டுப்‌ பேரை[ய]ன்‌ 


தற்குறிக்கும்‌ . 
. பிடிபா 
ட்டு வ,மாணம்‌ எழுதினேன்‌ 


இவ்வூர்‌ கணக்குப்‌ பெரிய 
. வேளான்‌ எ[மு]*த்து வா[ண]* கோ 


. மும்‌ ம[ற்‌]*றும்‌ எப்பேர்பட்ட .. . சைந்து . 


[ஆ]வண களத்தே விலை நிச்செயித்த ப ௩௰ . இபணம்‌' முப்ப , . 


. கொண்டு விலைப்‌ பிரமாணம்‌ பண்ணி குடுத்தோம்‌ ஊரா . . 


யார்‌ அழகிய சே[ழீ[மரமுடைய நாயனாற்கு இபடிவிர . . . 
களுக்கும்‌ இதுவே விலையோலைய்‌ மாப்பொருள்‌ மா . . . 


. வுதாகவும்‌ செய்து இவ்விலையோலையும்‌ பொருள்ச்‌ சி 


158 


த. நர, அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 100 / 2003 


: மதுரை ஆட்சி ஆண்டு : — 


மாவட்டம்‌ 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
. சொக்கலிம்‌ ம்‌ ்‌ ்‌ நூற்றாண்டு: 

ஊர்‌ சாக்கலிங்கபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 1 = 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

மாக ஊர்க்‌ கல்வெட்டு ர 

மன்னன்‌: ௨ ல்‌ 

இடம்‌ அழகிய சோழீஸ்வரமுடையார்‌ கோயில்‌ துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. 

குறிப்புரை : ஊரார்‌ ஏரி மற்றும்‌ அதன்‌ பாசணப்‌ பகுதிகளை விற்று ஆவணம்‌ எழுதிய 
செய்தியை இத்துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ மூலம்‌ அறிகிறோம்‌. இது தொடர்பாக 
அரசாணை வழங்கப்பட்டுள்ளது. சுந்தரநாச்சியார்‌ என்ற அம்மன்‌. கோயிலும்‌ 
குறிக்கப்பட்டுள்ளது. 

கல்வெட்டு : 

அ. 1, கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 


குடுப்போமாகவும்‌ இப்படிக்குத்‌ 


. தாநம்‌ பண்ணி நீர்வாத்துக்‌ குடுத்தோம்‌ 


ஊராரமைந்த ஊரோம்‌ இப்படி 
க்கப்‌ புலியூர்‌ வேளார்‌ தற்குறிக்கு 


க்கு இனாயனர்க்கு காராங்கிஷமையாக விற்றுக்‌ குடுத்த புரவே 


௨ரிக்கு ஏம்பல்களுக்கும்‌ பெருநான்கெல்லையாவது வடபாற்‌ 
. கெல்லை மன்கு[டி] நீர்கோவைக்கு தெற்க்கும்‌ மேல்பாற்கெல்லை பெரி 
. யேரின்றும்‌ அதி..த்துக்கு போகிற வழிக்கு. கிழக்கும்‌ தென்பா.ற்‌ 


கெல்லை 


159 


ஸூ. த es ஓட.ஷுூ மே 09 பூய ட OAR மே ஜூ. ௨4 எ. மே 3 பட உள 


. கிணற்றுக்கு தெற்கு கிழ்லோக போகிற கோமு காலுக்கு வடக்கும்‌ 


.ந்தான்குடிக்காட்டில்‌ நீர்‌ கோவைக்கு மேற்கு 


. செல்வதாக கல்லிலும்‌ செம்பிலும்‌ . . 


தி கோனேரிமை கொண்டான்‌ சுரநாட்‌. . 


௨ .ஸனஞ்‌ செய்யும்‌ பேற்கு. சிவன்‌. ; . 
டாச கண்டராமன்‌ திருக்குளத்துக்கு 


பழந்திபராயன்‌ எழுத்து. : 
னேரியும்‌ . . 


உங்களுக்‌, . 

. உதகம்‌. , 

. யில்‌ நா.. 

. லத்திரப.. 

. வது கீழ்‌. . . 
 ழ்வான்‌ . 

. சையமா. . . 


. வேளான்‌ ஓலை..சுரவி நாட்டு. மேன்‌, .. 


தி சுந்தர நாச்சியார்க்கு இவ்ஷ.. 


. வான்‌ பாதியும்‌ இக்குளத்து * 


. அரை மாவும்‌ பெ. 


அப அ 
. மலையி.. 
. ல சிறும.. 
. கமாளகு.. 


. திநேந்‌ நா.. 


டமதிருெ.. த்‌ 
இப்ப.. 


யேந்ந தென்‌ அடைவார்‌ எழு 

த்து பெருமாள்‌ பெருங்கருணைப்பெரு. ' 
 ஈள்‌ தற்குறிக்கும்‌. இவந்தம்பி உடையாந்‌. தற்கு. 
...இிக்கும்‌. ஆக இவ்விருவர்‌ தற்குறிக்கும்‌ தற்குறி மாடு: 
. எழுத்து இப்படித்‌ தம்பிராந்‌ தோழன்‌ உடையபி. . . 


160 


த. நீர, அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 101 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 13 
வட்டம்‌ : மேலூர்‌ . வரலாற்று ஆண்டு : கி.பி, 14-ஆம்‌ 
நூற்றாண்டு 

ஊர்‌ ; சொக்கலிங்கபுரம்‌ 

இந்தியக்‌ கல்வெட்டு ] _ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : க 
அரசு 3 பிற்காலப்‌ பாண்டியர்‌ 

ஊர்க்‌ கல்வெட்டு 1 ன்‌ 

மன்னன்‌ : சுந்தரபாண்டியன்‌ எண்‌ J 
இடம்‌ : அழகிய சோழீஸ்வரர்‌ கோயில்‌ 
குறிப்புரை : புலியூரில்‌ பிள்ளை பல்லவராயர்‌ பேரால்‌ கைலாசமாகக்‌ கட்டப்பட்டுள்ள 


பல்லவனீஸ்வரம்‌ கோயிலுக்கு வேண்டும்‌ வழிபாட்டுச்‌ செலவுகளுக்காக புலியூர்‌ 
ஊரினர்‌ ஒரு குறிப்பிட்ட நிலத்தின்‌ வரிவருவாயை ஒதுக்கிக்‌ கொடுத்த செய்தி 
சொல்லப்படுகிறது. 


கல்வெட்டு : 


அ. 1. ஹவஷிஸஹீ கோச்சடைய பன்மரான திஜுஃவனச்‌ சக;,வத்திகள்‌ ஸ்ரீஸாந்தர 
பாண்டிய தேவற்கு யாண்டு ௦௩வது லெொமஅ நாயற்று வர௫வ.4$உக்ஷத்து 
உமையும்‌ [சனி]க்கிழமையும்‌ பெற்ற மூலத்து நாள்‌ ஸுனஹி நாட்டுப்‌ 
புலியூர்‌ ஊரா 


2. ய்‌ சமைந்த ஊரோம்‌ இவ்வூர்‌ மீபகெமாஸசாஹ எழுந்தருளப்‌ பண்ணு 
விக்கிர பிள்ளை பல்லவராயர்‌ பேரால்‌ உடையார்‌ பல்லவனீமரமுடைய 
னாயனார்‌ ஆகசிசணெற௱தேவர்‌ சிவநா 


3. மத்தில்‌ இன்னாயனாற்கு அமுதுபடி உள்ளிட்ட விஞ்சனங்களுக்கு 


இன்னாளில்‌ .. காலத்துத்‌ திருக்கைமலரில்‌ நீர்வார்த்துக்‌ குடுத்த 
லுழியாவது இவ்வூர்‌ புரவுலகியனேரியிலே பெருமடை திறந்து பெ 


161 


ன 


௨௫ வாய்க்கால்‌ நீர்பாய்ந்து நெல்‌ விளையும்‌ அரியான்‌ .வயக்கல்‌ தடி, 


நிலம்‌ அரையும்‌ மேவலப்புலியூர்‌ [யேரி] பெருமடை பெருவாய்க்கால்‌ நீர்‌ 
பாஞ்சு நெல்‌ விளையும்‌ நி . . . ந்‌ தெற்கு சிவச்சோலை வய 


க்கல்‌ தடி கம்‌ ஆகத்‌ தடி இரண்டு ௫ .இ . யும்‌ கீழைப்‌ புலியூர்‌ வயலில்‌ 


பெருமடை திறந்து பெருவாய்க்கால்‌ நீர்‌ பாய்ந்து நெல்‌ விளையும்‌ 
ஆச்சநங்கை வயக்கல்‌ தடிக ௫ 8ம்‌. . . யும்‌ செங்கழுநீர்‌ குழி[வ] 


யலில்‌ பெருமடை திறந்து 'பெருவாய்க்கால்‌ நீர்‌ பாய்ந்து நெல்‌ 


விளையும்‌ .. வயக்கல்‌ தடி கம்‌ ஆக தடி [2] ௫ ௯ம்‌ ஆக தடி ௬ ௫ 
. மாவரையே அரைக்காணி . 


- இவை தொண்டைமான்‌ எழுத்து ॥1- இப்படிக்கு இவை காலிங்கராயன்‌ 


எழுத்து தி,லாவனச்சகவத்தி 


. ற்றம்பலமுடையார்‌ இவ்வூர்‌ குளத்தில்‌ -வடக்கடைக்‌ கொம்பில்‌ செய்‌: 


விக்கிற அரச கண்டராமன்‌ திருநந்தவன . 


. காராண்மை[மீ]*யாட்சியும்‌ கடமையும்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ 


தருவிதான அச்சும்‌ காரியவாராட்சி . . . 


முதியான்குளம்‌ உழவு தவிர்ந்து காராண்மையா . யும்‌ கடமை அந்தராய 
மும்‌ வினியோகமும்‌ தருவதா . 


_ன்தூரான அவிதாய சுந்தரநல்லூர்‌ அரையன்‌ ஏறு திருவிடையானான 


மாதவராயன்‌ எழுத்து 5 ௯ 


னி 


. சைய குளத்துக்கு 


, வாரிகுரிச்சித்‌. . திருவான்‌ செய்யில்‌ வயல்‌ 


வரம்புக்கு வடக்கும்‌ மேல்பா ற்கெல்லை வாரிக்கு நிச்சி 


. எல்லைக்கும்‌ ஒழுகு பாறை சுனை மைய்யத்துக்கும்‌ கூவாட 


. மலைக்கு கிழக்கும்‌ வடபாற்கெல்லை கிழக்கு நோக்கிப்‌ ே 


. திக்கு வடக்கல்‌ [கெ]ழு காலுக்கும்‌ கீழ்‌ செந்திக ஒ 


162 


7. முகாலுக்கு தெற்கும்‌ ஆக இசைந்த பெருநான்‌ கெல்லை ; 
8. யில்‌ வளையில்‌ சுற்று முற்றிலும்‌ திருவகத்தீசுரமுடைய நாயநார்‌ தே 
9. வதானத்துக்கு இன்னான்‌ கெல்லைக்குட்பட்ட நன்செய்யும்‌ [புன்‌] 
10. செய்யும்‌ மேனோக்கின மரமும்‌ கீனோக்கின கிணறும்‌ நத்‌[தமும்‌] 

11. நத்தப்பரப்பும்‌ கரையும்‌ கண்வாயும்‌ குளமும்‌ குளப்பரப்பும்‌ 

12. புளியும்‌ மாவும்‌ மரமும்‌ தேன்படு பொதுப்பும்‌ மீன்படு [பள்‌] 

13. மும்‌ எடுப்பன எடுத்தும்‌ குழிப்பன குழித்தும்‌ மற்றும்‌ எப்பேர்‌ 

14. ப்பட்ட ஸமலவராசிகளும்‌ மடப்புற இறையிலியாக 

15. னான்கெல்லையிலும்‌ திருச்சூலத்தாபனம்‌ பண்ணிக்குடு 

16. த்து வஉசி வற்‌ செல்ல கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 

17. குடுத்தோம்‌ முதலியார்‌ சுரபித்‌ திருமேனிக்கு மேல்மலை ஊராய்‌ 

18. இசைந்த ஊரோம்‌ உ மருதாபுரி பேரரயன்னெழுத்தின்‌ படி 

19. குடுத்த னாடாழ்வான்னெழுத்து குலைசேகர நாடாழ்வான்‌ [ஓலை] 

20. பேரயன்னெழுத்து விசையமான்னெழுத்து சுஷரக, .. 

21. பகையஞ்சாதான்னெழுத்து வீரக்கழல்‌ முத்தரையன்னெழுத்து 

22. பேராயிரன்னெழுத்து மேன்மலையூர்க்‌ க[ணக்கு] .. 


28. கப்‌ பெருமாள்‌ எழுத்து 


163 


த. நா. ௮. தொல்லியல்‌ துறை, ட்‌ தொடர்‌ எண்‌ : 102 / 2003 . , 
மாவட்டம்‌ ; மதுரை , ப ப பதட்சிஅன்டு ல்‌, 
வட்டம்‌ : மேலூர்‌ . வரலாற்று ஆண்டு : கி. i 1912 
ரது ம இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 
எழுத்து : தமிழ்‌ ' ' முன்‌ பதிவு: I =; 
விழு வவ வெயர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] 
ர்‌ ப்‌ % ர்‌, 1 

மன்னன்‌ : ஐந்தாம்‌ ஜார்ஜ்‌ * எண்‌ : . த்‌ 
இடம்‌ : சாலையின்‌ ஓரத்தில்‌ நடப்பட்டுள்ள விளக்குத்‌ தூணில்‌ -உள்ளது. . 

ச்ம்‌. தா இடர்‌ வ டர கத்‌ ர இவ x க: க 


குறிப்புரை உ இக்கல்வெட்டு ' ஐந்தாம்‌ ஜார்ஜ்‌ மன்னர்‌ டில்லி மாநகரில்‌ இந்தியச்‌ சக்கரவர்த்தியாக 
ப முடி சூடியதன்‌ நினைவாக ஏற்படுத்தப்பட்ட விளக்குத்தூண்‌ பற்றிக்‌, கூறுகிறது. 


கல்வெட்டு. : ட்‌ 
1. இந்திய] சக்கரவர்த்தியாகிய . -_ .. ட ஆ டி 
2. மாட்சிமை த்ங்‌ 2 ர்‌ 


* 


கிய 5வது ஜா. 
ர்ஜு அவர்க 
ளுக்கு டில்லி 
நகரில்‌ நடக்கும்‌ 
பட்டாபிஷேக 
மஹோத்ஸ்‌ 


வ தீபம்‌ 


= 


பனையூர்‌ 


. 12.12.1911 


ட்ட 
[00 


ப 
ஃ 


த. நர. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 103 / 2003. 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
. த நூற்றாண்டு. 

ம்‌ மருதா இந்தியக்‌ கல்வெட்டு ந] _- 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை J 

எழுத்து: தமிழ்‌ A ன 

அரசு பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 A 

மன்னன்‌ ; ' எண்‌ ] 

இடம்‌ பெருமாள்‌ கோயில்‌ முன்மண்டப வெளிச்சவர்‌. 

குறிப்புரை : மருதூர்‌ பெருமாள்‌ கோயில்‌ திருமுற்றம்‌, திருநந்தவனம்‌, தீர்த்தக்குளம்‌ ஆகியவை 
பனங்காடியான இராசேந்திர சோழச்‌ சதுர்வேதிமங்கலத்து சபையாரிடமிருந்து 
பெற்று அனுபவித்து வரப்பெற்றது, கண்ணாழ்வார்‌ என்று அழைக்கப்பட்ட இக்‌ 
கோயில்‌ இறைவர்க்கு திருப்படிமாற்றுள்ளிட்ட செலவினங்களுக்காக நிலங்கள்‌ 
கொடுக்கப்பட்டுள்ளன. 

கல்வெட்டு : 


1. ஷுஷிஸ்ரீ காலிங்கராயன்‌ ஓலை தென்பறப்பு நாட்டு உ,-ஷடெலட பனைங்‌ 


2. 


3. 


4, 


காடியான இராசேந்திர சோ 
ழச்‌ சதுவெ-சிமங்கலத்து .. [கண்‌] .. . கண்ணாழ்வாற்கு திருப்படி 
மாற்றுள்ளிட்டு 


வேண்டும்‌ நிமந்தங்களுக்கு இறுப்‌[பாக] இவ்வூ .. ஆழ்வார்‌ 
திருநாமத்துக்காணி விலை கொண்டு 


டைய[னா]யனுபவித்து வருகிற நீர்நிலம்‌ மலைக்குடி மலை மேல்‌ 
கோலால்‌ நிலம்‌ முக்காலுமாக கோயிலுந்‌ திருமுற்றமும்‌ திருநந்தவா நமும்‌ 
தித்த | 


165 


. குளமும்‌ திருவீதியும்‌ இவ்வூர்‌ ஸலெயார்‌ பக்கல்‌ இவ்வாழ்வார்‌ விலை 


கொண்டு அனுபவித்து வருகிற ௨,சாணபடியே இவ்வூற்‌ பிடாகை பெரு 


. ங்காரைக்குடியான . குடிதாங்கிநல்லூரும்‌ மேல்படி கீழைக்குளமும்‌ 


நக்கனார்‌ பள்ளமும்‌ பள்ளிவயலும்‌ செம்போரும்‌ கேசவநேரி குளம்‌ 


இரண்டும்‌ தி... 


வு நல்லானும்‌ சோழமாதேவியும்‌ முன்னுடையாரும்‌ ஸைஹூெயமுமாய்‌ 
வருகிற பேருந்‌ தவித்து [வரியில்‌] . . . சுருக்கி [வேறுபேராக்கி] தேவ 


்‌ தான இறையிலியாக 


. வேண்டும்‌ நிமந்தங்களுக்கு செல்ல பண்ணி . .. .-. இப்படிக்கு . . 


இட்டு ௨)ஸாஉஞ்‌ செய்தருளின திருமுகமும்‌ புரவுவரியார்‌ 'எழுத்திட்ட 
உள்‌[வரியும்‌] கொண்டு திருப்படிமாற்றுள்ளி[ட்டு] 


166 


த. நா. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ ; 104 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 22 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1142 
ஊர்‌ : சொக்கலிங்கபுரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு ு 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை r 

எழுத்து: தமிழ்‌ முன்‌: எதிப்பு? 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ப 
மன்னன்‌ : ஸ்ரீவல்லபன்‌ எண்‌ ர்‌ 

இடம்‌ : பெருமாள்‌ கோயில்‌ முன்மண்டபம்‌ வெளிச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இராசேந்திர சோழச்‌ சதுர்வேதி மங்கலத்தின்‌ மேல்‌ பிடாகையிலிருந்த கண்ணாழ்வார்‌ 
கோயிலுக்குச்‌ சில ஊர்களைச்‌ சேர்த்து திருநாராயணகல்லூர்‌ 


தேவதான இறையிலியாக வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. 


கல்வெட்டு : 


அ. 1, வஹிஸ்ரீ .. யில்‌ வாங்கின செய்கை .. ,.. 


2. ஹஹிஸ்ரீ திருமடந்தையுஞ்‌ செயமடந்தையும்‌ 


திருப்ப இருநிலமும்‌ பெருமை எய்த 


ல்‌ அயலில்‌ மன்னவரெல்லாம்‌ வந்திறைஞ்ச மரபிலே மணிமுடித்‌ தென்குமரி 


முதலாக தி 


4. ... முழுதும்‌ கயலாணையே பரந்து செங்கோலுடன்‌ வளர மன்னிய 
, வீரஸீ௦ஹாஸனத்து . . . 


9. ...டையாளோரடும்‌ வீற்றிருத்தருளிய மாமுதல்‌ மதிக்குலம்‌ விளங்கிய 
கோமுதல்‌ கோச்சடைய .... 


167 


என்னும்‌ பெயரால்‌ 


திருப்புயங்களில்‌ இனி 


6. 


கு யாண்டு இருபத்திர்ண்டாவ்து மாடக்குள்க்‌ கீழ்‌: மீதுலிர்‌ - கோயில்‌ 


உள்ளாலை அழகிய பாண்டிய 


. ராசனில்‌ _எழுந்தருளியிருந்து இருபத்திரண்டாவது நாள்‌ நூற்றுத்‌ 


தொண்ணூரற்‌ றா நின்ர்ல்‌ தென்‌ ல 


8. ன்‌ இராசேந்திரசோழ சதுஜெ-சரிமங்கலத்து மேல்பிடாகை திரவிய 


10. 


Li 


உ வோம்‌ திருநாமத்தால்‌ விலைகொண்டு. . . 


கும்‌ மேற்படி கீழைக்குளமும்‌ நத . மொழித்கடவ க்கட ய தே 


நண்ண ஈமருதூர்ர்‌. க்ண்ணாழ்வார்‌ oo. 


. தேவர்‌ மொழிந்தருளினபடி இவ்வா தேவதான அற்யினிப்க்க 


திருமாற்றுளரு.. 
. . ங்களுக்கு இவ்வூர்‌ ஸஸெயார்‌ பக்கல்‌ இவ்வாழ்வார்‌. விலை 
கொண்டும்‌ . . . னம்‌ மற்றும்‌ உள்ள .. 


விழன்தூர்‌ விளாகம்‌ குடிநீங்கா திருவிடையாட்டம்‌ ' நாலே காலே 


யரைமா . . . . ‘ 


. கோயிலும்‌ திருமுற்றமும்‌ 'திருதந்தாவனமும்‌ தடவத்‌ திருவீதியும்‌, 


உட்பட உட 


பத்து வருகிற ப 
. போகும்‌ கேசவனேரி குளம்‌ இரண்டும்‌ தாயிலுதல்லானும்‌ தக 


, முதலாக்கி இருபத்திரண்டாவது முதல்‌ திருநாராயண நல்லூரென்‌. oe 


தோல்‌ ஊரா(ரா)ட்சி [வெள்ளேர்‌] விளக்கெண்ணை வெட்டி கன்டு 


ம இப்னி ப தட்டார்பாட்டம்‌ கோல்‌. . .அழுதாட்டு க 
. நமக்குச்‌ சொன்னமையில்‌ ... 
. தூரில்‌ திருநாமத்து . 


ச 


த. சோழமாதேவியும்‌ முன்னுடையாரும்‌ வள 
கவிப்‌ ஆல்ரகிக 


அந்தராயங்‌ கடமை ... ப்பதாக திருவி. .. . 


168. 


6. 
ர்க 
8. 
9. 


Rw N= 


24. .... யூர்‌ விலை. .. 
29. . . . திருவெழுச்சி [வை]கறையும்‌ .. இருபத்திரண்டாவது முதல்‌ .... 
20. யார்‌ எழுத்திட்ட உள்வரியும்‌ ... ஓலையுங்‌ கொண்டு இப்படி .... 
ஆ. 1. தன்‌ தற்குறியும்‌ இட்டு குலசேகரதென்னவராயன்‌ எழுத்து இந்நகர 
வேளாமார்‌ தற்குறியும்‌ . 
2. வராயன்‌ தற்குறிக்கும்‌ யாதவராயன்‌ தற்குறிக்கும்‌ . . . யன்‌ தற்குறிக்கும்‌ 
இவை வடமுகத்தரையன்‌ எழுத்து : . . 
3. டப்ப நாடாழ்வான்‌ தற்குறிக்கும்‌ வடமுகத்தரையன்‌ எழுத்து செய்ய 
பாண்டிய பன்மன்‌ எழுத்து பாண்டியதரை 
4. யன்‌ எழுத்து சுரபினாடு கிழவன்‌ தற்குறிக்கும்‌ தாயினாடி இவர்‌ 
தற்குறியுமிட்டு இப்படிக்கு இவை பாலராவாயன்‌ எழு 
5. த்து இரவத்தூருடையான்‌ தற்குறியு புலியூர்‌ வேளார்க்கும்‌ இப்படி 
அறிவேனும்‌ நாகமங்கல முடையான்‌ 
6. சோழியதரையன்‌ எழுத்து இவ்விடத்து கண்டத்‌ தேவருளால்‌ இந்த 
௨வ.$மாணமெழுதினேன்‌ அமுதாண்‌ 
7. டான்‌ எழுத்து 
இ. “அ? கல்வெட்டின்‌ வலது புறமுள்ள தொடர்பில்லாத பகுதி 


. விலை கொண்டு அனு .. 
௨ கனார்‌ பணமும்‌ . . 
. ருள்‌ தவிற்து ஊரில்‌ சுருக்கி . . 


க்காசு திருவிளைபாடு பொன்‌ . . 


தல்‌ தேவதான . . . 
இராசேந்திரசோ . . 


169 


10: வூர்பிடாகை 

11. ரும்‌ கேசவ . . ருன்மாணி. 

12. து ஊரிற்‌ சுருக்கி வேறு முதலாக 

13. 

ஈ, “அ” கல்வெட்டின்‌ இடது புறமுள்ள தொடர்பில்லாத பகுதி 


1. யும்‌ உட்பட . ற்றுக்குடிமனை ௨ 


2. . . காலும்‌ இவ்வூர்‌ ஸலெயார்‌ பக்கல்‌ 
3 . சல்மற்று . . கீழை... 

4. . . , யாரும்‌ வ,ஹடெயமமுாய்வரு ' 
ட] . . மான அந்தராயம்‌ கடமை ம 

6, , . , மற்றும்‌ இருபத்‌ , , டாவது 
7... இவ்‌. 

8 ள்‌ செம்பே . . 

9. .... ஷடெயமுமாய்‌ வருகிற பெருந்த . , 
10. . க்கீழ்‌ கண்மை ஊராட்சி வெள்ளே 
பிட லல றைந்‌ தட்டார்‌ பாட்டம்‌ ஆக 

12. . . .னும்‌ பேரால்‌ பதவிதான்‌ 


18. . டு இப்படிக்கு கல்லிலுஞ்‌ 'செம்பிலும்‌. 

14. திருவாய்மொழிந்தருளினமைக்கு இவை 

15. மந்திரி எழுத்து இவை மு 

16. கண்மை ஊரா . . .. காலமுதாட்டுப்‌ பாட்டம்‌ 
17. யிறை சுட்டா . . . லமாக இட்டு கடவ 
18. . அம்‌ கைக்‌ கொண்டு திருப்படி மாற்று . 

19. இப்படிக்கு . - தாட்டுப்‌ பெருமணலூர்‌ . . 

20 . . . மொழிந்தருளி . 


170 -: 


த நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 105 /2003 


1. 


மாவட்டம்‌ $ மதுரை ஆட்சி ஆண்டு : 3 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1219 
ஊர்‌ : ஆமூர்‌ ன்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு 
! மி ்‌ 
வப்‌ தட்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : = 
அரசு 2 பிற்காலப்பாண்டியர்‌ 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ ஊர்க்‌ இலவுவட்டு 1 ம்‌ 
சுந்தரபாண்டியன்‌ 5 ] 
இடம்‌ : வயல்களுக்கிடையிலுள்ள சிவன்‌ கோயிலின்‌ அர்த்தமண்டப வடபுற அதிட்டானம்‌ 
குறிப்புரை: தென்பறப்பு நாட்டு ௩ல்லணி ஆமூர்‌ சுந்தரத்தோளன்‌ திருப்பூவணமுடையானான 
செம்பியன்‌ பல்லவரையன்‌ உச்சி சந்திக்கும்‌ சந்தியாதீபத்‌ திருவிளக்கிற்கும்‌ தானம்‌ 
அளித்ததைத்‌ தெரிவிக்கிறது இக்கல்வெட்டு, இதற்காக எட்டுப்‌ பழங்காசுகள்‌ 
அளிக்கப்பட்டுள்ளன. 
கல்வெட்டு : 


சிரி கோமாற பன்மரான திரிபுவனச்சகாரவத்திகள்‌ ஸ்ரீசோணாடு 
கொண்ட சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு ௩வது உடையார்‌ 
திருப்பூவண முடை 


ய நாயனார்‌ தேவதானந்‌ தென்பறப்பு நாட்டு நல்லணி ஆமூர்‌ சுந்தரத்‌ 
தோளன்‌ திருப்பூவணமுடையானான செம்பியன்‌ பல்லவரையற்கு 


. இவ்வூர்‌ நாயனார்‌ சிவபிராமணர்‌ முப்பது வட்டத்து சிவபிராமணரோம்‌ 


திருப்பூவணமுடையான்‌ .. கண்ட பட்ட .. உய்யவந்தா 


னும்‌ நட்டாவுடையன்‌ நம்பியும்‌ இம்மூவோமும்‌ இவற்கு பிடிபாடு குடுத்த 
பரிசாவது இன்னாயனார்க்கு பள்ளியெழுச்சிக்கு சந்தி 


171 


5. திராதித்ததற்‌ செல்வதாக நிச்செயித்த சந்தியா தீபத்‌ ., திருவிளக்கு 
நாலுமாக . . . சம்மதித்து இவர்‌ பக்கல்‌ . . . 


6. பழங்காசு ௮ இப்பழங்காசு எட்டுக்கும்‌ சந்திராதித்தவற்‌் சந்தியாதீபம்‌ 
எரிப்போமாக கல்லிலும்‌, செம்பிலும்‌ வெட்டிக்‌ குடுத்தோம்‌ முப்பது 


[1 5 
7. த்தோம்‌ செம்பியன்‌ பல்லவரையனுக்கு இப்படிக்கி [௬௨] திருப்பூவன 


முடையா சீரிளகோவன்‌ எழுத்து இவை சீயகண்ட பட்டன்‌ உய்ய 


வந்த .. 


172 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 106/ 2003 


மாவட்டம்‌ 1 மதுரை ஆட்சி ஆண்டு: 13 
வ AS வர்ல ண்டு: கி.பி. 1203 
ஊர்‌ : ஆமூர்‌ 
மொழி : தமிழ்‌ இந்தியக்‌ கல்வெட்டு ] 
எழுத்து: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ்‌ 
அரசு : பிற்காலப்பாண்டியர்‌ முன்‌ பதிப்பு: ல 
ட்‌ A ப்‌ 

மன்னன்‌ : சடையவர்மன்‌ குலசேகரன்‌ ஸ்ப க்கட ட 2 

எண J 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ கருவறை வடபுற அதிட்டானம்‌, 


குறிப்புரை : ஐயப்பொழில்‌ ஈஸ்வரமுடையார்‌ கோயிலில்‌ திருப்பள்ளி அறை நாச்சியாரை 
செம்பியன்‌ பல்லவரையன்‌ எழுந்தருளிவித்து விளக்கெரிக்க நிலம்‌ ஆவணப்படுத்திக்‌ 
கொடுத்ததை இத்துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ குறிப்பிடுகின்றன. 


கல்வெட்டு : 
அ. 1. வாஹிஸ்ரீ பூவி[ன்‌] கிழத்தி மே*]வி வீற்றிருப்ப மேதினி மாது நிதியிற்‌ 


புணர வியப்போர்‌ மட.. .. 


2. குடைநிழற்‌ செங்கோல்‌ நடப்ப கொடுங்கலி நடுங்கி நெடும்‌ பலத்‌ 
தொளி . 


8. திரிபுவனச்சக்கரவத்திகள்‌ சிரி குலசேகர தேவற்கு யாண்டு பதிமூன்றா 
வதின்‌ எதிர்‌ பதினாலாமாண்டு தென்பறப்பு நாட்டு உடையார்‌ திருப்‌ 

&, குடுத்த பரிசாவது இந்நாயனார்க்கு இவ்வூர்‌ செம்பியந்‌ பல்லவரையன்‌ 
திருப்பள்ளிஅறை நாச்சியாரை எ... 


9. .. னுக்கு 


173 


6. 


த . வரம்புக்கு [தெற்கும்‌] இவ்விசைந்த பெருநான்‌ கெல்லைகுள்ப்பட்ட 
[நிலம்‌] கைக்கொண்டு இத்திரு எக்கு சந்திராதித்தவரை .. 


வோமாகக்‌ கைக்கொண். . 


ர்‌ உடையார்‌ ஐய்யப்பொழிலீ[மும]முடைய நாயனார்‌ கோயி . . . 


 திதப . . . [வைத்த] திருநுந்தாவிள .. 


 குடுதேன்‌ 


்‌ டிக்‌ கொள்வதாகப்‌ பிரமாணம்‌ பண்ணிக்‌ குடுத்தேன்‌ .. 


: எழுத்து .. oo 
. ண்ணினேன்‌ ஆசாரி ஞானக்க[று] எழுவற்கரியான்‌ எழுத்து 


174 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 107/ 2003 


மாவட்டம்‌ : 


வட்டம்‌; 


ஊர்‌ : 


மொழி: 


எழுத்து : 


அரசு : 


மன்னன்‌ : 


இடம்‌ : 


மதுரை ஆட்சி ஆண்டு : — 
மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
ற்றாண்‌ 
ர்‌ நூறற டு 
இந்தியக்‌ கல்வெட்டு 1 
தமிழ்‌ முன்‌ பதிப்பு ; 22 


பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ஊர்க்‌ கல்வெட்டு 


முதலாம்‌ மாறவர்மன்‌ ்‌ 
எண்‌ 


சுந்தரபாண்டி யன்‌ 


சிவன்‌ கோயில்‌ தென்புற அதிட்டானப்‌ பகுதி. 


குறிப்புரை : தென்பறப்பு நாட்டு நல்லணி ஆமூர்‌ ஐயப்பொழில்‌ ஈசுவரமுடைய நாயனார்‌ கோயில்‌ 


சிவபிராமணர்‌ சிலர்‌ திருவாலத்தி எரிக்க காசு பெற்றுக்‌ கொண்டமை குறித்த செய்தி 
கூறப்படுகிறது. இரண்டாவது துண்டுக்‌ கல்வெட்டில்‌ மலைக்குடி. மலைமேல்‌ கோல்‌ 
என்ற அளவுகோலால்‌ அளந்த நிலத்தின்‌ எல்லைகள்‌ சொல்லப்படுகின்‌ றன. 


கல்வெட்டு : 


௮. 


1. 


சிரிகோமாறபன்மரான திரிபுவன சக்கரவத்திகள்‌ சோணாடு கொண்ட 
சுந்தரபாண்டிய . . . நாயனார்‌ தேவதானந்‌ தென்பறப்பு நாட்டு 
நல்லணி ஆமூர்‌ [ஐயப்பொழிலீசுரமுடைய நாய]னார்‌ கோயில்‌ சிவ 
பிராமணர்‌ முப்பது வட்டத்தோமும்‌ திருப்பூவனமுடையான்‌ சீரிளங்‌ 


கோவும்‌ சீகண்‌ 


2. ட பட்டன்‌ உய்யவந்தானும்‌ நட்டா[உ]டையான்‌ நம்பியும்‌ இம்‌ 


3. 


மூவோ . . ற்கு திருவாலத்தி சந்திராதித்த[பகற்‌] செல்வதாகப்‌ 
பிரமாணம்‌ பண்ணிக்‌ குடுத்தோம்‌ இம்மூ . . . . வாலத்தி சந்திராதித்த 
[வற்ப்ெபொலிவூட்டாக செல்வதாகவும்‌ கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ . . . . 


டிக்‌ கொள்ள . . . இம்மூவோமும்‌ கொண்ட . . ஈழ .. காசு ௩.. பத்‌ 


திருவாலத்தி சந்திராதித பகல்‌ செல்வதாக கல்லிலும்‌ . . . சம்மதித்து 


175 


இருவாலத்தி . . பண்ணிக்குடுத்தோம்‌ திருப்பூவனமுடையான்‌ சீரிளங்கோ 


பட்ட கண்ட. 


4, ங்கோ[பட்டன்‌ எழுத்து . கண்ட பட்டன்‌ உய்யவந்தா[ன்‌ எ]ழுத்து 


oa 


நட்‌ .. கு குலவேந்தன்னான பதினென்‌ .. னேன்‌ எழுத்து இவகள்‌ 
சொல்ல இப்பிரமாணம்‌ எழுதினேன்‌. இவ்வூர்‌ ஆட்கொண்டவில்லி திரு 


கிழக்கும்‌ வடபாற்கெல்லை கரைக்கும்‌ பறைத்துடவல்‌ தென்வரம்புக்கும்‌ 


தெற்கும்‌ இவ்விசைந்த பெரு நான்கெல்லைக்குள்பட்ட நிலம்‌ பழம்‌ 
பட்டோலைப்டெி ௫” ப ஊலும்‌ 
2. டையார்‌ திருமறை நாயகர்‌ கெவ்கர்வ்லில்‌.. கலிகுடியான திருமறை 


நாயக .. லூரில்‌ சுந்தரத்தோள்‌ வ்ககலுக்கு தெற்கு பிள்ளை முழுமை 
வசக்கல்‌ மலைக்குடி மலைக்குடி மலைமேற்‌ கோலால்‌ தடி 


176 


த. நச. அ. தொல்லியல்‌ துறை 'தொடர்‌ எண்‌ : 108 [2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
£ ட்‌ நூற்றாண்டு 
ம ழப்கு: ஆடா இந்தியக்‌ கல்வெட்டு - 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
த்த i ஊர்க்‌ கல்வெட்டு 1 2 
மன்னன்‌ ; எண்‌ | 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ கருவறை நிலைவாயிலில்‌ உள்ளது. 


குறிப்புரை : இக்கோயிலின்‌ கருவறை நிலைவாயிலைச்‌ செய்வித்தவன்‌ அழகன்‌ அரியானான 
காடுவெட்டி என்று இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 
1. ஷஷிஸ்ரீ இத்‌ 
2. திருநிலை செய்‌ 
3. வித்தாந்‌. அடி 
கள்‌ அரியாநாந 


[| ௬ 


காடுவெட்டி ॥-- 


177 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 109,/,2003, 


மாவட்டம்‌ : மதுரை, ்‌ ஆட்சி ஆண்டு: ௮ 
வட்டம்‌ : மேலூர்‌, வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ 
த. ! , நூற்றாண்டு 
த்‌ அ இந்தியக்‌ கல்வெட்டு ன 2 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து :- தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
ரசு: பிற்காலப்‌ i i ம்‌ 
2 ச த ல தல்‌ ஊர்க்‌ கல்வெட்டு | ல 
மன்னன்‌ : ன கு ள்ண்‌ ர்‌ 
இடம்‌ : சிவன்கோயில்‌ மகாமண்டபக்‌ கிழக்குச்‌ சுவர்‌. 


குறிய்புரை :: மூத்த. பிள்ளையார்க்கு. [விநாயகர்‌] திருவிளக்கு. எரிப்பதற்காக. அறுபது: பணம்‌: 
தானமாகத்‌ தரப்பட்டிமை.: ':மற்றியும்‌, ' ' நில்விற்பனை ' பற்றியும்‌. இத்துண்டுக்‌ 
கல்வெட்டுகள்‌ சொல்கின்றன. 


கல்வெட்டு : 

அ. 1. ஸ்ரீகோமாற ௨௪-2ரான கிவாவ, .. 
2. நா[ய]ற்று ௪ உம்‌ வவத்து 
3. தேவதான நல்லணி ஆமூர்‌ . : . 

4, இவ்வூர்‌ வாணவபகாரி தி... 

5 


. நாயனார்க்கு ஸ.திவி . ; . 


. இடக்கடவதான திருவிளக்கு ௨ இத்திருவிளக்கு இரண்டும்‌ நாங்கள்‌ இ 


2. [ற]றை நாளால்‌ இவன்‌ பக்கல்‌ பற்றின “ப ௬௦ இப்பணம்‌ அறுபதும்‌ 
பற்றிக்கொ, . . 


ம்‌ 


3. ன்றும்‌ மூத்த பிள்ளையாற்குத்‌ திருவிளக்கு ஒன்றும்‌ ஆக விளக்கிரண்டும்‌ 
ச௪ஷடா ய்‌ ்‌ a, 
௨௪ 


178 


[அ 


dq உ ஐ. RW NE 


து ல்க ரில என ற்ப அ ம பட அலைக எதில! அ பிது ப ட்‌ ன 
று விலைகொண்டு குடங்கொண்டு .. ண்டு கோயில்‌ புக்கு அரூாதித்தத ' 


வரை . .. 


, மதித்து கல்வெட்டி குடுத்தோம்‌ முப்பது [வட்டத்து ாஹணரோம்‌] 


வீரணுக்கப்‌ பேரயனுக்கு ஆள்க்கொ . , . 


்‌ இவை ஆழ்வாண்ட கூத்தபட்டன்‌ எழுத்து பெருமாள்‌ அப்பனூராண்‌ 


டான்‌ எழுத்து சாத்தனான 


. அம்மைத்தேவன்‌ சாத்தினான்‌ எழுத்து நம்பி திருக்குற்றாலமுடையான்‌ 


எழுத்து இது . _சில்ல 


. பொருள்‌ மாவறுதிப்‌ பொருட்‌ செல . . . 


ன்‌ வல்லது வேறு விலையாவணச்‌ சில(வோலை] .. 
இது து வேறு 


. பொருள்‌ மாவறுதிப்‌ பொருட்‌ செலவோலை.. . . 


... _மையின்றி விலைக்கற விற்று 
௨ண்டு விற்றுவிலையோலை செய்து கு .... .-. 


, யூர்‌ ஊராயிசைந்த ஊரோ . 


1. த்திரு .. ஜவர்க்கு 


. திருவக .. நல்லூர்யாண்‌ 


டாதக , . . சொன்னோம்‌ [தா]ங்கள்‌ இவ்வூர்‌ கைக்கொண்டு 


179 


த. நர. அ. தொல்லியல்‌ துறை  : தொடர்‌ எண்‌ ; 110 /-2003 ்‌ 


மாவட்டம்‌ : மதுரை ்‌ ல ஆட்சி ஆண்டு. : லாரில அன்றில்‌ த்‌ 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : ்‌ கி.பி, 9 - 10 ஆம்‌ 

2 ரஸல்‌ ர்‌. ர ன “பி நூற்றாண்டு 
ஊர்‌ : ஆமூர்‌ ்‌ இந்தியக்‌ கல்வெட்டு ' ) : ய 


மொழி: தமிழ்‌ . ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: வட்டெழுத்து - ்‌ 


முன்‌ பதிப்பு : ர தட்‌ 
அரசு : பாண்டியர்‌ - 
மன்னன்‌ : வல: ஊர்க்‌ கல்வெட்டு க 
எண்‌ ப்‌ ச்‌ 
J 
இடம்‌ : ஆமுர்‌ கண்மாய்‌ மடைத்‌ தூணில்‌ உள்ளது. 


குறிப்புரை : இம்மடையைச்‌ செய்வித்தவன்‌ பெருமை பேசப்படுகிறது. .. இவன்‌. பாண்டியனது 
அதிகாரியாக விளங்கிய கலிதீரனின்‌ தந்‌ைத சாத்தன்‌ என்று தெரிகிறது. 


கல்வெட்டு : 
1. ஸ்ரீபாண்டியன்‌ 
2. செங்கோற்‌ ப 
3. ரிந்து கனம்ஸ்‌ 
4. . தென்னவன்‌ 
9. பேராரைசு கொ[ண்‌] 
6.ட கலிதீரன்‌ தந்தை 
7. கத்தக்‌ வக்‌ 
8. .. லைத்தது .. 
9. இது காத்தான்‌ கால்‌ கீழ்‌ [என்‌] 
10. தலை 


180 


த. நர. அ. தெரல்லியல்‌ துறை : தொடர்‌ எண்‌ : . 111 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 29 
வட்டம்‌ : மேலூர்‌ ்‌ வரலாற்று அடு கி.பி. 1297 
ஊர்‌ கொட்டக்குடி 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ம்‌ 
அரசு ; பிற்காலப்‌ பாண்டியர்‌ ப கம்்டு 1 : 
மன்னன்‌ : குலசேகர பாண்டியன்‌ வ்‌ ] 
இடம்‌ : கம்மளக்‌ கண்மாய்‌ மடை அருகிலுள்ள தனிக்‌ கல்‌. 
குறிப்புரை : ஏரிக்கு மடை செய்வித்ததைக்‌ குறிப்பிடுகிறது. கல்வெட்டின்‌ இறுதியில்‌ ஒரு 
பகுதி செதுக்கப்பட்டுவிட்டது. 

கல்வெட்டு 

1. ஷுஹிஸ்ரீ 

2. எம்மண்டல 

2. முங்‌ கொண்ட 

4. ருளிய ஸ்ரீகுலை 

5. சேகர தேவற்கு 

6. யாண்டு ௨௨௯ வது 

7. ஆடி. 

8. தவூர்‌ உ. . 

9. ருமைட] .. .. 


181 


த. நர, ௮. தெர்ல்லியல்‌ துறை "தொடர்‌ எண்‌ : 112/ 2003 . 


மாவட்டம்‌ : மதுரை பதப்‌ - ஆட்சி ஆண்டு : ரி 
வட்டம்‌ மேலூர்ர்‌ க வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 
i ்‌ ப்‌ நூற்றாண்டு 
ஊர்‌ பனங்காடி. ந "இந்தியக்‌ கல்வெட்டு இ 
மொழி தமிழ்‌ i £,'  * - “ஆண்டு அறிக்கை 1 ர at 
எழுத்து: தமிழ்‌. முன்‌ பதிப்பு : ட்ட 
ய்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு . ர்‌ 1 ய்‌ 
1 . ப 1 
மன்னன்‌ குலசேகர பாண்டி யன்‌ i 1 
இடம்‌ வீற்றிருந்த பெருமாள்‌ கோயில்‌ வடக்கு அதிட்டானம்‌. 
குறிப்புரை :  இராஜேந்திரச்சோழச்‌ சதுர்வேதிமங்கலத்து உத்தமசோழ விண்ணகர 
ட. எம்பெருமானுக்குத்‌ -திருவிடையாட்டமாக,. அம்பவேலி . .என்ற: குளமும்‌ பனங்‌ 
'குளத்துப்‌ பெருநான்கெல்லைக்குள்பட்ட , i நிலமும்‌ . அளிக்கப்பட்டன. இதற்குரிய 
கடமை அந்தராயம்‌ முதலிய வரிகள்‌ எம்பெருமானுக்குச்‌ செலுத்தும்படி செய்யப்‌ 
பட்டதை இக்கல்‌ வெட்டு , கூறுகிறது. கல்வெட்டு பல இடங்களில்‌ எழுத்துப்‌ 
பிழைகளுடன்‌ உள்ளது. 
கல்வெட்டு : 


1. 


மெக்கீற்திக்குமேல்‌ ஸ்ரீ கோச்சடைய பன்மரான திரிபுவனச்‌. சக்கர 
வத்திகள்‌ ஸ்ரீ குலசேகர தேவற்கு யாண்டு ௦௩ எதிர்‌ பத்தாவது தனு 
ஞாயிற்று இருபத்தொன்றாந்‌ திய(ன்‌)தியும்‌ அபரபக்ஷத்து ஸத்தமியும்‌ 
நாயிற்றுக்கிழமையும்‌ பெற்ற அத்தத்து நாள்‌ தென்பறப்பு நாட்டு 
ஸைஹதேசம்‌ த்‌ திவ்ய, சதுவே-3 


2. மங்கலத்து மஹாஸெயோரமும்‌ ஸலெலக்குச்‌ சமைந்த்‌ வேலி 


செய்வோமும்‌ இவ்வூர்‌ நடுவுநிலை உத்தமசோழ .விண்ணகரெம்‌ 
பெருமான்‌ கோயிற்‌ திருவடிப்பிடிக்கு [ம்‌] நம்பிமாரும்‌ இக்கோயிலிற் 
ஸ்ரீ வைவவர்களும்‌, இக்கோயிலிற்‌ ஸ்ரீகார்யஞ்‌ செய்வாகளும்‌ இவ்‌ 
வனைவோமும்‌ தென்கல்லக நாட்டுக்‌ குலசேகரபுரத்து வியாபாரி பொ 


182 


. ச்ஞ்சுவாமி வணிகன்‌ கருணா[க]ரதேவன்‌ தில்லை அழகனுக்கு நியோகங்‌ 
குடுத்த பரிசாவது இவன்‌ இன்னாட்டு மழவெட்டி நாககுறிச்சி 
யுடையார்கள்‌ பக்கலும்‌ இவர்கள்‌ ப[க்‌*]கல்‌ ஸ்ரீதனம்பெற்ற சேந்த 
மங்கலமுடையார்கள்‌ பக்கலும்‌ இவன்‌ விலைகொண்டு அனுபொவித்து 
வருகிற இந்நாட்டுப்‌ பனங்குளம்‌ இவ்விராஜே[ந்திர]சேரழச்‌ 


. சதுர்வெ-சி மங்கலத்து ஸலெயார்‌ நாககுறிச்சி வேளான்‌ அவனிகாந்தப்‌ 
பல்லவரையனுக்கு முன்புவிற்ற இவ்வூர்‌ விலைப்‌ பிரமாணத்து எல்லை 
கீழ்பாற்கெல்லை காப்புக்கால்‌ நல்லூர்‌ தென்னெல்லைக்கு மேற்கும்‌ 
தென்பாற்கெல்லை சேந்தமங்கலத்துத்‌ [நெதென்னெ(னெ)ல்லை நேருக்கு 
வடக்கும்‌ மேல்பாற்கெல்லை சேந்தமங்கலத்துக்‌ குள[ங்‌] கரைக்குக்‌ 
கிழக்கு 

. வடபாற்கெல்லை முக்குளத்துத்‌ தன்னெல்லைக்குத்‌ தெற்கு இவ்விசைந்த 
பெருநான்கு எல்லைக்கு உட்பட்ட நிலமும்‌ இக்குளப்பால்‌ இவ்வவனி 
காத்த வேளான்‌ பேரான அ[ம்ப]வேலி யென்று பேரான குளமும்‌ 
இப்பனங்குளத்துப்‌ பெருநான்கெல்லைக்குட்பட்ட நிலமும்‌ எப்பேர்ப்‌ 
பட்டதும்‌ குளமிரண்டும்‌ முன்பு இவ்வெம்பெருமான்‌ திருவிடையாட்டமாய்‌ 
இவ்வூ 


௨ற்கடமை அந்தராயம்‌ இவ்வெம்பெருமானுக்கு இறுத்துவரச்‌ செய்தே 
இந்நாடாழ்கிற உடையார்‌ களவழிநாடாழ்வான்‌ இதிற்‌ கடமை 
அந்தராயம்‌ வன்பற்றாக எங்கள்‌ தளற்றி ஆலே கைக்கொண்டு 
வந்தமையில்‌ இப்பட்டாங்கு இக்காராண்மை தில்லை அழகனுக்கு 
இவ்வளைவோமு[ம்‌] அறிவித்தமையில்‌ இவன்‌ வன்பற்று விடுவித்து 
இவ்வெம்‌ பெருமானுக்கே கடமை அந்த[ரா]யமாகத்‌ தருகிறேனென்று 
[இ]வன்‌ எங்களுக்குச்‌ சொன்னமையில்‌ இப்பிடி செய்து தருவானாக 
இவனுக்கு நாங்கள்‌ இசைய முன்பு இவ்வெம்பெருமான்‌ திருவிடை 
யாட்டங்கள்‌ அளந்துவருகிற காலுங்‌ கோலும்‌ இறுத்துவருகிற இறுப்பின்‌ 
படியும்‌ இவனுக்குத்‌ தவித்துவ[து]க்கு நாங்கள்‌ இசைந்து. நிச்செயித்த 
கோல்‌ குடிதாங்கியால்‌ அளந்த நிலம்‌ ஒரு மாவுக்கு பயிர்‌ பாற்து பாத்த 
நிலத்துக்குக்‌ கடமை கொள்ளும்படி இக்கோலால்‌ நிலம்‌ ஒருமாவுக்கு 
சோழகுலாந்தகன்‌[னோ0]டாக்கும்‌ வளையிற்‌ காலால்‌ கடமை நெல்‌ ஐ. 


._ங்கலமும்‌ அந்தராயம்‌ அஞ்சுமேனி திரமம்‌ ஒன்றே காலும்‌ ஆக இப்படி. 
கடமை அந்தராயம்‌ கொள்வோமாகவும்‌ இப்படி இக்கோயிலிலே அளந்து 
தரவு கொள்வானாகவும்‌ ஆடிக்‌ குறுவை விளையில்‌ இதில்‌ ஒன்றுபாதி 
இறுப்பானாகவும்‌ ஐப்பிகைக்‌ குறுவை ஒன்று முக்கால்‌ இறுப்பானாகவும்‌ 
வரகு விளைந்த நிலத்துக்கு மூன்றதொன்று இறுப்பானாகவும்‌ தினைக்கு 
நாலதொன்று இறுப்பானாகவும்‌ ஐற்பிகைக்‌ குறுவை அரிகால்‌ நடில்‌ 


183 


்‌ ஒன்று, கால்‌ . கடமை: அந்தராயம்‌ இறுப்பனாகவு "இப்படி “சம்மதித்து 


இந்நிச்செயிப்பு சந்திராதித்தவற்‌ - செல்வதாகவும்‌ .... இப்படி”: -)கல்லிலும்‌. 
செம்பிலும்‌ , வெட்டி குடுப்போமாகவும்‌ : இப்படி ியேர்கம்‌ : பண்ணிக்‌ 
குடுத்தோம்‌ - இத்தில்லை அழகனுக்கு : மஹாஸ்வெயோமும்‌ வேலி 
செய்வோமும்‌ கோயில்‌. திருவடிப்‌ பிடிக்கும்‌ நம்பிமாரோமும்‌ 'ஸ்ரீவயிஷவ 


ஸ்ரீகார்யஞ்‌ செய்வோமும்‌ இவ்வனைவோமும்‌ இப்படி இவை, குளக்‌ i 


க்‌ 


எனப்பட்ட இவ்வூர்‌ கிம்‌ ல வ. பனு அம 


ன்மேல்லூர்‌ “ சதுவேஃதிமங்கலத்து. 'வாமனன்‌' ஸ்ரீவல்லபன்‌ கூத்தன்‌ 


எமுத்து இவ்வூர்‌ வானவன்மாதேவிச்‌ சேரி ஏனாதிமங்கலத்து ' ஆதெயன்‌ 
எச்சமுத்த : நாராயணபட்டன்‌ எழுத்து ஒன்பதாஞ்சேரி: திருவெள்ழ்ழறை 
[ராமா]நுஜநாராயணன்‌ சீராமன்‌ சேனாபதிஉாஸன்‌ எழுத்து இது 


்‌ பெரியான்‌ -சகி,யன்‌ சயிஞாதன்மைக்கும்‌ : இவ்வூர்‌ -வானவ்ன்மாதேவிச்‌ 


“ 


சேரிப்‌ ்கும்ல்லாசான்கி கேசவன்‌: சீரிளங்கோஃ பட்டனெழுத்து இது 
வானவன்மாதேவிச்சேரி ஏனாதிமங்கலத்து ஆசதெ,யன்‌'எச்சமுத்த வாமன்‌ 
பட்டன்‌ ஏழுத்து இது வாமனன்‌ சிரிவல்லவன்‌ . சயிஞாதன்மைக்கும்‌ 
இவ்வூர்‌ . அழகியான்‌ .மாதவன்‌ உறங்காவில்லி உ௱ஸன்‌ எழுத்து இவை 
இவ்வூர்‌ சுந்தரசோழ பாண்டியச்சேரி திருவெள்ளறைக்‌ . காஷபன்‌ 
பட்டன்‌ உய்யவந்தானான உலகுய்யவந்த பாண்டிய [எப ஹமாய] 
னெழுத்து இவை எச்ச. ்‌ i ்‌ 


. மூத்தி கருமாணிக்காழ்வான்‌, எழுத்து. இது ' இவ்வூர்‌ ஸ்ரீவைஜவரில்‌ 
'அரபடமுத்தி உ௱ஸன்‌ ஸயிஞாதன்மைக்கு ஸயிஞமுடிச்சேன்‌ : இவ்வூர்‌ 


புருஷோத்தம பாடகன்‌ எழுத்து இவ்வூரில்‌ இக்கோயிலில்‌ ஸ்ரீகார்யஞ்‌ 


செய்யும்‌ திருவெள்ளறைச்‌ சீராமன்‌ நாராயணதாஸன்‌ எழுத்து இக்‌ 


கோயில்‌ ஸ்ரீ வையிலுவரில்‌: அழகியான்‌ மாதவனான: 'உறங்காவில்லி 
உ௱ஸன்‌ எழுத்து இவை இக்கோயிலிற்‌ திருவடிபிடிக்கும்‌. தாமோதரன்‌ 
ஆட்கொண்ட வில்லி ஆன இராமானுஜ: பட்டனெழுத்து இவை இக்‌ 
கோயில்‌ திருவடி பிடிக்கும்‌. தாமோதரன்‌ . பெருமாளான கருணாகர 
பட்டன்‌ 'ஸயிஞாதன்மைக்கு மாட்டெறிஞ்சேன்‌ இக்கோயிலில்‌ [சீரானம்‌] 
செய்விக்கிற அவ்வூருடையான்‌ பட்டிவிச்சா தரன்‌ நரஸிம்ஹப்‌ பெருமாள்‌ 
உ௱ஸன்‌ எழுத்து இவ்விராஜேந்திரச்‌ சோழச்சேரி திருவாதவூர்‌ ஆசெயன்‌ 
திருவிராமீச்வரமுடையான்‌ ஸ்ரீவாஸுரேவபட்டனெழுத்து இவை முதற்‌ 
சேரி திருவாதவூர்‌ ஆதெ, யன்‌ ஸ்‌ரியதேவன்‌ திருச்சிற்‌ றம்பலமுடையான்‌ 
எழுத்து இவை இவ்வூர்‌ சுத்தரசோழபாண்டியச்‌ த்ய க வடு 


: பரதேவனான.. திருமாலிருஞ்சோலை... த சதக: 


184 


10. உஸன்‌ எழுத்து இவை வானவன்மாதேவிச்சேரி அ[க்னி]கோத்திரத்து£த்‌ 
திருகண்ணபுரமுடையானான நாராயண பட்டன்‌ எழுத்து அழகிய 
[சேணவதை] எழுத்து இவ்வூர்‌ வானவன்மாதேவிச்‌ சதுவெஃகிமங்கலத்து 
ஏனாதிமங்கலத்து ஆதெ,யன்‌ எச்சமுத்த கருமாணிக்கனெழுத்து வானவன்‌ 
மாதேவிச்‌ சேரி வாமனன்‌ அணியரங்கஉாஸன்‌ எழுத்து இவை வானவன்‌ 
மாதேவிச்சேரிப்‌ பெருமி மேலூர்‌ ..... பிரான்பட்டன்‌ எழுத்து 
இவை இவ்வூர்த்‌ திருநல்லூர்‌ பொமனன்‌ திருவாய்க்குலமுடையான்‌ 
ஸயிஞாதன்மைக்கு இப்படிக்கு இவ்வூர்‌ வானவன்மாதேவிச்சேரியான்‌ 
கடிபேரரையன்‌ ஸுப்ரமண்ணியன்‌ வாமனன்‌ திருக்குருகூர்தாஸன்‌ 
எழுத்து இப்படி ஸபையார்‌ அருளால்‌ இவ்வணைவோம்‌ சொல்லவும்‌ 
இந்நியோகம்‌ எழுதினேன்‌ இவ்வூர்‌ சுந்தரசோழ பாண்டியச்சேரி 
அபிமானமேருச்‌ சருப்பேதிமங்கலத்து தூதுவன்‌ ஸ்ரீ பரதேவன்‌! 
கருமாணிக்க தாஸனேன்‌ எழுத்து | 


185 


த. நர. ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 113 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 3020 

வட்டம்‌: மேலூர்‌. வரலாற்று ஆண்டு : கி.பி. 1213 

ஊர்‌ : பனங்காடி 

மொழி : தமிழ்‌ இத்தியக்‌ கல்வெட்டு ] ப 

எழுத்து: தமிழ்‌ தம்‌ ல வல்ல 

அரசு : பாண்டியர்‌ மூன்‌ பதிப்பு: ட 

மன்னன்‌ : குலசேகரன்‌ 2 கல்வெட்டு | 2 

இடம்‌ : வீற்றிருந்த பெருமாள்‌ கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌. 

குறிப்புரை : இக்கல்வெட்டு மதுரையில்‌ இருந்த குலசேகரன்‌ மடிகை (வணிகப்‌ பகுதி) 
சார்ந்த தில்லையழகன்‌ “என்ற வியாபாரி உத்தமசோழ விண்ணகர ஆழ்வாருக்காக 
விலை கொண்டு அனுபவித்து வந்த நிலம்‌ தொடர்பான சிக்கலையும்‌ அது நீக்கப்‌ 
பட்டதையும்‌ கூறுகிறது. கல்வெட்டு பல எழுத்துப்‌ பிழைகளுடன்‌ உள்ளது. 

கல்வெட்டு : 

1. 


ஷுஹிஸ்ரீ திரிபுவனச்‌ சகளவத்தி கோனேரிமேன்கொண்டான்‌ குலசேகரக்‌ 
களவழி னாடாழ்வானுக்கு மதுரைக்‌ குலைசேகரன்‌ மடிகை வியாபாரி 
தில்லை அழகன்‌ பறப்புனாட்‌[டு] இவெள்ளாளரிலே சிலவர்‌ பக்கலும்‌ 
சேந்தமங்கலத்து வெள்ளாளரில்‌ சிலவர்‌ பக்கலும்‌ பனங்குள 
மென்றொரு குளம்‌ விலை கொண்ட விலைபிரமாணத்தில்‌ எல்லை கட்டய 
மங்கலத்தில்‌ கீழெல்லை 


௨யிலெ பன்னா(ப)ட்டான்‌ கோட்டை மயிலாடிகள்‌ சிறிது நிலம்‌ பற்றிக்‌ 


கொண்டு விட்டிலார்களென] மச்சுனனார்‌ அழகபெருமாள்‌ சொல்லு 
கையாலே முன்பு நம்‌ ஓலை [போ]தக்‌ காட்டச்‌ சொன்னோம்‌ 
பன்னாட்டான்‌ கோட்டை மயிலாடிகளுக்கு தன்னோலையுமாளும்‌ போக 
விட்டு விலைகொண்ட விலைப்‌ பிரமாணத்துக்குள்பட்ட நிலம்‌ இவனுக்கு. 
விடுவித்து எல்லைக்‌ கல்லு 


186 


. படிக்‌ கு[ல]க்க இப்படிச்‌ செய்‌[வி]ப்பதாக நம்‌ பா[ப்‌]*பாரை போதத்‌ 


காட்டச்‌ சொன்னோம்‌ இவை மீனவதரையன்‌ எழுத்து யா[ண்]டு 
௩ வதின்‌ எதி[ர்‌*]நாள்‌ ௩[௬ கா] இப்படிக்கு இவை கொங்கராயன்‌ 
எழுத்து இவை பல்லவராயன்‌ எழுத்து குலைசேகரன்‌ களவழிநாடாழ்‌ 
வான்‌ ஓலை தில்லை [அ]ழகன[ஈண்டு] விலை கொண்டுடைய தென்‌ . 
பறப்பு நாட்டு பனங்குளமு [னாமுபனங்காடி] பெருமாள்‌ உத்தம 


| 
. சோழ விண்ணகரயெம்பெருமானுக்குக்‌ கடமை யந்தராயம்‌ இறுத்து 


வருகிற நிலத்தை நாம்‌ வன்பற்றாகப்‌ பற்றி தாம்‌ விலை கொள்‌ 
வதற்கு முன்பு கடமை யந்தராயங்‌ கொண்டுவந்த பனங்குளத்தில்‌ 
தம்முடைய பிரமாணத்துக்குள்ப்ப[ட்‌1*ட நிலம்‌ தமக்காக யிவ்வெம்‌; 
பெருமானுக்கு யாண்டு ௰௩ வதின்‌ எதிர்‌ வது முதல்‌ கடமை 


யந்தராயங்‌ குடுத்தோம்‌ யிறுத்துகை இப்படிக்கு தன்னாய 
| 


_ம்‌ கொள்க இப்படிக்கு [அ]ழகப்பெருமாள்‌ எழுத்து கல்வெட்டிக்‌ கொள்‌ 


வதாக நம்‌ ஓலை குடுத்தோம்‌ ஸ்ரீகுலைசேகரதேவற்கு யா[ண்‌]*“டு' 
௦௩ வதின்‌ எதிர்‌ பத்தாவது முதல்‌ இப்படி யிறுத்து [னாக]. . . [சேகர] : 
மூவேந்தவேளா[ன்‌] எழுத்து 


. சுந்தர சோழப்பாண்டியசேரி அபிமானமேருச்‌ சதுர்பேதிமங்கலத்து 


வாதுலன்‌ இக்கோயில்‌ ஸ்ரீகாரியஞ்‌ செய்கிற கூ 


 த்தன்‌ வல்லவனேன்‌ திருவேங்கடநாதன்‌ எழுத்து இவை இச்சேரி 


மாதேவன்‌ வாமனனேன்‌ எழுத்து இவை இவ்வூர்‌ ௪ 


பைக்‌ கணக்கு பொய்யிலுடையான்‌ சுந்தரத்தோளுடையான்‌ விச்சாதரன்‌ 


அறமுயராழிஉ௱ஸன்‌ எழுத்து 


187 


த நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 114 | 2003: 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 10 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 3226 

ஊர்‌ : பனங்காடி ்‌ 

க ள்‌ இந்தியக்‌ கல்வெட்டு டம்‌ 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : I — 

அரசு : பாண்டியர்‌ 

மன்னன்‌ : மாறவர்‌ மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 3 

சுந்தரபாண்டியன்‌ பன்‌ ] 

இடம்‌ : வீற்றிருந்த பெருமாள்‌ கோயிலின்‌ தென்புற அதிட்டானம்‌. 

குறிப்புரை : தென்பறப்பு நாட்டுப்‌ பிரமதேயம்‌ இராசேந்திரச்சோழச்‌ சதுர்வேதிமங்கலத்து 

நடுவில்‌ திருமுற்றம்‌ உத்தமசோழ விண்ணகர' எம்பெருமான்‌ கோயில்‌ பெருமாள்‌. 
அமுது செய்தருளவும்‌ பரதேசிகளுக்குப்‌ பிரசாதம்‌ அளிக்கவும்‌ இவ்வூர்‌ பிடாகை 
தாமோதரமங்கலத்தில்‌ ஒரு மா நிலம்‌ அளிக்கப்பட்டது. இவ்வூரைச்‌ சார்ந்த 
திருவெள்ளறை பட்டன்‌ உய்யவந்தானான சுந்தரபாண்டிய பிரமாதிராசன்‌ இதனை 
அளித்துள்ளான்‌. இது. குறித்த அரச ஆணையைக்‌ களவழி நாடாழ்வான்‌ 
ஓலையாகக்‌ கோயில்‌ நிருவாகத்தினருக்கு அனுப்பி வைத்ததை இக்லெவெட்டுத்‌ . 
தெரிவிக்கிறது. 

கல்வெட்டு a 

1 


[ஷஹி ஸ்ரீ களவழி] நாடாழ்வான்‌ ஓலை தென்பறப்பு னாட்டு ௨-ஹேயம்‌ 
ஸ்ரீஇராஜேந்திரசோழசது£வேதி மங்கலத்து நடுவிற்த்‌ திருமுற்றம்‌ 
உத்தமசோழ விண்ணகரெம்‌ பெருமான்‌ கோயிலில்‌ திருவடிப்‌[பி] 


2. டிப்பாரும்‌ [ஸரீவைஷ்ணவ/ரும்‌ கண்டு இவ்வூர்‌ திருவெள்ளறைக்‌ 


காஸதபன்‌ பட்டன்‌ உய்யவந்தானாந சுந்தரபாண்டிய உஹாமிராஜன்‌ 
இவ்வெம்பெருமான்‌ அழுதுசெய்தருளப்‌ பரதேசிகளுக்கு வ;ஸாதங்‌ 
குடுக்க இவ்வூர்‌ தெ 


188 


ன்‌ பிடாகை தாமோதரமங்கலத்து வயலில்‌ கொண்டு குடுத்த நிலம்‌ 
இரண்டாங்‌ கண்ணாற்று மூன்றாஞ்செய்‌ நிலம்‌ அரைமாவும்‌ மூன்றாங்‌ 
கண்ணாற்று நாலாஞ்செய்‌ நிலம்‌ அரைமாவும்‌ ஆகக்‌ கோல்‌ குடிதாங்கியா 


ல்‌ நிலம்‌ ஓரு மாவுக்கும்‌ இறுக்கும்‌ கடமையும்‌ அந்தராயமும்‌ நாமும்‌ 
இத்த[ம்‌]*மத்துக்கு உடலாக ஸ்ரீகோமாறபன்மரான கிரலாவனச்‌ சக்கர 
வத்திகள்‌ சோணாடு வழங்கியருளிய ஸ்ரீசுந்தரபாண்டிய சேவற்கு 
பத்தாவது முதல்‌ சந்தி 


. ராதித்தவற்‌ செல்வதாகத்‌ தவிர்ந்து தந்தமைக்கு இவ்வோலைப்‌ படியே 
கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க இப்படிக்கு வீரபஞ்சசரர்‌' 
இப்படிக்கு இவை முத்தூற்றுக்‌ கூற்றத்து ஊரான வானவன்மாதேவி 
நல்லூர்ப்‌ ப 


 ள்ளமுடையான்‌ ஆடவல்லான்‌ ஆதித்த தேவனான பூழியதரையன்‌ எழுத்து 
இப்படிக்கு இவை திருக்கோட்டியூருடையான்‌ கோவன்‌ அழகன்னான 
விச்சாதர மூவேந்தவேளான்‌ எழுத்து இப்படிக்கு இவை குருகுலராயன்‌ 
எழுத்து இப்படிக்‌ 


கு இவை சுந்தரபாண்டிய மூவேந்தவேளான்‌ எழுத்து இப்படிக்கு இவை 


வடகளவழி நாட்டு ஆயிரத்த[யிநூ]ற்றுவச்‌ சதுர்வேநிமங்கலத்து 
ஏழகமீகாம[ன்‌] எழுத்து ஒலை, 


189 


த. நா. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ ; 


115 / 2003 


ஆட்சி ஆண்டு : 11 


மாவட்டம்‌ : மதுரை 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 
ஊர்‌ : பனங்காடி தூத்தாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 ஞு 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு: நு 
அரசு : பாண்டியர்‌ ர்‌ வத்த கல்வெட்டு : 1 a 
மன்னன்‌ .; ந பட ர்‌ 
இடம்‌ : வீற்றிருந்த பெருமாள்‌ கோயில்‌ தென்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை : தென்பறப்பு நாட்டு பிரமதேயம்‌ இராசேந்திரசோழச்‌ சதுர்வேதிமங்கலத்துச்‌ 
சபையார்க்குத்‌ தரப்பட்ட அரசு ஆணை இது. இப்பிரமதேயத்துப்‌ பிடாகையில்‌ இருந்த 
நிலங்களின்‌ வரிகள்‌ தவிர்க்கப்பட்டு - அவை தரப்பட்ட திருமாலிருஞ்சோலையில்‌ உள்ள 
திருவாழி (சக்கரத்தாழ்வார்‌) ஆழ்வார்க்கு. அமுதுபடிக்காக அளிக்கப்பட்டுள்ளது. 
இத்திருவாழியாழ்வாரை துஞ்சலூருடையான்‌ எழுந்தருளுவித்ததாக இரககிவட்டு 
கூறுகிறுது. 
கல்வெட்டு : 
1. ஷுஹிஸ்ரீ திருபுவன சக்கரவத்திகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ தென்‌ 


பறப்பு தாட்டு 


ஸ்ரீ இராசேந்திரச்சோழச்‌ 


2. வஹஃெயம்‌ சதுர்வேதிமங்கலத்து  ஸஸஹெ 
யார்க்குத்‌ தங்களூ 
3 


ரும்‌ உள்பிடாகை தாமோதரமங்கலமும்‌ நாகுடியில்ப்‌ பாதியும்‌ மேலை 


யாவாணர்‌ 


குளமும்‌ வேலங்குடியும்‌ . . [ஞயர்பாறும்‌ பொய்யீ]லில்‌ பத்தன்‌ வடலிச்‌ 
சத்துருக்கள்‌ ப்‌ 


190 


14, 


15. 


16. 


. ட்டியும்‌ துண்டுபட்டபடியாகையில்‌ .... குளமும்‌ கம்பலையும்‌ ஏழகப்‌ 


பெருமாளும்‌ தவரி குழியும்‌ கீ 


ழைப்‌ பனங்காடுரைக].. ஆக இவ்வைனத்துப்‌ பற்றுள்பட தேவதானம்‌ 


திரு 


. விடையாட்ட [இறையிலி] உள்ளவையும்‌ பல நாயன்மார்க்கும்‌ முன்பி 


லாண்டு முதல்‌ 


. இறுத்துப்‌ போதும்‌ கடமை யந்தராயமும்‌ நீக்கி கீழிரணியமுட்டத்துத்‌ 


திருமாலிரு 


. ஞ்சொலை நின்றருளிய பரமலாமிகள்‌ கோயிலில்‌ அவ்ர்‌ பல்ல 
. வராயர்‌ ஏறப்‌ பண்ணின திருவாழியாழ்வார்க்கு அமுதுபடி சாத்துபடி உ 
 ள்ளிட்ட நாநா விபெஷ வஸங்களுக்கும்‌ 

. பூஜைகளுக்கும்‌ திருப்பணிக்கும்‌ பதினொன்றாவது மாசிமாத முதல்‌ தி 


. ருவிடையாட்ட இறையிலியாகக்‌ குடுத்து நம்‌ வரியிலும்‌ கழிக்கக்‌ சொன்‌: 


னோம்‌ 


இப்படிக்கு நத்தத்திலும்‌ . எல்லைகளிலும்‌ திருவாழிக்கல்லும்‌ நாட்டிக்‌ 
குடுத்து தங்கள்‌ 


ஊரிலும்‌ பிடாகைகளிலும்‌ கடமை விநியோகம்‌ பொன்வரி தருவதாகவும்‌ 
காரிய ஆரா 


ய்ச்சி.... 


191 


த. நா. அ. தொல்லியல்‌ துறை .. தொடர்‌ எண்‌ : 116 / 2003. 


ப 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு: - 431. 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 
ஊர்‌ : பனங்காடி ்‌ திகு 
இந்தியக்‌ கல்வெட்டு ட 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ்‌ க ன 
அரசு : பாண்டியர்‌ ந 
மன்னன்‌ : மாறவர்மன்‌ சுந்தரபாண்டி யன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 5 
்‌ எண்‌ | 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ வடபுற அதிட்டானம்‌, ., 


குறிப்புரை : இராசேந்திர சோழச்‌ சதுர்வேதிமங்கலத்துச்‌ சபைக்கு அமைந்த “வேலி செய்வார்கள்‌ , 

அவ்வூர்‌ வானவன்மாதேவிச்சேரி ஏனாதிமங்கலத்து ஸ்ரீவாமனான  கருமாணிக்‌ 
காழ்வானுக்கு ஆறுமா நிலத்தினை வரி நீக்கித்‌ தேவதான இறையிலியாக விலை 
செய்து கொடுக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. 


கல்வெட்டு : 


1. பூமலர்‌ திருவும்‌ போர்‌ ஜய மடந்தையும்‌ தாமரை குவி முலை ஐயப்புயத்‌ 
திருப்ப . வில்வெள்ளி தடதாமரைக்‌ காதல்‌ மா . .. ந்திணை. . . ண்டி 


2. திருமுடி சூடி செங்கோலே பாசக்‌ கொற்றத்‌ தாளாறக்குடைக்‌ கீழை 
நிழற்ற[க]கற்றைக்‌ கவரிகாவலர்‌ வீச. விடைகதிர்‌ நவமணி வீர 
ஸிம்ஹாசனத்துடன்‌ முடிசூடியும்‌ பாருலகுக்குருவேலி பங்கய மலர்க்‌ 
கரங்குவித்து பார்த்திபர்‌ மங்கையர்‌ திரண்டு பணிந்து சேவடிச்சூடி 
சென்னி மெளலி சுடர்பணி மேலிட சிவந்த விவன்‌ மலர்‌... 
யாரொடும்‌ வீற்றிருந்தருளிய மாமதி குலம்‌ விளக்கிய கோமுதல்‌ 


கோமாற பம்மரான திரிபுவனச்‌ சக்கரவர்த்திகள்‌ 


192 


3. 


ஸ்ரீஸாஈ௱பாண்டிய தெவற்கு யாண்டு ௪ வதினெதிராமாண்டினெதிரர 
மாண்டு 8&ப நாயற்று ௨௰௫ ந்தியும்‌ அப௱பக்ஷத்து துவாஈளியும்‌ 
செவ்வாய்க்கிழமையும்‌ பெற்ற ரோசணி நாள்‌ தென்பறப்பு நாடு 
வவதேசம்‌ ராஜேந்திரச்‌ சோழச்‌ சதுர்வேதிமங்கலத்து ஸலைக்குச்‌ 
சமைந்த வேலிசெய்வோம்‌ வானவன்மஹாதேவிச்சேரி ஏனாதி! 
மங்கலத்து [ஆதெ]யன்‌ ஸ்ரீவாமனான கருமாணிக்காழ்வ . . ஹஹா! 
[திராய]னுக்கு ஊரில்‌ பிறிஞ்சு வேறு முதலாக எப்பேர்ப்பட்ட 
வினியோகங்களும்‌ விற்றுக்‌ குடுத்த நிலமாவது இவ்வூர்‌ பெருங்குளத்து. 
உய்யக்கொண்டான்‌ மடைப்பற்றுக்கு மேற்கு நடு 


4. விற்‌ கண்ணாற்றுக்கு நடுவு கோல்‌ குடிதாங்கியால்‌ மாஞ்செய்‌[ நி]லமரை . 


மாவும்‌ சுந்தரத்தோள்‌ வயக்கல்‌ தடி நிலம்‌ ஒருமாவும்‌ கோணச்செய்‌ : 
நிலமரைமாவு [சக்கிலியசெய்‌ நிலமரைமாவும்‌ எருமைச்‌ செய்‌ நிலமரை ! 
மாவும்‌ இரட்டையொடு இலுப்பைச்செய்‌ நிலமரைமாவும்‌ பிலாற்றுக்கு :. 
கிழக்கு பூமிதேவி வயக்கல்‌ நிலம்‌ ஒருமாவும்‌ மேலை அடங்காத்‌ திடல்‌. 
முக்காணியும்‌ இவன்‌ காணியாய்‌ திறந்துழவான ஊருணி வடவாய்‌ ' 
நிலம்‌ காணியும்‌ ஊர்‌ பொதுவிற்‌ திறந்து காணி செய்து கொண்ட. 
கணக்கன்‌ செய்‌ நிலமரைமாவும்‌ 


. ஆக நிலமாறுமா இந்நிலமாறுமா ஊரில்‌ பிறிஞ்சு வேறு முதலாய்‌ ஊரில்‌ 


6. 


வரித்தொடுப்பு பொன்வரி வினியோகம்‌ வெட்டி முட்டையாள்‌ . 
வெள்ளோலை .. .. பஞ்சுபீலி சந்திவிம,ஹபேறு மற்று .. டுகொத்த 
அளக்கக்கடவ விநியோகங்களெல்லா தவிந்து தேவதான இறையிலியாக 
இந்நிலமாவும்‌ கல்லுநாட்டிக்‌ குடுத்து இப்பரிசு இப்படி கல்லிலும்‌ 
செம்பிலும்‌ வெட்டிவித்து திருவாய்கேழ்வி திருமுகப்படியேய்‌ சந்திரா 
தித்தவத்‌ செல்வதாக இவனுக்கும்‌ இவன்‌ வம்சத்தார்க்கும்‌ விற்றுக்‌ 
குடுத்தோம்‌ ஸபைக்குச்‌ சமைந்த வே 


லி செய்வோம்‌ இப்படி விற்றுக்‌ குடுத்த இ  நிலமாறுமாவுக்கும்‌ 
எமிலிசைந்த விலைப்‌ பொருளெல்லாம்‌ விலையாவணகளத்தே காட்டி 
கைச்செலக்கொண்டு விற்றுக்‌ குடுத்தோம்‌ வாமனன்‌ கருமாணிக்காழ்வான்‌ 
ஸுஈூ,பாண்டிய வ,ஷாதராயனுக்கு ஸலெக்குச்‌ சமைந்த வேலிசெய்வோம்‌ 
இப்படி இப்பிரிவு வினியோக [ஓலை எழுதினேனும்‌ சுந்தரசோழ 
பாண்டியச்சேரி இவ்வூரா[ந்‌] ஸ்ரீபாலன்‌ சேந்தனான திருக்கண்ணபுர 


193 


முடையானான பெரியகோயில்‌ உ௱ஸன்‌ எழுத்து இப்படிக்கு இவை சுந்தர 
சோழபாண்டியச்சேரி அவிமானமேரு [சது]வெ.$3 மங்கலத்துச்‌ சிவ[ல்‌] 

7. லவன்‌ சுந்தரதோளுடையான்‌ எழுத்து இப்படிக்கு இவை இச்சேரி இக்குடி 
ஸ்ரீமாத[வ]வாமனனான பெரியகோவில்‌ -நம்பி எழுத்து இப்படிக்கு 
இது . ராஜே, சோழசேரி திருவாத்வூராத்ரேயன்‌ திருமறை நாயகன்‌ 
ஸ்ரீ நாரஸிம்ஹ[ன]ான திருவாசக. நம்பி எழுத்து. இப்படிக்கு இவை 
அழகிய மணவாள .. னான தென்னவன்‌ .. எழுத்து இப்படிக்கு இவை 
வானவன்‌ மஹாதேவிசேரி. பெருமைநல்லூர்‌ சதுகி$கேசவன்‌ . சீரிளங்‌ 
கோவான வடமாமலிஉாஸன்‌ எழுத்து இது சு ந்தரசோழபாண்டி 


8. .யசேரி வலவூராங்ம,ஸன்‌ நாராயணன்‌ திருக்கண்ணபுரமுடையானெழுத்து 
இப்படிக்கு இது இசேரி அனுத்துவமங்கலத்து கவுணியன்‌ . . . கேசவன்‌ 
தக்ஷிணாமூர்த்தி எழுத்து இப்படிக்கு திருவாய்க்குலம்‌ பட்டனான 
அழகிய மணவாள£ாஸ னெழுத்து. 


ம்‌ 


194 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ ; 117 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வல்லம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 17 - ஆம்‌ 

. த நூற்றாண்டு 
ஊரா ; கூததபபனபட்டி . ட ட . | 

இந்தியக்‌ த்‌ | 145] 1957 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: தமிழ்‌ இன்‌ பதியப்‌ = 
ர == ஊர்க்‌ கல்வெட்டு | ச 
மன்னன்‌ ல்‌ எண்‌ ] 
இடம்‌ : நவக்குடி கண்மாயில்‌ உள்ள கிணற்றுக்கு அருகில்‌ நடப்பட்ட கல்‌. 


குறிப்புரை : மருதன்‌ தொண்டைமான்‌ கிணறு ஒன்று வெட்டியதைக்‌ கூறுகிறது. 


கல்வெட்டு : 


. ஸ்ரீகழிகோ 
ட்டை ஈழ 

. தீதரைய[ன்‌] 

. அரை[னை]வீர 
ன்‌ மகன்‌ [அ]௬ 


கன்‌ தொண்‌ 


= 


டைமான்‌ 
வெட்டின 
. கிணறு அ 
. னைத்தது 
. [ச]முந்திரன்‌ 
. இத்தன்‌ 
ம ந[ரஸிம்‌] 
... [8கெ.தலி] 


மூ 00:13 ஐ ஐ. ம. 


டட பூ பட பம்‌ பூ 
கூ ஹே ஜு ம 


195 


த. நா. ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 118 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ட 
வட்டம்‌ :. மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 9 - 10 ஆம்‌ 
நூற்றாண்டு: 
த்து கழ்வளவு இந்தியக்‌ கல்வெட்டு \ 
்‌ மொழி: தமிழ்‌, சமஸ்கிருதம்‌ ஆண்டு அறிக்கை J 
எழுத்து: தமிழ்‌, கிரந்தம்‌ : முன்‌ பதிப்பு : க 
வப்‌ ந ஊர்க்‌ கல்வெட்டு ] i 
மன்னன்‌ : - எண 16 
இடம்‌ : பஞ்சபாண்டவர்‌ மலை அடிவாரத்தில்‌ பாறையில்‌ உள்ள உரல்‌ மற்றும்‌ தமிழ்‌ - 


பிராமி கல்வெட்டு அருகில்‌ உள்ள பாறை. 


குறிப்புரை : இரண்டு கல்வெட்டுகளும்‌ ஆட்பெயர்களைக்‌ குறிக்கின்றன. உரலை ஸ்ரீகட்டி 
என்பவர்‌ செய்தமை முதற்கல்வெட்டில்‌ தெரிகிறது. இரண்டாவது கல்வெட்டு 
த ஸ்ரீகாலன்‌ அரட்டி என்பவரது பெயராக உள்ளது, 


196 


த. நர. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 119 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ட 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 17-ஆம்‌ 
. நூற்றாண்டு ' 

ஊர்‌ கீழவளவு இந்தியக்‌ கல்வெட்டு _ 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

டல்‌ ழு ஊர்க்‌ கல்வெட்டு | த 

மன்னன்‌ : -- எண்‌ ] 

இடம்‌ : தமிழ்‌-பிராமி கல்வெட்டுக்‌ குகைத்தளத்துக்‌ கற்படுக்கையில்‌ உள்ளது. ்‌ 


i 
ப 
! 


குறிப்புரை : விரோதிகிருது வருடம்‌ சங்கராயன நாளில்‌ பூஞ்சுருட்டி பெரும்படைக்‌ ' 
கொல்லனின்‌ மக்கள்‌ பூமியழகர்‌, சுந்தர அலங்காரப்பிள்ளை என்பவர்கள்‌ பெயர்‌: 
களை எழுதியது இடைச்சிவத்தி என்பவர்‌ என்று இக்கல்வெட்டிற்குப்‌ பொருள்‌ , 
கொள்ளலாம்‌. : 


கல்வெட்டு : 
. விரோதகீறி விருச$ ஸ்ரீ சென்கீராஇரயன நாள்‌ 


1 
2. பூஞ்சுற்தியில்‌ பெருடிபடை கொல்லான்‌ 


மே 


மக்கள்‌ பூமியழகர்‌ சுந்தர அலங்காரந்‌ 


4, பிள்ளான்‌ எழுற்து இடைச்சிவந்தி 


197 


க. நரா. அ. தொல்லியல்‌ துறை : தொடர்‌ எண்‌ .. 120 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 21 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1238-39 
ஊர்‌ ; : மேலவளவு பட்ட ர்க 
| இத்தக ௧ லட்டு i 3846/1985 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து : தமிழ்‌ ரு முன்‌ பதிப்பு : _— 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ட்‌ - 

ட ப ஊர்க்‌ கல்வெட்டு |, 
மன்னன்‌: மாறவர்மன்‌ ்‌ எண்‌ 


சுந்தர பாண்டியன்‌ 
இடம்‌ : பறம்புக்‌ கண்மாய்‌ பாறையிலுள்ள கல்வெட்டு. 


குறிப்புரை : கல்வெட்டின்‌ நான்கு புறமும்‌ கோடிட்டுக்‌ கட்டம்‌ கட்டப்பட்டுள்ளது. நான்கு 
ட்‌ மூலையிலும்‌ சிறிய அளவில்‌ குத்துவிளக்குகளின்‌ வரிப்படம்‌ பொறிக்கப்பட்டுள்ளது. 
கோவூருடையான்‌ ஆள்வான்‌ சக்கரக்கையன்‌ என்பவன்‌ வடபறப்பு நாட்டுப்‌ 
பறம்பான திருநாராயணமங்கலத்து ஏரியின்‌ கரையை உயர்த்தி அதிகப்படியான 
நீர்‌ வெளியேறக்‌ கலிங்கு செய்து கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது. 


கல்வெட்டு : 
1, ஷுஹிஸ்ரீ சி, வு வனக்‌ சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீசோணா 
2. டு கொண்டருளிய ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யா 
3. ண்டு இருபதின்‌ எதிராமாண்டு அழகர்‌ திருவிடை 
4. யாட்டம்‌ வடபறப்பு நாட்டு பறம்பான திருநாராயண: 
5. மங்கலத்து குளம்‌ கரையும்‌ வளர்த்து வயல்‌ நீர்க்‌ 
6. கு ஈடுபடாமற்‌ பாறை மேலே நீரும்‌ ஏறக்கண்டு கரை கு 
7. லையாமற்‌ கல்லும்‌ படுப்பித்து கலிங்கும்‌ நாட்டு வித்‌ 
8, தான்‌ கோவூருடையான்‌ ஆள்வான்‌ ௪ 
9 


. க்கரக்கையன்‌ ஹஹிஸ்ரீ 


198 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 121 / 2003 


மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி, 15-ஆம்‌ 
நூற்றாண்டு 
ஊம்‌ எமன்‌, இந்தியக்‌ கல்வெட்டு | aes 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை [்‌ 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : i 
SAEs விரய நகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] 2 
மன்னன்‌ : விருபாக்சராயர்‌ ப்‌ ர 
இடம்‌ : பறம்புக்‌ கண்மாய்‌ பாறையில்‌ உள்ள கல்வெட்டு. 
குறிப்புரை : பறம்பான திருநாராயணமங்கலத்து ஊர்ப்‌ பறையன்‌ திருநாராயண சம்பான்‌ 
என்பவன்‌ குளப்பராமரிப்பு பணியாகச்‌ செய்யும்‌ பணிக்கு காணிக்கையாக ஒரு மா 
நிலத்திற்கு ஏழு நெற்கட்டுகள்‌ [அரி] அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுக்‌ 
கூறுகிறது. 
கல்வெட்டு : 
1. ஷுஷிஸ்ரீ மல்லிகார்ச்சுனராயர்‌ குமாரன்‌ ஸ்ரீ 
2. விருபாக்ஷ ராயர்க்கு செல்லா நின்ற மன்மத வரு 
3. ஷம்‌ தைய்‌ மாதம்‌ யசுவதி நாள்‌ . . எ நாட்டு ௮ 
4. ழகர்‌ திருவிடையாட்டம்‌ பறம்பான திருநாராய 
5. ணமங்கலத்து குளத்தில்‌ ... திந்ததுகுபு 
6. கழிக்கோட்டை நாட்டார்‌ திருவுள்ளம்‌ பற்றின 
7. இவ்வூர்‌ [புறஞ்சேரி]யிலிருக்கும்‌ ஊற்பறையன்‌ 
8. மருதன்‌ [மே]னாழியேன்‌ திருநாராயணச்‌ சம்பானும்‌ 


199 


9. இவனும்‌ ... விளைய[பு]றம்‌ பிறித்து 

10. இந்தமடை தந்ததுக்கு கற்தச்சற்கு இந்த ஊர்‌ பறையன்‌ 
11. ... பங்கு இந்த பணம்‌ ௩௰௫டக்கு இந்த 

12, ... ஆயி... காலும்‌ படுதுடவல்லாக விட்ட 

13. ..பெருமடை நேர்‌ குத்து பெருவாய்க்காலால்‌ 

14, நீர்பாய்ஞ்சு விளையும்‌ [விளைந்த] கட்டளையில்‌ ஆக 
15. மேற்கு தம்மு . . , நிலமும்‌ இதுவும்‌ இந்த கட்டளையில்‌ தின 
16. ...லுக்கு தெற்கு ஆணை பள்ளத்துக்கும்‌ 

17. . . . இரண்டினால்‌ நிலம்‌ , . ஆக நிலம்‌ இரண்டு 

18. . . . கவும்‌ , . . ஆண்டு அனுபவித்து கொள்ள 

19. க்‌ கடவனாகவும்‌ இப்படி நில[மும்‌ நில ஏ]ற்றமும்‌ பரிமா 
20. றி. . ல ஒருமா செய்க்கு ஆறு அரியும்‌ ஆக்‌ 

21. கை [அரி] ஒன்று ஆக எழு அரியும்‌ எடுத்து போ 


22. கக்‌ கடவானாகவும்‌ 


200 


த. நா, அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 122 /.2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ன 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.மு. 2-ஆம்‌ . 

i த தூற்றாண்டு 
ஊர்‌ : அரிட்டாபட்டி இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து:  தமிழ்‌-பிராமி முன்‌ பதிப்பு : ல்‌ 
அரசு : — 
த்ரில்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 

எண்‌ J 

இடம்‌ : கழிஞ்சமலையில்‌ உள்ள இயற்கையான குகைத்தள முகப்புப்‌ பாறையில்‌ உள்ளது. 


குறிப்புரை : நெல்வேலி சிழிவன்‌ அதினன்‌ வெளியன்‌ என்பவன்‌ இக்குகைத்தளம்‌ அமைத்ததைத்‌ 
தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 


1. நெல்வெளிஇய்‌ சிழவன்‌ அதினன்‌ வெளியன்‌ முழாகை கொடுபிதோன்‌ 


201 


த. நர, அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 123 / 2003 


மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.மு. 2-ஆம்‌ s . 
தூற்றாண்டு 

னர்‌ : அரிட்டாபட்டி 

இந்தியக்‌ கல்வெட்டு ன 
மொழி: தமிழ்‌ . ஆண்டு அறிக்கை 
எழுத்து ॥ தமிழ்‌-பிராமி முன்‌ பதிப்பு: சரி 
அரசு ! _— 

ஊர்க்‌ கல்வெட்டு 1 த்‌ 

மன்னன்‌ : — எண்‌ ] 
இடம்‌ : கழிஞ்சமலையில்‌ உள்ள இயற்கையான குகையின்‌ முகப்புப்‌ பாறையில்‌ உள்ளது. 


குறிப்புரை : இலஞ்சியைச்‌ சேர்ந்த இளம்‌ பேராதன்‌ மகன்‌ எமயவன்‌ இக்குகைத்தளத்தை 
அமைத்தான்‌ எனக்‌ கூறுகிறது. 


கல்வெட்டு : 


1. இலஞ்சிய்‌ எளம்‌ பேராஅதன்‌ : மகன்‌ எமயவன்‌ இவ்‌ முழ உகைய்‌ 
கொடுபிதவன்‌, 


202 


த. நா. ௮, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 124/2003 


மாவட்டம்‌ : மதுரை 


ஆட்சி ஆண்டு : _— | 
1 
வட்டம்‌ 7 மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி. பி. 9-ஆம்‌ | 
ஊர்‌ : அரிட்டாபட்டி ்‌ நூற்றாண்டு | 
்‌ இந்தியக்‌ கல்வெட்டு ன 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ ்‌ 
எழுத்து: வட்டெழுத்து முன்‌ பதிப்பு : = 
அரசு — 
மனனம்‌ 2 ஊர்க்‌ கல்வெட்டு \ 3 
எண்‌ . 
J t 
| 
இடம்‌ : கழிஞ்சமலை சமணத்‌ தீர்த்தங்கரர்‌ சிற்பத்தின்‌ கீழே உள்ளது. 
குறிப்புரை : திருப்பிணையன்‌ மலையைச்‌ சேர்ந்த பொற்கோட்டுக்‌ கரணத்தார்‌ பெயரால்‌ 


அச்சணந்தி என்பவர்‌ இத்திருமேனியைச்‌ செய்வித்தார்‌. இதற்குப்‌ பாதிரிக்குடி. 


ஊரார்‌ காவலாக நின்றனர்‌. 


கல்வெட்டு : 


பட வ னைக கல னதா 


1. ஸ்ரீ திருப்பிணையன்‌ மலைப்‌ பொ 
2. ற்‌ கோட்டுக்‌ கரணத்தார்‌ பேரால்‌ 
3. அச்சணந்தி செய்வித்த தி 


4. ருமேனி பாதிரிக்குடியார்‌ ரகக. 


203 


த. நா. அ, தெரல்லியல்‌ தூறை தொடர்‌ எண்‌ : 125/ 2003 


மதினா ஆட்சி ஆண்டு 1 11 

மேலூர்‌ வரலாற்று ஆண்டு 3: கி.பி, 13-ஆம்‌ 

அரிட்டாபட்டி த்க்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு 1 


மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] ப 

எழுத்து: தமிழ்‌ இன்‌: பதிப்பு? = 

அரசு பிற்காலப்பாண்டி யர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 H 

மன்னன்‌ விக்கிரமபாண்டி யன்‌ வ ] 

இடம்‌ இடிந்துபோன சிவன்‌ கோயில்‌ தென்புற அதிட்டானம்‌. 

குறிப்புரை : தென்பறப்பு நாட்டுப்‌ பாதிரிக்குடியான ஐஞ்னூற்றுவப்‌ பெருந்தெருவிலுள்ள வியாபாரி 
ஆதிச்ச தேவனான சிறுமா நாடாழ்வான்‌ என்பவன்‌ தேவன்‌ ஏம்பலில்‌ நிலம்‌ விற்றுக்‌ 
கொடுத்தமையும்‌ அதற்குரிய எல்லைகளும்‌ இக்கல்வெட்டில்‌ கூறப்பட்டுள்ளன. 

கல்வெட்டு : 

1... . . ள்புணரக்‌ கடவுள்‌ மேருவில்‌ கயல்விளையாட வடபுல மன்‌[னவர்‌] 


வந்தடிபணிய நேமி வரை சூழ்‌ நெடுநிலமுமுதுங்‌ தாமவெண்குடை 
நிழலிற்தழைப்பச்‌ செங்கோல்‌ நடப்ப கருங்கலி துரந்து வேதவீதி 
யிலந்த[ன] நலமவைச்‌ சொலும்‌ வளவனும்‌ மத்திறைகு .. . 


ப 2. சூடிய மதிக்குலம்‌ திகழ மணியணி வீரஸி௦ஹாஸனத்து வீற்றிருந்தருளிய 


கோமுதற்கோச்சடைய பன்மரான ஸ்ரீ[கி,*]லுவனச்சக்கரவத்திகள்‌ 
ஸ்ரீவிக்கிரம பாண்டிய தேவர்க்கு யாண்டு ௰5 வது பாண்டி மண்டலத்து 
தென்‌ பறப்பு நாட்டுப்‌ பாதிரிகுடியான ஐஞ்ஞாற்றுவப்‌ பெருந்‌ெதருவில்‌ 
வியா... .. 


3. து அரையமகன்‌ சாறி . . வூதிச்சின்ன சிறுமாநாடாள்வானேன்‌ என்‌ 


காணியான தேவனேம்பலிலெம்மிசைந்த(ய) விலைப்‌ பொருளுக்கு 


204 


விலைக்குற விற்று பொருளறக்‌ கொண்டு விலைப்‌ பிரமாணஞ்‌ செது 
குடுத்தேன்‌ சிறுமா நாடாள்வானே[ன்‌*] வீரபாண்டிய மூவேந்த .. 


4. ள்ள வாய்க்காலுக்கு கெல்லைகு துட்டி ஓடு புன்செய்க்குத்‌ தெற்கு 
கீழ்பாற்கெல்லை சீவல்லப நாடாள்வான்‌ புன்செக்‌ கருவுக்கும்‌ மேற்கு 
தென்பாற்கெல்லை பக்கஞ்செவான்‌ எல்லைக்கு வடக்கும்‌ இப்பெருநான்‌ | 
கெல்லைக்கு . . . 


ரை 


5, ங்‌[கீள்ளெ]க்கியும்‌ ஆமை தவ[ழ]யும்‌ உடும்போடியும்‌ சுடுகாடும்‌ படு 
துறையும்‌ எற்பட்டது ஆள்வானாகவும்‌ நீர்‌ [நிலம்‌ பதினெட்டடி ' 
கோலால்‌ [ஓர்‌]ச்‌ செ[ய்‌[க்கு நாட்டானால்‌ இருகல நெல்லும்‌ ஐஞ்சு 
மேனி அரைத்‌ திரமமும்‌ கடமை இறுப்பதாகவும்‌ 


6. கொள்விதாக . கலநெல்லு ஆறாயங்கு பெபுக்கவும்‌ புன்செய்‌ இக்‌ 


கோலால்‌ மாகாணிக்கு அஞ்சு மேனி ஒரு திரமமும்‌ கொடுப்பதாகவும்‌ 
. . திர[மு]ங்‌ கடமை இறுப்பதாகவும்‌ 


205 


த. நா. ஆ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 126 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 39 
வட்டம்‌: மேலூர்‌ ' வரலாற்று ஆண்டு : கி.பி. 1307 
ஊர்‌ : பொய்கைக்கரைப்பட்டி இந்தி 
ந்தியக்‌.கல்வெட்டு \ ன்‌ த 

மொழி: தமிழ்‌, சமஸ்கிருதம்‌ ஆண்டு அறிக்கை ] ப்பம்‌ 
எழுத்து: தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு : ன தக 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 
மன்னன்‌ : குலசேகரன்‌ ஊர்க கல்வெட்டு | 1 

எண்‌ | 
இடம்‌ : ஊருக்குக்‌ கிழக்கே உள்ள தோட்டத்தில்‌ உள்ள தனிக்‌ கல்‌. 


குறிப்புரை: அறுவகைத்‌ தொழில்‌ செய்யும்‌ நால்வகை ரதகாரர்களின்‌ மெய்க்கீர்த்தி 

சமஸ்கிருத மொழியில்‌ முதல்‌ பதினோரு வரிகளில்‌ உள்ளது. பவித்ரமாணிக்க 

புரத்தில்‌ இருக்கும்‌ இவர்கள்‌ கூட்டம்‌ நடத்தி திருமாலிருஞ்சோலையில்‌ தெய்வ 

ல காரியங்கள்‌ சிறப்பாகச்‌ செய்துவந்த திருவாய்குலமுடையான்‌ என்பவனுக்கு 
அளித்த உரிமையும்‌ சிறப்பும்‌ பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. 


கல்வெட்டு : 

1. ஊ.ததுஸகலு நிசா.ண 
. கரணாடூ விமமக2ணாடி 
உ ஸாஸகரெய காமாணா 
, பொெஷலுவ தாணிதடு| 
. வ ஜிவ.௪௬ த3-ணாஒஸ 


, வோறவாஸி.காடி | ௬ 


ப ல. இத்‌ | இத மே. ஸு 


உ க்ஷ லாகு ஒமாமாக ஸை 


8. உசெவாயிடெவ தட | 


206 


90, 
91. 
92. 


, விறகாார ஐமதாதா 
வ 8 a 


விபம௯2-ா ஜகது மாமு | வி 


ள்‌ பெஅுவிப0க$ரணடு 

. விழுகழசணவாஸகே 

இப்படி யுபஸியா நின்ற 

. ஸ்ரீ பாண்டி மண்டலத்து 

. மாடக்குளக்‌ கீழ்‌ மாடமது டு 

. ரெ மங்கலவாசல்‌ சேரியில்‌ மூன்‌ 
று வினைப்‌ பள்ளி அறுவகைத்‌ 

. தொழில்‌ நால்வகை இர [த[க 

. ஈரோமும்‌ உலகுடைய நாயனார்‌ 
. உடன்‌ கூட்டத்து மூன்றுவினைப்‌ 
பள்ளி யறுவகைத்‌ தொ 

மில்‌ நால்வகை யிரதகார 

. ரோமும்‌ சமைய சங்கேதி 

. களோமும்‌ கீழையிரணிய 

. முட்ட நாட்டுத்‌ திருமாலிருஞ்சோலை 
, நின்றருளிய பரமலாமிகள்‌ திரு 
 ப்பதி ஸ்ரீயான பவித; மாணிக்க பு 
. ரத்து மூன்று வினைப்‌ பள்ளி அறு 


. வகைத்‌ தொழில்‌ நால்வகை 


யிரதகாரோம்‌ குறைவறக்‌ கூ 
டி நிறைந்து .செய்த சமையகா 
ரியமாவது இத்திருப்பதியில்‌ த 


207 


33. ஈத நம்பிமாரில்‌ திருவாய்கு 

34, ல முடையான்‌ திருமலை ஆழ்வ 
35. ஈர்‌ சாதிக்குப்‌ பல நன்மைகள்‌ 
96. செய்கையாலிவற்கு பெரு 

37. மாள்‌ குலமோேம௱ செவற்கு மு 
38. ப்பத்தொன்பதாவது நாள்‌ 

39. லிலே எங்கள்‌ சமைய வரி 

40. சையுங்‌ குடுத்து முழுதும்‌ 

41. தலத்தார்‌ இடை எங்கள்‌ பேரும்‌ 
42. குடுத்து நாங்களிவர்க்கு பண்‌ 
43. ணி குடுத்த சமைய சாதன 

44. படியுள்ளவை அனைத்‌ 

45. தும்‌ பெற்று மேலும்‌ எங்கள்‌ 
46. சாதிக்கு வேண்டும்‌ நன்மை 
47. செய்து போதுவதாக இ 

48. வர்‌ வாசலிலே வரி[ச] 

49, ட்டம்‌ [பூமி] தோரணமு . . . 
50. ம்‌ ஆக குடுத்தோம்‌ பதிணெண்‌ 


51 விக்ஷெயத்து . .. 


208 


த. நா, அ. தொல்லியல்துறை தொடர்‌ எண்‌ : 127 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
இம, அம்ர்‌ வரலாற்று ஆண்டு: கி.பி. 13-ஆம்‌ 
ஊர்‌ : பொய்கைக்‌ கரைப்பட்டி ்‌ . நூற்றாண்டு 
மொழி : தமிழ்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
எழுத்து: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
அரசு : ந முன்‌ பதிப்பு: — 
க 9 | 

னன்‌ பவ ஊர்க்‌ கல்வெட்டு ்‌ 2 

எண்‌ 
இடம்‌ : ஊருக்குக்‌ கிழக்கே தோட்டத்தில்‌ உள்ள தனிக்‌ கல்‌. 


குறிப்புரை : வேம்பற்றூர்‌ சுந்தரத்தோளன்‌ நம்பி ஆசிரியர்‌ அடைக்கலம்‌ அளித்ததைக்‌ 
கூறுகிறது. 


oo Nom Rw 
E 
ம்‌ 
௫ 
(3 


209 


த. நா, அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 128 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு s — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
ல்‌ | தூற்றாண்டு 
ஊர்‌ : பொய்கைக்கரைப்பட்டி இந்தியக்‌ கல்வெட்டு | ன்‌ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ) 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : _— 
த்த ஞூ ஊர்க்‌ கல்வெட்டு 1 ட்‌ 
மன்னன்‌ :; - எண்‌ J 
இடம்‌ : தெப்பக்குளத்துக்குத்‌ தென்புறம்‌ ஈடப்பட்டுள்ள தனிக்‌ கல்‌. 
குறிப்புரை : திருஈந்தவனம்‌ ஒன்றை மிழலைக்‌ கூற்றத்துக்‌ கீழ்கூற்று மஞ்சக்குடையான்‌ உய்ய 
வந்தான்‌ திருநோக்கியழகியானான தொண்டைமான்‌ என்பவன்‌ செய்வித்ததைக்‌ 
கூறுகிறது. 
கல்வெட்டு : . 
1. ஷிஷிஸ்ரீ மிழ 
2. லைக்‌ கூற்றத்து + 
9. க்‌ கீழ்கூற்று ம 
4. ஞ்சக்குடையான்‌ 
5. உய்யவந்தான்‌ 
6. திருநோக்கழகியா 
7. னான தொண்டை மா 
8. னார்‌ செய்விக்கிற தி 
9. ருநந்தவனம்‌ 


210 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 129 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு 2 — 

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 14- ஆம்‌ 

தர ர்க்க ல ட நூற்றாண்டு 
தண்ர்‌ : பா யகைக்கரைப்பட்டி இந்தியக்‌ கல்வெட்டு ன 

மொழி: “தமிழ்‌ ஆண்டு அறிக்கை 

எழுத்து : தமிழ்‌ மூன்‌ பதிப்பு : _— 

ந்‌ ஊர்க்‌ கல்வெட்டு ர | 
மன்னன்‌ ; ௨ எண்‌ J i 
இடம்‌ : தெப்பக்குளத்துக்குக்‌ கீழ்க்கரையில்‌ நடப்பட்ட தனிக்‌ கல்‌. | 
குறிப்புரை : மானாபரணமங்கலத்து திருமாலிருஞ்சோலை நாராயணபட்டனது தர்மம்‌ என்று 


குறிப்பிடுகிறது. இக்குளம்‌ அவனது கொடையாகலாம்‌. 


கல்வெட்டு : 
1. ஷுஷிஸரீ 
2. மானாபரண ம 
3. ங்கலத்து சே 
ம்‌ லலைய்லைக்‌ டு 
. சாக்கரான தி 
6. ருமாலிருஞ்சோ 
7. லை நாராயண 
8. ஒட்ட ஆழ்வ 
9. [ஈத்‌ ௨௨9209] 


211 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


தெரடர்‌ எண்‌ ; 130 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி அண்டு : — 

வ்ட்ட்ம்‌ ப மேலூர்‌ ' வரலாற்று ஆண்டு : கி.பி. 13 - ஆம்‌ 
நூற்றாண்டு 

ஊர்‌ : பொய்கைக்கரைப்பட்டி இந்தியக்‌ கல்வெட்டு 1. ரவர்‌ 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 

எழுத்து: தமிழ்‌ முன்‌ அதவம ந 

ப்‌ a ஊர்க்‌ கல்வெட்டு | ம்‌ 

மன்னன்‌ க எண்‌ ] 

இடம்‌ : தெப்பக்குளத்திற்கு உட்புறம்‌ நடப்பட்டுள்ள தனிக்‌ கல்‌. 


குறிப்புரை : குமாரசூரியன்‌ திருநந்தவனத்தை இராயூரைச்‌ சேர்ந்த தெற்காழ்வார்‌ என்பவர்‌ 
செய்வித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது, 


1 
2 
3 
4. து இராயூர்‌ 
5. தெற்காழ்வார்‌ 
6 


. சய்கிறது 


212 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 131 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 14-15 
த அன்ன டல்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : பாயகைககரைப்படடி இந்தியக்‌ கல்வெட்டு 1 ட 
மொழி: தமிழ்‌, வடமொழி ஆண்டு அறிக்கை ] 

! 
எழுத்து : தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு : ல்‌ 
SHES ம்‌ ஊர்க்‌ கல்வெட்டு i 2 | 
மன்னன்‌: ._ ப்‌ ] . 
இடம்‌ : தெப்பக்குளத்திற்கு வடகிழக்கிலுள்ள வயலில்‌ கிடக்கும்‌ தனிக்‌ கல்‌, 

| 
குறிப்புரை : பல்லவகுல திலகமானவனும்‌ காடுவெட்டி வம்சத்தில்‌ வந்தவனுமான நல்லி 
சித்தி ராஜதேவர்‌ என்பவர்‌ நந்தவனம்‌ செய்வித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது 

கல்வெட்டு : 


1. ஜஷியீ இத்திரு 

2. நந்தவனம்‌ பல்லவ 

3. குலதிலக வாரா 

4. ஐ மொகும்‌ [ஸ்ரீ]திரு 

5. வேங்கட நாயெவ 

6, . அகார்ராட்டந சந்த 
7. சி... பராமிமா மித 

8. ஸ்ரீமுக்கண்ணன்‌ காடு 
9. வெட்டி வ௦பாவகார வ 
10. . . . ரான நல்ல ஸிதி 
11. ராஜதேவர்‌ செய்விக்கிற 
12. . . . கொய௱ன திரு | 
13. நந்தவனம்‌ . . . | 


213 


க. நா. அ. தெரல்லியல்‌ குறை கொடர்‌ எண்‌ : 132 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌: மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 1551 
ஊர்‌ : . திருமோகூர்‌ (சகம்‌ 1479) 
3 & இந்தியக்‌ கல்வெட்டு ] 
மொழி: தமிழ்‌ அண்டு அறிக்க Lk 75/1905 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : விசயநகரர்‌ ்‌ 
ல்ல. ஊர்க்‌ கல்வெட்டு | ள்‌ 
எண்‌ 
J 
இடம்‌ : காளமேகப்‌ பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாமண்டபத்‌ தென்புற அதிட்டானம்‌. 
குறிப்புரை: காளமேகப்‌ பெருமாள்‌, பள்ளிகொண்ட பெருமாள்‌ சன்னதிகளில்‌ காலை சந்தி 
நித்திய நைவேத்தியங்களூக்குக்‌ களவேழ்வி (களவழி நாடு) நாட்டு நாலு கோட்டை 
சீர்மைப்‌ பகுதியில்‌ “மானகுழி' என்ற ஊரின்‌ நிலங்கள்‌ தானமாக அளிக்கப்‌ 
பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இதனை விசயநகர அரசனின்‌ அதிகாரி 
திம்மப்ப நாயக்கர்‌ அளித்துள்ளார்‌. இதற்காக நெல்‌ 450 கலமும்‌ பொன்‌ 36ம்‌ 
கொடுக்கப்பட்டது. 
கல்வெட்டு : 
1, ஊ.தஜ எமாஎவாயிறசெளலி சாமாஉி வ-இஷிதடி ஸ்ரீூமகொஹட்‌ நாய்ஷ ஏ 


[உமொஜா]மாஸமம்‌ ஹவிஸ்ரீ காவடி சச௱எ௰கன்‌ மேல்‌ செல்லா நின்ற 
விரோயிக] ஸூ௦வசிஸரத்து உத்ராயணத்து ஹெமந்த8கீவில்‌ சகர 
நாயற்று உவ வக்ஷது சியெயும்‌ லெள£ வாரமும்‌ ஸ்ரீபரணி 
நக்ஷதரமும்‌ ஸி&யோமமும்‌ கெளலவ கரணமும்‌ பெற்ற 8கர ஸ௦௯,8 
பாயை காமத்தில்‌ பெருமாள்‌ காகஉசேவடி வள்ளிகொண்ட பெருமாள்‌ 
ஸ்ரீஸ௦ஸகார காயத்துக்கு கடவரோம்‌ ஸாமஸ்‌ ஸ2யத்தில்‌ உள்ளவர்களோம்‌ 
வஸவண நாயக்க திம்மப்பனாயக்கற்கு பெருமாள்‌ திருவுள்ளம்‌ பற்றின 
திருமுகப்படிக்கு கொடுத்‌[த] ஸா.௪ விநியோ.ம பட்டயம்‌ 


214 


2. முன்னாள்‌ தாம்‌ பெருமாள்‌ காளமசேவடி பள்ளிகொண்ட பெருமாளுக்கு 
நித நைவேகு$ காமுஸகறதியில்‌ உஜோஉச அவஸரத்துக்கு மேல்‌ 
இரண்டாம்‌ அவஸரடி உம்முடைய பேரால்‌ கட்டளை இட்டு இந்த 
அவஸரத்துக்கு திருவுடையாட்டமாக விட்ட .மா£ங்களாவன ய 
ஈணம.தாச்‌ சீர்மையில்‌ கலவேழ்வி நாட்டு நாலுகோட்டை சீமையில்‌ 
திருவுடையாட்டமாக பெருமாளுக்கு ஸூவித்தமான குழிமான குழி 
அமங்களும்‌ இதுக்கு உள்பட்ட னான்கெல்லைக்கும்‌ உள்பட்ட ஏந்தல்‌ 
களும்‌ உள்ளிட்ட நஞ்சை புஞ்சை படுகை மாவடை மரவடை குடிக்‌ 


கடமை கறவைக்‌ காணிக்கை 


3. தறிக்கடமை யுள்வரி பாசிவிலை மற்றும்‌ நாளது வரையும்‌ நடந்து வருகிற 
ஸூலலாாஷீயும்‌ உள்பட பொன்‌ முதல்‌ கலிபொன்‌ முப்பத்தாறும்‌ நெல்‌ 
முதல்‌ எட்டுப்படிக்‌ காலால்‌ நெல்லு னானூற்று அன்பதின்‌ கலம்‌ இந்தப்‌ 
பொன்னுக்கும்‌ நெல்லுக்கும்‌ இவர்‌ பெருமாளுக்கு மிதத பெசவே2தஓ 
காமுஸதியில்‌ உமெழாஉ௰ அவ.ஈஈத்தின்‌ மேல்‌ இரண்டாம்‌ அவஸர இவர்‌ 
பேரால்‌ கட்டளையிடுகையில்‌ நாள்‌ ஒன்றுக்கு அவஸரம்‌ ஒன்றுக்கு 
தூணிப்பதக்கு அமுதுபடிக்கு கலனே முக்குறுணி நெல்லாகவும்‌ இந்த 
பெெவெஉதக்கு மேல்‌ வெச்சத்துக்கு கறியமுது நெயி அமுது ஸடூவா௱டி 
திருப்பனாம்‌ சமைப்பார்‌ கூலி உள்பட பல சிலவுக்கு இருபணம்‌ ஆகவும்‌ 
ஆக இந்த வகையில்‌ வருஷம்‌ ஒன்றுக்குக்‌ கூடின 


4. நெல்லு னானூற்றைம்பதிங்‌ கலத்துக்கும்‌ பொன்‌ முப்பத்தா[ரு]க்கும்‌ 
இந்தப்படி கட்டளை இட்ட திருவுளையாட்டமாக இந்த மாமங்கள்‌ இவர்‌ 
பெருமாளுக்கு ஸமவித்தபடியினாலே இவருக்கு பெருமாள்‌ காணி ஆட்சி 
யாக திருவுளம்‌ பற்றினபடி [தி]ன சிலவுக்கு பெருமாள்‌ அமுது செய்த 
வரஸாஉத்தில்‌ காலஸதியில்‌ இரண்டாம்‌ அவஸரத்தில்‌ தூணிப்பதக்கு 
அமுதுபடி ஊஸாதத்தின்‌ இவருக்கு னாலில்‌ ஒன்றுக்கு னாள்‌ ஒன்றுக்கு 
அமுதுப்படி விட்டபடியே விட்டவன்‌ விழுக்காடு குறுணி நானாழி 
உரஸாஉமும்‌ பெருமாள்‌ மாடைத்‌ திருவீதியிலே இருமனையும்‌ பெருமாள்‌ 
திருவுள்ளம்‌ ௨ஈத பெள து வா௱ஈடிவரியா.க உர.நாயி விமிூபவிக,ரையங்‌ 
களுக்கும்‌ , . . யனுபவித்து கொள்ளவும்‌ இம்மருவாதிக்கு நாங்கள்ளே 
நடத்தி வரக்‌ கடவோமாகவும்‌ 


214 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 133 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ்‌ ட 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : - தி.பி, 1551 
கல்‌ ல்‌ (சகம்‌ 1473) 
தித்த இந்தியக்‌ கல்வெட்டு | 76/1905 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு: னு 
அரசு விசயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு உட 
மன்னன்‌; _ எண்‌ ்‌ 
இடம்‌ காளமேகப்‌ பெருமாள்‌ திருக்கோயில்‌ மகாமண்டப தென்புற அதிட்டானம்‌. 


குறிப்புரை : காளமேகப்‌ பெருமாள்‌, பள்ளி கொண்ட பெருமாள்‌ நித்திய நைவேத்தியத்திற்காகக்‌ 


களவேழ்வி நாட்டு மானகுழி கிராம நிலங்களிலிருந்து வந்த வருவாயை திம்மப்ப 
நாயக்கர்‌ தானமாக அளித்தார்‌ என்ற முந்தைய கல்வெஃடின்‌ செய்தியே இதிலும்‌ 
கூறப்படுகிறது. மேலும்‌ இதற்குரிய ஆணையைக்‌ காளமேகப்‌ பெருமாளே 
அளித்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது, 


கல்வெட்டு : 


1. ஸமா வஸு ஹத ௦ ஷவஸஷ௭ ஓ ஸ்வ... மொகெ ௯௨௦.மல.ஒி ஸாஸ.௩௦ காட 


செவ்ஸ ஸ்ரீஹுமவாஸிக: ஹஷிஸ்ரீ காவடி  கூசாஎம௰ கன்‌ மேல்‌ 


செல்லா நின்ற விரோதிகரக ஸ௦வதுஸரத உத்தராயணத்து வேத 


.ருதுவில்‌ 8க௱ நாயற்று உவ வக்ஷ்த்து இகிபெயயும்‌ [ஸொ]8 வாரமும்‌ 


ஸ்ரவண அக்ஷதுமும்‌ ஸி;யோ.ம2-$ கெளமுவ கரணசும்‌ பெற்ற மகர 
ஸ௦ க; காமத்தில்‌ நம்‌ கொண்ட கோவிலில்‌ அது98 வ உ$௦த்தில்‌ 
நாமும்‌ நம்‌ பெண்டுகளும்‌ ஓலக்கமாக இருக்கையில்‌ நம்‌ வீட்டில்‌ குடவர்‌ 
கோவணவர்‌ பூவிடுவார்‌ தளையிடுவார்‌ அனுக்கர்‌ காரியத்துக்கு கடவார்‌ 
எல்லாரும்‌ வந்து நமக்குச்‌ சொல்லுகையில்‌ நம்‌ ஈஉஸநான வஸவண்ண 
னாயக்கத்‌ திம்மப்ப னாயக்கன்‌ நமக்கு முன்னாள்‌ நித)செவேத; 


216 


2. திருவாராமனைக்கு கொடுத்த மாமங்களாவன மதுரை மண்டலச்‌ 
சீர்மையில்‌ கலவேழ்வி நாட்டு நாலுகோட்டைச்‌ சீர்மையில்‌ திருவுடை 
யாட்டமாக நமக்குக்‌ கொடுத்த மானகுழி (மானகுழி) மரமங்களும்‌ 
இதுக்கு உள்பட்ட நான்கெல்லையும்‌ நான்கெல்லைக்கு உள்பட்ட 
ஏந்தல்களும்‌ உள்ளிட்ட நஞ்சை புஞ்சை நத்தம்‌ படுகை மாவடை மரவடை 
குடிக்கடமை கறவைக்‌ காணிக்கை தறிக்கடமை பள்வரிப்‌ பாசிவிலை 
மற்றும்‌ நாளது வரையும்‌ நடந்து வருகிற ஸூஷைராஷயுஓ உள்பட 
பொன்முதல்‌ கலிபொன்‌ முப்பதாறும்‌ நெல்முதல்‌ எட்டுப்‌ படிக்காலால்‌ 
நெல்லு நானூற்றன்பதின்‌ கலத்துக்கு நிகதநெவே.தத்துக்கு காஓஸ.தியில்‌ 
உஜொஉக அவஸரத்தின்‌ மேல்‌ இவனிட்ட உபயமாக கட்டளை இட்டது 
நாள்‌ 


3. ஒன்றுக்கு ௨ஜதொ௨ந அவஸரத்துக்கு மேல்‌ இரண்டாம்‌ அவஸரத்துக்கு 
இவன்‌ பேரால்‌ அவஸரமாக ஆறு மரக்கால்‌ அமுதுபடிக்கு கலனே 
முக்குறுணி நெல்லாகவும்‌ இந்த ஆறுமரக்கால்‌ அமுதுபடி பெசவேகத 
கட்டளைக்கு கறியமுது நெயிஅமுது ஸ£லாரம்‌ தையிர்‌ அழுது எரிகரும்பு 
திருப்பனாஞ்‌ சமைபாப்பார்‌ கூலி மற்றும்‌ எப்பேர்பட்ட சிலவும்‌ உள்பட 
இந்த அவஸரட ஒன்றுக்கு னாள்‌ ஒன்றுக்கு பணம்‌ ஒன்று ஆகவும்‌ இந்தப்‌ 
படியில்‌ வருஷம்‌ ஒன்றுக்கு நெல்லு னானூற்று அன்பதின்‌ கலமும்‌ 
பொன்‌ முப்பத்தாறும்‌ இந்தப்படி கட்டளை இட்டு திருவுடையாட்டமாக 
இந்த மராமங்கள்‌ விட்ட படியாலே இவனுக்கும்‌ னாம்‌ கட்டளை இட்டுக்‌ 
குடுத்து விட்டவன்‌ விழுக்காடு தன்‌ சிலவு நம்‌ 


4, கலச்‌ சொற்றில்‌ நாள்‌ ஒன்றில்‌ இவன்‌ அவஸாட தூணிபதக்கு அமுது 
படிச்‌ சோற்றில்‌ இவன்‌ தன்‌ சிலவு னாலில்‌ ஒன்றுக்கு னாள்‌ ஒன்றுக்கு 
அமுதுபடி குறுணி நாழி சோறும்‌ நம்பதியில்‌ மாடை திருவீதியில்‌ மனையும்‌ 
னாம்‌ இந்த சிவஸத்தில்‌ உனக்குக்‌ கட்டளை இட்டுத்‌ தந்தபடியினாலே 
சூவபக;ாக கஷாயம்‌ ஆக வாகு, வெளகு வா௱டிவமியாக உா.சாமிவி.கிய 
விக,யங்களுக்கு யொக்டிமாக அனுலவித்துக்‌ கொள்ளவும்‌ இப்படிக்கு 
திருவாயி மொழிந்தருளினபடிக்கு திருமந்திர ஓலைனாயகம்‌ காளமேக 
வி,யன்‌ எதிராஜஉஸந்‌ எழுத்து 0 ௩ஹஸ- 


217 


த. நா. அ, தெரல்லியல்‌ துறை : தொடர்‌ ஏண்‌ : 134/2003 


மாவட்டம்‌ ; மதுரை ஆட்சி ஆண்டு : — 

வட்டம்‌: மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 

ஊர்‌ : திருமோகூர்‌ தாதமானாடு 
இந்தியக்‌ கல்வெட்டு | 34/1918 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ்‌ 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ 

மன்னன்‌: _ ஊர்க்‌ கல்வெட்டு | 3 
எண | 

இடம்‌ : காளமேகப்‌ பெருமாள்‌ திருக்கோயில்‌ பள்ளிகொண்ட பெருமாள்‌ சன்னதியின்‌ வடபுற 


அதிட்டானம்‌ மற்றும்‌ கிழக்குப்புற அதிட்டானம்‌. 


குறிப்புரை : காளமேகப்‌ பெருமாளுக்கு மார்கழி கல்யாணத்‌ திருநாளுக்கு நிவந்தம்‌ அளித்ததை 
இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கின்றது, இதற்கான ஆணையைப்‌ பெருமாளே அளித்த 
தாகவும்‌ குந்தவைச்‌ சதுர்வேதிமங்கலத்து அந்தணர்கள்‌ இந்நிவந்தத்திற்குப்‌ 
பொறுப்பாக இருந்தார்கள்‌ என்றும்‌ இக்கல்‌ வெட்டுக்‌ கூறுகிறது, மேலும்‌ இத்திரு 
நாளில்‌ பணி செய்யும்‌ கோயில்‌ பகவர்கள்‌ இருவருக்கு பெருமாளுக்குப்‌ படைத்த 
பிரசாதம்‌ தானமாகத்‌ தரவேண்டும்‌ என்றும்‌ கூறுகிறது. 


கல்வெட்டு : 


1. வஹிஞஸ்ரீ வ.தகி பவெஷவ ஸவ-$ஸ20 ஸவ.$லொககெ௯2௦.மமுடி ஸாஸ.௪௦ கார௨ 0 
வஷ டத்‌ ல்ச்‌ அவ்ஸ்‌ நங்குந்தவைச்‌ சதுவெ48மங்கலத்து சமெெ[ப்‌] 
பாப்பாற்கு மார்கழி கண்ணாலத்துக்குப்‌ புறப்பட்டு நடையநிலே நிற்க 
தாங்கள்‌ நம்வீடு நோ 


2. க்கிச்‌ செய்த நன்மைகளும்‌ நடையனுக்கு வேண்டுவனவுக்கு தாங்கள்‌ 
செய்யக்‌ கடவாராகவும்‌ சொன்னபடியும்‌ வீட்டுக்‌ காரியஞ்‌ செய்கிற 
[ப[கவர்களில்‌ அரட்டமுக்கிகாஸனும்‌ கோவணவர்களுஞ்‌ சொன்னமையில்‌ 
நடையனுக்கு வேண்டுவன செய்யக்‌ கடவராகவுஞ்‌ சொல்லி ந 


218. 


3. டையனிலிருந்து நாமுண்ட கலமிவர்களுக்கே குடுக்கக்‌ கடவராகவும்‌ 
கண்ணாலங்களில்‌ வேட்டைக்குப்‌ புறப்பட்டால்‌ முன்பு பெறும்படி 
நாமுண்ட கலமுட்படக்‌ குடுக்கக்‌ கடவராகச்‌ சொன்னோமிப்படி 
கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிவித்துக்‌ கொள்க ॥/௨ அருளால்‌ திருமந்திர 
வோலை எழுத்து தி 

4, ருக்காளமேக நல்லூருடையான்‌ மனத்துளா .. .. திருவுடையானான்‌ 


நாராயணசாஸநெழுத்து ॥/௨ ஊதி ஸவ.மாயமிரா செளலி சமா[ஸி] 
ஹுுத௲ண( ஸ்ரீ£றா௦மயர2 ஸஹ வஹுவ , , 


219 


பப. ச வைனை னையை ல்லை அம பவ வப கைலை மதர்‌ கை, வட உட 


த..நர. அ. தெரல்லியல்‌ துறை தெடர்‌ ஏண்‌: 135/ 2003: 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : - == 


வட்டம்‌ : மதுரை வடக்கு . வரலாற்று ஆண்டு : கி.பி. 17-ஆம்‌ 
ற்றாண்‌, 

ஊர்‌ : திருமோகூர்‌ ன்ட்‌ 

டல த இந்தியக்‌ கல்வெட்டு | . 
மொழி. தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 — 

0» : மி ௫ ்‌ 
எழுத்து தமிழ்‌ னங்க! _ 
அரசு? ணு 
ஊர்க்‌ கல்வெட்டு 1 4 

மன்னன்‌ : — எண்‌ 1 
இடம்‌ : காள$€மகப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாமண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌, வெளிப்புறம்‌. 


குறிப்புரை : முதல்‌ இரு கல்வெட்டுகள்‌ பெருந்துறைப்‌ பெருமாள்‌ மற்றும்‌ சோலைமலை 
- ஆகியோரின்‌ நிரந்தர பக்தியைத்‌ தெரிவிக்கின்றன, மூன்றாம்‌ கல்வெட்டு 
கி.பி. 14-ஆம்‌ நூற்றாண்டு எழுத்தமைதித்‌ துண்டுக்‌ கல்வெட்டாகும்‌. 


கல்வெட்டு : 


அ. 1, பெருந்துறைப்‌ 
2. பெருமாள்‌ சதாசேவை 


ஆ. 1, சோலைமலை ஸத[ஈசேவை] 


இ. 1. நெல்‌ ஐங்கலமும்‌ . . . 
2. எடைப்‌ பொசங்குறுவை . . . 


220 


த. நர. அ. தொல்லியல்‌ துறை . 'சிதாடர்‌ எண்‌ ; 136/ 2003 ! 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு ॥ ன 

வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு ! கி.பி, 18-19-ஆம்‌ 

ஊர்‌ : திருமோகூர்‌ கல்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு 1 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] | 

எழுத்து: தமிழ்‌ ச பதிக ௨ | 

அரசு : i ஊர்க்‌ கல்வெட்டு 2 

மன்னன்‌ $ — என 

இடம்‌ : காளமேகப்‌ பெருமாள்‌ திருக்கோயில்‌, பள்ளிகொண்ட பெருமாள்‌ சன்னதி! 


மண்டபத்தின்‌ படிக்கட்டு. 


குறிப்புரை : பராங்குச அய்யங்கார்‌ மகன்‌ மற்றும்‌ சுந்தரப்பிள்ளை பாண்டியன்‌ என்போரின்‌ 
நிரந்தர பக்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


கல்வெட்டு : 


அ. 1. பறாங்குச யெமபய்யங்கார்‌ கும 
2. ரரன்‌ அடியேன்‌ 

. சதாசேவை 

சுந்தரப்‌ பிள்ளை 


பாண்டியன்‌ 


சே 64 ம்‌ 


சதாசேவை 


221 


த. நா. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 137/2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 18+5 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ . 
ர்‌ ம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : திருமோகூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
- . ட்‌ 335/1918 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌. கன்ள்கிற்யு்‌ ட 
அரசு : பிற்காலப்பாண்டி யர்‌ 
மன்னன்‌ : குலசேகரன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 6 
எண J 
இடம்‌ : காளமேகப்‌ பெருமாள்‌ கோயில்‌, அனுமார்‌ கோயில்‌ முன்‌ மண்டபத்‌ தூண்‌. 


குறிப்புரை : திருமடைவளாகம்‌ அமைக்கும்‌ ஒருவனுக்கு கோயிலில்‌ இருந்து நாள்‌ ஒன்றுக்கு நாழி 
பிரசாதம்‌ அளிப்பதாக ஜீயர்‌ செளமித்ரதாசர்‌ தச்சரிடமிருந்து பத்து அச்சுகள்‌ 
(காசுகள்‌) வாங்கிக்‌ கோயில்‌ பண்டாரத்தில்‌ முதலாக வைத்ததை இக்கல்வெட்டுக்‌ 
கூறுகிறது. கோயில்‌ நிருவாகத்தில்‌ ஜீயர்கள்‌ பங்காற்றியதை இக்கல்‌ வெட்டு 


உறுதி செய்கிறது, 


கல்வெட்டு : 

1. ஹஷிபரீ குலசேகர தே 
 வற்கு யாண்டு ௰௩ 
. ஆவதின்‌ எதிர்‌ டு மா 
ண்டு முதல்‌ இக்கே 
. எயில்‌ திருமடாவளா 
வஞ்‌ செய்யுமவநு 
டக்கு அஷாதித்தவற்‌ 


222 


8. நாள் கக்கு நாழி உ 


9. 
10. 


11. 
12. 
13. 


14. 
15. 
16. 
17. 
18. 
19. 
20. 


ரிய்‌ ஸாஉ செல்‌ 
ல ஜீயர்‌ ஸெள 
ிது£ாஸந்‌ தச்சர்‌ 
பக்கல்‌ 

வாங்கி 
ஸ்ரீபண்டாரத்‌ 

து ஒடு[க்‌] 

கின அச்‌ 

சு பத்து 

இது மூ 

முதும்‌ 

வலவர்‌ ரக்ஷ [உ 


223: 


த, நா. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 138 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி, 13-ஆம்‌ 
்‌ நூற்றாண்டு 
ஊர்‌ திருமோகூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 
ன்‌ 52 329 [ 1918 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : _ 

அரசு பிற்காலப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 

மன்னன்‌ ; க்‌ எண்‌ | 

இடம்‌ காளமேகப்‌ பெருமாள்‌ திருக்கோயில்‌, வெளிப்புற தெற்குத்‌ திருமதில்‌ உட்புறம்‌. 

குறிப்புரை : கோயில்‌ திருப்பணிக்குத்‌ திருவிடையாட்டமாகக்‌ காளமேகப்‌ பெருமாளுக்குச்‌ 
செங்குடி” நாட்டுச்‌ சிறுகுன்றத்தூர்‌ என்ற ஊர்‌ அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுக்‌ 
கூறுகிறது. இக்கோயில்‌ $திரிதண்டி சன்னியாசிகளும்‌, வைஷ்ணவர்களும்‌ இக்‌ 
கல்வெட்டில்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. 

கல்வெட்டு : 


1. துவ ஸ்ரீமற்‌ கீர்த்திக்கு மேல்‌ ஜஷிஸீ கி,வஈவ.அக,வத்தி கோனே 


ரின்மை கொண்டான்‌ தென்பறப்பு நாட்டுத்‌ திருமோகூர்‌ நின்றருளிய 
பரமஷாமிகள்‌ கோயில்‌ திருப்பதி பீவெய்ஷவர்களுக்கும்‌ கி,உண்டி 


2. ஸஸுழாஸிகளுக்கும்‌ காளமேகத்துக்குத்‌ திருப்பணிப்புற திருவிடையாட்ட 


மாகச்‌ செங்குடி நாட்டுச்‌ சிறுகுன்றத்தூர்‌ பெருநான்கெல்லைக்கு 


உட்பட்ட நீர்‌ நிலமுங்‌ கருஞ்செய்‌ புன்செயும்‌ குளமும்‌ குளப்பரிப்பும்‌ 
ஏம்பல்களும்‌ நத்தமும்‌ 


- தத்தப்பாளும்‌ தோட்டமும்‌ தோட்டக்கூறும்‌ மரங்களும்‌ கிணறுகளும்‌ 


மற்றும்‌ எப்பேர்ப்பட்ட ஸூஸஹாவிகளும்‌ உட்படத்‌ திருப்பணிப்‌ 
புறத்‌ திருவுடையாட்ட இறையிலியாக குடுத்த . . . 4. 


224 


- க, நர. அ, தெரல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 139 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 8 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு 3 கி.பி. 18-ஆம்‌ 
ஊர்‌ : திருமோகூர்‌ \ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு 
மொழி ச தமிழ்‌ தண்டு அழுக்கை L 331/1918 
எழுத்து: . தமிழ்‌ முன்‌ பதிப்பு : — | 
அரசு: . பிற்காலப்‌ பாண்டியர்‌ 
ன அத்த ச ஊர்க்‌ கல்வெட்டு 1 ட்‌ 
்‌ எண்‌ - | 
இடம்‌ : காளமேகப்பெருமாள்‌ திருக்கோயில்‌, தெற்கு வெளிப்புற திருமதிலின்‌ உட்புறம்‌. 


குறிப்புரை : தென்பறப்பு நாட்டுத்‌ திருமோகூர்‌ பரமசுவாமிகள்‌ கோயிலுக்கு வெண்பில்‌ நாட்டுப்‌ 
பிரம்மதேயம்‌ ஆலோடு பட்டான்‌ குமாரபவித்திரச்‌ சதுர்வேதி மங்கலம்‌ என்ற/ஊர்‌ 


திருப்பணிப்‌ புறத்‌ 
கூறுகிறது. 


கல்வெட்டு : 


1. ஷுஹிஸ்ரீ கிலு வனச்‌ 


பரப்பு நாட்டுத்‌ திருமோகூர்‌ 


திருவிடையாட்டமாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுக்‌ 


அக,வத்தி கோநேரின்மை கொண்டான்‌ தென்‌ 


நின்றருளிய பரமளாமிகள்‌ கோயில்‌ 


திருப்பதி ஸ்ரீவயிவர்களுக்கும்‌ கி,உண்‌ 


2. டி ஸ.கதாஸிகளுக்கும்‌ இந்நாயினார்க்கு திருப்பணிப்புறத்‌ திருவுடையாட்ட 
மாக வெண்பில்‌ நாட்டு ஸ;ஹதேயம்‌ ஆலோடு பட்டான்‌ குமாரபவித்திரச்‌ 


சதுவெ-கிமங்கலம்‌ எட்டாவது 


3. பசானம்‌ முதல்‌ திருப்பணிப்புறத்‌ திருவுடையாட்டமாகக்‌ கொண்டு 
பண்டுடையாரும்‌ பழந்தேவதானமுந்‌ தவிர்ந்து முதலடங்க இறையிலி 


யாகக்‌ குடுத்து இவ்வூர்க்கு வருங்கடமை அந்தராயம்‌ பொன்‌ 


225 


_ வரி விநியோகம்‌ வாசல்‌ பேறு வெட்டிப்பாட்டம்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்‌ 
பேறு காரியவாராய்ச்சி தறியிறை செக்கிறை தட்டொலி தட்டார்‌ 
பாட்டம்‌ இடைவரி ஏரிவரி இனவரி ஏரி மீன்பா 


ட்டம்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட உபாதிகளும்‌ தவிர்ந்து இன்னாள்‌ முதல்‌ 
நம்‌ வரியிலார்‌ கணக்கிலும்‌ கழிப்பதாகச்‌ சொன்னோம்‌ இப்படிக்கு 
இவ்வோலை பிடிபாடாகக்‌ கொண்டு இவ்வூர்‌ 


. நான்‌ கெல்லையிலுந்‌ திருவாழிக்‌ கல்லு நாட்டிக்‌ கொண்டு சந்திராதித்திவற்‌ 
செல்வதாக கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொண்டு திருப்பணி செய்து 
போதுக இவை நெட்டூருடையான்‌ னெழுத்து 


யாண்டு ௮ நாள்‌ உ௱௮லஎ இவை சுந்தரபாண்டிய . . . சாரிய 
னெழுத்து உ. 


226 


த.நர.௮ 


. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 140 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 40 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 1308 
ஊர்‌ ; திருமோகூர்‌ | 
அகிய கல்வடடு | 353/1918 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ௨-5 
அரசு: மிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ எண்‌ 
குலசேகரன்‌ 
இடம்‌ : காளமேகப்‌ பெருமாள்‌ திருக்கோயில்‌, தெற்கு வெளிப்புற திருமதிலின்‌ உட்புறம்‌. 
குறிப்புரை: துங்கவனத்தில்‌ பிரம்மதீர்த்தக்கரையில்‌ அரசன்‌ பெயரால்‌ சுந்தர பாண்டிய சோழக்‌ 
கோனார்‌ என்பவர்‌ எடுப்பித்த வேதநாயகர்‌ கோயிலுக்குத்‌ தென்பறப்பு நாட்டுப்‌ 
பன்னாட்டான்‌ கோட்டை என்ற ஊர்‌ காராண்மை திருவிடையாட்ட இறையிலி 
யாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது. இக்கோயில்‌ யானை மலையின்‌ 
தென்கோடியில்‌ உள்ளது. இங்குள்ள பாறையில்‌ பிற்காலப்‌ பாண்டியர்‌ கல்வெட்டு 
ஒன்றும்‌ காணப்படுகின்றது. | 
கல்வெட்டு : 


1. வாஹிஸ்ரீ கோச்சடை வன்மரான ல அக,வகிகள்‌ ஸ்ரீசுந்தரபாண்டிய 


தேவர்க்கு யாண்டு எட்டாவது நாள்‌ உ௱௮௰எ னால்‌ 


2. சாமுதஓ ஸ்ரீமற்கீர்த்திக்கு மேல்‌ ஷுஹிஸ்ரீ கி,வாவ.௪ அக்கரவத்தி 


கோநேரின்மை கொண்டான்‌ தென்பறப்பு நாட்டுத்‌ திருமோகூர்‌ 
நின்றருளிய பரமஸாமிகள்‌ கோயில்‌ திருப்பதி 


3. வயிவர்களுக்கும்‌ சி,உண்டி வ இராமானுஜ ஜீயற்கும்‌ 


தங்களூர்‌ ஸ்ரீதுங்கவனத்தில்‌ வ பரத உ தீர்த்தக்கரையில்‌ முன்னாள்‌ இறங்கிக்‌ 
கிடந்து நம்பேரால்‌ சுந்தரபாண்டிய 


227 


10. 
11. 


12. 


. ச் சோழ கோனார்‌ எழுந்தருளிவித்த நாயனார்‌ வேதநாதற்கு அமுது 


படி சாத்துப்படி உள்ளிட்ட நித்த[நிமந்தங்‌]களுக்கும்‌ திருநந்தவனம்‌ 
செய்கிற ஸ்ரீவயிஷவர்களுக்குக்‌ கொற்றிலக்கைக்‌ 


. குமாக இந்நாட்டுப்‌ பன்னாட்டான்‌ கோட்டையும்‌ . . . .. முக்குளம்‌ 


இந்நாயனார்‌ திருநாமத்தாலே இவ்வூரவர்‌ பக்கலிலே கொண்ட 
குளத்துக்கு நான்கெல்லைக்கு உட்பட்ட நீர்‌ நிலமுங்‌ 


. கருஞ்செய்‌ புன்செயும்‌ நத்தமும்‌ நத்தபாளும்‌ தோட்டமும்‌ தோட்டக்‌ 


கூறுங்‌ குளமும்‌ குளப்பரப்பும்‌ மேனோக்கின மரங்களுங்‌ கீழ்நோக்கின 
கிணறுகளும்‌ மற்றும்‌ இத்தால்‌ வ 


ந்த ஸூஸவரா௨ களும்‌ உட்படக்‌ காராண்மைத்‌ திருவுடையாட்ட இறை 


யிலியாக குடுத்து இவ்வூருக்கு வருங்கடமை வினியோகம்‌ பொன்வரி 


அந்தராயம்‌ காரியவாராய்ச்சி வெட்டிப்பாட்டம்‌ பஞ்‌ 


. ௬ பீலி சந்து விம, மப்பேறு வாசல்பேறு இலாஞ்சினைப்‌ பேறு தறியிறை 


செக்கிறை தட்டொலி தட்டார்ப்பாட்டம்‌ இடைவரி இனவரி ஏரிமீன்‌ 
பாட்டம்‌ மற்று இத்தால்‌ வந்த ஸ 


. ஊவராப்திகளும்‌ உட்பட இந்நாயனார்க்கு முதலடங்கக்‌ காராண்மை 


திருவுடையாட்ட இறையிலியாக குடுத்து நம்‌ வரியிலார்‌ கணக்கிலும்‌ 
கழிப்பதாகச்‌ சொன்னோம்‌ இப்படிக்கு 


இவ்வோலை பிடிபாடாகக்‌ கொண்டு சந்திராதித்தவற் செல்வதாக 


கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொண்டு இவ்வூர்‌ நான்கெல்லையிலும்‌ 


திரிவாழிக்கல்லும்‌ நாட்டிக்‌ 

கொள்ளவும்‌ பாற்க ௨ ஸ்ரீமற்கீத்திக்குமேல்‌ கோமாற பன்மரான 
அி.லுவ.சச்அக,வத்திகள்‌ எம்மண்டலமும்‌ கொண்டருளிய ஸ்ரீ குலசேகர 
தேவற்கு யாண்டு ச[0]வது நாள்‌ ஈ-டக 


இவை ஓஒருடையான்‌ எழுத்து இவை வாணாதிராயனெழுத்த 


228 


த. நா. அ, கொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 141 / 2003 


மாவட்டம்‌ 1 மதுரை ஆட்சி ஆண்டு : 7-1 

ணத மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 1259 

ஊர்‌ : திருமோகூர்‌ 

மொழி: தமிழ்‌ இத்தியக்‌ கல்வெட்டு 1 330 / 1918 

எழுத்து: தமிழ்‌ அடு தகை 

அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ முன்‌ பதிப்பு : க 

ன்‌ க்கட ட... ஊர்க்‌ கல்வெட்டு | 

மன்னன்‌ : சடையவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ ச | 10 

இடம்‌ : காளமேகப்பெருமாள்‌ திருக்கோயில்‌, தெற்கு வெளிப்புறத்‌ திருமதில்‌ உட்பக்கம்‌, 

குறிப்புரை : காளமேகப்பெருமாள்‌ கோயிலில்‌ காளமேகமான காங்கேயர்‌ என்பவர்‌ திருவாழி 
ஆழ்வாரை (சக்கரத்தாழ்வார்‌) எழுத்தருளுவித்து நிலக்கொடை அளித்ததை இக்‌ 
கல்வெட்டுக்‌ கூறுகிறது. இந்நிலத்தின்‌ எல்லைகள்‌ விரிவாகக்‌ கூறப்பட்டுள்ளன, 
இக்கல்வெட்டில்‌ கூறப்படும்‌ சக்கரத்தாழ்வார்‌ சந்நிதி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்‌, 
தற்போதும்‌ இக்கோயிலில்‌ இவ்வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. 

கல்வெட்டு : 


1. 


ஷஹிஸ்ரீ திருவாய்க்கேள்விக்கு மேல்‌ ஸ்ரீகோச்சடைய பன்மரான 
கில "வ.சச்சக்கரவத்திகள்‌- ஸ்ரீஸாஷம பாண்டியதேவற்கு யாண்டு எ வதி 


ன்‌ எதிராமாண்டு வைகாசி மாதம்‌ இருபத்தொன்றாந்தியதி தென்‌ 


பறப்பு நாட்டு திருமோகூர்‌ நின்றருளிய பரவோமிகளுக்கு , . . 


. க்காளமேகமான காங்கேயன்‌ எழுந்தருளிவித்த ஆழ்வார்‌ திருவாழி 


ஆழ்வார்‌ சேனாபதி ஆழ்வார்‌ திருப்பா .. க்கு. . . 


க்‌ காரணவர்க்குச்‌ சமைந்த ஊரோமும்‌ மத்தத்து[ம்‌] படையும்‌ படைக்‌ 


காரணவர்க்குச்‌ சமைந்த ஊரோமும்‌ பிரமாணம்‌ பண்ணிக்குடுத்த 
பரிசாவது 


229 


10. 


11, 


12. 


14. 


. இந்நாட்டு உடையார்‌ திரு , . . . டையார்‌ தேவதானம்‌ போர்க்‌ 


கா[ஓ]ட்டி திருவிராகிறாண முடையானான வேணாவுடையார்க்கும்‌ 
தா..... 
, ப்பிடி விழுந்தானுக்கும்‌ . . . . த்தல்‌ குளத்துக்கும்‌ பள்ளன்குளத்துக்கும்‌ 


சூழெல்லைக்குக்‌ கீழெல்லை சிற்றானகரத்துக்கு மேற்கும்‌ தென்‌ 
னெல்லை , 


நீர்‌ நக்கிக்கும்‌ இரை . . . . லைக்கு வடக்கு மேலெல்லை பிடாரி 


யேம்பல்‌ எல்லைக்குக்‌ கிழக்கும்‌ வடவெல்லை ஊத்தைப்‌ பா[ட்டத்‌]துக்கு 
தெற்கு 


. ஆக இசைந்த பெருநான்கெல்லைக்‌ குள்பட்ட குளமும்‌ குளப்பரிப்பும்‌ 


காலுங்‌ கால்வ . . . மும்‌ ஊர்‌ நத்தமும்‌ நத்தப்‌ பாழும்‌ களரும்‌ 
நன்செய்‌ புன்செயும்‌ மேனோக்கின மரமும்‌ கீணோ 


r 


. க்கின கிணறும்‌ புற்றும்‌ தெற்றியும்‌ உடும்போடியும்‌ ஆமை தவழியும்‌ 


மீன்படு பள்ளமும்‌ தேன்படு பொதும்பும்‌ சுடுகாடும்‌ தோட்டமும்‌ மற்றும்‌ 


எப்பேற்பட்ட ஸூ 


ஒலஹாவிகளும்‌ இவர்கள்‌ இவர்க்கு விற்றுக்‌ குடுத்த இவர்களுக்கு இறை 
யிறுத்துப்‌ போந்த வரிக்‌ கணக்கு இத்தால்‌ வந்த இறை எப்பேர்ப்‌ 


பட்ட... 


வித்து ஊரிலும்‌ வரியிலும்‌ கழித்து இவ்வேணாவுடையார்க்கு காணியும்‌ 
இந்நாயனார்க்கு குடியுமாக இற்றைநாள்‌ கணக்கிலும்‌ . .... 
கல்லியும்‌ நாட்டி . . . . இ(வ்‌) 


வர்க்கும்‌ இவர்‌ வற்க்கத்தார்க்கும்‌ சந்திராதித்தவற்‌ செல்வதாக உரசாணம்‌ 
பிடிபாடாக கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிவித்துக்‌ குடுத்தோம்‌ திருவாழி 
ஆழ்வார்க்கு . . . ... 


க்கும்‌ படையும்‌ படைக்‌ காரணவர்க்கும்‌ சமைந்த ஊரோமும்‌ மத்தத்து 
சபத த ஆட்டும்‌ டைகாரணவர்க்குச்‌ சமைந்த ஊரோமும்‌ ஆழ்வார்‌ திருவாழி 
ஆழ்வார்க்கும்‌ ஸ்ரீசேனாபதி ஆழ்வார்க்கு . . . . 


230 


14. இப்படிக்கு நரலோக விழுப்பரையன்‌: தற்குறிக்கும்‌ மதிதுங்க 
முத்தரையன்‌ . . . . ய்யக்‌ கொண்ட பேரரையன்‌ தற்குறிக்கும்‌ சிராம்‌ 


15. தற்குறிக்கும்‌ குலசேகர கங்கன்‌ தற்குறிக்கும்‌ நாட்டி . . .. தற்குறிக்கும்‌ 
தற்குறி மாட்டெறிந்தேன்‌ திருக்கண்ணபுரத்து க வட 


யுடையான்‌ 


16. இப்படிக்கு னாட்டி நாயகப்‌ பேரரையன்‌ தற்குறிக்கும்‌ கண்ணுடைப்‌ 
பேரையன்‌ தற்குறிக்கும்‌ வெள்ளிமலை நாடாழ்வான்‌ தற்குறிக்கும்‌ 


231 


கதைய அட 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


குறிப்புரை : 


மதுரை 
மதுரை வடக்கு 
திருமோகூர்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


மதுரை நாயக்கர்‌ 


காளமேகப்பெருமாள்‌ திருக்கோயில்‌, 


தொடர்‌ எண்‌ : 142 / 2003 


ஆட்சி ஆண்டு : 
வரலாற்று ஆண்டு : 
இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
முன்‌ பதிப்பு : 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


தென்மேற்கு, வடக்குப்புறப்‌ பகுதிகள்‌. 


வெளித்‌ திருசுற்று 


(சகம்‌ 1629) 
கி.பி. 1700 
11 


மதில்‌, தென்கிழக்கு, 


தளவாய்‌ நரசப்பையனின்‌ அனுமதியுடன்‌ அவரது மகன்‌ வெங்கப்பய்யன்‌ வெளித்‌ 
வெகுதான்ய மற்றும்‌ விக்கிரம வருடங்களில்‌ 
(கி.பி, 1698, 1699, 1700) கட்டினார்‌ என்று இக்கல்வெட்டுகள்‌ கூறுகின்றன. 


திருச்சுற்று 


மதிலை பிறமாதி, 


அ 1. [சகாத்த]ம்‌ ௧௬௱ ௨௰௨ ன்‌ மேல்‌ விக்கிரம ஷோ 


2. [த]ளவாய்‌ நரசப்பய்யன்‌ அவர்கள்‌ அனுமதியினாலே 


2. நரசப்பய்யன்‌ குமாரர்‌ வெங்கப்பய்யனவர்கள்‌ 


4. கட்டிவித்த திருப்பணி பழனியப்பன்‌ சதாசேவை 


ஆ 1, வெகுதானிய ஷ்‌ 


2. வெங்கப்பய்யனவர்‌ 


3. கள்‌ கட்டிவிச்ச மூலை 


இ 1. சகாத்தம்‌ ச்சு ௨௫௯ ன்‌ மேல்‌ 
2, பிறமாதி ஷூ வெங்கப்பய்யன 


3. வர்கள்‌ கட்டிவிச்ச மூலை 


232 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 143 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : . கி.பி. 12-19-ஆம்‌ 
நூற்றாண்டு 
ஊர்‌ : திருமோகூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 1 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை j 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ட்‌ 
ஊர்க்‌ கல்வெட்டு . 12 
மன்னன்‌ ; — கசன்‌: 


இடம்‌ : 


காளமேகப்‌ பெருமாள்‌ திருக்கோயில்‌, தெப்பக்குளம்‌, மைய மண்டபம்‌, 


1 


குறிப்புரை : இத்துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ கோயிலுக்கு விடப்பட்ட நிலங்கள்‌ பற்றியும்‌ அவற்றை 


இறையிறுக்கும்‌ கோலால்‌ அளந்ததையும்‌ நிலம்‌ விற்றுக்‌ கொடுத்ததைப்‌ பற்றியும்‌ 
தெரிவிக்கின்றன. ஒரு துண்டுக்‌ கல்வெட்டு முதலாம்‌ குலோத்துங்க சோழனின்‌ 
மெய்கீர்த்திப்‌ பகுதியுடன்‌ உள்ளது; 


கல்வெட்டு : 


அ. 


1. டலில்லா . . 

2. டுஆற்றூர்‌ ந [பட]... 
3. விற்றுக்‌ குடு 

4. கெல்லை ௦... 

9. கீனோக்கிய .... 


1. னாமத்தாற்‌ செய்வித்த ஸ்ரீகுலசேகர . . .ன்‌.. 

2. றையிறுக்குங்‌ கோலால்‌ இட்டநிலம்‌ இரண்டு. . . 
3. வரி திணைக்கள நாயகம்‌ மிழலைக்‌ கூற்றத்து. . . 
4, 'நற்கானாட்டு மேனெச்சியான தரணிவிச்சா . . . 


233 


ரிட்‌ ஸவந் திருவாரா௰ , . 


2௨ம்‌ தோட்டமும்‌ நத்‌. ... 


3. மெப்பேற்ப்பட்ட. . . 


1. வதினெதிர்‌ ஒன்பதாமாண்டு ௨.௧. வெஷவ . . . 
2, ளிசடகோபன்‌ பாட்டு கேளா நிற்க நம்‌ வீட்டிற்[கொ]. . . 
3. யும்கருஞ்செயும்‌ புன்செயும்‌ நத்தமும்‌ நத்‌. . . 
4. னுக்கு காராண்மையாக குடுக்க வேண்‌, . . 
. .வெடிசிமங்கலத்து, . .. 
. தேவதான இறையிலியாக யிறுப்‌ . . 
2 அடாசிதுவற்‌ செல்வதாக கல்‌... 


. ட்டுவேண்டும்‌ நிவந்தங்களுக்கு . . . 


1 
2 
3 
4. ந்த வேளாந்‌ எழுத்து ॥--- கி,லுவனச்‌.. 
5 
6. கோலால்‌ மூன்றே ஒருமா நிலம்‌. . 


1. ட்டு வி[ஸ]னம்‌ பண்ணி வி[ஸ]னத்தலாற்றாதும்‌ ஊரி... 
2. டலில்லாமையால்‌ இம்மண்டலத்து உத்தம சோழ வள. . 
3. பண்ணப்‌ பெறுவானாக இத்தேவர்க்குத்‌ .. தேவதானம்‌ .. 
4. ல்லைநக்கனேரி மேலெல்லைக்கு வடக்கும்‌ மேல்‌ .. 
5. சைந்த நான்கெல்லையுள்‌ மேனோக்கிய மர .. 

1. திருமோகூர்‌ நின்றருளின 'பரமஹாமிகள்‌ கோ .. 

2. த பாண்டியப்‌ பேரேரிக்‌ கீழ்‌ ஒரு பக்க மடைய்‌,. , , 

8. கு. நாச்சியார்‌ பகவதியாழ்வார்‌ ஸ.ஜாஸிகளிற்‌ திரும . 

4, அந்தராய முட்படத்‌ திருநந்தவனப்புற இறையிலியா 

1. செய்து குடுத்தோம்‌ திருமோகூர்‌ நின்றருளிய .. 

2, லுக்கு எம்மிலிசைந்த விலைப்‌ பொருளெங்‌ . . .. 

9. தானம்‌' இறுகிறபடி காராண்மை கைக்‌ ,. , 

4, முதலில்‌ வரியிட்டுக்‌ கொள்ளப்‌ பெறுவா்‌ .: ன 


234 


ஐ. 1... . . னாட்‌[டுகழ..... 
2. ராஜ னெழுத்து இப்படிக்கு . புரவரிதிணை . . . 


ஒ. 1. ஷஷிஹீ புகழ்மாது . . . . * 
தலத்‌ தப்த கெயாவிஷேகம்‌ பண்ணி. . . 
8... ராஜராஜ பாண்டி நாட்டு இராஜே௩ . . 
4, . . . விண்ணகராழ்வார்‌ திருமுற்றத்நு நாலாயிர 


5, ம்‌ ஓக்கக்‌ கடமை குடிமை கொண்டு வந்து யாண்‌. ... 


235 


த, நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 144 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : = 
வட்டம்‌ : மதுரை வடக்கு வ்ர்லாற்று ஆண்டு ; கி. பி, டி. - ஆம்‌ I 
நூற்றாண்டு 
ஊர்‌ திருமோகூர்‌... இந்தியக்‌ தல்கிவ்ட்டு | இ 
மொழி . தமிழ்‌ ஆண்டு அதிக்ஸ்க்‌ ] 
எழுத்து தமிழ்‌ மூன்‌ பதிப்பு : ' து 
அரசு பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ன்‌ 
மன்னன்‌ — எண்‌... ] 
இடம்‌ : காளமேகப்பெருமாள்‌ திருக்கோயில்‌, முதல்‌ திருச்சுற்று மேற்கு மதில்‌. 
குறிப்புரை :  இத்துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ அரச ஆணையில்‌ கையொப்பமிட்ட பல அதிகாரிகளின்‌ 
பெயர்களையும்‌, இக்கோயில்‌ அழகிய நாச்சியார்‌ குறித்தும்‌ தெரிவிக்கின்‌ றன. 
கல்வெட்டு : 
அ. 1, வை கம்பன்‌ உத்தம பாண்டிய விழுப்பரையன்‌ எழுத்து இவை 
... இ, யிராதராயன்‌ எழுத்து இப்படி அறிவேன்‌ நாட்டு கணக்கு க . . . 
பப்டி ஆல லாத்‌ றுபரவக .. .. 
2. சையாயிரத்தளியிற்‌ ரமன அறி 
3. யுஞ்‌ செய்ய தொ... .மய்‌ கொண்டு 
4. மேலயனுங்கு .. .. ய மாலும்‌ றிய 


. டிக்கும்‌ சாசனத்தின்‌ படி 
யார்க்கு .. . .. ண்மை... . மிம்‌ 
வை... 


. பியன்‌ பல்லவரையன்‌ எழுத்து இவை விழுப்பரைய . . ... 


ரன்‌ எழுத்து ௨ . 


236 


 ஈசல்லமுயந்தராயத்துக்கு ௦ 


. ௨... இக்கோயில்‌ தான 
. யார்‌ அழகிய நாச்சியார்‌ 
ராகவும்‌ பொன்வரிக்கு 


. கபாரது நாள்‌ வி... 


237 


த. நர. அ, தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 145/ 2003 . 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு ! 2 
வட்டம்‌ : மதுரை வடக்கு ம்‌ வரலாற்று ஆண்டு? கி.பி, 18-ஆம்‌ 
ஊர்‌ : திருமோகூர்‌ : த்‌ நூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு ] 
மொழி: தமிழ்‌ ்‌ ஆண்டு அறிக்கை- ர்‌ ல 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : க 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ i ஊர்க்‌ கல்வெட்டு sr 
மன்னன்‌ : ஆ எண்‌ 
இடம்‌ : காளமேகப்பெருமாள்‌ திருக்கோயில்‌, தெப்பக்குளம்‌ மண்டபம்‌, 
குறிப்புரை : திருமோகூர்‌ பெருமாளுக்கு இறையிலியாக நிலக்கொடை அளித்ததைப்‌ : பற்றிக்‌ 
குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. ஸலையோம்‌ அருமேதகம்‌ நின்றருளிய பரமலாமிகளுக்கு விற்று 
. வரமானம்‌ 
2. நிரண்டரையும்‌ இறைஃஉ,வஏத்துக்கு கொண்ட காசு பந்நிரண்டரையும்‌ 
3. ல்ல கொண்டு இன்னிலத்துக்கு வழியிறை வெட்டி வேதினை 
எச்சோற்றுக்‌ , . . 
4, ஸலையோமே யிறுக்க கடவோமாகவும்‌ இப்பரிசு சஷோகிதவற்‌ செல்‌ 
5. சேரி ஸ்ரீகனத்‌[து] அன நாராயண லட்டன்‌ பணிக்க இச்சேரி ஆதுயந்‌ . 
சோமாஜி 
6. மஹாஸலையோம்‌ (திருமோகூர்‌) திறத்தில்‌ பரமலாமிகள்‌ 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 146 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 

; : தூற்றாண்டு 
CS இருக இந்தியக்‌ கல்வெட்டு | ்‌ 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர்‌ i 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : == 
அரசு : பிற்காலப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ ச்‌ 
மன்னன்‌ — எண்‌ J 
இடம்‌ : . காளமேகப்பெருமாள்‌ திருக்கோயில்‌, முதல்திருச்சுற்று, தெற்கு மதில்‌ வெளிப்பக்கம்‌. 


குறிப்புரை :. திருமோகூர்‌ கோயிலுக்கு நிலக்கொடை அளித்தது, துழாய்குடி நிலமளக்கும்‌ கோல்‌, 
நாச்சியார்‌ பகவதியாழ்வார்‌ பற்றியும்‌, தானம்‌ அளிக்கப்பட்டது பற்றியும்‌ கூறும்‌ 
துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. 
கல்வெட்டு : 
அ 1, திரிலுவனச்‌ சக்கரவர்த்திகள்‌ . . 
2. துழாய்‌[க்‌குடியான சுந்தர . . 
3. நாச்சியார்‌ பகவதியாழ்வார்‌ . . 
4, கோலால்‌ நிலம்‌ இரண்டே . 


9, - தென்‌,... 


ஆ 1. ந்தானஅ . . . . 
2. நிலம்‌ தீதஹரத்து இவ்வூர்‌ கடமையிறுக்‌ , . . 
3. டினவும்‌ உட்பட்டனவும்‌ உட்பட நாலா . . 
4, திருப்படிமாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்‌ . . 


5. ய்யிரண்டு மாவும்‌ காராண்மை மீயா . .. 


239. 


ப எ இ மே... எ. 


_ன்மா நாட்டுத்‌ . .. 
டனும்‌ என்று. . . 

. மையிறுக்குங்‌ . . . 
... தோளன்‌ மு... 

வது நாள்‌. . . 


, யனழகனான வயி. . 

. ட்டுத்‌ திருமோகூர்‌ . , 
களுக்கு . , கீழ்கள[ந்‌]கூ . . 
_ ட்ச்சியும்‌ தருவதா . 


ஐய்யன்‌ மழவராயர்‌ . . 


க்கு இவர்க்கு கா. . 


ளுக்கு நாச்சியார்‌ பகவதியாழ்வார்‌ 


உண்டே முக்காலே மூன்றுமா அம்ப . . 
. செய்வித்த[ரு)ளி குலசேகரன்‌ திருனந்தவ 
. வியுந்தரச்‌ சொன்னோம்‌ இப்படி சந்திராதித்‌ . 


. - சாமந்தந்‌ எழுத்து 


240 


த. நர, அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 147 / 2003 


மாவட்டம்‌ ;: 


வட்டம்‌ : 
ஊர்‌ : 
மொழி: 
எழுத்து 1 
அரசு : 


மன்னன்‌ : 


இடம்‌ : 


குறிப்புரை : 


கல்வெட்டு : 


அ. 1... 
லட லட 


மதுரை ஆட்சி ஆண்டு 0 
மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு: கி.பி. 18-ஆம்‌ 
தூற்றாஸ்டு 
திருமோகூர்‌ ! 
ப்ப ப்‌ இந்தியக்‌ கல்வெட்டு | _ 
தடட ஆண்டு அறிக்கை J 
தமிழ்‌ 


முன்‌ பதிப்பு: — 


ஊர்க்‌ கல்வெட்டு 
ந எண்‌ 


] 
ட்ட நத 
ர்‌ 


காளமேகப்பெருமாள்‌ திருக்கோயில்‌ உள்கோபுரம்‌ 


துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. கி.பி. 13 மற்றும்‌ 17-ஆம்‌ நூற்றாண்டு எழுத்தமைதியில்‌ 


உள்ளவை. 


. களுக்கு நம்‌ .. 
. நத்தமுந்‌ தோட்டமுங்குளமும்‌ 


3. பேறும்‌ மற்றும்‌ எப்பெயர்ப்‌ பட்டனவு 


4, த்துக்‌ காராண்மை மீயாட்சி .. 


ஆ. 1. அப்பயங்கார்‌ 


2. சதாசேவை 


241 


த. நா, அ. தொல்லியல்‌ துறை, .  ெரடர்‌ எண்‌ : 148 / 2903. 


3: மதுரை ஆட்சி ஆண்டு: -: 6 


மாவட்டம்‌ 

வட்டம்‌: மதுரை வடக்கு ப வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 

ஊர்‌ திருமோகூர்‌ . தூற்றாண்டு 

த்‌ ,இத்தியக்‌ கல்வெட்டு 1 332/1918 

மொழி: . தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர 

எழுத்து: தமிழ்‌. முன்‌ பதிப்பு: ப 

அரசு பிற்காலப்‌ பாண்டியர்‌ ட 

மன்னன்‌ : சடையவர்மன்‌ . ்‌ ற்ே கல்வெட்டு 1 16 
சுந்தரபாண்டி யன்‌ ன்‌ oi 

இடம்‌ காளமேகப்பெருமாள்‌ "திருக்கோயில்‌, தெற்குப்புற வெளிமதில்‌ உட்பக்கம்‌ - 

குறிப்புரை : தென்பறப்பு நாட்டுத்‌. திருமோகூர்‌ காளமேகப்‌ பெருமாளுக்குத்‌ திருப்பணிக்காகத்‌ - 
திருப்பணிப்புறத்‌ திருவிடையாட்டமாக  வீரநாராயணச்‌ சதுர்வேதிமங்கலத்து 
நிலங்கள்‌ இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது இவ்வூர்‌ 

ச நிலங்கள்‌ சோழவந்தான்‌ பகுதியில்‌ இருந்துள்ளது. இந்கல்வெட்டில்‌ எட்டாவது 

பாசன முதல்‌ என்று பாசன : ஆண்டும்‌ (பசலி) குறிப்பிடப்படுகிறது. I 

கல்வெட்டு : 


1, தனு ஷீ ஹிஸ்ரீ கி,ல வ.க அக௯;வத்தி கோதேரின்மை கொண்டான்‌ தென்‌ 


பறப்பு நாட்டுத்‌ திருமோகூர்‌ நின்றருளிய பரமலாமிக்ள்‌ கோயில்‌ 
திருப்பதி வயிஷவர்‌ 7 


2. களுக்கும்‌ கி.உண்டிஸன்‌ ஜாசிகளுக்கும்‌ இந்நாயனார்க்குத்‌ திருப்பணிப்‌ புற 


திருவிடையாட்டமாகப்‌ பாகனூர்க்‌ கூற்றத்து தேனூர்‌ திருவேடகத்தில்‌ 
வேறுபிறிந்த 


. வீரநாராயணச்‌ ஈதுவெஃகிமங்கலமும்‌ : சாலை உள்ளிட்ட பற்றும்‌ 


எட்டாவது பசான முதல்‌ திருப்பணிப்புறத்‌ திருவுடையாட்டமாகப்‌: 
பண்டுடையாரும்‌ பழங்காணியாள ்‌ 


242... ்‌ 


. ரும்‌ தவிர்ந்து முதலடங்க இறையிலியாகக்‌ குடுத்து இவ்வூர்களுக்கு 
வருவாய்க்‌ கடமை அந்தராயம்‌ பொன்வரி வினியோகம்‌ வாசல்பேறு 
இலாஞ்சினைப்பேறு வெட்டிப்‌ பா 


:; ட்டம்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்‌ பேறு காரியவராய்ச்சி தறியிறை செக்‌ 
கிறை தட்டொலி தட்டார்பாட்டம்‌ ஏர்வரி இடைவரி இனவரி ஏரி மீன்‌ 
பாட்டம்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட பல உ 


. பாதிகளும்‌ தவிர்த்து இந்நாள்‌ முதலுக்கு நம்‌ வரியிலார்‌ கணக்கிலுங்‌ 
கழிப்பதாகச்‌ சொன்னோம்‌ இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக்‌ 
கொண்டு இவ்வூர்‌ காணி நான்கெல்‌ 
. லையிலுந்‌ திருவாழிக்‌ கல்லும்‌ நாட்டிக்‌ கொண்டு சந்திராதித்தவற்‌ 
செல்வதாகக்‌ கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொண்டு திருப்பணி 
செய்து போதுக ௨ ்‌ 


.. இவை நெட்டூுருடையானெழுத்து யாண்டு எட்டு நாள்‌ உ௱௮௰௫ இவை 
சுந்தரபாண்டிய காலிங்கராயனெழுத்து ௨ பஸ்ரீமற்கீர்த்திக்கு மேல்‌ , 


. ஸ்ரீகோச்சடைய பன்மரரன கி,வுாவகஅக,வத்திகள்‌ ஸ்ரீசுந்தரபாண்டிய 


தேவற்கு யாண்டு எட்டாவது நான்‌ .௨௱௮௰௭ இவை சுந்தரபாண்‌(டிய 
காலி]ங்கராயனெழுத்து ௨ 


243 


த. நா. அ. தொல்லியல்‌ துறை -  ,9தொடர்‌ ஏண்‌: 149 / 2003 ' 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி: ஆண்டு :: — 
வட்டம்‌ ; மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு: கி.பி. முதலாம்‌ 
ஊர்‌ :. யானை மலை ்‌ நூற்றாண்டு 


த அட அக்‌ அடக்‌ 1 
இத்தியக்‌ கல்வெட்டு | 57/1906 


மொழி ; தமிழ்‌ . ஆண்டு அறிக்கை 
எழுத்து : தமிழ்‌ .. முன்‌ பதிப்பு: தெ.க.தொ.22 
அரசு : — 3 க்‌ ்‌ ர பகுதி 2 
மன்னன்‌ ; :-_ வ . ஊர்க்‌ கல்வெட்டு 1 
- எண்‌ 
ல்‌ ன்‌ ] 
இடம்‌ : மலையின்‌ உச்சியிலுள்ள இயற்கையான குகைத்‌ தளம்‌. 


குறிப்புரை : இவ குன்றத்தில்‌ (யானை மலை) உறைவதற்காக இருப்பிடம்‌ . அமைத்தவன்‌ எரி 
ஆரிதன்‌ அத்துவாயி அரட்டகாயிபன்‌ : என்று இக்கல்வெட்டு கூறுகிறது. பா 
என்றால்‌ படுக்கை என்று GE . த்‌ 
கல்வெட்டு : 


Li இவகுன்றத்தூ உறையுள்‌ பா தந்தான்‌ எரிஆரிதன்‌ 
2. அத்துவாயி அரட்ட காயிபன்‌ 


244 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : மதுரை 


தொடர்‌ எண்‌ ; 150 / 2003 


ஆட்சி ஆண்டு : _ 
கி.பி. 9-10-ஆம்‌ : 


வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : ்‌ 
மீற்றாண்டு 
ஊர்‌: யானை மலை - த . | ்‌ 
இந்தியத்‌ கல்வெட்டு 67/1905 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : வட்டெழுத்து முன்‌ பதிப்பு : கல்வ 
| 
அரசு = ஊர்க்‌ கல்வெட்டு 1 9 ட்‌ 
மன்னன்‌ — எண்‌ ] ்‌ 
கல்வெட்டு ்‌ 
இடம்‌ : குன்றின்‌ மேற்குப்புறமுள்ள இயற்கையான குகைத்‌ தளம்‌, சமணச்‌ சபற 
கீழேயுள்ளது. 
குறிப்புரை : களவழி நாட்டு அணியன்‌ என்பவன்‌ நினைவாக ஏனாதி நாடி என்பவன்‌ செய்வித்த 
திருமேனி என்று இக்கல்வெட்டு தவ வல்‌ க 
கல்வெட்டு : 
1. ஸ்ரீ களவழி நா 
க்க 2 ல. ஆர 


3... ட்டி அணிய 
4. னை சாத்தி ஏனா 
. தி நாடி செய்‌ 

6. விச்ச திரு 

7. மேனி 


245 


த.நா. அ. தொல்லியல்‌ துறை . தொடர்‌ எண்‌ : 151/ 2003. 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 


வட்டம்‌ : மதுரை வடக்கு ட்‌ வரலாற்று ஆண்டு ; கி.பி. 9-10-ஆம்‌ 
ல |  * | நூற்றாண்டு 

ஊர்‌ ; யானை மலை இந்தியக்‌ கல்வெட்டு | . 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை - 1 வ ததும்‌ 
எழுத்து. : டெழுத்‌ ட ட 

மூத்து “டை வதன்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க.தொ.14. 
அரசு: , ௮4 எண்‌ 100 
மன்னன்‌ ; _ ்‌. ஊர்க்‌ கல்வெட்டு 1 ப 

எண்‌ g ] 

இடம்‌ : குன்றின்‌ மேற்குப்புறமுள்ள இயற்கையான குகைத்‌ தளம்‌. சமண சிற்பத்திற்கு 


அடியில்‌ உள்ளது. 


குறிப்புரை: திணைக்‌ களத்தார்‌ பாதுகாப்பில்‌ * இத்திருமேனி 'விடப்பட்டதை இக்கல்வெட்டு 
கூறுகின்றது. 


கல்வெட்டு : 
1, ஸ்ரீ திணை 
2. க்களத்தார்‌ 
3. ரகக 


246 


த. நர, அ, தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 1 மதுரை 


தொடர்‌ ஏண்‌ : 152 / 2003 


ஆட்சி ஆண்டு : 


வட்டம்‌: . மதுரை வடக்கு வ்ல்கத்ற்‌ ண்ட்‌ படக்கும்‌ 
ஊர்‌ : யானை மலை ஊற்றாண்டு 
[| . மிப்‌ . 3 4 ° 
மாழி தமிழ்‌ இத்தியக்‌ ட்ட 69/1905 
எழுத்து : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
அரசு : _— முன்‌ பதிப்பு : தெ.இ.க.தொ. 14; 
எண்‌ 101 
பயத்த து ஊர்க்‌ கல்வெட்டு ்‌ 
எண்‌ 
இடம்‌ : குன்றின்‌ மேற்குப்‌ புறமுள்ள இயற்கையான குகைத்தளம்‌, சமண சிற்பத்திற்கு 
4 


அடியில்‌ உள்ளது. 


குறிப்புரை : பொற்‌ கோட்டுக்‌ கரணத்தார்‌ இதற்கு ஆதரவளித்ததனைக்‌ கூறுகிறது. 


கல்வெட்டு : 
1. ஸ்ரீ பொற்கோ 
2. ட்டுக்‌ கரண 


9. த்தார்‌ ரக்ஷ 


247” 


ரை சொல்க வலை 


பை பைக்‌ 


வல்ல அனத்தல்‌ உ டஸ்ட்‌ 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 153 / 2003 


' மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : ம 
. வட்டம்‌ : மதுரை வடக்கு . வரலாற்று ஆண்டு 5 கி.பி. 9-10-ஆம்‌ 
fet ப நூற்றாண்டு 
த்‌ ட்‌ பக்தித்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 70/1905 
மொழி : தமிழ்‌ ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : வட்டெழுத்து . முன்‌ பதிப்பு : _தெ. இ.க,தொ. 14 
ன்‌ ச எண்‌ 102 
பல்‌ ச்‌ ஊர்க்‌. கல்வெட்டு 14 உ 
மன்னன்‌ : பய்‌ ] 
இடம்‌ : குன்றின்‌ மேற்புறமுள்ள இயற்கையான குகைத்தளம்‌.. சமண சிற்பத்திற்கு அடியில்‌ 
- உள்ளது. 


குறிப்புரை : இங்குள்ள தீர்த்தங்கரர்‌, பரிவார புரவுவரியார்‌ சிற்பங்களை அச்சணந்தி செய்வித்தார்‌ , 
2 இதற்கு காவல்‌ அளித்து ஆதரவு தந்தவர்‌ நரசிங்க மங்கலத்து ஊரவையினர்‌ 
(சபையார்‌) என்று இக்கல்வெட்டு கூறுகிறது. 


கல்வெட்டு : 
1 ஸ்ரீ நரசிங்க மங்கலத்து 
- 2. ஸலெயார்‌ ரக்ஷ அச்சணந் 
3. தி செய்வித்த திருமேனியும்‌ பரிவார 
4..புரவு வரியார்‌ பேரமும்‌ 


248 


த. நர. அ. தொல்லியல்‌: துறை 


2. ப்‌ பெரு வேம்பற்றூர்ச்‌ செ(ழு) 
3. ழியப்‌ பாண்டி செய்வி 
4. ௪ இயக்‌[கர்‌*] பதும 


ம்‌ பரிவார[பேரம்‌] 


தொடர்‌ எண்‌ : 


154. / 2003: i 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — ட்‌ 
வட்டம்‌ மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 9-10-ஆம்‌$ 
்‌ நூற்றாண்டு 
ஊர்‌ யானைமலை ன்‌ ம்‌ ்‌ . 
இந்தியக்‌ கல்வெட்டு | 71/1905 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து : வட்டெழுத்து முன்‌ பதிப்பு! தெ.இ.க.தொகுதி 14 
எண்‌. 1:08 
க்ப்‌ TT ஊர்க்‌ கல்வெட்டு 1 ட்‌ 
டன்னன்‌ — எண்‌ ] 
இடம்‌ குன்றின்‌ மேற்புறமுள்ள இயற்கையான குகைத்தளம்‌. தீர்த்தங்கரர்‌ சிற்பத்திற்குக்‌ 
கீழ்‌ உள்ளது. ; 
குறிப்புரை : தென்களவழி நாட்டுப்‌ பெருவேம்பற்றூர்‌ என்ற ஊரைச்‌ சார்ந்த செழியப! ண்டி 
என்பவன்‌ செய்வித்த இயக்கர்‌ சிற்பம்‌ என்று இக்கல்வெட்டு கூறுகிறது. ! 
கல்வெட்டு : | 
1. தென்‌ களவழி நாட்டு | 


249 


த. நர. அ. தொல்லியல்‌ துறை : . தொடர்‌ எண்‌ ; 155 / 2093 


மாவட்டம்‌ : மதுரை அ : ஆட்சி ஆண்டு : ட — 
வட்டம்‌: : மதுரை வடக்கு - வரலாற்று ஆண்டு. : கி.பி. 9-10-ஆம்‌ 
ட்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : யானைமலை த்‌ ர 
இத்தியக்‌ கல்வெட்டு | 72/1905 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து : வட்டெழுத்து முன்‌ பதிப்பு : தெ.இ.க.தொ. 14 
ட த்க்‌ 5 எண்‌. 104 
ல்‌ 1 ஊர்க்‌ கல்வெட்டு 1 த ள்‌ 
மன்னன்‌ : — ல்‌ எண்‌ J 
இடம்‌: : குன்றின்‌ மேற்புறமுள்ள இயற்கையான குகைத்தளத்தில்‌ சமண சிற்பத்திற்குக்‌ கீழே 
உள்ளது. டசி 
குறிப்புரை : - வெண்புகாட்டு வெண்புரை என்ற “ஊரைச்‌ சார்ந்த சாதன்‌ ஆம்பிறையாயின 


சாதன்‌ அரையன்‌ என்பவன்‌ செய்வித்த சிற்பம்‌ என்று கூறுகிறது. 


கல்வெட்டு : 
1. ஸ்ரீ வெண்புரை நாட்டு வெண்‌ 
2. புரை சரதன்‌ ஆம்பிறையா 
3. னாஇன சாதன்‌ அரையன்‌ செய்‌ 


4. வித்த திருமேனிய்‌ 


250 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


1. ஸ்ரீவல்லத்திரு 

2. க்கைசச்‌ ச[து] .. ஊ 
9. ர்க்‌ கொ[ய்ய]ங்‌? 

4, .. மி செய்வித்த 

5. திருமேனி 


தொடர்‌ எண்‌ : 156 / 2003 ! 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — i 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 9-10- ஆம்‌ 
்‌ நூற்றாண்டு 
ஊனா : யானைமலை . நப ல உ Fe 
இத்தியக்‌ கல்வெட்டு | 78/1905 
மொழி; தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: . வட்டெழுத்து முன்‌ பதிப்பு : : தெ.இ.க.தொ, 14. 
எண்‌ 105 
ப்ப = ஊர்க்‌ கல்வெட்டு 1 ள்‌ ‘ 
மன்னன்‌ ஆ எண்‌ | | 
இடம்‌ : குன்றின்‌ மேற்குப்புறமுள்ள இயற்கையான குகைத்தளம்‌. சமணச்சிற்பத்திற்கு அருகில்‌ 
உள்ளது. 
குறிப்புரை : வல்லத்திருக்கை நாட்டைச்‌ சேர்ந்தவன்‌ ஒருவன்‌ (ஊர்க்‌ கொல்லன்‌) செய்வித்த 
சிற்பம்‌ என்று கூறுகிறது. ்‌ 
கல்வெட்டு :. 


1. “வல்லத்திருக்கை” என்று படிப்பதே சரியானது. 


2. “கொல்லன்‌? என்று படிக்கலாம்‌. 


201 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ஃ A57./ 2003 - 


மாவட்டம்‌ : மதுரை . ஆட்சி ஆண்டு ! னு 
வட்டம்‌ : [மதுரை வடக்கு “வரலாற்று ஆண்டு 8 கி.பி,.9-10-ஆம்‌ 
படல்‌ நூற்றாண்டு 
களர்‌ : யானைமலை ற்றிய வம்‌ \ 
மொழி : தமிழ்‌ “ஆண்டு அறிக்கை ்‌ 74/1909 
எழுத்து : வட்டெழுத்து a முன்‌ பதிப்பு : தத2இ.க.தொ. 14 

்‌ ்‌ . எண்‌ 109 
அரசு : = ஊர்க்‌ கல்வெட்டு) ்‌ 
மன்னன்‌ : — அனை [ த்‌ 
இடம்‌ : குன்றின்‌ மேற்புறமுள்ள இயற்கையான குகைத்தளம்‌, சமணச்‌ சிற்பத்திற்கு அடியில்‌ 


உள்ளது. 


குறிப்புரை : வெண்பட்டு வெண்பைக்குடியிலுள்ள வேட்டஞ்சேரியில்‌ இருக்கும்‌ 
புதுமை எவியம்‌ பூதி என்பவன்‌ இங்குள்ள சிற்பத்தைச்‌ செய்வித்ததையும்‌ அதற்குப்‌ 
புரவுவரித்திணைக்களத்தார்‌ - ஆதரவளித்துக்‌ .காத்தல்‌ '.செய்ததையும்‌ - கல்வெட்டு 
கூறுகிறது 

கல்வெட்டு ; 

1. ஸ்ரீவெண்பைக்கு 

டி நாட்டு வெ 

. ண்பைக்குடி வே 

. டஞ்சேரி புதுமை 

. எவியம்‌! பூதி 

6. செய்வித்த தி 

7. ருமேனி இவை 

8. புரவுவரி 


9. க்களத்தா 


ஜெ. ம 


10. ர்‌ ஈகை, 
1. “எலியம்‌” என்றும்‌ படிக்கலாம்‌. 


த 


த. நர, அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 158 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : == | 

வட்டம்‌ ; ' மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 8-ஆம்‌ i 
. நூற்றாண்டு 

ஊர்‌ 3 யானைமலை பந ம்‌ i 

இந்தியக்‌ கல்வெட்டு | 66/1905 | 

மொழி : தமிழ்‌ ஆண்டு. அறிக்கை J 
எழுத்து வட்டெழுத்து முன்‌ பதிப்பு : தெ.இ.க,தொ. 14 
எண்‌. 98 

தது - ஊர்க்‌ கல்வெட்டு |. கழ்‌ ஆ 
மன்னன்‌ : எண்‌ J i 
இடம்‌ : முருகன்‌ குடைவரைக்‌ கோயில்‌, வடக்கு வெளிச்சுவர்‌. | 
குறிப்புரை : ஈஇக்கல்வெட்டு வட்டக்குறிச்சி என்ற ஊரைச்சார்ந்த நம்பிரான்‌ பட்டசோமாசி! 


பரிவிராஜகர்‌ என்பவர்‌ -இக்குடைவரைக்‌ கோயிலைப்‌ புதுப்பித்ததைக்‌ குறிப்பிடுகிறது : 
i 


கல்வெட்டு : 
1. ஸ்ரீரலு புல்லா(தி) 
2. வட்டக்குறிச்சி நம்பி 
3. ரான்‌ பட்ட சோமாசி பரி 
4. 


விராச்ஜகர்‌ புதுக்கு 


253 


த. நா, அ. தொல்லியல்‌ துறை .. தொடர்‌ எண்‌, 159 / 2903 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : : வல்‌ 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 770 
ஊர்‌ ; யானைமலை ்‌ ்‌ ) 
அதிகத்‌ அடவ பறு 454/1906 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : வட்டெழுத்து முன்‌ பதிப்பு: தெ.இ.க.தொ.14 
வப எண்‌ 2 
வர்க 5 பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] 11 
க ர்‌ 
மன்னன்‌ : மாறஞ்சடையன்‌ பய்‌ ல! 
பராந்தக நெடுஞ்சடையன்‌ 5 
இடம்‌ : நர சிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, குடைவரைக்‌ கோயிலின்‌ உட்புறச்‌ சுவர்‌ 
குறிப்புரை : மாறஞ்சடையனின்‌ உத்திரமந்திரியான - மூவேந்தமங்கலப்‌. பேரரையன்‌ . ஆகிய 
மாறன்காரி களக்குடி வைத்தியன்‌ (வைத்திய குலத்தினைச்‌ -சார்ந்தவன்‌) இக்‌ 
கற்றளியைச்‌ செய்வித்துக்‌ கொண்டிருக்கும்போது சொர்க்கலோகப்‌ பதவியை 
அடைந்தான்‌. அதன்பிறகு உத்திரமத்திரி பதவிக்கு வந்த்‌ அவன்‌ தம்பி பாண்டி 
மங்கல விசைய அரையன்‌ ஆகிய மாறன்‌எயினன்‌ என்பவன்‌ இக்கோயிலுக்கு . முக்‌ 
மண்டபம்‌ செய்து நீர்த்தெளித்தான்‌ (குடமுழுக்கு) என்று இக்கல்‌ வெட்டு கூறுகிறது. 
கல்வெட்டு : 
1. கோமாறஞ்‌ சடையற்கு உ 
2. தீதரசதி, களக்குடி வெ 
3. இழந்‌ மூவேந்தமங்கலப்‌ 
4, பேரரையன்‌ ஆகிய மாறங்‌ ட 
5. காரி இக்கற்றளி செய்து 


254 


ம்‌. ௩14 இ 


10. 
11. 
12. 
13. 


. நீர்த்தளியாதேய்‌ எழம பாரோ 
. ஹணஞ்‌ செய்த பின்னை அவ 


னுக்கு கமாகந்‌ உத்தர 


உழவ மெய்தின பாண்டி 
மங்கல விசைஅரையன்‌ 
ஆகிய மாறன்னெஇ 

னன்‌ முகமண்டபஞ்‌ செ 


ய்து நீர்த்தளித்தான்‌ 


255 


10. ஒ வெள ஷெஹ.நி ஊஸிகா 5-8 கெ]: 


256 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 160 / 2003 
மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு ர — 
வட்டம்‌; மதுரை வடக்கு I ... வரலாற்று ஆண்டு : கி.பி. 770 (கலி 
ஊர்‌ யானைமலை த | அண்டு 8872) 
[ ்‌ ர இந்தியக்‌ கல்வெட்டு | 
மொழி: . சமஸ்கிருதம்‌ ஆண்டு: அறிக்கை. 4598/1906 
எழுத்து : கிரத்தம்‌ முன்‌ பதிப்பு: தெ.இ.க.தொ.. 14 
அரசு முற்காலப்பாண்டி யர்‌ பகுதி 1 
மன்னன்‌ பராந்தக நெடுஞ்சடையன்‌ , ஊர்க்‌ கல்கி. 4 ந 12 
(கி.பி.765-815) எண J 
இடம்‌ நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, குடைவரை உட்புறச்சுவர்‌. 
குறிப்புரை : கலியுக ஆண்டு 3871ல்‌ கரவந்தபுரம்‌ என்ற ஊரைச்‌ சார்ந்த மதுரகவி எனப்பட்ட, 
்‌ மாறங்காரி இக்குடைவரைக்‌ கோயிலை விஷ்ணுவிற்காக எடுப்பித்ததோடு பிராமணர்‌ 
பலரைக்‌ கொண்டு அக்கிரஹாரம்‌ ஒன்றையும்‌ அமைத்தான்‌ என்று , இக்கல்வெட்டு 
கூறுகின்றது. இதனை முற்றுவித்தவன்‌ மாறன்காரியின்‌ தம்பி மாற்ன்‌எயினன்‌ 
ஆவான்‌. இவ்விருவரும்‌ பாண்டியனின்‌ உத்திரமந்திரியாக விளங்கியவர்கள்‌ 
ஆவர்‌. ்‌ 
கல்வெட்டு : 
1. கனவு. வாற கிவாஸீ ப்ரீகாதெவெ௨உ த: பபிலா 
2. மரஹூ விஷொ: ௬௯௭ தகர சி ய ஏமகவி22. 
8. யம தமனொ கா[ஈ]ஸ”ூ.5-.ரி௨௮| [க*] 8௦ சீஏஸவள . 
4, வடிகிகா தாணழஸ்‌ வராண காலியா. 
5. எழு சகி. ஊமஜெலத: [உரா௨ா௦]e 
6. 8ம ஹா வி[வ]கலெ: ஸஹஸூகி, 
ய அமெ ஷ்மொலமெ [௦] தஷணபம- 
8. ததா ஸெகஸலவதெள ஏ துவ 
9. கிலொ ல.மவாற 5.5, சாதிஸஹெ 


த. நர. அ. தெரல்லியல்‌ துறை . தொடர்‌ எண்‌ : 161 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 33 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 940 
ஊர்‌ : யானைமலை 


இந்தியக்‌ கல்வெட்டு | 


மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 63/1905 
ந்‌ வ்கி முன்‌ பதிப்பு : தெ.இ.க.தொ. 5 
பகுதி 3 எண்‌ 10 
அரசு ! சோழர்‌ g 3 ்‌ 
i ஊர்க்‌ கல்வெட்டு 43 
மன்னன்‌ : முதலாம்‌ பராந்தகசோழன்‌ எண்‌... 1. 
இடம்‌ : 'நரசிங்கப்பெருமாள்‌ கோயில்‌, குடைவரையின்‌ வடபுறமுள்ள பாறை. 


குறிப்புரை : பராந்தகசோழனின்‌ 33 ஆவது ஆட்சியாண்டில்‌ (கி.பி. 940) சூரியகிரகணம்‌ 
ஏற்பட்டபோது அவனது அதிகாரி புறங்கரம்பை நாட்டு மருதூர்‌ மருதூருடையான்‌ 
அருணிதிகலியன்‌ என்பவன்‌ யானைமலை நரசிங்கப்பெருமாளுக்குத்‌ தானம்‌: 
ஒன்றைச்‌ செய்தான்‌. இதன்படி கோயில்‌ நிலத்திற்குரிய வரியை இவன்‌: 
செலுத்தினான்‌. கலியனேரி என்ற ஏரியை ஆழப்படுத்தி அதன்‌ கீழுள்ள இருவேலி 
நிலத்திலிருந்து வந்த 300 கலம்‌ நெல்லை கோயிலுக்கு ஆண்டுதோறும்‌ அளித்து 
வரும்படிச்‌ செய்தான்‌. இதில்‌ 150 கலம்‌. நெல்லை கொண்டு நரசிங்கப்‌ 
பெருமானடிகளுக்கு நாள்தோறும்‌ கோயிலில்‌ உச்சியம்போது வேதம்‌ ஓதும்‌. 
பிராமணர்கள்‌ ஐவர்க்கு உயர்வகை உணவு அளிக்கப்பட்டது என்று இக்கல்வெட்டு , 
கூறுகிறது. இக்கல்வெட்டில்‌ ஈழக்காசும்‌ புத்தக்கம்‌ என்ற புதியகாசும்‌ குறிப்பிடப்‌ : 
படுகின்றன. ஏழரைப்‌ புத்தக்கம்‌ ஒரு ஈழக்காசிற்குச்‌ சமமானதாக இக்கல்வெட்டு ; 
கூறுகிறது. | 


கல்வெட்டு : 


1. ஹஸஹிஸ்ரீ. மதிரைகொண்ட கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு முப்பத்து | 
மூன்றாவது இவ்வாண்டு [தே]வ[தா]னங்‌ கீழிரணிய முட்‌[டத்‌]துப்படும்‌ [பி] 


2. ரம்மதேய[ம்‌] [ந]ரசிங்கமங்கலத்துச்‌ சபையோம்ஞ்‌! சோழபெருமானடிகளதி 


காரிகள்‌ சோழநாட்டுப்‌ புறக்கரம்பைனாட்‌ 


257 


10. 


11. 


12. 


138 


14 


டு மருதூர்‌ மருதூருடையானருணிதி கலியனுக்கு ஒட்டிக்‌ குட[த்‌]த₹ 


பரிசாவது எங்களூர்த்‌ திருவாரனை]மலை நரசிங்கப்பெருமானடிகள்‌[த 


்‌ முடைய நிலத்தால்ச்‌ சபையோமுக்கு [ஆ]ண்டெடுத்து இடக்கடவ 


ஈழக்காசு பதினெட்டு இக்காசு பதினெட்டிலும்‌? மூன்றத்‌ - தெரா]ன்‌ [று] ஈ 


. ழக்காசு ஆறு இவ்வாறு ஈழக்காசுக்கும்‌ பலிசையாகச்‌ சவையார்‌ கைய்வழி 


குடுத்த ஈழக்காசு பதினைந்து பதினைஞ்சி. னாலும்‌ வந்த பலி 


. சையாவது ஈழக்காசின்‌ வா[ய்‌]த்‌ திங்கள்‌ காற்புத்த[க்கதுமாக ஒரோ 
உம்ப வந்த பதக மூன்றேமுக்காலு(ம்‌) ஓராண்டு பந்நிரண்டு 


கள்ல வந்த புத்தக்கம்‌ . நாற்பத்தைஞ்சு நாற்பத்தைஞ்சினாலொரு 


ஈழக்காசுக்குப்‌ புக்தக்கம்‌ ஏழரை ஆக [ஈ]ழக்காசு [ஆ]று இவ்வாறு [ஈ]ழ 


௨க்காசும்‌ இறை நீக்கித்‌ தேவர்‌. சவையார்க்கு இடக்கடவ காசு 0௨ 


பன்னிரண்டும்‌ நீக்கி அதிகா[ரி]கள்‌ மருதூருடையான்‌ அருணிதி கலியன்‌ 
இறைகாவலா [க] காத்த 


 காசி[னா]ல்‌ வந்த நிலன்‌ ஊருடையான்‌ குளமான கலியனே [ரி] யும்‌ 


இக்குளந்தா [மெ]ண்டுமாறு* கல்லிக்‌ ப்‌ த்‌ அட்டப்‌ பெறுவதாகவும்‌ 
[இ] 

க்குளங்கரை' உசர த றில்‌ இக்குளத்தினீர்‌[தா]ன்‌ வேண்டு 
அளவுங்‌ கோக்கப்‌ பெறுவதாகவு மிக்குளம்‌ இதன்கீழ்‌ 'நீர்நில னிரு. வே 


ப ல்‌ 6 


லியு மரூதூருடையருணிதிகலியன்‌ விலைக்குக்‌ கொண்டு இக்குளத்தின்‌ 
கீழ்‌ நீர்நிலனிரு வேலியி[னா]ல்‌ வந்த போகம்‌ அஞ்ஞாழிக்‌ காலால்‌ 


்‌ நெ[ல்‌]லு ௩௱ கலம்‌ 


இவையிற்றின்‌ பாதி ஈட௫ம நெல்லுங்‌ கொண்[டு] [இவர்க்கு மூன்று 
சந்தியுந்‌ திருவமிர்து செய்வதாகவும்‌ தின்ற ஈ[௫௰] நெல்லுங்‌ கொண்டு. 


.திருவமிர்து உ 


த்தம ்திம்ற்ல்க தேவர்‌ அமிது செய்யும்‌ பொழுது வேதப்‌ பிராமணர்‌ 
நிசதம்‌ அய்வர்‌ எல வும்‌ வச்ச[ப]டி பத்தெட்டுக்‌: குத்தல்‌ 
ஒருவனு. , ' 


க்கு அரிசி [இரு] நாழியுங்‌ கறி மூன்றும்‌ தயிர்‌ நா[ழி]யும்‌ நெயிரு 


செவிடும்‌ காயிலை இரண்டும்‌ தாலமஞ்சும்‌ வட்டிலஞ்சும்‌ ஒட்டுட்டி ஒன்று 


258 


15. 


16. 


17. 


18 


1 


20. 


21. 


22 


௨௦.௮௨ ௭௩ ஐப்‌ 


= 
ல 


13. 
12. 


[ம்‌] சட்டுவம்‌ ஒன்று அடுவா]ன்‌] னொருவ்‌[னுக்‌]கு நிசதி நெ[ல்‌]லு 
அஞ்ஞாழி அறுதிங்க [ளொ]ரு புடவை வைச்சு இப்பரிசி இக்கலமூட்டுவ 
தாக இவ்‌ 
வாட்டை கற்கடக நாயிற்று வெள்ளிக்கிழமை பெற்ற ஆயிலெ[ய[]த்தி 
னான்று சூ(ற்‌)றியக்‌ கிரணவேரைள]க்‌ [கு]றை கிராணம்‌ பற்றின அன்று 
முதலாக இக்கல[ம்‌] 
இ[ப்‌]பரிசேய்‌ ஊட்டுவதாக நி[ன்‌]று சிறிகாறிய மாராய்கன்ற? திருவாய்ப்‌ 
பாடி நாராயணனும்‌ இவ்வூர்ச்‌ சவையாரும்‌ இப்பரிசேய்‌ அக்கிர 
முட்டாமேய்‌ ச[ந்‌]திராதி 
தித்தவலம்‌" ஊட்டுவிப்போமானோம்‌ திருவானைமலை நரசிங்கப்‌ 
பெருமானடிகளுக்கு சிரிகாச்சிய ஆராய்வாரும்‌*: சவயோமும்‌ இதிற்றிரம்பி 
[னோ]மைச்‌ சவைய்‌ 
யாலும்‌? [சி]ரிகா(ற்‌) றிய மாராய்வானுந்‌!? திறமினான்‌ நிசதி இறுகாசு 
அன்றாள்‌ கோவினுக்குத்‌ தண்டம்பட்டு அக்காசு கொண்டு தேவர்க்குத்‌ 
[த்‌]. திறம்பில்‌ (ஆ]றுகாசு தண்டப்படுவதாகவு[ம்‌] ஒட்டிக்‌ குடுத்தோம்‌ 
சவையோரும்‌ சிரிகாச்சியமாராய்வானும்‌!! மருதூருடையானருணிதி 
கலியனுக்கு இத்தண்டமிறு 
த்து மித்தன்‌[மம்‌] முட்டாமே அய்வரை[யும்‌] சந்திராதிச்சர்‌ உள்ளனவும்‌ 
ஊட்டுவிப்போ மானோஞ்‌ சவைய்யும்‌ சிரிகார்ச்சியம்‌ ஆராயும்‌ வயிஷவ 
ரூம்‌ இதன்‌ 
[மம்‌] ரக்ஷித்தான்‌!? 
சபையோஞ்‌ 
குடுத்த 
பதினெட்டிலும்‌ 
திங்களால்‌.. 
இக்குளந்தான்‌ வேண்டுமாறு 
சிரீகாரியமாராய்கின்ற 
சந்திராதத்தவலும்‌ 
சிரீகாரியமாராய்வாரும்‌ 
சபையாரும்‌ 


சிரீகாரியமாராய்வானும்‌ 


35 95 


முற்றுப்பெறவில்லை; தொடர்ந்து சில சொற்கள்‌ இடம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. 


259 


த.,நர. அ. தொல்லியல்‌ துறை  , தொடர்‌ எண்‌ ; 162/2003.. 


மாவட்டம்‌, : உ 
வடம்‌ - மதுரை வடக்கு ”. - தி . வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ டர 
ர க நூற்றாண்டு 
ஊர்‌ : யானைமலை . ்‌ ்‌ கல்வெட்‌ 
த த்‌ வ்‌ வ ட 64/1905 
மொழி: தமிழ்‌: * “ ஆண்டு அறிக்கை த்‌ கர 
எழுத்து": தமிழ்‌' முன்‌ வதில்‌ ர தெ.இ.க.தொ. 14 
அரசு. சோழபாஸ்‌. டியர்‌ எண்‌ 168. 
மன்னன்‌:: சடையவர்மன்‌” ஊர்க்‌ கல்வெட்டு ' - 1 14°” a 
க சுத்தரசோழபர்ண்டி யன்‌ ப்ட்‌ ம டமா ஆ. 3 , 
இடம்‌ :. நரசிங்கப்பெருமாள்‌ கோயிலுக்கு -' அருகிலுள்ள பாறை. 
குறிப்புரை :': இக்கல்வெட்டு *: திருவானைமலைமேல்‌ எழுந்தருளியுள்ள ஈரசிங்கத்தேவர்க்குத்‌ ன 
ரி _ திருவிளக்கு எரிப்பதற்காக * வெண்‌ இரண்ணியன்‌ சோலை” என்பவன்‌ வப்‌ 
ஆடுகள்‌ அளித்ததைக்‌ கூறுகின்றது, 
கல்வெட்டு: ச க்‌ விவக ஆ த்‌ இன்க்‌ ்‌ டது 
1. ஷுஹிஸ்ரீ. கேற்ச்சுடைய்‌ பந்மராந உடையார்‌ ஸ்ரீ ந்‌ வு 
2. சுந்தரசோழ பாண்டிய தேவற்கு யாண்டு உ௰௧ . ... வுல 
3. கீ(ழிரணிய முட்டத்து மேல்‌ வெண்‌ இரண்ணிய 
4. ன்‌ சோலை திருவானைமலைய்‌ மேல்‌எழுந்தருளிய தரசிங்க தேவர்க்கு 
வைச்ச வி ள்‌ இட 
்‌ . 5 எளக்குக்கு வச்ச ஆளாக்கு நெய்‌(க்கு) வைச்ச ஆடு ௨௦௫ இத்தேவர்‌ 
வெட்டிக்குடி நக்கன்‌ செண்‌ 
6. பகத்‌ தேவன்‌ இவ்வாடு உ௰றி கொண்டு. க்ப்‌ சத்தூரசித்தவல்‌ 
முட்டாமலட்டுவ 
7. தானேன்‌ நக்கன்‌. செண்பகத்தேவன்‌ நானும்‌ என்‌ வற்கத்தாரும்‌ 
முட்டாமலட்டுவதானே 
8. ன்‌— ட ்‌ ட்‌ ; 


மதுரை , :. *% ந த்‌ ஆட்சி ஆண்டு : ர ர: 


260. 


த. நர, அ, தொல்லியல்‌ தூறை தொடர்‌ எண்‌ : 163 /2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 7 
வட்டம்‌ மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு ! கி.பி. 14-ஆம்‌ 
ஊர்‌ : யானைமலை நூற்றாண்டு 
மொழி தமிழ்‌ இந்தியக்‌ கல்வெட்டு | 
எழுத்து: தமிழ்‌, கிரந்தம்‌ ணட அதன்‌ 
அரசு பிற்காலப்‌ பாண்டியர்‌ மூன்‌ பதிப்பு: ழு 
மன்னன்‌ பராக்கிரம பாண்டியன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | ல்‌ 
எண்‌ | 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாமண்டபம்‌ தெற்குச்சுவர்‌ வெளிப்புறம்‌ 


குறிப்புரை : யானைமலை நரசிங்கப்பெருமாளுக்கு விக்கிரமசிங்கபுரம்‌ நகரத்தின்‌ அருகிலுள்ள 


முத்துடையான்‌ என்ற குளத்தினைத்‌ திருவ்டையாட்டமாக 'மக்கணாவன்‌ மருமகன்‌ 
“மறக்கலங்காத்தான்‌' என்பவன்‌ விற்றுக்‌ கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 
அரச ஆணையோடு நரசிங்கப்பெருமாளும்‌ சீவல்லவன்‌ மண்டபத்துச்‌ சேரனை 
வென்றான்பந்தல்கீழ்‌ காலிங்கராயன்‌ பீடத்தில்‌ அமர்ந்திருந்து ஆணை வழங்கி 
யதை இக்கல்வெட்டு கூறுகிறது. 


கல்வெட்டு : 


ற 


ஸ்ரீகதுஸரீ அ௱ஸி௦ஹஸஷ ஸ்ீூதுஸ்ரீ சிவாஸ.௧௦ ஊதது ஸவ-48.ம௯ வ.த;(8) ஸாறாஸ.58 
உகு பபாஸ.52 ஸ்ரீபராக்கிர£பாண்டியதேவர்க்கு எவது சேஷே நாயற்று 
கவரவக்ஷத்து ஊமாஃஸியும்‌ செவ்வாய்க்கிழமையும்‌ பெற்ற சதையத்து 
நாள்‌ சிங்கப்பெருமாள்‌ திருவிடையாட்டம்‌ விக;மசிங்கபுரத்து உட்படும்‌ 
உள்ளூர்படும்‌ முத்துடையானை முன்னாள்‌ நகரத்தார்‌ பக்கல்‌ 
(மக்கணாவன்‌) கொள்ள கடமை இறுக்கும்‌ படிக்கு 


. நாயினார்‌ சிங்கப்பெருமாள்‌ குடுத்தருளின திருமுகமும்‌ வெண்பு நாட்டுத்‌ 


திருநெல்வேலி கைக்கோளரில்‌ வளத்தான்‌ செண்பகப்பெருமாளுக்கு 
இம்மக்கணாவன்‌ மருமகன்‌ மறக்கல(க)ங்காத்தான்‌ இக்குளமும்‌ விற்று 


261 5 


முன்னாள்‌. நாயனார்‌. சிங்கப்பெருமாள்‌ இருந்தருளின. , திருமுகங்‌ 


குடுக்கையால்‌ இற்றை நாள்‌ இத்திருமுகப்படிக்குக்‌ கல்வெட்டு ஸ்ரீமது 
ஸ்ரீ நரஸிசஹ . .... றாஸ.5: ஊதத்‌ ஸ 


9, வலெமது வ.த;2 ஸாஸ.க8 உதத.மாஸ.க2 குலசேகரனுக்கு . . . . . நாயற்று 
௬௨௱ வக்ஷத்து உத்திரத்துக்கு நாம்‌ புறப்பட்டு சீவல்லவன்‌ மண்டபத்து 
சேரனைவென்‌ றான்‌ பந்தற்கீழ்‌ காலிங்கராயன்பீடத்து இருந்து. 
சடகோபன்‌ பாட்டு கேளாநிற்க நம்‌ வீட்டு கோவணரும்‌ நகரத்தாரும்‌ 
(அ)கம்படியாரும்‌ “நம்‌ அடுக்களைப்புறமான வூர்களில்‌ ஆதிச்சன்‌ 
மக்கள்‌ நகரத்தார்க்கு விற்றுக்‌ குடுத்த முத்துடையானை திருகோவ 


4. ணரும்‌ நகரத்தாரும்‌ : குடுத்த வரிசைப்படியிலே கட்மை பொறந்வரி 
கொள்ளவும்‌ ன்னால்‌: "நம்‌ அடுக்களைப்புறமான நிலங்களில்‌ 
கொள்ளும்‌ கடமையில்‌ ஒன்று பாதி கொள்ளவும்‌ பொன்வரி 
ஆண்டொன்றுக்கு அஞ்சுபணங்‌ கொள்ளவும்‌ சொன்னோம்‌ இப்படிக்கு 
' எக்காலமுஞ்‌ செல்வதாகக்‌ கல்லிலும்‌ . செம்பிலும்‌ ' வெட்டிக்‌ கொள்ள 
அருளால்‌ திருமந்திரவோலைநாயகம்‌ தென்பறப்பு நாட்டு பவனம்‌ 


ருடையான்‌ மன்னன்‌ மன்னனான நாதா வ, பண்னி லட லது த்‌ 


உர 


262 


க. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 164 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 40 
வட்டம்‌ மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 14-ஆம்‌ 
ஊர்‌ யாளனமலை கல்தான்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு \ 2 | 
மொழி தமிழ்‌ . ஆண்டு அறிக்கை ] ( 
எழுத்து தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு : க்‌ 
அரசு - பாண்டி யன்‌ | 
தக ம்‌ 1 
மன்னன்‌ குலசேகரன்‌ க்ளு கல்வெட்டு 1 16 i 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாமண்டபம்‌ தெற்குச்சுவர்‌ வெளிப்பக்கம்‌. 
குறிப்புரை : இக்கல்வெட்டு தெய்வச்சிலையான்‌ இளையாழ்வானான சுந்தரபாண்டிய காலிங்க 
ராயன்‌ என்பவன்‌ புரவுவரிநல்லூர்‌ என்ற ஊரை விலைக்கு வாங்கி நரசிங்கப்‌ 
பெருமாளுக்குப்‌ பூந்தோட்டம்‌ செய்வதற்கு (காணி) இறையிலியாகத்‌ தெய்வச்‌ 
சிலையான்‌ குழைகாதனுள்ளிட்டார்க்கு அளித்ததைக்‌ கூறுகிறது. 
கல்வெட்டு : 


1. ஸ்ரீசது ஸ்ரீ நரஸி௦ஸ; ஸ்ரீ£து ஸ்ரீமிவாஸக: வஊதது ஸவ-3வ ஜமது வ. கதழபமாஸம2 


2. 


உஆணாஸமகக நம்குலசேகரனுக்கு ச௰வது [ததுர்‌]நாயற்று கஉ௱ஷகஷத்து 
ஷஷியு[ம்‌] 


௨ திங்கள்‌ கிழமையும்‌ பெற்ற சேமி; ஷத்து நாள்‌ ௨....... ந 


[வெலாதன்‌] 


. பீடத்து இருக்க நம்வீட்டுக்‌ கோவணவரும்‌ நம்‌ வ.மவர்களில்‌ ஸீ,சடகோப 


சேதனு(ம்‌) 


நம்‌ வீட்டில்‌ பலபணியும்‌ செய்விக்கிற சிங்கபிரான்‌ தாதனும்‌ வந்து 


கருங்குடி நாட்டு 


263 


10, 


11. 


12. 


ப 


14, 


15. 


கீழைநெட்டூரானக்‌ கீர்த்திவிசாலய நல்லூர்த்‌ தெய்வச்சிலையான்‌ ட்‌ 


i ட்‌ ரன 


சுந்தரபாண்டிய காலிங்கராயன்‌ (நகரத்தார்‌ பால்‌ நம்‌ அடுக்களைப்‌ 


புறமான 


. உள்ளூர்‌ பற்றில்‌ புரவுவரிநல்லூரை க ட. கார்‌ 
* னென்னும்‌ பேரால்‌ 


. நமக்கு பூந்தோட்டஞ்‌.' ர்க தெய்வச்சிலையான்‌ குழைகாதறுள்ளிட்‌ 


டார்க்கு இவன்‌ கா 


ழா க இல்ன தவில்‌ இந்த புர பப்ப நான்கெல்லைக்குள்‌ 


பட்டவை எப்பே 


ற்‌ பட்டனவும்‌ முதலடங்க ட்ப குடுக்க வேணுமென்று நமக்கு 
இவர்கள்‌ சொல்லு 

கையால்‌ நாமும்‌ இவூர்‌ நான்கெல்லைக்‌ குட்பட்டவை எப்பேற்பட்டதையும்‌ 
முதலடங்க இறை 

யிலியாகக்‌' குடுத்து இப்படிக்கு வரியிலும்‌ “கழித்து நம்‌. கோவணவர்‌ 
ஓலையுங்‌ குடுக்‌ . ட ஸத்‌ ர 

கச்‌ சொன்னோம்‌ இற்பல்க்க்‌ த எர இவன்‌ வற்க்கத்‌ 
தாற்கும்‌ எக்காலமும்‌ செல்வதாகச்‌ கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 
கொள்ன அருளால்‌ திருமந்திர : 


ஓலை நாயகம்‌ பொயிலுடையாந்‌ திருக்காம்புரத்து. சோலைமலை பிரான்‌ 
திருமாலிருஞ்சோலைதாதன்‌. எழுத்து 


264 


த நா, அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 165 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 1519 
(சகாப்தம்‌ 1441) 
ஊர்‌ ! யானைமலை ள்‌ ந ்‌ 
இத்தியக்‌ கல்வெட்டு ] 455/1906 

மொழி ; சமஸ்கிருதம்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து: கிரந்தம்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க,தொ.22 ' 

எ தத எண்‌. 455 
A ஜயநகர வேந்தா ஊர்க்‌ கல்வெட்டு | ற 
மன்னன்‌ : கிருஷ்ண தேவராயர்‌ ப்ப J 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாமண்டபம்‌, மேற்குச்‌ சுவர்‌, வெளிப்பக்கம்‌. 


குறிப்புரை : கிருஷ்ணதேவராயருக்கு வாசல்‌ காரியம்‌ செய்யும்‌ திம்மபூவனையும்‌ அவனது 
அலுவலர்‌ மதுரமாதனையும்‌ குறிப்பிடுகிறது. யானைமலையின்‌ பெயர்‌ கஜகிரி என 
சமஸ்கிருதத்தில்‌ குறிப்பிடப்படுகிறது, 
கல்வெட்டு : 
த யதால வ முகாஸணெ மஜ.மிரி மம ஷிஹ:; 


- வாஸ்‌ வெொள9ஷ ஸ்ரீச[த்‌]8 வாறாயணா 


, அ௭கஉாலஸெ கிஒஓலவெ கவிகாகயாறா றா 
டத்‌ 


1 
2 
3. ஜெ சகீஸவ அவகிகி.௪ கஏஷாாயெ 8ஹீபெ 
4 
5. ஐ சாமெ லஸொமு ஹாஉ கெ ச] க்ஷி 
6 


 தாஷ: ௯ ஸுமலுகமி[௯][தெ வாமரிகாயாயஉ உர 


265 


த. நர. அ. தொல்லியல்‌ துறை .. தொடர்‌ ஏண்‌: 166 / 2003 


ந க 


மாவட்டம்‌: மதுரை ஸ்ப ஆட்சி ஆண்டு ! க 
வட்டம்‌ மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி, 32-ஆம்‌ 
ஊர்‌ யானைமலை தூற்றாண்டு 
த்‌ , இந்தியக்‌ கல்வெட்டு .) ்‌ 
மொழி: தமிழ்‌, ஆண்டு அறிக்கை ip 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு: ட 
த்த பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] 18 
fo 24 ப] 
மன்னன்‌ : சடையவர்மன்‌ ஸ்ரீவல்லபன்‌ மல்‌ ்‌ 
ர 
இடம்‌ நரசிங்கப்பெருமாள்‌ கோயில்‌, மகாமண்டபம்‌, வடக்கு உட்புறச்சுவர்‌. 
குறிப்புரை : சடையவர்மன்‌ ஸ்ரீவல்லபனின்‌ “திருமடந்தையும்‌' என்று தொடங்கும்‌ மெய்க்கீர்த்தி 
ப காணப்படுகிறது. 
கல்வெட்டு : 
அ. 1. ஸ்ரீ திருமடந்தையும்‌ ஜயமடந்தையும்‌ திருப்புயங்க(ளி) A, 
2. மன்னவரெல்லா [மகிழ்ந்திறைஞ்ச மரபிலே வருமுடி 
8. (னைத்து செங்கோல்‌ வளர) மன்னி வீரஸி௦ஹாஸத்து.. .. ம்‌ 
4. கோச்சடைய(வர்மரான) சி;வ.வன௮க்கரவத்திகள்‌ ரீ வல்லல 
ஆ. 1. வீரஸிமாஸ.சத்து ... (ங்கெ முத) 
2. ஸ்ரீஸ.ந்தர வாணுதெவற்கு யாண்டு மு..... 
3. செய்யதிருவாய்‌ மொழிந்தருளி.. 
4. த கடமைக்குத்‌ தலைமாறாக மாடக்குள 
5. வேணுமென்று மழவராயனமக்குச்‌ சொன்ன 


266 


ண ௮ 


த. நா. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 167 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 
ஊர்‌ : யானைமலை நூற்றாண்டு 
, ட இந்தியக்‌ கல்வெட்டு 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு: = 
அரசு: பாண்டியர்‌ 
மன்னன்‌ :; : சரகடடு | 19 
J 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ கோயில்‌, மகாமண்டபம்‌, வடக்குச்‌ சுவர்‌ உட்புறம்‌. 


குறிப்புரை: நரசிம்ம ஆழ்வார்க்கு மூன்று மா மற்றும்‌ வேலி நிலம்‌ இறையிலியாக 
அளிக்கப்பட்டிருந்ததைத்‌ தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 
அ. 1, திருவாய்‌ மொழிந்தருளி இவை மிழழைக்‌ கூ. .. 
2. தருளி ஸ்ரீ நாரஸி௦ஹ ஆழ்வார்‌ கோயிலில்‌ .... 
3. மூன்று மாவும்‌ ஆகக்‌ காராண்மை விளையும்‌ நில... 
4, நிலம்‌ வேலியும்‌ பதின்கல வரிசை நிலத்தில்‌ 
2. தேவனான யாதவராஜ னெழுத்து யாண்டு 0௪ 
1 


ஆ. 1. .. (பப நிலம்‌. பரமேசுவரவதி) . . . . .. 
அடத்‌ லாலி (லையாகப்பா) . . ... 
3. முழுதுடையாளொடும்‌ வீற்றிருந்தருளிய . . . . மாமுதல்‌ மதிக்குலம்‌ 
4. ல்லவ ஜெவற்கு யாண்டு அஞ்சாவது நாள்முன்னூற்றுநாற்ப 
5. வேலூர்க்‌ குளக்கீழ்‌ ஸ்ரீகுந்தவைச்‌ சதுவெஃதிமங்கலத்து 
6. கூடியிருந்து இவூர்‌ ஜடாதர 


267 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 168 / 2003 


மாவட்டம்‌ : மதுரை 5 & ஆட்சி ஆண்டு : — : 
ப 

வட்டம்‌: மதுரை வடக்கு ... , ...... வரலாற்று ஆண்டு: கி.பி. 19-ஆம்‌ 

கல்ல ௮ ன்‌ நூற்றாண்டு, 
ஊர்‌ : யானைமலை _ . இந்தியக்‌ கல்வெட்டு 

மொழி: தமிழ்‌ ' ப அத ௮ பலவகை ட. 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : ' — 

ரசு : பாண்‌ ர்‌. ர்‌ 

ழ்‌ டல்‌ ஊர்க்‌ கல்வெட்டு | ம்‌ 

மன்னன்‌ : — எண்‌ ர்‌ 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ கோயில்‌, மகாமண்டபம்‌, வடபுற. உட்சுவர்‌. 


, குறிப்புரை எ: இக்கல்வெட்டு ட்‌ நிலக்கொடை அளித்த அரச ஆணைபற்றிக்‌ கூறுகிறது 
முத்தூற்றுக்‌ கூற்றத்து மாசிலூர்‌' குறிப்பிடப்படுகிறது. 

கல்வெட்டு : 

அ. 1. ஹஷஹிமீ கோனேரின்மை கொண்டான்‌ 


2. ஸலையார்க்குக்‌ கீழிரண்ய முட்ட. 3 24 
3. ழரை கோயிலில்‌ (திருவீற்றயரும்‌) . . . . 
4. முத்தூற்றுக்‌ கூற்றத்து மாசிலூருடைய . . . . 
5. ஈணம்‌ விற்றுக்‌ குடுத்த தங்களுர்‌ ல்க 

ஆ, 1. த்துயாவும்‌ ஊர்‌ நத்தத்துக்கும்‌ இருகல்‌ ௨... நிலம்‌ . 
2. விலையொற்றி பல்க எல்க்‌ தனக்‌ 


3. ள்‌ முதல்‌ வீரபாண்டிய[னி]ல்‌ நெல்லு ஐங்கல . .. . 


268. 


 யநேன்‌ இவை என்‌ எழுத்து இக்கோயிலில்‌ . ... 


. கோயிலில்‌ தேவர்கன்மி மாநவீரமதுரை வீர . .. 


. மை கொண்டான்‌ தொண்டை மண்டலத்து . ... 


டாடைப்புற இடை..... . 
திட்ட உள்வரியும்‌ . . . .. . 


௨ இராமனான பல்லவ , .. ,.., 


269 


த. நா. அ. தொல்லியல்‌ துறை " தொடர்‌, எண்‌ : 169 / 2003 - 


மாவட்டம்‌ : மதுரை... . ்‌ ஆட்சி ஆண்டு : _ 

வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ . க்‌ 
ட நூற்றாண்டு 

ஊர்‌ : யானைமலை, இந்தியக்‌ கல்வெட்டு | ன்‌ 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை r 

எழுத்து : தமிழ்‌ , முன்‌ பதிப்பு: = 

அரசு : பாண்டியர்‌ . 5 ஊர்க்‌ கல்வெட்டு ன்‌ 

மன்னன்‌ ; ௨ எண்‌ 


இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ கோயில்‌, வடபுற வெளிச்சுற்று சுவர்‌ உட்பக்கம்‌ 
குறிப்புரை : பிற்காலப்பாண்டியர்‌ காலத்தைச்‌ சேர்ந்த துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌ . 
கல்வெட்டு : 
அ. 1, ட்டு... . .க்கண்டு. ... 

2. கொள்க வென்று . த்தி வென்று 

8. புலவர்‌ புகழ்‌ மங்கலங்க : . . . . 

4, த்துமுலக முழுதுடையான்‌ ,..... 

9. கீழிரணிய முட்டத்து . .... .. 
ஆ. 1. இவ்வாணாதராயர்‌ , . : . . மாதந்தோறும்‌ புறப்பட்ட . . . 

2. சாத்தமங்கலத்திலும்‌ கொண்டுவரும்‌ வினியோகம்‌ 

3. இறையிலியிருப்பதாக இப்படி சந்திராதித்த 

4, தொண்டைமானெழுத்து இட்டது இவை நாரா[யண]தேவர்‌ 
இ. 1, து மாநிலம்‌ பதினாலாவது 


அத தை] 


. வரி யிறுப்பதாக இட்டு வாய 


அண்டனாட்டுப்‌ பெருமண 


. செய்விக்கிற திருவெ .. ... 


270 


டல்‌ 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 170 / 2003 


ஆட்சி ஆண்டு 2 — 
கி.பி, 18-ஆம்‌ 
தூற்றாண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 1 
ஆண்டு அறிக்கை | 


முன்‌ பதிப்பு : 


ஊர்க்‌ கல்வெட்டு | 
எண்‌ ்‌ 


நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, வடபுற வெளித்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌, உட்புறப்‌ 


பு 


நரசிங்க ஆழ்வாருக்கு அளித்த தானம்‌ பற்றிய துண்டுக்‌ கல்வெட்டு. காலிங்கராயர்‌ 
பெருமாளுக்கு (ஆழ்வார்க்கு) இத்தானத்தைத்‌ தந்தவராகக்‌ குறிப்பிடப்படுகின்றார்‌. 


மாவட்டம்‌ : மதுரை 
வட்டம்‌ : * மதுரை வடக்கு 
ஊர்‌ : யானைமலை 
மொழி: தமிழ்‌ 
எழுத்து: தமிழ்‌ 
அரசு : பாண்டியர்‌ 
மன்னன்‌ £ _— 
இடம்‌ : 

பகுதி. 
குறிப்புரை : 
கல்வெட்டு : 


அ. 1. பல்லவனும்‌ அழகப்பெருமாளும்‌ நியாய பரிபால . .ட. . 


2. 


கூ. மே. 09 


யில்‌ இவ்வாழ்வார்க்கு காலிங்கராயர்‌ . . . 


௨.கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிவித்துக்‌ கொள்‌ . . 


(திரிபுவனச்‌ சக்கரவத்தி கோனேரின்மை . . ௨.) 


ர்ந்த சினப்புலியுங்‌ சிலையுங்‌ குழைந்தோ . 


. கைப்‌ பாடலுமிய . . . 


. . வெண்டிசை யளவுஞ்‌ சக்கர 


முகன்‌ படைத்த மனுநெறி தழைப்ப மணிமுடிசூடிப்‌ ௦. .. 
. வந்தடையார்‌ னிருபர்‌ தந்தோகையர்‌ அழுத கண்ணீராறு .. .. .. 


271 


இ. 1. .. .. ததினிதறம்‌ பெருக கருங்கலி கடிந்து... .. . 
௮. குச்சரர்‌ வில்லவர்‌ மகதர்‌ விக்கலர்‌ செம்பியர்‌ பல்‌ .. .. . 
3. ணை கைவளர வெஞ்சின விகுளியும்‌ வேழமும்‌ பரப்பி ,. . 


. சுரம்‌ வோட்டி பைம்பொன்‌ மணிமுடி பறிச்சு .. .. 


ஈ, 1. மேல்கொண்டு ந.. .. வய்ய 
. துலகந்தாங்கும்‌ மாமேருவைக்‌ குணந்து வைத்த 
. ௬ுத்திரியம்‌ விட படிக்கென்று இது பிடிபாடாகவே 
உ. 1, . . . செய்விக்கிற திரு .. .. களுக்கு இ..து 


்‌்‌ டக்கல்‌. மேலிரணிய முட்டத்துச்‌ சிறுவாலியூரில்‌ 


4 
1 
2 
3 
4, னடிகைணத்‌ பன்னிரு திருத்தோழ்மாலை கழித்தருள 
1 
2 
3... க்‌ கூற்றத்து கீழ்கூற்று வெட்டனூருடையான்‌ 

4 


. வீற்றிருந்தருளிய ஸ்ரீநாரஸி௦ஹ ஆழ்வார்‌ கோயில்‌ 


272 


த. நர. அ. தெரல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ ; 171 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு ர கி.பி, 9-10-ஆம்‌ 
நூற்றாண்டு 
ஊர்‌ : யானைமலை 8 கடக ம்‌ i 
இத்தியச்‌ கல்வெட்டு 1 72/1905 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
து : மிப்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க.தொ. 14 
கக்‌ ட்ட எண்‌. 10 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ வர்க்‌ ல்க | 2 
மன்னன்‌ : முதலாம்‌ மாறவர்மன்‌ எண்‌ J 
சுந்தரபாண்டி யன்‌ 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, வடபுற வெளிச்சுவர்‌, உட்பக்கம்‌. 
குறிப்புரை : முதலாம்‌ மாறவர்மன்‌ சந்தரபாண்டியன்‌ சோழநாட்டு வெற்றியைக்‌ கூறும்‌ 
மெய்க்கீர்த்திப்பகுதி. முடிகொண்டசோழபுரத்தில்‌ சுந்தரபாண்டியன்‌ முடிசூடிக்‌ 


கொண்டது, சிதம்பரத்தில்‌ வழிபாடு செய்தது, பொன்னமராவதியில்‌ சோழன்‌ தனது 
முடியைப்‌ பாண்டியனிடமிருந்து பெற்றது, முதலிய செய்திகள்‌ இதில்‌ 


குறிப்பிடப்படுகின்றன. 


கல்வெட்டு 


அ 1. புகழ்‌ வரிந்து நாளும்‌ . . 


நாமத்தால்‌ 


2. . பூங்கமல வாவி சூழ்‌ பொன்னமராபதியிலே 
3. . . . (முய்யம்‌ இறை) விட்ட புகலிடத்தின்‌ மார 


4. நேத்தி வணங்கு வடகொங்கரை சிறை 


9. வனேன்‌ மாட மதுரையிற்றாள்‌ பவனி 


ஆ 1. றைசேரந்தணர்‌ வாழ்தெய்வப்புலியூர்‌ ரெல்லை 


423 


3. திருமுகமும்‌ பண்டிழந்த சோழ பதியேன்‌ (ன்று வ, மரு 


273 


4, போலுிங்கிளை[தளைத்த: .தென்றுணக்கீழ்‌ (தென்‌ மயமாக (௩ 


5, க்‌ கொண்டிவ்வாறு செய்யாதொழிலே 


1. படிமங்‌ _ கொண்டு போய்‌ ய்யப்படா 
டி அம த 


ஓ சே பெொய்ை, ்‌ 4 ு (மந்தம்‌ - 
ey ௫ ந்‌ ர ன ந்த 2 
1112 ச்‌. ப பல்‌ a [ட்‌ பரா முடியு 


5112 பாகும்‌! 


ம்‌ அ 


31 பட்டய 


நட பங்கு 


வண்ட டட... ௨றறாளை . பு. த்தேன்‌ விளங்கும்‌ செங்கயல்‌ : (கொண்டு). 


25) 002 Ai TOTO ND 


4. சொன்ன: வெல்லக்‌! (கணிற்க) விசைந்த 
AAMC. Mimi 5 aE 


ய த்‌ டியும்‌ விருந்துண்ண, (வர்கள்‌ த) 
எ , . பலத்து ப ்்‌ வித்திய வீரமும்‌ கெடுத்துக்‌ 


பரத பிம்ப 1), ஒம்‌, ரச்‌] 

3. புக்குத்‌ : திசைதொறும்‌ செம்பொற்‌ சேத்தம்பநாட்டி 
ள்‌ (2. யமக aie 0 NM 

4. ண்டசோழபுர்த்து வீராவிஷேகமும்‌ விசையாவிசே 


5. செய்வானுந்‌ செய்ய திருவாய்‌ மொழிந்தருளினப 


Ue 


உ. 1. உடைப்‌ ணங்கவும்‌ஃ.ஃ ப றுக்‌ கரவு கம்‌ 
2. ரர்க்‌ கொற்றனேழு வாளுயர்‌ . . . 


க்‌: 9ஃஃறிறித்திறற்‌ ,கோபுரஞ்சூழ்‌, முடிகொண்டசோழ புரத்து ய 
கனவும்‌, சோண்ாடுக்கொண்ட்‌ பீருளிடமுடிகொண்ட்‌ ஃ , , 3ஐபப்‌*ர்க்க்ம்வ 
கரடு யுக] ial? அவாவி டி ஓ கப்பம்‌ இரு பேடா மெல்கம்‌ க. மரக 
ட வார்‌ கோயில்‌ வைஷ்ணவ கட கபக்‌ ப 
கட்டு ம்ம்‌ மட) ட்ப உ இசி பிரப்‌ வான்றப  பயருலழே 


- லப பெப்‌ ட்ரே 


; நரகு 
: rw 
: ம்மா 


NS 


oo Wow O00 


ம்‌. இ 


து வ்‌! 


யமக 

து 21 ன்‌ ப்‌ ட ௮3 1121 ர நஜ 

23 க்‌ யேசு, த னது. தப oe at! . ய்‌ 
சியி பாங்க ட பு புறு கேழ்‌ (ci) 2 
vr a oa (RO பப்பு 1 
eT Coat vr ne Ar dd ச 
வுட ங்க த்‌ வெய்து பரும oe 0 

pre இ dbase ine வாடும்‌ DBT படை 1 பவ 
ய ஸ்ர ரா) மப நகம்‌ உல்மு றால்‌! பிலம்‌?! 


6274 


த. நா, அ. தொல்லியல்‌ துறை .... தெரடர்‌ எண்ட 72 /:2003.. - 


மாவட்டம்‌ : மதுரை: ஆட்சி ஆண்டு : ட i 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு ;. கி.பி. 13-ஆம்‌ ; 
ல்‌ ன சம்‌ நூற்றாண்டு 
களர்‌ : க யானைமலை இந்தியக்‌ கல்வெட்டு 1 2 ப 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ர ஸூ 3 
எழுத்து: தமிழ்‌ தற்‌; க: * 
அரசு : பிற்காலப்‌ பாஷ்டியர்‌ . ப 
மன்னன்‌ :; | ஊர்க்‌ கல்வெட்டு 1 ற 
எண்‌ 
J 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, வடபுற வெளிச்சுவர்‌, உட்பக்கம்‌. 
1 
ய்‌ க்தி அம. ம்‌ { 
குறிப்புரை : சிறுவாலியூரில்‌ நிலக்கொடை அளித்ததையும்‌, திருவோடைப்புறமாக இறையிலி 
அளிக்கப்பட்டதையும்‌ கடமையிறுக்கும்‌ கோலால்‌ நிலம்‌ அளக்கப்பட்டதையும்‌ 
இத்துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ கூறுகின்றன. 
1 i 
கல்வெட்டு : 
அ. 1. ட்டிவித்துக்‌ கொள்க 


w= இ கே பட oN WN 


. கடமை இறுக்கும்‌ கோலால்‌ ஜு 
. லத்து வோடைப்புற இறையிலி ட: ந டட 
ட்‌ தராஜன்‌ எழுத்து இவை இ டட 


. கீழிரணிய முட்டத்து 

. முட்டத்துச்‌ சிறுவாலி 

. செய்விக்கிற திரு. . . . களுக்கு இறுத்து 

. பக்கல்‌ மேலிரணியமுட்டத்து சிறுவாலியூரில்‌ . . . 
. லக்கூற்றத்து கீழ்கூற்று வேட்டனூருடையா .. 

. ணிய முட்டத்து சிறுவாலியூர்‌ ல்‌ க ! 
. யனுபவித்து வருகிற நிலத்தி ல்‌ 
.. இவை மதுரோதைய வள 

ராயர்‌ சுந்தரபாண்டியன்‌ பட hi 


திரையப்‌ பெருமாள்‌ எழுத்து நான்கு! கலைக அ ற கோ ்‌ 


275 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 173 / 2003 


மாவட்டம்‌ $ மதுரை 5: ஆட்சி ஆண்டு : 7 
வட்டம்‌ :.  -மதுரை வடக்கு வழ்வாற்லு ண்டும்‌. கி.பி. 19-ஆம்‌ 
ஊர்‌ : யானைமலை நூற்றாண்டு 
மொழி : தமிழ்‌ இந்தியக்‌ கல்வெட்டு 1 
எழுத்து: தமிழ்‌ வ அடா தீ 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ : முன்‌ பதிப்பு: ல 
கன்னன்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 
எண்‌ . ர்‌ 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, வடக்கு வெளிச்சுற்றுச்‌ சுவர்‌, உட்பக்கம்‌, 


குறிப்புரை : கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை, திருமடைவிளாகம்‌ அமைத்தது முதலிய 

ககன செய்திகள்‌ இத்துண்டுக்‌ கல்வெட்டுக்களில்‌ குறிப்பிடப்படுகின்றன. அரச ஆணையில்‌ 
கையொப்பம்‌ இட்ட அதிகாரிகளின்‌ செயல்கள்‌, கையொப்பம்‌ இவற்றில்‌ காணப்‌ 
படுகின்றன. 


கல்வெட்டு : 


அ. 1. இவை தன.. ன்றமுடையான்‌: எழுத்து இவை 

௮. து இவை மாம்தலைப்‌ பிரான்‌ எழுத்து இவை வான 
ஆ, 1. யாண்டு முதல்‌ வினியோகமும்‌ வி 
லுந்‌ திருமடைவிளாகமுஞ்‌ செய்வதான 
ன்‌ எழுத்திட்டு உள்வரியும்‌ தரச்‌ சொன்னோம்‌ 
. ணலூர்‌ அரையன்‌ இர .. . யான்‌ உத்தரம 
. த்துப்‌, பிடாகை ம. . “சிக 


இவ்வூர்‌ கடமையிறுக்கும்‌ கோலால்‌. . . , 


லட து, | னத்‌. மே ஐ. ர 


276 


. 1. காவிலே... . 


Pe மே 09 


. ... முகடுதடவி மழை தடுக்குங்‌ கா. 


. க்‌ கழலணிந்து விளங்கிய மணிய.. 
னூற்றிருபத்‌ தொன்றினாலே செ.. 
. று மழவராயர்‌ நமக்குச்‌ (சொ) 
டி சாசித்தவற்‌ செல்வ 

. னான பல்லவராயன்‌ எழுத்து 

.... (வெதிர்‌) கொள்ள 

நெடும்‌ பந்தற்‌ கவந்தந்தி 
டாருங்கே கைக்‌ கொண்டு மு 
 ஷீ௦ஹாஸனத்து . . . . 


ம்‌ மண்டலத்துக்குலோ . . 


217 


. காணா வோங்கு முரிமைக்கு யா... 


த. நர, 


அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :. .174 [2002 x.» .॥.இ 


மெ ma@Qay 2 


க ன்ஜுக்டுகு யு 


றம்‌ இவ்வர மு மன்று Ton ,£ 


மாவட்டம்‌ 3 மதுரை ஆட்சி ஆண்டு : ட 
ட்‌ டு 1 கய CS Wa (கூர்‌, ல ல.) 
வ - நட்‌ கம்‌: 3 , வற்று _ஆ 18 து 3 சிமிலி ம்‌ 2 ன்‌ 
நூற்றாண்டு 
ஊர்‌ : யானைமலை 
்‌ ர்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு | ::*:* 5 
மொழி : தமிழ்‌ ! ஆண்டு அறிக்கை, புருட மி 
எழுத்து: தமிழ்‌ ுண்ண்திப்ப்‌ EGER ரம்ஸ்‌, ஆ ஓ 4 
ன்‌ - | 3 : (ட ன்‌ % 
அரசு ! பிற்காலப்‌ பாண்டியர்‌ முக்ய) Teun Dialer) WUT 
ஊர்க்‌ கல்வெட்டு த்‌ 
மன்னன்‌ :  - எண்‌ weezy hae! 1 பம 
கேளும்‌ பாக பல்லு ங்கு 8 
இடம்‌ : ்‌ நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாம்ண்ட்ப்ம்‌;. "தெற்குச்‌ சுவர்‌* வெளிப்புறம்‌. 
்‌ பபான்‌ 1 ஒரியா வம்‌. லு] ட 
குறிப்புரை : | ஸ்ரீவல்லபன்‌ அழகியமணவாளன்‌ கோழ்குண்ககக்‌ கழர்வேதி மங்கலத்தில்‌" நிலக்‌ 
கொடை அளித்ததையும்‌, நரசிங்க ஆழ்வார்க்குத்‌ திருநாளுக்கு வேண்டிய திருப்படித்‌ 
தரங்களுக்குத்‌ தேவதான இறையிலி நிலம்‌ அளித்ததையும்‌ இத்துண்டுக்‌ 
கல்வெட்டுகள்‌ தெரிவிக்கின்‌ றன. 
கல்வெட்டு : 


அ. 1, உடையான்‌ ஸ்ரீ வல்லபன்‌ அழகிய மணவாளன்‌ 


2. 


இடப ட இட 


H ஐ: 


பதினை நிலத்திலே பழம்பாடகப்படி இரண்‌ 
நமக்குச்‌ சொன்னமையில்‌ இவ்வாழ்வார்‌ 

. சோழகுலாந்தகச்‌ சருப்பேதி மங்கலத்திலே 

- உள்வரியும்‌ நம்மோலையும்‌ தரச்‌ சொன்னோ .. 
கவென திருவாய்மொழிந்தருளி , . . மிழலை 


ஞ்‌ செய்ய திருவாய்‌ மொழிந்தருளினபடி இவ்வாழ்வார்‌ 

. திருனாளுக்குத்‌ திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவ 
ராயமும்‌ வினியோகமும்‌ உட்பட தேவதான 

காரியர்‌ கண்ட . . . க்குத்‌ திருப்படி மாற்றுள்ளிட்‌ , . . 

ண்டு முதல்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ உட்படத்‌ தேவதான 


278. 


த. நர. அ. சிதரல்லியல்‌ துறை -்‌்‌ தெரடர்‌ எண்‌.: 175] 2003 - + 


மாவட்டம்‌ : மதுரை ்‌  - ' ஆட்சி ஆண்டு: _— : r 
வட்டம்‌ : ... “மதுரை வடக்கு - * வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ ர்‌ 
டக நூற்றாண்டு 

ஊர : யானைமலை 

: இந்தியக்‌ கல்வெட்டு ட ட | 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] , 

) 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : _— 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஸ்‌ ்‌ 
ல சத அது ஊர்க்‌ கல்வெட்டு i த 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாமண்டபம்‌, வடபுற உட்சுவர்‌. 


ப 
குறிப்புரை : திருவானைமலையில்‌ வீற்றிருந்தருளிய நரசிங்கஆழ்வார்‌ புறப்பாடு செய்யும்போது 


ஆகும்‌ திருப்படித்தரத்திற்காக இறையிலியாக நிலம்‌ அளிக்கப்பட்டதைத்‌ 
தெரிவிக்கின்றது. ) 


கல்வெட்டு :. .., தா டக | 


1. ட்டத்து திருவானைமலை ்‌ வீற்றிருந்தருளிய ஸ்ரீ நரஸிஹஆழ்வார்‌ 
கோயில்‌ திருப்பதி ்ரீவை . : . ; 
2, தோறும்‌ புறப்பட்டருளத்‌ திருப்படிமாற்று கிளட்டு வேண்டும்‌ 
நிவந்தங்களுக்கு இவ்வாண்டு . : 
3. லத்திலும்‌ கொண்டு வரும்‌ வன்வோக்மம்‌ தருவதான அச்சும்‌ காரிய 
வாராய்ச்சியும்‌ . 
4, முதல்‌  தேவதான இறையிலியா . .  - இடப்பெற வேணுமென்று ஐயன்‌ 
மழவராயன்‌ ... 
ஆ, 1, உள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்கள்‌: செல்ல 
2. இவை மிழலைக்கூற்றத்து நடுவிற்‌ 
3. ன்‌ வெண்காடுதேவன்‌ காரோணமுடைய 


4, வை.. நரசிங்கஆழ்வார்‌ கோயில்‌ “நம்புசெய்‌ 


279 


த. நர. அ, தொல்லியல்‌ துறை -  தெரடர்‌ எண்‌ : 176 / 2003. 


இடம்‌ : 


மாவட்டம்‌; மதுரை . ஆட்சி ஆண்டு : த 

வட்டம்‌; மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ 

ஊர்‌ : யானைமலை ட்‌ நூற்றாண்டு 
வ . . இந்தியக்‌ கல்வெட்டு ன 

ம்‌ தமிழ்‌ ஆண்டு அறிக்கை 1 
அரசு: ' பிற்காலப்‌ பாண்டியர்‌ ்‌ 

மன்னன்‌ ; ௨ ஊர்க்‌ கல்வெட்டு |. ஆ 

எண்‌ . ] 


நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாமண்டபம்‌. 


குறிப்புரை : கீழிரணியமுட்டத்துத்‌ திருவானைமலை வீற்றிருந்தருளிய நரசிங்க ஆழ்வார்க்கு 


நிலம்‌. அளித்தது, அதன்‌ எல்லைகள்‌ பற்றிக்‌ கூறுகின்றது. 


கல்வெட்டு : 

அ. 1, ஷஹிஸ்ரீ கோநேரின்மை கொண்டான்‌ .. ்‌ 

2. ணியனூர்க்குக்‌ த ற்ற அகல்‌ திருவானைமலை மேல்‌ 
ததவ ப ர்க நரஸிஹ ,. .. 

8. .. .. .. நரசிங்கமங்கலத்து .. .. . 
4, குடி .. .. க்கிற கல்லுக்கு மேற்கும்‌ தென்னெல்லை நரசிங்கமங்கலத்து 
5. கு வடக்கும்‌ மேலெல்லை .... . 

ஆ. 1. வாய்ப்‌ பொற்சூலக்‌ (கைவல்ல பலகொள்க) .. 
2. து வஞ்சி முதலான மொய்வளையர்‌ மல்கு புனற்‌ கும்ப முதல்ப்‌ 
3. யா ந்‌ யரிவையர்‌ ப்தி முலகமுழுதுடையா 
4... .. மிருத்த க ்்ல்க்த்தும்‌! தக்கன்‌ வீற்றிருந்த 


டால்‌ கத்தல்‌ வரிசை நிலத்தில்‌ நிலம்‌. வேலியும்‌ வ தம்‌ 
6. கூற்றத்து ஸ்ரீவல்லப மங்கலத்தில்‌ ஒரு . . ... 


280 


த. நா. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 177 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : பச்‌ 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 1892 
ஊர்‌ : யானைமலை இந்தியக்‌ கல்வெட்டு ] ட 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை |. 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : ர 
தர ஊர்க்‌ கல்வெட்டு 16 க 
மன்னன்‌ — எண்‌ ] 
இடம்‌ : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, குடைவரை முன்மண்டபத்‌ தூண்‌. 
குறிப்புரை : குடைவரைக்‌ கோயிலின்‌ ஜன்னலை உமாபதி அய்யன்‌ என்பவன்‌ செய்வித்ததைக்‌ 
கூறுகிறது. 
கல்வெட்டு 
1 உ 


2. ்ரீராமஜெயம்‌ 

3. மதுரை ஈஸப்‌ 

4. நிரு உமாபதி ௮ 
9. ய்யன்‌ ௮. . சூழ்வரி 
. சை ஜன்னல்‌ 
உபயம்‌ 

- நந்தன[ஸஷூ] 

. ஆவணி மீ” 

10. 1892. 


ம ௦௭௯ 


281 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகாமண்டபம்‌, வடபுற வெளிச்‌ சுவர்‌. 


மாவட்டம்‌ : மதுரை 
வட்டம்‌ : . மதுரை வடக்கு 
ஊர்‌ : யானைமலை 
மொழி : தமிழ்‌ ' 
எழுத்து: தமிழ்‌ 
அரசு : — 
மன்னன்‌ : கலை 
இடம்‌ - 
குறிப்புரை : 
தெரிவிக்கிறது. 
கல்வெட்டு : | 
1. ஸ்ரீராமஜெயம்‌ பாரத்து 
2. வாஜ கோத்திரம்‌ 
3. ரத்தினப்‌ பெருமாள்‌ 
4. பாகவதற்‌ விளாஇ 
5, சன்னான்‌ 
6. உபயம்‌ 
7. (கலியுகம்‌ . . . . .. ) 
ஆ.-1. அமுத மளித்த 
2. பெருமாள்‌ 
8. அழைத்த 
4. 


வரலாற்று ஆண்டு : 


_ பார்த்துவாஜ கோத்திரத்து இரத்தினப்பெருமாள்‌ 


தொடர்‌ எண்‌ : 178 / 2003. 


ஆட்சி ஆண்டு ! — 


இந்தியக்‌ கல்வெட்டு | 
ஆண்டு அறிக்கை a 
முன்‌ பதிப்பு : — : 


எண்‌ 


ஊர்க்‌ கல்வெட்டு | ன்‌ 


282 


கி.பி. 18-19-ஆம்‌ 


நூற்றாண்டு: 


பாகவதர்‌ செய்த தர்மம்‌ பற்றித்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 179/ 2003 


து. நர. அ. 
மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 2 + 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 9-10ஆம்‌ 
ர த்‌ தன்‌ தாற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ மலை (வரிச்சியூர்‌) இந்தியக்‌ கல்வெட்டு 1 ன 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ) 
எழுத்து: வட்டெழுத்து முன்‌ பதிப்பு : 
அரசு : முற்காலப்பாண்டி யர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
த்க்‌ எண்‌ ல 
மன்னன்‌ : J 
இடம்‌ : குன்னத்தூர்‌ (வரிச்சியூர்‌) குன்றின்‌ மீதுள்ள கட்டடக்‌ கோயில்‌ - அதிட்டானம்‌. 
குறிப்புரை: குன்றத்தூர்குளக்கீழ்‌ நாட்டுக்‌ காவனூர்‌ அரையன்நக்கன்‌ என்பவர்‌ குன்றத்தூர்‌ 
குளக்கீழ்நாட்டுப்‌ பிரம்மதேயத்திலுள்ள மூலபலஈசுவரம்‌ என்ற சிவாலயத்திற்குத்‌ 
திருச்செந்கடைக்காக வேண்டிக்‌ கொடையளித்திருந்தமையை இக்கல்வெட்டுப்‌ புலப்‌ 
படுத்துகிறது. இக்கொடை இத்திருக்கோயிலின்‌ அகநாழிகையாரிடம்‌ (கருவறைப்‌ 
பணி செய்வோரிடம்‌) வழங்கப்பட்டிருந்திருக்கின்‌ றது 
கல்வெட்டு : 
1. டயமாறர்க்கு யாண்டு இரண்டு இதனெதிர்‌ .. .வ்வாண்டு குன்றத்தூர்‌ 
குளக்கீழ்‌ ஸஹூேயம்‌ செ... .. . 
2. க்க லை ஸ்ரீ கரணமூலபலஈயர த்தும்‌ வ க்‌ 
குண்றுத்தார்‌ குளக்கீழ்‌ காவனூர்‌ அரையனக்கன்‌் மூலபலஈயர 
3. த்து அகநாழிகையார்க்கு இருவாரவட்டத்து குடுத்ந பரிசாவது 


இத்தேவர்க்குத்‌ திருச்செத்நடைக்கு நியதி சதத(ரை) நம்‌ 


283 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 180 / 2003 . - 


மாவட்டம்‌ : மதுரை . , ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌ : : மதுரை வட்க்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 1505 
ஊர்‌ ; குன்றத்தூர்மலை (வரிச்சியூர்‌) ட்ட ன | 
| இத்தியக்‌ கல்வெட்டு 96 | 1969-1964 

மொழி : தமிழ்‌ .... ஆண்டு அறிக்கை ] - 
எழுத்து : தமிழ்‌ முன்‌ .பதிப்பு : 
அரசு : விஜயநகர்‌. i வழ்க லு ல்‌ 

. ஊர்க்‌ கல்வெட்டு ட 2 
மன்னன்‌ : இம்மடி நரசிங்க மகாராயர்‌ 1 J ்‌ 
இடம்‌ : சமணர்‌ குகைத்‌ தளத்துப்‌ படுக்கையில்‌ உள்ளது. 


குறிப்புரை : விசயநகரப்‌ பெருவேந்தர்‌ இம்மடி: நரசிங்கராயரின்‌ ஆட்சிக்காலத்தில்‌, ம்துரை 
மண்டலத்தின்‌ கர்த்தராகப்‌ பணியாற்றி வந்த வீரமாராசய்யன்‌ என்பவன்‌ வரிச்சியூரி 
லுள்ள வீரபத்திரநாயனார்‌ கோயிலுக்கு மலைக்குடி, புளியங்குளம்‌ போன்ற. 
ஊர்களைத்‌ தானமாக வழங்கிய செய்தி இக்கல்வெட்டில்‌ குறிக்கப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : ர ரர] 


ஸ்ரீமந்‌ மகாமண்டலேசுவரன்‌ மேதினி 
. (மீசுரக)ண்ட கடாரி சாளுவ இம்மடி நர 
சிங்க மகாராயர்‌ பிறிதிவிராச்சியம்‌ செய்த .. .. 

ச்சின நாயக்கற்கு தன்மமாக மதுரை 
._ மண்டல(த்து) கற்த்தரான வீரமாசய்யன்‌ வருக ஸ்ரீ 
வீரபத்திர நயினார்‌ (தேவதானமாக) 

க்குடி ....ங்குளம்‌ அரசரும்‌ I 

உஉரயுந்த) டி (நதல்‌) ட (படமுந்து) து 


ட லு இ ௭ ௬ மே 5 4 


284 


த. நா, அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ ; 181 / 2003 | 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 

வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு ௫ கி.பி. 19-ஆம்‌ ் 
க ண்கள்‌ அட்ட நூற்றாண்டு 

ஊர்‌: குன்றத்தூர்‌ மலை (வரிச்சியூர்‌) பயக கல்வெட்டு]. _ | 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை i | 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

பது இ ஊர்க்‌ கல்வெட்டு ட்‌ 2 

மன்னன்‌ — எண்‌ J 

இடம்‌ : குன்றத்தூர்‌ மலையின்‌ பின்புறமுள்ள இடிந்த சிவன்கோயில்‌. 


குறிப்புரை : குன்னத்தூர்‌ மலையிலுள்ள உதயகிரீசுவரர்‌ (குடைவரைக்‌) கோயிலுக்குத்‌ தெற்கில்‌ , 
குளத்தின்‌ கரையில்‌ உள்ள இடிந்த நிலையிலுள்ள சிவாலயத்தில்‌ பிற்காலப்‌ 
பாண்டியர்காலக்‌ கல்வெட்டுக்கள்‌ சில துண்டு துண்டாகக்‌ காணப்படுகின்றன. 

கல்வெட்டு : 

அ. 1. றுக்குணர்ந்து வை 
2. க்கல்‌ புறத்துப்‌ போ 
3. ன்னி மந்தவெம்‌ 
.யிற்பாடாக வென்‌ 


ழங்க விடைகு 


௩. ௭. ௫௬ 


மிருமருங்கசை 
ஆ. 1. ங்‌. கயகலத்தா னோ... 


2. ரை ஞாலத்து பழவா 


285 


- (ருளிவர) (கை) ... (தால்‌) . 


மைங்‌... 


.ரழ்வான்‌ ஓலை அருந்தவ 
றாய்‌ முன்பு தா... .. 


வலவ மு 


 நத்தன்‌ . . . 
. ணிப்பு . ம்பி... . 


. ன்மார்‌ 


286. 


த. நர. ௮, தொல்லியல்‌ தூறை தொடர்‌ எண்‌ : 182 / 2003 ்‌ 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வட்டம்‌: மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ 
ஊர்‌ : குன்னத்தூர்மலை (வரிச்சியூர்‌) \ தூற்றாண்டு 
இந்தியக்‌ கல்வெட்டு 
ப்‌ ய்‌ ஆண்டு அறிக்கை J 1 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : ம்‌ ்‌ 
அரசு ச 
மன்னன்‌ ஃ ஊர்க்‌ கல்வெட்டு 1 4 
எண்‌ J 
இடம்‌ : நீலகண்டேசுவரர்‌ குடைவரைக்‌ கோயில்‌. 


குறிப்புரை : தீர்த்தராம(ப)ழிஞ்சி, அரிஹரபுத்திரர்‌ ஆகியோரின்‌ இறைபக்தியைப்‌ புலப்படுத்தும்‌ 
கல்வெட்டுக்களாகக்‌ காணப்படுகின்‌ றன. 


கல்வெட்டு : 
அ. 1. தீத்தராம 
2. மியஞ்சி 
3. சதா சேர்‌ 


. வை 


. அரியரி 


 ன்சத(ஈ) 


4 
1 
2. புத்தர 
3 
4, சே. .... 


287 


895 


‘woo uF 
அமல ராரா] ஐ 
oon ராமா “ந 


பர பூஜா foi :7 


: DAVY» 
80 மூடாம 
எடும்‌  ர்ேஸ்லடூ யம்மா Sp ॥மாரு 2 1தமமகமய௫ 
யாடி ‘ghee யரும்‌ முழுாகு 00 ரர்‌ மஜா ஹழூடுருமாடி 
(8201 arcrole ர/ரேலேலுடு மீ. ஏழே முழு மம எரும : ஞா: 
மடி மமக யாழ மரம “முழு ஒரமா ॥1ரட4-1ஐ 299099 : ஏக 
| 1009 19 
g | டு -ுும௪ PLT _ பரா 
— ராடு லி து 1 சமல்‌ 
1 | முழு மமக சீற்‌  : ஏம 
(| இழ கருட கிற : ரியரழ. 
Oui (பரமு அழாம) ணா 1 IE ஏ 01௯ 3 க 
யத்‌ 816 ப்பத்‌ தய்ய . ஜு பர : aT 
_— : மக ழா மிர ! aT 
E00T/ 81 : wow IEG daw qmgardy ‘ie 1a a 


த. நர. அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ ; 184 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 

வட்டம்‌ ; : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு 4 கி.பி, 13-ஆம்‌ 
த நூற்றாண்டு 

ஊர்‌ : ன்னர்‌ மலை இந்தியக்‌ கல்வெட்டு ப 

மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 

எழுத்து: தமிழ்‌ முன்‌: எதிப்பு: கு 

பதன. க்‌ ஊர்க்‌ கல்வெட்டு] த்‌ 

மன்னன்‌ ; எண்‌ ] 

இடம்‌ : நீலகண்டேசுவரர்‌ குடைவரைக்‌ கோயில்‌, கன்னிமார்‌ மண்டபம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. 


பிற்காலப்பாண்டியரின்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதிகளும்‌ 


கோயிலுக்கு இறையிலியாகக்‌ காணி வழங்கப்பட்டிருந்த செய்தியும்‌ இத்துண்டுக்‌ 
கல்வெட்டுகளில்‌ காணப்படுகின்றன. 


கல்வெட்டு 


அ 1... 4... த்தபி. , வழுதும்‌ 


3. கலத்துக்கு ஒன்றும்‌ கடமை . 


es 


4, கடமை அந்தராயம்‌ இறுப்பதி .. . 
ஆ 1. துரந்து . . . வீர சிங்காசனத்து வீற்றிரு 
2. செங்கோன்‌ நடப்ப கருங்கல [நடுங்கி] . மெ 


3. லவா... .. ருட முறை முறை பநிநேமி . . . 


இ 1. இடை மனைக்கும்‌ கோயில்‌ 


2. சந்தி . . . தராம . 


.. காணி செய்து 


9. ட பெருமா[லு] . . [திருக்குள . ] . . விடகித 


289 


த. நா, அ. தொல்லியல்‌ துறை . தொடர்‌ எண்‌': 185 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 2 
வட்டம்‌ : மதுரை வடக்கு :' வரலாற்று ஆண்டு ,: கி.பி. 13-ஆம்‌ 
ஊர்‌ குன்னத்தூர்‌ மலை ': தி நூற்றாண்டு. 
5 ந்‌ தியக்‌ கல்வெட்டு :. . ; 
வ்‌ . கல ட்‌ 79/1928-29 
மொழி: தமிழ்‌ oo . ஆண்டு அறிக்கை } 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : த 
அரசு: — 
மன்னன்‌ : ஊர்க்‌ கல்வெட்டு \ ர 
எண்‌ a 
J 
இடம்‌ : நீலகண்டேசுவரர்‌ குடைவரைக்கோயில்‌ , கன்னிமார்கோயில்‌ ''மண்டபச்சுவர்‌ . 
குறிப்புரை : துண்டுக்‌ .கல்வெட்டுகள்‌. : இவை.சோணாடு கொண்டருளிய முதலாம்‌ மாறவர்மன்‌ 
த்‌ சுந்தரபாண்டியன்‌ -காலத்தவையாகக்‌ காணப்படுகின்றன. மாடாபத்தியம்‌ குறித்தும்‌ 
இறைவனுக்கு நிலக்கொடை வழங்கப்பட்டமை . .பற்றியும்‌ இத்துண்டுக்‌ 
கல்வெட்டுகளில்‌ காணலாம்‌. இக்கல்வெட்டை : வெட்டிய தச்சாசாரியனின்‌ 
பெயர்‌ ஒரு துண்டுக்‌ கல்வெட்டின்‌ இறுதியில்‌ காணப்படுகிறது, அப்பெயரில்‌ 
“விச்சாத' என்ற முன்பகுதி மட்டுமே காணப்படுகிறது. பெயரின்‌ பின்பகுதி 
இல்லை. 
கல்வெட்டு : 
அ. 1. ரந்‌ மாடாபத்தி .. . குடுத்தரு .. . ருசி 5 
2. காணியு[ம்‌] ஆக நிலம்‌ இரண்டு .. .. 
9. உள்ளிட்ட குடிகளும்‌ ஆத்தி .. .. 
4. ரவு .. ... ட்ட ...... இந்தா 


ப சோணாடு கொண்டளிய 


. சுந்தரபாண்டிய தேவ்ற்கு யாண்‌ 


290 


- டு நாலாவது இலுப்பை 

௨ஞ்‌ செய்யை மலைக்குடி நடுமலை ம 

ள்‌ பலத்து வன்றலை சொக்கணா 

. றாவதின்‌ எதிர்‌ மூவாமாண்டு நம்‌ எழுத்திட்ட வோதலைபிடிபா .. 
. லைக்கும்‌. உரித்தாய்‌ சந்திராதித்தவற்‌ செல்வதாகக்‌ கல்லு .. 

. வீரமுடிச்சான்‌ இப்படிக்கு இவை கட்டணைராயன்‌ எழுத்து இப்படிக்கு. 


கொடுத்து இவெழுத்து வெட்டினேன்‌ இக்கோயில்‌. தச்சாசாரியன்‌ 
விச்சாத .. .. 


291) 


த. நா, அ, தொல்லியல்‌ துறை . தொடர்‌ எண்‌ : 186 / 2003 


மாவட்டம்‌ : 


தட 


மதுரை ஆட்சி ஆண்டு: — ,. 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ 
ர கன காகக்‌ அல “ நூற்றாண்டு 
ஊர : குனனனததுரா மலை ்‌ 
இந்தியக்‌ கல்வெட்டு ] 
மொழி: தமிழ்‌ அண்டு அறிக்கை ர்‌ க்க 29 
எழுத்து: தமிழ்‌. ரட்‌ ந 
முன்‌ பதிப்பு: .. ல 
அரசு ! பிற்காலப்‌ பான ர்‌ 
ற்கு வட யூர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ] 
ர்‌ ஸ்‌ ண்‌ 8 
மன்னன்‌ : . முதலாம்‌ சடையவர்மன்‌ சணா J 
குலசேகரன்‌ 
இடம்‌ : நீலகண்டேசுவரர்‌ குடைவரைக்‌ கோயில்‌ கன்னிமார்‌ மண்டபத்‌ தென்சுவர்‌. 
குறிப்புரை : இக்கல்வெட்டு முழுமையாக இல்லை. முதலாம்‌ சடையவர்மன்‌ குலசேகரனின்‌ 
மெய்க்கீர்த்தியான “பூவின்கிழத்தி' எனத்‌ தொடங்கும்‌ மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. 
களவழி நாடாழ்வான்‌ அனுப்பிய ஓலையைக்‌ காவனூர்‌ ஊரவையினர்‌ பெற்று 
நடவடிக்கை எடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 
கல்வெட்டு : 
1. ஹஹிஸீ பூவில்‌!கிழத்தி மேவி வீற்றிருப்ப மேதினிமாது நீதிவிளங்கித்‌ 


திசை இருநான்கும்‌ .... றிருப்ப . . .யரவயர்‌ போர்‌. . . .ப்புயத்‌ 
திருப்ப, கலை... மடந்தை வாக்கினில்‌ நெறிவளர மனுநெறி திகழ 
அறநெறிச்‌ சமயங்கள்‌ ஆறும்‌ தழைப்ப கா..... மீனங்கன 


காஸனத்து வீற்றிரு .. 


ப வென்திரி [சூநக] திறையுடன்‌ முறைபணிப விருநேமியளவும்‌ மொரு 
. . பக்‌ கொடுங்கலி நடுங்கி நெடும்பிளத்தொளிப்ப வில்லவர்‌ செம்பியர்‌ 
விராட்டமராடா ஒரு நேமியோங்க இன்னமுதாகிய வியலிசை நாடகம்‌ 
மன்னி வளர. . .. முடி. . . . யளி வீரசிங்கானத்து வீற்றிருந்தருளிய 


292 


3. கோச்சடைய பன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலசேகர: 


தேவற்கு யாண்டு. . . . செவ்வாய்‌(க்‌) கிழமையும்‌ பெற்ற மூலத்து நாள்‌: 
முதல்‌ ........ பத்தொன்பதாந்‌ தியதியும்‌ வவ பக்ஷத்து களவழி: 
நாடாழ்வான்‌ ஓலை காவனுர்‌ . . , . ஊரார்‌ கண்டு தனியானை ,...' 
டை. நாயனார்‌ ... தேவ... 


1. பூவின்‌ என்றும்‌ வாசிக்கலாம்‌ 


293 


த. நர, அ, தெரல்லீயல்‌ துறை , தொடர்‌. எண்‌, :,, 187 /.2003.. 


ஆ. 


மாவட்டம்‌-: மதுரை ஆட்சி: ஆண்டு: : னி 
வட்டம்‌ ; மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 
்‌ ள்‌ யக்‌ I நூற்றாண்டு 
ஊர: குனனத்தூர்‌ மலை . 
இர்தியக கல்வெட்டு 1 82/1928-29 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை i: 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
அரசு: பிற்காலப்‌ பாண்டியர்‌ i 
மன்னன்‌ : சடையவர்மன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 9 
சுந்தரபாண்டியன்‌ படப்‌ ] 
இடம்‌ : நீலகண்டேசுவரர்‌ கோயில்குடைவரை கன்னிமார்‌ மண்டபத்‌ தென்சுவர்‌. 
குறிப்புரை : திருக்கோயிலில்‌ நாள்தோறும்‌ நடைபெறும்‌ செலவினங்களுக்காக வேண்டி இறையிலி 
யாக நிலம்‌ வழங்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 
கல்வெட்டு : 

1, கண்ட . . . கண்‌ . . , [கற்றோயான] . . . . . கேசரி சதுர்வேதி 
மங்கலத்துக்‌ கா .. .. த இவ்வூர்‌ வயலில்‌ நம்‌ உழவு கரையில்‌ 
தன்மதான இறையிலி புஞ்செய்‌ . . 

2. இகால்‌ மேற்கடைய நா ற்றங்கால்‌ ன நிலம்‌ காணிஞுத்திரிகைக்‌ 
கீழ்‌ முக்கால்‌ . . . . மக்கள்‌ பக்கல்‌ . , . தென்கடை .. தடி இரண்டு 
நில க முந்திரிகை கீழ்‌ முக்காலே ன்று மாக்காணியும்‌ ஆக நிலம்‌ 
ப்‌ குடுத்த . . . 

8. களுக்கு வேண்டும்‌ திருப்படி . . . . உள்ளிட்ட . . . . கடமை அந்த 


ராயம்‌ இறுப்பதாக கணக்கு காராண்மையில்‌ தரவும்‌ வேணுமென்று 
நமக்குச்‌ சொன்னமையில்‌ 


௨ய நெல்லு அ[று] கலமும்‌ அந்தராயந்‌ . . . . ஒன்றே முக்காலும்‌ 


கைக்கொண்டு இந்நாயனார்க்கு : . . . நிமந்தங்களுக்கு வேண்டும்‌ 
நித்தல்‌ நிவந்தங்களுக்கு நாயனார்க்கு ம்‌ 


ள்‌ பதின்மூன்றாவது ஆனி மாஸம்‌ பத்தொன்பதாந்‌ தியதியும்‌. . . . 


வ ூவ.வக்ஷத்து செவ்வாய்க்‌ கிழமையும்‌ பத்‌ மூலத்து நாள்‌ . .... 
கல்லிலும்‌ செம்பி . . . .. 


234. 


த நர. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 188 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ 
a க! நூற்றாஸ்‌.டு 

ப ட டடத துந்து 'இந்தியக்‌ கல்வெட்டு | 

மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை ) 

எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 

ES ஸ்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ன ்‌ 

மன்னன்‌ : ௨ ட்‌ J 

இடம்‌ : குன்னத்தூர்‌ பெருமாள்‌ கோயில்‌ நுழைவாயில்‌ மண்டபம்‌, 

குறிப்புரை : துண்டுக்கல்வெட்டுக்கள்‌. கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளைக்‌ குறிப்பிடு 
கின்றன. துஞ்சலூருடையான்‌, மக்கனாயனார்‌ போன்றவர்களின்‌ பெயர்கள்‌ . 
காணப்படுகின்றன, 

கல்வெட்டு : 


அ 1, வளன்திகழும்‌ பூண்பக்கலும்‌ . . . ண்டில்‌ சித்த 


2. 
3. 


ஆ 1. 


தாவது அற .. .. முத... . , டங்கமே 
நடந்து போதுக இவை துஞ்சலூருடை 
தேவர்க்கு யாண்டு ௩௰ ,.,... 


. மக்கனாயினார்‌ கங்காணிப்படி . . பிள்ளையார்‌ திருமுன்‌ 


295 


த. நா. 


அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 189 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ 

| ல ல நூற்றாண்டு 
ஓனர்‌ 5 குனறத்தூர மலை 5 & த . ல 4 
இத்தியக்‌ கல்வெட்டு 250/1964-65 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை ] 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : லை 

ரசு : — 
ப ஊர்க்‌ கல்வெட்டு 11 
மன்னன்‌ — ்‌ எண்‌ 
இடம்‌ : குன்னத்தூர்‌ பெருமாள்‌ கோயில்‌ நுழைவாயில்‌ மண்டபம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌. மார்கழித்‌ திருவிழா நடத்துவதற்காகக்‌ கொடை .வழங்கப்‌ 


பட்டிருந்ததை இக்கல்வெட்டுகள்‌ புலப்படுத்துகின்றன. ஒரு துண்டுக்‌ கல்வெட்டில்‌ 
பூலாங்குடி என்ற ஊர்ப்பெயர்‌ காணப்படுகிறது, 


கல்வெட்டு : 


அ 1. ஸ்ரீ காரியத்துக்கு . . . ந்த. . 


உ யாறை ௭ 


த்தா மார்கழி திருநாளுக்கும்‌ நித்த நிவ 
௨ம்‌ பூலாங்குடியும்‌ மு 

. கப்படியும்‌ குறை 

. கோனேரின்மை கொண்டான்‌ குன்‌ . ,. . 
. [வனார்‌]களுக்கு நிச்சயிப்பான அச்சு . 

௨ம்‌ திருநாள்‌ படிக்கு ' | த 
 த்தனு . .. . . திரமம்‌ 

ல்‌ கட்டின சோவ 


. . கெல்லையிலுந்‌ தி[நிரார்‌ .] 


296 


த. நர, ஆ. தொல்லியல்‌ துறை தொடர்‌ ஏண்‌ : 190 / 2003 i 


மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : _— 
வ தினா வடக்க வரலாற்று ஆண்டு ! கி.பி. 19-ஆம்‌ 
ஊர்‌ : குன்னத்தூர்‌ நூற்றாண்டு 
மொகல்‌. தமிம்‌ இத்த மக கலு 281, 232 / 1964-65 
எழுத்து: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
அரசு த முன்‌ பதிப்பு: — 
CP = ஊர்க்‌ கல்வெட்டு | _ 
இடம்‌ : பெருமாள்கோயில்‌ நுழைவாயில்‌ மண்டபம்‌ 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுக்கள்‌. கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளைக்‌ குறிப்பனவாக 
உள்ளன. பெருமாள்தேவன்‌, தனியானை திருநிலை அழகியான்‌, சுப்பிரமணிய 
பட்டன்‌ போன்ற பெயர்கள்‌ காணப்படுகின்றன. 
கல்வெட்டு : 
அ. 1. பிடிபாடு பண்ணிக்குடுத்த பரிசாவது .. செய்வித்து பொரு . .. :. 
ழாகவும்‌ இவ்வா . . . . இப்படிக்கு முன்‌ . .. . . 
இ, ஈகவும்‌ வெட்டிக்‌ கொள்வாராகவும்‌ இப்படிச்‌ சம்மதித்து . . . ட 


பெருமாள்‌ எழுத்து திருநிலை அழகியான்‌ ஸுரஹணு லட்டன்‌ எழுத்து 
திருநட . .. 


. வதாகச்‌ சொன்னோம்‌ இப்படி . .. . 


. இவ்வூர்களுக்கு நிற்செய்ப்பான்‌ உபாதி . . . உ 
, யானெழுத்து யாண்டு முப்ப .... 
. ஸ்ரீகோச்சடைய. . . 


. கொண்டு கூட்டின. .. 


297 


த. நர. அ. சொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌" 191./ 2003 


மாவட்டம்‌ : மதுரை . 5 ர . ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : . மதுரை வடக்கு - _ வரலாற்று ஆண்டு ; கி.பி. 18-ஆம்‌ 
ம்‌ க்‌ கக்‌ ட நூற்றாண்டு: 
ளெ ்‌ 8 - ல 5 ய்‌ ம 
டட னில்‌ ம பதி இந்தியக்‌ கல்வெட்டு | ஒத /1964-05 -. -, 
மொழி தமிழ்‌ ஆண்டு அறிக்கை | 
எழுத்து: தமிழ்‌ தக்க 5 
அரசு — ஊர்க்‌ கல்வெட்டு 1 4 
மன்னன்‌ _ வ்‌ J 
இடம்‌ : சிவன்கோயில்‌ அர்த்தமண்டப வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை.: இக்கல்வெட்டு முழுமையற்ற துண்டுக்‌ கல்வெட்டாக உள்ளது. கோயிலுக்கு 


விற்றுக்‌ கொடுக்கப்பட்ட நிலம்‌ பற்றிய குறிப்பு காணப்படுகின்‌ றது, 


கல்வெட்டு : 


1. மரமும்‌ கீணோக்கிய என விகற்ப 


2. மிக்கு மேற்குந்‌ தென்‌ , , : . வழுதிநாட்டான்‌ . . . 


3. கிண்றும்‌ மீன்படு பள்ளமும்‌ தேன்படு பொது . .... 


4, ன உள்ளிட்ட அழிவுக்கு விற்றுக்குடுத்த குடிக்காடு . . .. 
5. ளத்திரமம்‌ இறுப்பதாகவும்‌ ஆக இப்படி . .. . 

6, ழி நாடாழ்வான்‌ , . . இப்படிக்கு வீரபாஞ்சாள [இவ] 

7. ப பலன்‌ அடு வதாக சுந்தரத்தோளுடையான்‌ . . . 


8. ற்றுக்குடுத்த . . . . திக்குவுக்கு விற்று நிற்செ . . 


298 


த. நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 192 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு ! 28 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி. 1296 
ஊர்‌: குன்னத்தூர்‌ \ 

இந்தியக்‌ கல்வெட்டு i 
மொழி : தமிழ்‌ ண்டு அழிக்கக்‌ ்‌  220/1904-65 
எழுத்து: தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 1 ன்‌ 
மன்னன்‌ ? மாறவர்மன்‌ குலசேகரன்‌ எனாது J 
இடம்‌ : சிவன்‌ கோயில்‌ அர்த்தமண்டப வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை: தனியானை ஈசுவரமுடையார்‌ கோயிலுக்குக்‌ குன்றத்தூர்குளக்கீழ்‌ நாட்டுக்‌ 
காவனூரான விக்கிரமபாண்டியநல்லூரில்‌ ஒன்பது மாவரை நிலம்‌ இறையிலியாக 
வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. *காலகண்டதேவன்‌' என்ற 
அளவை மரக்காலும்‌ பயன்பாட்டிலிருந்ததையும்‌ தெரிவிக்கின்றது. மேற்குறிப்பிட்ட 
நிலத்திற்கு வடக்கில்‌ ஆதிச்சப்பேரேரி என்ற குளமும்‌, மேற்கில்‌ தட்டான்‌ 
வாய்க்கால்‌ என்ற வாய்க்காலும்‌ இருந்துள்ளன. 

கல்வெட்டு : 

அ. 1. ஜஷிறீ கோமாற பன்மரான கி,ல*வனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலைசேகர 
தேவற்கு யாண்டு ௨௩ ஆவது எதிர்‌ ௦௫ ஆவது குலைசேகர களவழி 
நாடாழ்வானேன்‌ குன்றத்தூர்குளக்கீழ்‌ நாட்டு காவனூரான விக்கிரம 
பாண்டியநல்லூர்‌ 

2. . . . னாயனாற்கு இவ்வூரார்‌ குடுத்த ஊரிசைக்‌ காலாலும்‌ . .. 


இக்காலால்‌ வளக்க கடமையும்‌ அந்தராயமும்‌ ர மற்றும்‌ 
எப்பேற்பட்டனவும்‌ இன்னாயனாற்கு இறுப்பதாக குடு . 


3. ழெல்லையா .. .. நாயன்காலுக்கு மேற்கும்‌ தென்னெல்லை இன்னாய 


னார்‌ திருமடைவிளாகத்துக்கு வடக்கும்‌ மேலெல்லை சிறுமடை . ..., 
டுத்த தட்டான்‌ வாய்க்காலுக்குக்‌ கிழக்கும்‌ வடவெல்லை ஆதிச்ச பேரேரி 
எல்லை 


299 


4. . 


. தெற்கு ... .. தேவபட்டந்‌ . . . . இவ்வூற்‌ . . . எல்‌ பெற்றான்‌ 
ஏம்பல்‌ நான்கெல்லைக்குட்பட்ட நிலம்‌ குடிதாங்கிக்கோலால்‌ நிலம்‌. 
ஒன்பது மாவரைக்கு நிலம்‌ ஒரு மாவுக்கு கடமை காலகண்டதேவனால்‌ 
நெல்லு எண்கலமும்‌ அரைசில . . 


. நெல்‌ திரமம்‌ மூன்றும்‌ வினியோகம்‌ . . .. இன்‌ . ...ல்‌ வந்த 


வினியோகமும்‌ நாட்டாவால்‌ வந்த கற்பூர விலையால்‌ வந்த பழங்காசும்‌ 
வெட்டி ' முட்டாவாள்‌. மற்றும்‌ எப்பேற்பட்ட இறைகுடிமைகளும்‌ 
இன்னாயனாற்கு .. . 


. ௬ுப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்களுக்குக்‌ . : குடுத்தோம்‌ 


இப்படிக்குச்‌ சந்திராதித்தவல்‌ . . . [க]ல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 
கொள்ளவும்‌ உடையார்‌ தனியாணையீமரமுடைய நாயனார்‌ கோயிலில்‌ 


நமக்கு இறுக்கக்கடவ நா . . .. காசு அரை .. . . அரைக்காலும்‌ அ 


. திரமத்தால்‌ வந்த... சோற்றால்‌ வந்த நெல்லும்‌ நமக்கு . . . 


ஒன்றுக்கும்‌ இக்கோயிலில்‌ சிவபிராமணர்‌ இன்னாயனாற்கு இக்காசு 
கொண்டு ஒரு சந்தியாதீபம்‌ எரிப்பாராக இக்காசு தவித்து குடுத்த . . . 
வுக்கு . , . . ்‌ 


௨காக களவழி நாடாழ்வான்‌ .... இப்படிக்கு ்‌. செழியதரையன்‌ 


எழுத்து . . . . யில்‌ ஸமிவாவாய;ஏன்‌ விஜாயரன்‌ உய்யவந்தானான 
௨ஈஷவன ஆ வாயத-₹ஸ2 லெவெ௨ 


. களுக்கு இ... 
டன எழுத்து இப்படிக்கு ... 


முத... திர. 


300 


த. தர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 193 /2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ ; மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி, 17-ஆம்‌ ! 
ஊர்‌ : குன்னத்தூர்‌ \ நூற்றாண்டு 
்‌ ந்தியக்‌ கல்வெட்டு 
மொழி : தமிழ்‌ ட ல்க ர 227/1964-05 : 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : ற 
அரசு ன 
ன்ன ல ஊர்க்‌ கல்வெட்டு 1 6 
எண்‌ 
] 
இடம்‌ கோயிலுக்கு அருகில்‌ கிடக்கும்‌ தனிக்கல்‌ 


குறிப்புரை : குன்னத்தூரிலிருந்த குளம்‌ ஒன்றினை குன்னத்தூர்‌ மக்கள்‌ ஒன்றிணைந்து பராமரிக்க 


மேற்கொண்ட நடவடிக்கையினை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. கல்லின்‌ நாற்‌ 
புறமும்‌ எழுதப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 

1. சறுவசி 10. மதித்து 

2, த்தி 11. குடுத்த 

3. காத்திை 12. சீவிதப்பண 
4. க மீ ௨௰௨ 13, மு மாசத்தில்‌ 
5, குன்ன 14. ஒரு கட்டும்‌ 
6. த்தூ[ர்‌]அசே 45, மீ” ய குறுணி 
7, சமாஹா 16, யும்‌ த்து 
6. சனங்க 17. க்கு இகுள 
9. ளும்‌ குடி 18. த்திலே போ 


301 


டாட்டு வரு 

. வாராகவும்‌ 
இந்த தன்‌ 
. மத்துக்கு 

‘ விகாதம்ப 
. ன பேர்‌ 

உ கங்ை 

, க கரையில்‌ 
. காராம்‌ பசு 


. வையம்‌ மா 


30. தா பிதாை 
31. வ கொண்‌ 
39. ண தே 
338. £ சத்தி 
94, லே பே 
35, ர வாரா 
36, கவும்‌ : 
37. ஆகாச 
38. வாணி 
39, பூமா ே 


40. [த]வி. சா, 


302 . 


த. நர. அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 194 / 2003 


மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : — 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு: கி.பி. 1507 
ஊர்‌ : குன்னத்தூர்‌ தட ப 
இந்தியக்‌ கல்வெட்டு | 298/1964-65 
மொழி : தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து; தமிழ்‌ முன்‌ பதிப்பு : = 
அரசு : வாணரதிராயர்‌ ஊர்க்‌ கல்வெட்டு | 
டம்‌ ள்‌ எண்‌ ப்‌ 
மன்னன்‌ : சுந்தரத்தோள்‌ மாவலி ] 
வாணாதிராயன்‌ 
இடம்‌ : குன்னத்தூர்‌ புதூர்‌ கொல்லன்பட்டறை அருகிலுள்ள தனிக்கல்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு, - சுந்தரத்தோள்‌ மாவலிவாணாதிராயரின்‌ சிறப்புப்‌ 
பெயர்களான பூபாலகோபாலன்‌, புவனேகவீரன்‌, சமரகோலாகலன்‌ போன்றவை 
காணப்படுகின்றன, 
கல்வெட்டு : 
1. சுந்தரத்‌ தோள்‌ மா ட்‌ 
2. வலிவாணாதராயர்‌ 
3. வரதுவி இராச்சியம்‌ 
4, பண்ணியருளா நின்ற 
5. சகாத்தம்‌ ௯சர௯ மே 


6, [ல்‌] செல்லா நி . 


7... வலா 

8. ல கோபால லுஃவநே 
ணில்‌ பம அடத்‌ 

10 ப ட்டா 

த அடல்‌ டத கன்‌ சமர 
12. கோலாகலன்‌ ஸ்ரீம 
19. துவி...., 


303 


கு. நர, அ. சதெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 195 / 2003 


மாவட்டம்‌ : மதுரை - ஆட்சி ஆண்டு : 15. ட கப்பல்‌ 
வட்டம்‌ மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : , கி.பி. 13-ஆம்‌ 
ஊர்‌ : செங்கோட்டை. தி தாற்றாண்டு 
த்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
மொழி : ர்‌ தமிழ்‌ ஆண்டு அறிக்கை 904/1960 ்‌ 
எழுத்து : தமிழ்‌ ்‌... . முன்‌ பதிப்பு: அ 
அரசு: பிற்காலப்‌ பாண்டியர்‌ . 
மன்னன்‌ : குலசேகரன்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ 1 
எண்‌ 
J 
இடம்‌ : கோட்டைப்‌ புஞ்சைத்‌ திடலில்‌ உள்ள 'தனிக்கல்‌. 
குறிப்புரை : துண்டுக்கல்வெட்டு. ஸ்ரீராமவிண்ணகரம்‌ என்ற வைணவ ஆலயத்திற்கு வழங்கப்‌ 


பட்டிருந்த நிலம்‌ பற்றியதாக இருக்கலாம்‌. இராசநம்பி, சைவனான இராசசிங்க 
மூவேந்த (வேளான்‌) என்ற பெயர்கள்‌ காணப்படுகின்‌ றன. 


கல்வெட்டு : 

அ. 1. ன பொற்பயத்திருப்ப . . . . ந்‌ 
ந கடன்‌ திகழ வினையும்‌ ன பட அடல்‌ சத 
ப 3. கள்‌ ஸ்ரீகுலசேகரதேவற்கு யாண்டு ௰ட வது 
4, ல்‌ வயல்‌ ஸ்ரீராம விண்ணகர எம்பெருமான்‌ 
5. வ்வூர்‌ இராநம்பி சைவனான இரர்ச்கிங்க மூவேந்த .. . 
6. றுக்குங்‌ கோலால்‌ . . . மாநிலம்‌ ஒருப . . . 

ஆ. 1. முந்திரிகை ஏற்ற சுருக்கமும்‌ பட எப்‌ 
2. விற்று மேணோக்கிய மரமுங்கீ . . ... 


304 


உ ர ௬ மே ஜீ 4 


. காணி முந்திரிகைக்கும்‌ விலை நிச்சயித்‌ , . .. 


பிரமாணம்‌ பண்ணிக்‌ குடுத்தேன்‌, . . 


7 இப்படிக்கிவை ன்‌ பட்டாலகன்‌ . . . 
ன்‌ சயிஞ்ஞைக்குச்‌ சயிஞ[ஞை] மாட்டெ . 
. னகன்‌ எழுத்து இவர்கள்‌ சொல்ல ௭... 

. இந்நிலம்‌ மாகாணி . . . 


. கோலால்‌ . . இரண்‌... 


நிலம்‌ காணி ன்‌ அ பலப்‌ 


ண்டு விற்று விலை. . . 
.பட்டாலகன்‌ .. . 

. மூவேந்தவேளான்‌ . . . 
7, 


[தை] பண்டு . . . 


305 


த்‌. நர, அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : மதுரை : 
வட்டம்‌ : மதுரை வடக்கு 
ஊர்‌ : சக்குடி 
மொழி; தமிழ்‌ 
எழுத்து: தமிழ்‌ 
அரசு : — 
மன்னன்‌ : ௨ 
இடம்‌ : 
குறிப்புரை 
கல்வெட்டு 
மலைபடு 2-ம்‌ தய 
2. [செக்கு]வார்‌ தருவு . . . 


3. 


4, [த்த அ]த்தன்னைப்‌ பார்ப.. 


5, 


தொடர்‌ எண்‌ ; 196/2003 


" ஆட்சி ஆண்டு : 
வரலாற்று ஆண்டு ; 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு : 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


சிவன்‌ கோயில்‌ முன்பு ஈடப்பட்ட கல்‌, 


கி.பி. 18-ஆம்‌ 


ட 1 


நூற்றாண்டு 


:  துண்டுக்கல்வெட்டு. ஏதோ ஒரு கொடை பற்றியும்‌ அதை அழிபவரடையும்‌ தீமை 
பற்றியும்‌ குறிப்பிடுவதாக இருக்கலாம்‌, 


லை மேலே இது .. . 


[ச்சிலையைக்‌ ரல்‌ 


6. [த்த]. . . [ந]டப்பான்‌ அடு... 


ஷ்‌ 


. [னுக்கறமி] . . . 


306 


307 


நர. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ ; 194/ 2003 
மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு 2 — : 
வட்டம்‌ : மதுரை வடக்கு வரலாற்று ஆண்டு : கி.பி, 1549 | 
g , . (சகம்‌ 1371) 
கர்‌ புளியங்குளம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
3 298/1956 
மொழி: தமிழ்‌ ஆண்டு அறிக்கை 
எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு : — 
அரசு வாணரதிராயர்‌ ஊர்க்‌ கல்வெட்டு \ 
எண்‌ த ர 
மன்னன்‌ : திருமாலிருஞ்சோலை நின்றான்‌ J 
மாவலி வாணாதிராயன்‌ 
இடம்‌ :. சாலையின்‌ ஒரத்தில்‌ நடப்பட்ட தனிக்கல்‌, 
குறிப்பிரை : புளியங்குளத்தில்‌ “அப்பன்‌ திருவேங்கடநாதன்‌ மடம்‌ என்ற ஒரு மடமிருந்தது, 
அம்மடத்திலிருந்த தலைவருக்கும்‌ சீடருக்கும்‌ “மடப்புறமாக';5 இறையிலியாகப்‌ 
புளியங்குளம்‌, கும்மங்குளம்‌ ஆகிய ஊக்களிலிருந்து நிலங்கள்‌ வழங்கப்பட்டிருந்ததை 
இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டில்‌ திருமாலிருஞ்சோலை நின்றான்‌ 
மாவலிவாணாதிராயருடைய விருதுப்பெயர்கள்‌ குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்லின்‌ 
நாற்புறமும்‌ எழுத்துக்கள்‌ எழுதப்பட்டுள்ளன. சக்கரம்‌, பூர்ணகுமாம்‌, கெளபீனத்‌ 
தண்டம்‌ ஆகியவை வரிப்படங்களாக உள்ளன. ! 
கல்வெட்டு : 
பக்கம்‌ 1 
1. .. ww 7. வ வக்ஷத்து திதி 
2. காத்த ௩ 8. யெயுடி சோ£வா 
3. எ௰கன்‌ மேல்‌ 9. ரமும்‌ பெற்ற ஆயி 
i 
4, செல்லா நின்ற 10. லியத்து நாள்‌ 
5. ஸாாக்கில வருஷ 11. ஸ்ரீூஓ மூவரா ்‌ 
6. ஆனி மீ” ௨௰எ ௨௦ 12. யர்‌ கண்டன்‌ ( 


19. 
14. 
15. 
16. 
17. 
18. 
19. 
20. 
21. 


30. 
31. 
32, 
33, 
34. 
35, 
36. 
37, 
38. 
39, 
40. 
41. 
42, 
43. 
44, 
45, 


இராசமீசுரகண்‌ 
டன்‌ மதியா(ந) 
த மன்னர்‌ வா 
ளஞ்‌ சமர கோ 


லாகலன்‌ 


அழகர்‌ சரணா 


லையன்‌ இ[டங்‌]6 


கடுத்த திருவா 
ளர்‌ சீ பாதபந்த 


[சஉடியாசி 
ஸ்ரீஸ$ . . 
மடப்புறம , 
ரகக்‌ குடுத்‌ 
௧88 பம. 
ாஸமபட்‌ 
டையம்‌ ௮ 
ப்பத்‌ திரு 
வேங்கட 
நாதந்‌ ம 
டத்தில்‌ 
எழுந்த 
ருளியிரு 
க்ப்‌ ௨-௫ 
ூ.கு,ம,ஹ 


டச்‌ 
பிஷ்‌ 


308 


டன்‌ வேதியர்‌ திரி[உ] 
ட லன்‌ வீரகஞ்‌ 

. சுகன்‌ திருமாலி 

. ருஞ்சோலை நின்‌ 

. றான்‌ மாவாழி வா 
. ணாத ராயர்‌ ஆன 
. உறங்கா வில்லி 

. உாஸந்்‌ ஹிமணதீ 


2 


ப்‌ 
. ஓ௫[ஸ்ரீ] 


யாதா 


[கெ] 
௨ரஹ்டு 

. [வகுட்டா] 
. இலய௦த . 


. க்ஷ்ஷ.கபம 


பக்கம்‌ 

.. கும்மங்குள 67 
௨ ம்புளியங்‌ குளம்‌ 68 
. மடபுறம்‌ ஆக 69 
விட்ட அள[வு*] 70 
க்கு இம்மறியா 71 
. தியிலே கும்‌[ம] 72 
பக்கம்‌ 

மறை பர 82. 

ப்பும்‌ குள 83. 

ப்பரப்பும்‌ 84. 

உட்பட 85 

[ஸூ] வரா 86 

ஸிகளுகு 87. 

வோ 88 

கி.சதவரை 89 

. ஆக 90. 


309 


9 


௨ங்குளமும்‌ புளி 
௨யங்‌ குளமும்‌ 
. பெருநான்‌ 
. கல்லைகுட்‌ 
ப்பட்ட நஞ்செ 


௨ய்‌ புன்செய்‌ [மன த] 


4 


சொல்லடைவு 


்‌ (எண்கள்‌ பக்கங்களின்‌ எண்கள்‌) 


அ 
அகத்திக்குளம்‌ 145, 148 
அகத்தீசுவரமுடைய 

நாயனார்‌ 146 
அகநாழிகையார்‌ 288. 
அச்சணந்தி 124, 208, 248 
அச்சு ச 20, 21, 95, 96, 97 

65, 84, 120, 145, 
146, 148, 150, 279 . 
 அச்சுவரி 120 
அஞ்சாத பெருமாள்‌ 47 
அஞ்சு மேனி திரமம்‌ 183 
அடிகள்‌ அரியாநாந 
காடு வெட்டி 177 

அடுக்களைப்புறம்‌ 5, 8, 11, 262 
அண்டனாடு 270 
அணிஞ்சான்‌ பெருமாள்‌ 119 
அணுக்கர்‌ 216 
அதிகைமான்‌ தேவன்‌ 97 
அதிபத்த நாயனார்‌ 42 
அதியமழகிய நாடாழ்வான்‌ 148 


அந்தராயம்‌ 2, 4, 8, 10, 18, 
92, 36, 39, 65, 70 
75, 82, 83, 88, 106, 
107. 110, 142, 144 
.154, 162, 170, 183 
184, 225, 228, 243, 
278, 289 

அப்பனுழன்‌ 101 

அப்பாலும்‌ அடிசார்ந்தார்‌ 43 

அப்பூதி நாயனார்‌ 42 

அபிமான பூசனத்‌ தெரிஞ்ச 

கைக்கோளர்‌ 92 


310 


அபிமான மேருச்‌ 


சதுர்வேதிமங்கலம்‌ 187, 194 

அரசபிள்ளையான 

சக்ரவத்தியள்‌ 9 
அரசு கண்டராமன்‌ 151 
அரசு சதிரனான 

பல்லவராயன்‌ 152 
அரசு பல்லவனான 

சேநாவரையன்‌ 99. 
அரியரி புத்தரன்‌ 287 


அரிவாட்டாயி னாயனார்‌ 41 
அரையன்‌ ஏறுதிருவுடை 
யானான மாதவராயன்‌ 152. 
அரையாண்டார்‌ குடி 31 
அம்பலத்தாடி நல்லூர்‌ 96 


அம்மாகுடி 31 
அம்மாண்டி ஏரி 103 
அம்மான்‌ 18. 
அமுதமளித்த பெருமாள்‌ 282 
அமுதனேரி 143, 144 
அமுதுபடி 1, 2, 8, 99, 86, 
. 108,191, 228 
அழகப்பெருமாள்‌ 135, 186, 187 
்‌ அழகப்‌ பெருமாள்‌ ்‌ 
விண்ணகரம்‌ 132 
அழகர்‌ திருவிடையாட்டம்‌ 198 
அழகன்னான விச்சாதிர 
மூவேந்த வேளான்‌ 189 
அழகிய சோளீஸ்வர 
முடையார்‌ 143, 150 
அழகிய நாடாழ்வான்‌ 115 
அழகிய பாண்டி யபுரம்‌ 107 


அழகிய பாண்டிய 
பிரமாதிராயர்‌ 
அளகை மானகர்‌ 
அற்பசி விஷு 
அறுநூற்றுவனேரி 
அன்றாடு நற்காசு 


ஆ 


ஆகாசவாணி 

ஆசுவிகம்‌ 

ஆதிசண்டேவரர்‌ 

ஆமணக்கு 

ஆய்க்குடியான அழகிய 
பாண்டிய நல்லூர்‌ 

ஆயிரத்தயிநூற்றுவச்‌ 
சதுர்வேதிமங்கலம்‌ 

ஆயில்யம்‌ 

ஆரண்யன்‌ தொழும்‌ 
பிச்சன்‌ 

ஆரணந்தொழநின்றான்‌ 

ஆட்டைவட்டம்‌ 

ஆடிக்குறுவை 

ஆலால சுந்தரன்‌ 

ஆலோடுபட்டான்‌ குமார 
பவித்திரச்சதுர்வேதி 

மங்கலம்‌ 

ஆள்கொண்டான்‌ 
அம்பலக்கூத்தன்‌ 

ஆளப்பிறந்த சோழ 
சதுர்வேதிமங்கலம்‌ 

ஆளமஞ்சி 

ஆற்றூர்‌ 

ஆனந்தூரான அவிதாய 
௬ுந்தரநல்லூர்‌ 

ஆனாயனார்‌ 

ஆனி 

ஆனைச்சாலை 


இ 


இஞ்சி 
இடங்கழி நாயினார்‌ 


இடைமனை 


289 


இடைவரி 


இயக்கர்‌ 

இயற்புகை நாயனார்‌ 
இரதகாரோம்‌ 
இராகுத்தர்‌ 
இராசகண்டகோபாலன்‌ 


இராசகண்டகோபாலதேவர்‌ 


இராசகண்டகோபால 


பஹ ராயன்‌ 
1, மாயிர 


இராசாண்டான்‌ மாணிக்க 


சொக்கனார்‌ 
இராசநாராயணதேவன்‌ 
இராசமீசுரகண்டன்‌ 
இராஜவல்லிபுரம்‌ 
இரசசி 
இராசி பணம்‌ 
இராசேந்திரசோழ 

சதுர்வேதிமங்கலம்‌ 
இராஜே௩,சோழ 

சதுர்வேதிமங்கலம்‌ 
இராமானுஜ ஜீயர்‌ 
இராயூர்‌ 
இருவாரவட்டத்து 
இலஞ்சி 
இலாஞ்சினை 
இலாஞ்சினைப்பேறு 


இலுப்பை 

இலுப்பைக்குடி 

இவகுன்றத்தூர்‌ 

இறங்கல்‌ மீட்டபெருமாள்‌ 
நல்லூர்‌ 

இறையிலி 


இனவரி 


311 


2, 4, 45, 51, 58 
110, 148, 144, 
151, 152, 154, 
150, 226,228, 243 
249 

42 

207 

27 

1,2, 16 

92 


17 


46, 165, 168, 190 


99, 188 

227 

212 

283 

202 

45 

9,4, 59, 84, 143: 
144, 150, 151, 152, 
228, 243 

291 

3, 62, 63 

244 


6 

92, 95, 99, 69, 112, 
199, 148, 151, 152, 
154, 191, 224, 225, 
243, 264, 275 

2, 4, 45,51, 53, 62; 
110. 143, 144, 150, 
151, 152, 154, 226, 
229, 243 


[27 
ஈழக்காசு 258 
ஈழத்தரையன்‌ . 195 
ஈழம்புஞ்சை 110 

உ 
உச்சி சந்தி 112 
உட்கிடை 1 
உண்ணிலம்‌ 30 
உத்தமசோழ விண்ணகரெம்‌ 

பெருமான்‌ 182, 188 
உத்தம்சோழவிழுப்பரையன்‌236 
உத்துசவி, 255 
உதா நம்‌ பற்று 5 
உபயம்‌ 281 
உபாதி 297 
உருத்திரபசுபதி நாயனார்‌ 42 
உலகளந்தசோழபுரப்‌ 

பேரேரி 9, 38 
உலகுடையநாயனார்‌ 21 
உழக்குடி 70 
உழவுகரை 294 
உழவுந்தவுந்து. 2 

ஒள 
ஊர்கணக்கு 45 
ஊர்‌ வினியோகம்‌ 8 

ஏ 
எங்குமா நின்றான்‌ 15 
எச்சோறு 16, 62, 238 
எடுத்துக்காட்டும்‌ பச்சை 16, 62, 238 
எமயவன்‌ 202 
எழும்போதழகியான்‌ 15 

ஏ 
எறிபத்த நாயனார்‌ 41 
ஏந்தல்கள்‌ 217 
ஏம்பல்‌ 156, 159, 300 


ஏம்பலான வலையங்குடி 
ஏயகோ நாயனார்‌ 
ஏர்வரி 

ஏரிமீன்‌ பாட்டம்‌: 

ஏழக மீகாமன்‌ 

ஏழை ஊர்‌ 
ஏற்றச்சுருக்கம்‌ 

ஏனாதி நாயனார்‌ 
ஏனாதிமங்கலம்‌ 


01] 


ஐய்யப்பொழிலீளரமுடைய 


நாயனார்‌ 
ஓ 


ஒட்டுட்டி 
ஒடுங்காக்குடி 
ஒருவாறுணர்ந்தான்‌ 
ஒற்றியும்‌ விலையும்‌ 


க 


கங்காணி 
கங்கைநாராயணச்‌ 
ச௯,வத்திகள்‌ 
க ம 
கடமை 


கடை கூட்டிலக்கை 
கடைமை 

கண்காணி செய்வார்‌ 
கண்டக நாடாழ்வான்‌ 
கண்ணடை 
கண்ணப்ப நாயனார்‌ 
கண்டிய நாயனார்‌ 
கண்ணிறைத்தான்‌ 
கண்மாளர்‌ 

கண்வாய்‌ 

கணக்கு 

கணநாத நாயனார்‌. 
கணம்புல்லநாயனார்‌ 


312 


63 
42 

2, 4, 45, 51, 53, 243 
226, 228, 243 


184, 185 


174, 175 


295 


109 
2, 4, 10, 14, 18, 36, 
39, 82, 83, 88, 110, 
121, 142, 156, 162, 
170, 183, 184, 191, 
225, 228, 243, 289 
14, 44, 53 


கப்பலூருடையான்‌ . 108 


கரணத்தான்‌ 55 
கருங்குளம்‌ 1,3 
கரும்பு 14 
கலவேழ்விநாடு 215, 217 
கலிக்கம்ப நாயனார்‌ 42 
கலிகுடி யான திருமறை 

நாயக நல்லூர்‌ 176 
கலிங்கு 118, 125 
கலிதீரன்‌ 180 
கலிபொன்‌ 215 
கலியநாயனார்‌ 43 
கலியனேரி 258 
கழிகோட்டை 192, 195 
கழச்சிங்க நாயனார்‌ 43 
களக்குடி வைஉன்‌ 254 
களந்தைக்கோன்‌ நாயனார்‌ 42 
களவழி 83 
களவழி நாடாழ்வான்‌ 62, 68, 69, 183, 

186, 188, 293 

களவழி நாடன்‌ ஆறு 83 
களவழி நாடு 1,3, 36 
கற்குழியான வேதநாயக 

நல்லூர்‌ 55 
கறவைக்‌ காணிக்கை 217 

கர 
காகூத்தாண்டாள்‌ 18 
கரங்கேயராயன்‌ 69 
காஞ்சிரங்கோட்டை 79 
காஞையிருக்கை 70 
காடவர்கோ நாயனார்‌ 43 
காணிக்கை 51 
காத்திகைப்பச்சை 51, 55 
காப்புக்கால்‌ நல்லூர்‌ 183 
காமர்மங்கலம்‌ 59 
கார்த்திகை பணம்‌ 45 
கார்த்திகை பொன்‌ 14 
காரணவர்‌ . 3, 224 


காராங்கிழமை 
காராண்கிமமை 


காராண்மை 


காரிகுழிக்குளம்‌ 
காரிநாயனார்‌ 

காரிய ஆராட்சி 
காரியத்துக்கு கடவார்‌ 


காரியவாராட்சி 


காரியாராஆச்சி 
காரும்‌ மருவும்‌ 
காரைக்காலம்மை 
காரோணம்‌ . 
காலகண்ட தேவன்‌ 
காலிங்கராசன்‌ 
காலிங்கராயர்‌ 
காலிங்கராயன்‌ 
காலிங்கராயன்‌ ஓலை 
காலிங்கராயன்‌ பீடம்‌ 
காலிங்கராஜன்‌ 
காவனூர்‌ 
காளமேகம்‌ 
காளமேகமான 
காங்கேயன்‌ 


காளமேக வியன்‌ 
7 


எதிராஜ உன்‌ 


கா௨சேவே வள்ளி 


156 
7,157,159 ! 
10, 36, 36, 48, (52, 
68, 70, 82, 107, 108, 
115, 133, 142, 143, 
150, 162, 183, 228, 
234, 239, 241, 267: 
294 

87 

43 

144 

216 

2, 4, 143, 150, 226, 
228, 243, 279 
120 

13 

42 

279 

25, 68, 70 

20 ; 
271 

2, 35, 52, 144, 243, 
165 

262 

19 

283, 293 

224 


229 


217 


கொண்ட பெருமாள்‌ 214 


க்‌ 


கீழ்‌ இரணிய முட்டம்‌ 
கீழ்‌ வேம்ப நாடு 
கீழிரணிய முட்டம்‌ 
கீழை நெட்டூரான 


313 


280 | 
83 1 
191, 260, 275 | 


கீர்த்தி விசரலயநல்லூர்‌ 264 


2 
குங்குலிய நாயனார்‌ 41 
குச்சைகேனி a 
£ ன மலையுடையான்‌ 45 
குடிக்கடமை 215, 217 
குடிக்காடு 141 
குடிகள்‌ 61, 110, 13 

290 . 

குடிநீங்கா இறையிலி 13 
குடிநீங்கா தேவதானம்‌ 32 
குடிப்பற்று - 39 
குடிமை ' .' 156 . . 
குதிரைப்பந்தி 14, 55 
குப்பையர்‌ 85 
கும்மங்குளம்‌ 309 
குருகுலரா யன்‌ 189 
குலசேகரதேவர்‌ 21,151,222 
குலசேகரப்பிச்சன்‌ 16 
குலசேகரவாணாதி 

[ராயர்‌] 48 
குலசேகரவேதப்‌ ர 

பெருமாள்‌ 46 
குலசேகரன்‌ ., 240, 263 
குலபெழர தேவர்‌ 18 . ' 
குலபெயர, தெவ்ர்‌ 208 
குலசேகரபுரம்‌ 182 
குலை 9 


குலைச்சிறை நாயனார்‌ 42 
குலைசேசுரன்‌ களவழி 


நாடாழ்வான்‌ 187 
குலசேகர நாடாழ்வான்‌ 163 
குலைசேகரன்‌ மடிகை 186 


குலை சேக ரப, ஹாயிரா யன்‌ 17 


குழைஞ்சான்‌ அரசனான 
ஆலால சுந்தர நங்கை 34 


,குளக்கீழ்‌ ம்‌ 283. 
குளப்பரப்பு. i 309 . 
, குளவிலை ம்‌ 38 
குளவிலைப்‌ பிரமாணம்‌ 116 
குறிஞ்சிலிக்குடியான 
திருமறைநாயக னல்லூர்‌ 39. . 
குன்றத்தூர்‌ 283 
ச கட்‌ ம 8 ச ல்‌ 
, கூட்டாம்‌ புளி - 11, 13 
.கூற்றரிசி I 62 
. கூற்றிலக்கை 44 
கூறியூர்ச்‌ செட்டி 39 
கே 


.கேசவன்‌ ஆதித்தனான 


விசையராயன்‌ 92. 
கை 
கைக்கோளர்‌ 
261 
கொ 
கொங்கராயன்‌ 187 
கொழுந்து 14 
கொஜற்றிலக்கை . 14, 228 
கோ 
கோட்டை 32 
கோடனேரி 117 
கோனேரின்மை 
கொண்டான்‌. 20 
கோயில்‌ தானத்தார்‌ 19 


கோயில்‌ வினியோகம்‌ 8 


314 


99, 116, 141, 


கோவணவர்‌' 


கோவூருடையான்‌ 
ஆள்வான்‌ 

கோல்‌ குடிதாங்கி 

கோலால்‌ 

கோல்புலி நாயனார்‌ 


கோனாட்டு வேளான்‌ 


சக்கரக்கையன்‌ 

சக்கரபாணி நல்லூர்‌ 

சட்டுவம்‌ 

சட்டை மேலாழியாண்டார்‌ 

சட்டை உடையானான 
சேகல்‌ வல்லவத்‌ 
தட்டான்‌ 

சடகோபன்‌ பாட்டு 

சடைகோபன்‌ 

சண்டேசுர: நாயனார்‌ 

சத்தி நாயனார்‌ 

சத்தி முகம்‌ 

சந்தி 

சந்திவிக்கிரகப்பேறு 


சந்துவிக்கிறகம்‌ 
சந்ரலேகை 
சந்தியா தீபம்‌ 
சயிஞ்ஞை 
சமரகோலாகலன்‌ 


7, 12, 25, 34, 
216, 218, 262, 
263, 264 


198 
87, 183, 193 
165 


43 
115 


31 
32, 51, 55, 110, 


117, 143, 144, 


152, 193, 226, 
228, 243 

14, 150 

92 

57 

305 

308 


சா 


சாக்கிய நாயனார்‌ 


சாத்துப்படி 


சாத்தமங்கலம்‌ 
சாத்தமங்கல முடையான்‌ 


சாதனம்‌ 
சி 


சின்னமூதிகுளம்‌ 
சிங்கபிரான்‌ தாதன்‌ 
சிங்கபெருமாள்‌ 
சிங்கன்‌ கொற்றி 
சிங்கார ராவுத்தர்‌ 
சித்தத்தை சிவன்பாலே 
வைத்தார்‌ 
சிரிகாச்சிய ஆராய்வார்‌ 
சிரிகுலசேகரதேதவர்‌ 
சில்பாச்சாரியன்‌ 
சில்பெருவரி 
சிற்பாசாரியன்‌ 
சிற்றம்மாகுடி 
சிறப்புலி நாயனார்‌ 
சிறுகுளமான வேத நாயக 
நல்லூர்‌ 
சிறுகுன்றத்தூர்‌ 
சிறுத்தொண்டநாயனார்‌ 
சிறுமாநாடாள்வான்‌ 
சிறுவாலியூர்‌ 
சிறுவேலங்குடி 
சிவதிராக்குடியான 


வேதநாயக நல்லூர்‌ 
சிவபாதக்கோன்‌ 


315 


42 

1, 2, 3, 33, 36 
108, 191, 228 
270 

26 


22 


16 
263 


261, 262 
27 
128 


43 


259 
103 
20 


142 
37 97 
31 
42 


37 

224 
42 
204, 205 
272, 275 
70 


28 


> 


| 
| 


ந்‌ 


1 
+ 
ப 
4 
[ 


4 


சீகாரியம்‌ செய்வார்‌ 

சீடன்‌. 

சீபாதம்‌ தாங்கும்‌. 
ஆண்டார்‌ 

'சீவல்லப நாடாழ்வான்‌ 

சீவலபுரம்‌ 


ச 


சுந்தரபாண்டியன்‌ 


சுந்தாபாண்டிய தேவர்‌ 


சுந்தரபாண்டியப்‌ 
்‌.... பிரமாதராயன்‌ 

சுந்தரநாயினார்‌ 

சுந்தரபாண்டியக்‌ 
களப்பாளராயன்‌ 

சுந்தரபாண்டிய 
பல்லவராயன்‌ 

சுந்தரபாண்டிய 
அதியமானார்‌ 


சுந்தரபாண்டிய பிச்சாசாரி 


சேந்தன்‌ 
சுந்தரச்சோழ 
பாண்டி யச்சேரி 


சுத்தரசோழ பாண்டியச்‌ 
சதுர்வேதி மங்கலம்‌ 
சுந்தரபாண்டிய மூவேந்த 


வேளான்‌ 
சுந்தரபாண்டியச்‌ 

சோழகோனார்‌ 
சுந்தரபாண்டிய 

காலிங்கராயன்‌ 
சுந்தரத்தோளன்‌ 


சுந்தரபாண்டியன்‌ கோல்‌ 


275 

40, 84, $8, 89, 
99, 171, 193, 
198, 260 


10: 
42 


94 

94 

150 

180 

184, 187, 194, 
184 

189 

227 

ம்‌ 273 


29 
83 


சுரநாடு 
சுரனாடு - 
சுரபிநாடு 


சுரபி நாட்டு வேளான்‌ 
சூ 


சூரகண்டன்‌ குளம்‌ 
சூலத்தாபனம்‌ 
சூளும்‌ அரசர்‌ கண்டன்‌ 


சூழுமரசர்‌ கண்டன்‌ 


சூழுமரைசர்‌ கண்டன்‌ 


்‌ சூற்றியக்‌ கிரணம்‌ 


செ 


. செக்லெற 


்‌ செக்கு 


செக்குஇறை 


. செக்குவரி 


செங்கழுநீர்‌ 
செங்கழுநீர்பயிர்‌ 
செங்குளமான நாற்பத்‌ 


105, 144, 150 
116, 155 

114, 140, 141, 
145, 147, 169 : 
109 


16 

49 

115, 137, 140, 
141 


147 


114, 133 
259 


2, 99, 96, 44, 
51, 110, 143, 
144, 150, 152, 
157, 226, 228, 
243 
101 


14 


தெண்ணரயிர நல்லூர்‌ 50 


_செங்குடி நாடு 


செம்‌ பிநாடு 
செம்பில்‌ நாடு 


செம்பியன்‌ பல்லவரையன்‌ 


செயமுடையான்‌ விரதமுடிச்‌ 


சானான பராக்கிரம 
சிங்கதேவன்‌ 
செய்ய பெருமாள்‌ 


316 


224 

39 

69 : 

99, 172, 1738 


99 
3 


செருதுணை 43 


செருவத்தூர்‌ 152 
செழுவத்தூருடையான்‌ 
அரையன்‌:உ.தையஞ்‌ 
செய்தான்‌ 82 
சே 
சேதா நாடாழ்வான்‌ 146 
சேந்தமங்கலம்‌ 183 
சேமத்தராயகுடி 91 
சேமாழ்வாள்‌ 16 
சேரமானாயனார்‌ 42 
சேரனைவென்றான்‌ I 
பந்தல்‌ 962 
சேரனை வென்றான்‌ சந்தி 31 
சேவகப்பெருமாள்‌ 96 
சேனாபதிபெருமாள்‌ 77 
சேனாபதி ஆழ்வார்‌ 229 
சோர 


சோதியான சுந்தரபாண்டிய 


பிச்சன்‌ ன 16 
சோமாசி நாயனார்‌ 42 
சோலைமலை . 211 
சோழ குலாந்தகன்‌ 183 
சோழகுலாந்தகச்‌ : I 

சருப்பேதிமங்கலம்‌ 278 
சோழகோன்பிச்சன்‌ 15 
சோழபெருமானடிகள்‌ 297 
சோழமாதேவி 166 


சோனாடு கொண்ட. 


பெருமாள்‌ நல்லூர்‌ 20 


சிசாக்கனான வேதனாயகப்‌ 
பிச்சன்‌ 


தீ 


தச்சங்குடி 
தச்சனூர்‌ 
தச்சாசாரியன்‌ 
தச்சு தேவை 
தட்டளி பாட்டம்‌ 


தட்டார்‌ பாட்டம்‌ 


தட்டாலிப்‌ பாட்டம்‌ 


15 


68, 69 
89, 92 

291 

14 

143, 144, 154 
4, 14, 32,36, 
48, 57, 151, 
159, 170, 226, 
228, 243 

110 


தட்டொலி 2, 4,14, 36, 48, 
51, 226, 228, 
2435 

தடி 8, 16 

தண்டல்‌ 120 

தம்பிக்கு நல்லான்‌ 5 

தரவு ட 

தரவு கூலி 2. 8,10 

தருக்காகுடி த 115 

தளவாய்‌ நரசப்பஷீ? ~ 282 

தளையிடுவார்‌ 216 

தற்குறி 28 

தறி இறை 36, 110 

தறிக்கடமை 120, 215, 217 

தறியிறை 2, 14, 82, 86, 
44, 48, 51, 
142, 149, 144 
150, 152, 157, 

ட்‌ 226, 228, 243 
தறுக்காகுடி 121 


317 


தா டட ப்பட ட. டப... திருத்தோழ்மாலை: 272 


ர ள்‌ திருதத்தவனம்‌ 150, 151, 152, 
தாங்கி ஏரிகள்‌ 16 ப 165, 168, 210, 
தாசி 94 ன 212, 213 
தாமோதரமங்கலம்‌ 190 திருநந்தவனப்புறம்‌ 151, 152 
தாயாண்டார்‌ 18 _திரு தந்தவனப்புற 
தாலமஞ்சு .. 258 - இறையிலி 234 
தானத்தார்‌ 1 : திருநந்தாவிளக்கு 27 
திருநாமத்துக்காணி 116, 142 
கீ ள்‌ -..... திருநாவுக்கரசு நாயனார்‌ 42 
- திருநாளைப்போவார்‌ 42 
திரமம்‌ ்‌ 84, 106 திருநீற்றுத்‌ தொண்டன்‌ 34 
திரிசூலாபனம்‌ 94 திருநெல்வேலி 261 
கிரஉண்டி ஸ.ஆாவிகள்‌ 227 திருநோக்கழகியானான 
கி,உண்டி வானதாசிகள்‌ 242 தொண்டைமானார்‌ 210 
திருக்கண்ணபுரம்‌ 231 திருப்படிமாற்று 278 
திருக்காமக்கோட்ட திருப்பணி 224, 225, 242 
திருமாமடந்தை 118 திருப்பணிப்புறம்‌ 112 
திருக்காய்குடி 116, 118, 147, திருப்பள்ளி அறை 
148 நாச்சியார்‌ 173 
இருக்காக்குடி 114 திருப்பாடகப்பிச்சன்‌ த 
திருக்கானப்பேர்‌ கூற்றம்‌ 152 திருப்பிணையன்‌ மலை 203 
திருக்குறிப்புத்‌ தொண்டர்‌ 42 ... திருப்புகழூர்‌ 262 
திருக்கை வழக்கம்‌ 99 திருப்புத்தூர்‌ வேள்‌ கோவன்‌ 63 
திருக்கோடிசுர பபயர்‌ த பு ப திருப்புனவாசல்‌ 116 
திருக்கோடீசுவரர்‌ 145, 116 திருப்பூவணத்தன்‌ 5 
திருச்சிற்றம்பலமுடையான்‌ 64 திருப்பூவணமுடையார்‌ 9 
திருச்சூல்க்கல்‌ . 899,109, 104,  திரும்பூவணமுடையான்‌ 16, 39 
்‌ 105, 106, 120,  திருப்பூப்பலகை 71: 
157 - திருப்பேறு 33 
திருச்சூலத்‌ தாபனம்‌' 2, 36, 52, 110, திருப்பொதி 123 
பத, 117, 163 திருமந்திரவோலை 34 
திருசூலம்‌ நாட்டி 148. திருமறை நாயனார்‌ 27 
திருச்செந்நடை' 283 திருமறை நாயனார்‌ 


ஞ்‌ கோயில்‌ ்‌ 1,9 


318 


திருமாலிருஞ்சோலை 207 திருவேடகம்‌ 242 


திருமாலிருஞ்சோலை திரையலுரம்‌ தாடு 109 
தாதன்‌ 264 தூ 
திருமுகம்‌ 18, 20, 21 
திருமூத்தி நாயனார்‌ 42 துஞ்சலூருடையான்‌ 36, 94 
திருமூலநாயனார்‌ 72 துட்டுதேவை 14 
திருமேல்லாழி நாயனார்‌ 105 . துவராபதி தச்சன்‌ 105 
திருமேலழகிய பாண்டிய துவராபதி நாட்டுப்‌ பாக்குடி 107 
நாயனார்‌ 103 துவராபதி நாடு 118 
திருமேற்பூச்சு 33 துவராபதிச்தச்சன்‌ 106 
திருமோகூர்‌ 107, 224, 225, துவாரபதி வேளான்‌ 154 
227, 234 துழாய்க்குடி 239 
திருவந்திக்காப்பு 99 துறையூர்‌ 143 
திருவரத்தூர்‌ 87 துறையூற்குளம்‌ 144 
திருவாணை ஆசாரியன்‌ 6 தாமா 2 
திருவாதவூர்‌ 33 
திருவாதவூர்‌ பெருமாள்‌ 26 தெ 
திருவாபரணப்‌ பார்வை 9 
திருவாரூர்‌ பிறந்தார்‌ 43 தெங்கு 14 
திருவாழிஆழ்வார்‌ 191, 229, 230 தெய்வச்சிலையானான 
திருவாழிக்கல்லு 131, 136, 137, வீரபாக்கிரம 
191, 226, 228, சிங்கதேவன்‌ 107 
243 தென்கல்லக நாடு 182 
திருவானைமலை 258, 259, 260, தென்பறப்பு நாடு 1,7, 11, 15, 21, 
279, 280 27, 33, 34, 
திருவிடையாட்டம்‌ 48, 168, 242, 58, 107, 171, 
244, 261 193 
திருவிளக்குபட்டி 16 தென்னகங்கதேவன்‌ 34 
திருவுடையாட்டம்‌ 215, 217, 224, தென்களவழி நாடு 37, 89 
225, 228 
திருவெண்காடுடையான்‌ 125 தே 
திருவெள்ழ்ழறை 184 
திருவெள்ளறை .. 184, 188 தேவகன்மிகள்‌ 6, 31, 55, 60, 
திருவேங்கடநாதன்மடம்‌ 308 107 


319 


- தேவதான இறையிலி 


தேவதானம்‌ 

ல 
தேவரடியார்‌ 
தேவநல்லூர்‌ 
தேவன்காங்கே யள்‌ ்‌ 
தேனூர்‌ ல்‌ 


.தேன்படு பொது ... 
தொ 


தொட்டிய நாயக்கர்‌ 


தொண்டைமான்‌ 

ந த 
நக்கனேரி 
நத்தப்பச்சை Vt 
நம்கேழ்வி £3 


ta pT, 
நம்மோலை :* 6 
தமினந்தி நாயனார்‌ 


தரசிங்க ஆழ்வார்‌ கோயில்‌ 


நரசிங்க தேவர்‌ 0 
நரசிங்கப்பெருமாள்‌ த 


நரசிங்கப்‌ பெரும்‌ஈன்டிகள்‌ 


நரசிங்க மகாராயர்‌ 


நரசிங்க மங்கலம்‌ 


தரசிங்கமுனையலரய 


நர்ய்னர்ர்‌. ' - 
நலலணி ஆமூர்‌ -0: 


144, 168, 193, . : நல்ல பெருமாளான .- 
234, 279- - 

20, 21, 36, 37, 
39, 65, 78, 82, 


அண்ணன்‌ 


தமிழ்ப்பல்லவரையர்‌ 83 


920 


107, 111, 112, நா வ 
146, 191, 230, ன்‌ , 
234. ட்‌ நாககுறிச்சி 188 
55 ்‌ நாகமங்கலம்‌ 91 
39 நாகுடி ட 190 
39- ' நாச்சி ப 18 
242. £ நரட்டுக்கணக்கு 45 
298 நாடாழ்வான்‌ குடிகாடு 111 
நாயநார்‌ ட 
- தேவப்பெருமாள்‌ 10 
ர நாரஹிஹ ஆழ்வார்‌ 267 
77 £  நாலுகோட்டை 215, 217 
162, 270, 195, காலுபவ..ம்‌ ர்‌ ட்ட ~ 
நாள்புண்யன்‌ நாழிகை .5 7. ! 
_ நாளிடு விழுக்காடு 22: 
க. ந நாழிகை-பார்பார்‌ ஆ 
294: நாற்பத்தெண்ணா யிர 
அந்த்‌ அர பட்டன்‌ “* * - 94 
99.2. ன்‌ 
89... 3. நமே ப்‌ 
42 தி த 
279 நித்த நிமந்தம்‌' 2,3 
260 நின்றசீர்நெடுமாற : 
259 க ”.. நாயனார்‌. £' 43 
958. ௯% 0 ப ல்க 
284 நீ த்‌ 
248, 257, 280" ்‌. 
தீர்கோவை 83 
42 , நீலிரக்க நாயனார்‌. 42 
89, 171, 175, 178 த: டட 


நெ 


நெடுங்குளம்‌ 

நெரிஞ்சியான அழகிய 
பிள்ளைப்புறம்‌ 

நெல்வெளி 

நெல்‌ வேளூர்‌ 


பகவதியாழ்வார்‌ 
பச்சை 
பஞ்சவராயன்‌ 
பஞ்சுபீலி 


பகையனேரியான அழகப்‌ 
பெருமா நல்லூர்‌ 

பட்டாலகன்‌ 

படைக்காரணவர்‌ 


பணம்‌ 


பத்தராய்‌ பணிவார்‌ 

பதிணென்‌ விஷையம்‌ 

பதிபாத மூலப்பட்டுடைப்‌ 
பஞ்சாசாரியன்‌ 

பரமனையே பாடுவார்‌ 

பராக,8 பாண்டியதேவர்‌ 

பரிமேல்‌- வழகங்கன்‌ 

பரிவிராச்ஜகர்‌ 

பருத்தி 

பல்லவராயன்‌ 


51 


99 


201 
101 


234, 239, 240 
14 
115 


2, 4, 14, 43, 51, 


84, 110, 117, 
120, 143, 144, 
150, 151, 152, 
153, 226, 228, 
£243 


vai 
141 


305 

20, 36, 230 

53, 109, 178 
215, 217, 262 
43 


208 


13, 31, 53 
43 

5, 7, 11, 97 
149 


253 
14 


24, 52, 161 


பல்லவராயர்‌ அண்ணாழ்வி 31 


பல்லவரை யன்‌ 
பலா 
பலிசை 
பவித்ரமாணிக்கபுரம்‌ 
பழந்தீபராயன்‌ 
பழந்தேவதானம்‌ 
பழம்பொன்‌ 
பள்வரி 
பள்ளிக்குறிச்சி 
பள்ளிக்குறிச்சிகுளம்‌ 
பள்ளிச்சந்தம்‌ 
பள்ளித்தரையன்‌ 
பள்ளிப்பீடம்‌ 
பன்னாட்டான்கோட்டை 
பரம்பான திருநாரயண 
மங்கலம்‌ 
பனங்காட்டாங்குடி 
பனங்குளம்‌ 
பனைங்காட்டாங்குடி 
பனைங்காடிப்பற்று 


121 


பாக்குடி 
பாகனூர்க்கூ ற்றம்‌ 
பாசனம்‌ 
பாசி விலை 
பாண்டியப்பேரேரி 
பாண்டிமங்கல 
விசையரையன்‌ 
பாதிரிக்குடி 
பாதிரிக்குடியார்‌ 
பாதிரிக்குடியான 


236 


14 
258 


207 
24, 160 
48, 86 
12 

217 
20, 21 


- 83 


86 

123 

81 

186, 228 


198, 199 
62 

189, 187 
6 

18 


109, 109 
242 
225 
215,217 
234 


255 


18 
203 


ஐ.ந்நூற்றுவப்பெருந்தெரு 20% . 


பாரத்துவாஜ கோத்ரம்‌ 


321 


282 


யாணை ய ப வகைமை பால ட 


பி 


பிடிபாடு 
பிரமாணம்‌ 
பிரான்மலை : 
பிள்ளையார்‌ 


பிள்ளையா நாயனார்‌ 
பிள்ளையார்‌ நோன்பு 
யு 


புகழ்சோழ நாயனார்‌ 


புகழ்‌ துணை நாயனார்‌ 


புகழ்மங்கலம்‌ 


புகழியான ராசராசபுரம்‌ 


யுத்தக்கம்‌. 
யுரவுவரி நல்லூர்‌ 
புலியூர்‌ 

புலியூர்‌ வேளார்‌ 
புளிங்குடி 
புளியங்குளம்‌ 
புறக்கரம்பை நாடு 


ந்‌ ம 


ஆஞ்சுற்தி 
ஆத்தாழவு 
பூந்தோட்டம்‌ 
பூவாண்டார்யேம்பல்‌ 
பூவிடுவார்‌ 

பூவும்‌ அடியும்‌ 


பெ 


பெரியமடை 


2, 10, 16, 17, 21 
305 


43 
270 
109 
258 
264 
273 
159 
35 
309 
257 


பெருவழி 
பெருங்கருணை 


137 
160 


பெருங்கருணைப்‌ பெருமாள்‌ 157 


பெருங்காரைக்குடியான 


குடிதாங்கி நல்லூர்‌ 166 
பெருமண்‌ ' 270: 
பெருமண லூர்‌ 170 
பெருமிழலைக்‌ குறும்பனார்‌ 42 
பெருவழி 112 
பெருவேம்பற்றூர்‌ 249 

பே 
பேராதன்‌ 202 
பேரிகை 16 
'பேரேரிக்குளம்‌ 16 

யொ 
பொடியணிமார்பள்‌ 5 
பொய்யில்‌ 190 
பொய்யிலுடையான்‌ 187 
பொயிலுடையான்‌ 264 
பொற்கொடிவீரர்‌ 101 
பொற்கோடு. 203, 247 
பொன்‌. 225 
பொன்வரி . 8, 10, 14, 18 

- 23, 36, 45, 48 
110, 120, 142 
143, 144, 150 
152, 154, 191 
193, 228, 237, 
243, 262 
பொன்னமராபதி 273 


322 


மக்கள்‌ 
மக்கணாயன்‌ 
மக்கணாவன்‌ 
மக்கனாயினார்‌ 
மங்கலாதேவ்ப்‌ 


பல்லவதரையன்‌ 


மங்கலாதேவ்‌ நாடாழ்வான்‌ 


மங்கலாதேவ நல்லூரான்‌ 


மங்கலக்கோன்‌ பாஞ்சாலன்‌ 


மங்கலதேவ நாடாழ்வார்‌ 

மங்கலவாசல்‌ சேரி 

மஞ்சள்‌ * 

மஞ்சக்குடியுடையான்‌ 

மடப்புறம்‌ 

மடப்புற இறையிலி 

மண்டலீகர்‌ தேகம்மீர 
நல்லூர்‌ 

மதிராயகுடி 

மதிரை கொண்ட 
கோப்பரகேசரி 


மதுரை 


மதுரைக்‌ கோயில்‌ 

மதுரை மண்டலம்‌ 

மதுரோதய வளநாடு 

மயிலாடிகள்‌ 

மயேசுர கண்காணி 

மரவடை 

மருதூர்‌ 

மருதூருடையானருணிதி 
கலியன்‌ 


மலைக்குடி மலை 


148, 308 
146, 163 


70 
31 


257 


85, 141, 145, 
186, 281 


60, 168 
284 


60, 70 
186 


116 


215 
258 


258, 259 
165 


மலைக்குடி. நடுமலை 291 


மலைக்குடிமலை மேற்கோல்‌ 176 
மலைகுனிய நின்றானான 


காடுவெட்டி : 5 
மழவராயர்‌ 84 
மழவெட்டி 183 
மறக்கவுணாதான்‌ 15 
மனைப்பற்று 10 
மனைவரி 45 


மஹாவலுிவாணாதராயர்‌ 13 


மார 
மா 14 
மாசில்‌ 268 
மாடக்குளம்‌ 60, 141, 145, 
266 
மாடக்குளக்கீழ்‌ 46, 99, 168 
்‌ 207 


மாடக்குளக்கீழ்‌ மதுரை 99 
மாடக்குடையான்‌ சீராளன்‌ 125 


மாடமதுரை 207, 273 
மாடாபத்தியம்‌ 70 
மாணிக்க சொக்கனார்‌ 133 
மாநவீர மதுரை 269 
மார்கழி ஆதிரை 34 
மார்கழி திருநாள்‌ 296 
மாவடை 215 
மாவலிவாணாயிரா யன்‌ 35 
மாறன்னெஇனன்‌ 255 
மானக்கஞ்சாற நாயனார்‌ 41 
மானகுழி 217 
மானாபரண மங்கலம்‌ 211 
மாஹேமரக்‌ கண்காணி 38 


323 


மீ 


மீன்படுபள்ளம்‌ 298 
மீவைதரையன்‌ 70, 187 
மு 
முக்குளம்‌ 183 
முகபார்வை 120 
முட்டாவாள்‌ ௩-62, 110 
முடவனேம்பல்‌ , 39 
முத்தன்‌ ஆட்கொண்ட 
வில்லிராஜன்‌ 70 
முதலும்‌ உழவும்‌ தவிர்ந்து 3 
முத்துடையான்‌ 261 
முத்தூற்றுக்‌ கூற்றம்‌ 
முப்பது வட்டம்‌ . 175 
முப்பொழுதும்‌ திருமேனி 
தீண்டுவார்‌ 43 
மும்முடிசோழி 82 
முருகனாயினார்‌ உ ட42 
முழாகை i 201 
முழுனீறு:பூசிய முனிவர்‌ 43 
முன்புடையார்‌ 4 
முன்னுடையார்‌ 322. 
முனைப்பணம்‌ : 117 
முனையதரையன்‌ 34 


முனையடுவா நாயினார்‌ 43 


மூ. 
மூத்த பிள்ளையார்‌ 178 
மூவராயகண்டன்‌ 307 


மூவேந்த மங்கல 


பேரரையன்‌ 254 
மூவேந்த வேளான்‌ ட 305 
_ மூற்க நாயனார்‌ 42 


82, 116, 268 


மே 


மேல்குறிச்சி 

மேல்மலை ல்‌ 
மேலாழியாண்ட நாயனார்‌ 
மேலாழியாண்ட நாயகர்‌ 
மேலிரணிய முட்டனாடு 
மேலிரணிய முட்டம்‌ 
மேலைக்‌ கொடும்ளூர்‌ 
மேலைப்‌ பள்ளிக்கு றிச்சி 
மேன்மலை 


மேன்மலை அழகிய 


ரண 


சோழீசுவர முடையார்‌ 


மேன்‌ மலையூர்‌ 


உரம்‌ 
யந்தராயம்‌ 


யாதவராஜன்‌ 


ரா 
ராஜேந்திரச்‌ சோழச்‌ 
சதுர்வேதி மங்கலம்‌ 
ராஜேந்திரசோழச்‌ 
சதுவெ.சி மங்கலம்‌ 
ராஜே, சோழச்‌ 
சதுர்வேதி. மங்கலம்‌ 
ராஜே, சோழச்சேரி 


லி 


லிங்கையநாயக்கரையன்‌ 


லிங்கைய நாயக்கன்‌ 


வ்‌ 


வஞ்சி மண்டலதரையர்‌ 
வஞ்சியூர்‌ ்‌ 


324 


39 
150, 163 
107 
108 
58. 
272, 275 


. 39 
35 


114, 143, 145, 
155, 158 ' 


128 


129 


138 


143 


வஞ்சியூர்‌ குளம்‌ 144 
வட்டக்குறிச்சி 253 
வட்டிலஞ்சு 258 
வடகளவழிநாடு . 40 
வடமுகத்தரையன்‌ -: 169 
வடபறப்பு நாடு 48, 111, 103, 
அத 109, 198 

வண்டுவராபதி 

நாடாழ்வான்‌ 149 
வணிகச்‌ சக்கரவத்திகள்‌ 134 
வத்தலை ராவுத்தர்‌ 127, 128 
வர்க்கத்தார்‌ 8 
வராகன்‌ பணம்‌ 117 
வரி A 82, 226 
வரியிலார்‌ கணக்கு 8. 
வரியில்‌ கழித்து 2, 36 
வல்லப நெவர்‌ 267 


வலங்கை மீகாம நல்லூர்‌ 11 


வலங்கை மீகாமன்‌ திருநாள்‌ 13 


வழுதி நாட்டான்‌ 298 
வற்க்கத்தார்‌ 26 
வஸவண்ணனாயக்கத்‌ 
திம்மப்ப னாயக்கர்‌ 216 
வார 
வாசல்பேறு 2, 4, 45, 143, 
144, 151, 226, 
228, 243 
வாடரக்கடமை 109, 117 
வாணாதிராயன்‌ 228, 270 
வாதவூரன்‌ 34 
வாப்புலி நாடாழ்வார்‌ 133 
வாய்க்கால்‌ 16 


வாயிலா நாயனார்‌ 
வாழை 
வானவன்‌ மாதேவிச்சேரி 
வானவன்‌ மாதேவிச்‌ 


சதுவெ.தி மங்கலம்‌ 


வி. 


விக்ரெமபாண்டியர்‌ 
விக்கிர பிள்ளை 
விக்கிரம பாண்டிய 
பிரமாதிராயன்‌ 
விக்கிரம பாண்டிய 


வாணாதிராஜன்‌ 


விக்கிரம பாண்டிய தேவர்‌ 


விக்கிரம பாண்டிய 
மாராயன்‌ 

விக்கிரம சிங்கபுரம்‌ 

விக்கிரகப்பேறு 


விண்ணவதரயப்‌ பெருமாள்‌ 


வியாபாரிகள்‌ 
விரதமுடித்தானான 
பல்லவராயர்‌ 
வில்லவராயப்‌ 
பிரமாதராயன்‌ 
விழுக்காடு 
விழுப்பாதராஜன்‌ 
வினியோகம்‌ 


325 


43 
14 
184, 185, 193, 194 : 


ப 


185 


161 


14, 25, 45, 48, 
70, 83, 84, 88, 
110, 117, 142, 
144, 154, 162, 
191, 193, 226, 
228, 243, 276, 
279 


வீ வே 
வீதிவரம்பு 34 வேதநாதர்‌ 
வீரகண்டன்‌ 114 வேதப்பிராமணர்‌ 
வீரசூளா மணி 105, 147 வேம்பிற்றூர்‌ 
வீரநாராயணச்‌ i வேலங்குடியான தேவர்கள்‌ 

சதுர்வேதிமங்கலம்‌ 242 தேவதல்லூர்‌ 
வீரபத்திர அப்பன்‌ 26 'வேலிசெய்வோம்‌ 
வீரபத்திர நயினார்‌ 284 வேலூர்க்‌ குளக்கீழ்‌ 
வீரபாஞ்சாளர்‌ 92. - வேழகுலநாரை 
வீரபாண்டி யதேவர்‌ 23, 81, 82 அண்டநல்லூர்‌ 
வீரபாண்டியநல்லூர்‌ ... 94 
வீரபாண்டி யகாலிங்கராயன்‌ 108. வை 
வீரபாண்டியன்‌ ' 69, 86, 268 
வீரப்புலிநாடாழ்வான்‌ 148 வைக்கல்‌ புறம்‌ 
வீரமாசய்யன்‌ 284 ்‌ 
வீரராஜேந்திசோழச்சேரி . 184 வேர 

வெ வோடைப்புறம்‌ A 
வெங்கப்பய்‌ யன்‌ 232 ஐ 
வெட்டனுூருடையான்‌ ' 272 
வெட்டி 62, 110 கீயர்‌ வொளசிஆ உன்‌ 
வெட்டிக்குடி 860 ஜீவன்‌ 
வெட்டிப்பாட்டம்‌ 2, 4, 44,58, 84, 144 ஜெயங்கொண்டசோழன்‌ 

150, 152, 226, 228, சீவல்லபன்‌ 
243 ந க 

வெட்டிமுட்டையாள்‌ 193 2 
வெட்டிவேதினை 288 
வெண்பில்‌ நாடு - 225 ேவேஈ,வல்லப 
வெண்புரை . 250 சூவாரியன்‌ : 
வெண்டுசை நாடு 250 'சேவேடூவறுலா வாயன்‌ 
வெண்பைக்குடி ‘ 

வேடஞ்சேரி 252 ய 


வெள்ளிமலை நாடாழ்வான்‌ 231 
வெள்ளோலை 193 


08.4 கர்த்தாக்கள்‌ 


326 


228 
258 
209 


44 
182, 193 
267 


121 


285 


275 


223 
150 


70 


24 


15 


வவாவன நாயக்க 


திம்மப்ப னாயக்கர்‌ 


ரஹா தம்‌ 


விக்கிரக பேறு 


ஹவகி திவாகரன்‌ 
ஹலை விலை 
வாணிவி.ம,ஹம்‌ 


வவர உராஉரிகள்‌ 


வது ்‌ 


பிள்ளையார்‌ 


ஹு எப ஹண தம ட்டன்‌ 


ச 
௨ “5 பாண்டிய 


STE ஆன்‌ பதியப்‌ 


வா விநாட்டுப்புலி யூர்‌ 


214 
12, 20, 21 


44 
227 


20 
98 


193 
161 


வஹுவோண்டி௰ கெவர்‌ 33 


மிமஉாதாயூ-ஏன்‌ 


யமிவா வாய சன்‌ 


ஸீ 


ஸ்ரீகரணமூலபல ஈரம்‌ 

ஸ்ரீகார்யஞ்‌ செய்வார்கள்‌ 

ஸ்ரீகாரணவர்‌ 

ஸ்ரீகாரியஞ்செய்வார்‌ 

ஸ்ரீகாரியம்‌ 

ஸ்ரீகுந்தவைச்‌ சதுவெ-தி 
மங்கலம்‌ 


ஸ்ரீகுலசேகரதேவர்‌ 


ஸ்ரீகுலைசேகரதேவர்‌ 

ஸ்ரீகொலோத்துங்க 
சோழதேவர்‌ 

ஸ்ரீசுந்தரபாண்டி யதேவ்ர்‌ 


52 


19 


283 


27, 56, 58, 60, 69, 


105, 147 i 
145, 181, 187, 299 


98 
141, 189, 227, 243 


ஸ்ரீஹஸாந்தரபாண்டி யதேவர்‌ 92, 161, 193, 229, 


ஸ்ரீசேனாபதி ஆழ்வார்‌ 


ஸ்ரீதுங்கவனம்‌ 
ஸ்ரீநரஹி௦ஹ ஆழ்வார்‌ 


ஸ்ரீ நாரஹி௦ஹ ஆழ்வார்‌ 
ஸ்ரீபராக்ர2 பாண்டிய 
தேவர்‌ 
ஸ்ரீசகாவேயரரக்‌ கண்காணி 
ஸ்ரீமாஹேவரர்‌ 
ஸீஇராகேோே, சோழ 


அதுவெ.$ச மங்கலம்‌ 


327 


266 


280 
227 
279 
272 


9, 114, 116, 261 


26 
58 


95, 182 


ஸ்ரீராமஜெயம்‌ 
நீரா, ஸ்ரீ ஹே 


கண்காணி 


ஸ்ரீவல்லவ பாண்டிபுரம்‌ 
ஸ்ரீவல்லத்திருக்கை 
ஸ்ரீவல்லபமங்கலம்‌ 


ஸ்ரீ வன்னி ஆசிரமம்‌ 


281 


9, 15, 21, 22, 
29, 95, 64 

71 
251 

280 


ஸ்ரீவிக்கரம பாண்டிய 
- விழுப்பரையர்‌ : 64 
ஸ்ரீவிக்கிரம பாண்டிய 
தேவர்‌ : 82 
ஸ்ரீ வெண்யைக்குடி நாடு 252 


க 


கெஷெதுவாமு வூகிவஷெ 34 


328